Jump to content

அடுத்தவாரம் அமைச்சரவை மாற்றம்


Recommended Posts

அமைச்­ச­ரவை அடுத்த வாரம் நிச்­ச­ய­மாக மாற்றம் அடையும். அமைச்­ச­ரவையை மாற்றம் செய்­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தற்­போது உரித்­தா­கி­யுள்ள அமைச்சு பத­விகளை சுதந்­திரக் கட்­சி­யினர் பறித்­தெ­டுப்பார்களாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார்.

Parliament.jpg

இதே­வேளை நிதி அமைச்­ச­ராக செயற்­ப­டு­வ­தாயின் பூரண சுதந்­திரம் வழங்க வேண்டும். எனக்கு நிதி அமைச்சு கிடைக்­க­பெ­றாது. நான் பதவி மோகம் கொண்­டவன் அல்ல.தற்­போது சிறந்த நிதி அமைச்சர் உள்ளார். அத்­துடன் எந்த அமைச்சு மாற்றம் காணும் என்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே அறிவர். தற்­போ­தைக்கு வெளி­யா­கி­யுள்ள தகவல் முற்­றிலும் தவ­றாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெ­று­வது நிச்­ச­ய­மாகும். அடுத்த வார­ம­ளவில் நிச்­சய­மாக அமைச்­ச­ரவை மாறும். அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து எமக்கு எதுவும் தெரி­யாது. எந்த அமைச்சு வேண்­டு­மா­னாலும் மாற்றம் அடை­யலாம். அது ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் மாத்­தி­ரமே தெரியும். இதற்கு முன்­னரும் அமைச்­ச­ரவை மாற்­றங்கள் இடம்­பெற்­றன. 1990 ஆம் ஆண்டு கூட அமைச்­ச­ரவை மாறி­யது.அதன் போது ரண­சிங்க பிரே­ம­தாச எனது தந்­தையை அமைச்சு பத­வியில் இருந்து நீக்­கினார். 

அமைச்­ச­ரவை மாற்றம் நட்­பு­றவின் பிர­கா­ரமே முன்­னெ­டுக்­கப்­படும். எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மிகவும் நட்­பு­ற­வுடன் அநீதி ஏற்­ப­டாமல் முன்­னெ­டுப்பர். தற்­போது  ஐக்­கிய தேசியக் கட்சிக்கு எத்­தனை அமைச்சு பத­விகள் உள்­ளன.சுதந்­திர கட்­சிக்கு எத்­தனை அமைச்சு பத­விகள் உள்­ளன என்­ப­தனை நாட்டு மக்­க­ளுக்கு நன்­றாக தெரியும்.

எனவே அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தற்­போதுள்ள அமைச்சு பத­வி­களில் மாற்றம் ஏற்­படக் கூடாது. அதே­போன்று சுதந்­திரக் கட்­சிக்கு தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள அமைச்சு பத­விகளில் மாற்றம் ஏற்­ப­ட­கூ­டாது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்சு பத­வி­களை சுதந்­திரக் கட்சி பறிக்க கூடாது. அதே­போன்று சுதந்­திரக் கட்­சியின் அமைச்சு பத­வி­களை ஐக்­கிய தேசியக் கட்சி பறிக்க கூடாது. அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது ஒவ்­வொரு கட்­சியும் தன்­னு­டைய கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தி­லேயே கண்ணும் கருத்­து­மாக இருக்கும்.

ஆகவே அமைச்­ச­ரவை மாற்றம் நீதி­யான முறையில் நடக்க வேண்டும். கட்­சியின் கொள்­கைக்கு மாறாக எம்மால் செயற்­பட முடி­யாது என்றார்.

இதன்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது,

கேள்வி: - உங்­க­ளுக்கு நிதி அமைச்சு கிடைக்க போவ­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. அது உண்­மையா?

பதில்: - நிதி அமைச்சு எனக்கா? இல்லை. நான் பதவி மோகம் பிடித்­தவன் அல்ல. நிதி அமைச்சு என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. தற்­போதை நெருக்­க­டியில் நிதி அமைச்­சினை பெறாமல் இருப்­பது சிறந்­தது. அத்­துடன் நிதி அமைச்­சினை எனக்கு தந்­தாலும் அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்கு பூரண சுதந்­திரம் கிடைக்க வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­த­னவின் ஆட்­சியின் போது நிதி அமைச்­ச­ராக செயற்­பட்ட சிறினால் டி மேல் சுதந்­தி­ர­மாக செயற்­பட்டார். எனினும் பிற்­பட்ட காலப்­ப­கு­தியில் நிலைமை மாறி­யது. மேலும் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்கஇ மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் நிதி அமைச்சை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தனர். அது தவ­றாகும். எனினும் தற்­போது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அந்த நிலை­மையை மாற்றி திற­மை­யான நிதி அமைச்சர் ஒரு­வரை தெரிவு செய்­துள்­ளனர். ரவி கரு­ணா­நா­யக்க அமைச்சு பத­வியை பொறுப்­பேற்கும் போது பல நெருக்­க­டிகள் இருந்­தன. எனினும் தற்­போது சாத­க­மான நிலை­மைக்கு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளார். 

கேள்வி: - நிதி அமைச்சருக்கும் உங்களுக்கும் முரண்பாடு காணப்பட்டதே?

பதில்: - எமக்கு பிரச்சினை இருந்தது. கொள்கை ரீதியாக நாம் பிளவுப்பட்டோம். எனினும் அதனை நாம் அமைச்சரவைக்குள்ளே தீர்த்து கொண்டோம். அமைச்சரவையின் கூட்டு பொறுப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நாம் செயற்படவில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/20164

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.