Jump to content

17 வருடங்களாக வெளிவராத உண்மைகள்! மட்டக்களபில் நடந்தது என்ன? (காணொளி)


Recommended Posts

10124_1495202891_bbbbb.jpg

மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்திற்கு முன்னால் 17 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் குறித்த உண்மைகளை இன்று வரை இலங்கை அரசாங்கம் முடிமறைத்து வரும் நிலையில் அது குறித்த உண்மைகள் மீண்டும் வெளிவரத்தொடங்கியுள்ளது. 2000.05.17 அன்று மாலை ஒரு வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் அதன் பின்னர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக மக்களுக்காக பணியாற்றிவரும் அருட்தந்தை பாதர் ஜோசப் மேரி அவர்கள் வெளியிட்ட உண்மைகளை இங்கு தொகுத்து தருகின்றோம்.


2000.05.17 அன்று மாலை 5 மணி இருக்கும் ஒரு வெசாக் தினம் மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஒரு சைக்கிளில் உள்ள பெட்டியில் குண்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கச்செய்யும் படையினருக்கு அறிவிக்கப்பட்டும் அவர்கள் வருவதற்கு அரை மணிநேரம் ஆகிவிட்டது. அதற்கிடையில் குண்டு வெடித்து விட்டது. இதன் பின்னர் வெசாக் பார்ப்பதற்காக வந்த ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுமியர்களை ஏற்றிவந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 10 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததாகவும் குறித்த சிறுவர்களின் இறப்பிற்கு காரணம் குண்டு வெடிப்புச் சம்பவம்தான்  என்று இராணுவம் கூறியிருந்து.

 

 

ஆனால் சிறுவர்களின் உயிரிழப்பு மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணம் குண்டு வெடித்ததன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த மோட்டார்சைக்கில் படையினரின் துப்பாக்கிச்சுடே என அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார். துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய சிறுவன்! அன்றையதினம் சிறுவர்களை ஏற்றிவந்த ஆயர் இல்ல வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருந்து ஒரு சிறுவன் தப்பியதாகவும் அவன் குறித்த வாகனத்தில் இருந்து இறங்கி வீதியோரத்தில் இருந்த கால்வாயில் படுத்துக்கொண்டதாகவும் அதன் காரணமாக குறித்த சிறுவன் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாகவும் அவர் கூறினார். இராணுவ உயர் அதிகாரி பிரிகேடியர் சக்கி கருத்து! சம்பவம் இடம்பெற்ற அடுத்தநாள் அருட்தந்தையை அழைத்துபேசிய பிரிகேடியர் சக்கி அவர்கள் பாதர் விடுதலைப்புலிகளின் குண்டு வெடித்ததில்தான் குழந்தைகள் உள்ளிட்ட அத்தனை பேரும் இறந்துள்ளார்கள் என்று கூறினார். அதனை மறுத்த அருட்தந்தை அவர்கள் இறந்தவர்கள் அனைவரினதும் உடலில் துப்பாக்கி ரவைகளினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதே பிரிகடியர் என்று கேட்டதற்கு அதை அவர் மறுத்ததாகவும்.

கச்சேரியில் பணியாற்றியவரை முட்டுக்காலில் வைத்து தலையில் சுட்ட இராணுவம்! பிரிகேடியரிடம் அருட்தந்தை அவர்கள் மேலும் கூறியபோது  மட்டக்களப்பு சன்முகாஸ் வியாபார நிலையத்தில் பொருட்கள் வாங்கிகொண்டு நின்ற கச்சேரியில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரையும் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு இளைஞனையும் கூட்டிக்கொண்டு சென்று முழங்காளில் வைத்து தலையில் சுட்டு கொன்றுள்ளீர்களே அதையும் குண்டுவெடிப்பில் இறந்ததாக சொல்கிறீர்களா என கேட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டேன் என்றார்.

ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்! 17.05.2000 அன்று வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த 233ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் உட்பட 19பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். அந்த 19பொதுமக்களும் விடுதலைப்புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றே அரசாங்கம் அறிவித்தது. அதனையே சகல ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருந்தன. அந்த சம்பவம் நடந்து காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது காயப்பட்டவர்களில் உடல்களில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர்  தெரிவித்தார். இதனையடுத்து காயப்பட்டவர்கள் சிலரிடம் நேரடியாக பேசிய போது உண்மை தெரியவந்தது.

குண்டுத்தாக்குதல் நடந்த பின் பாதுகாப்பு கருதி கடை ஒன்றிற்குள் ஓடிச்சென்று பதுங்கியிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினரே தங்களை சுட்டதாகவும் தங்களுடன் இருந்த பலரும் அதில் கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் வானில் வந்து இறங்கிய போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

ஆனால் அரசாங்கத்தின் உத்தரவுப்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என மரணச்சான்றிதழில் பதிவு செய்தால் மட்டுமே நிவாரண நிதி கிடைக்கும் என்பதால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் மௌனமாக இருந்து விட்டனர்.

http://battinaatham.com/description.php?art=10124

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.