Jump to content

உறவுகளைத் தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கின்றோம் - நினைவேந்தல் நிகழ்வில் உறவுகள் கண்ணீருடன் ஆதங்கம்


Recommended Posts

01-1adfb252d1b6ec06f3eb03f7837b6e56b508375d.jpg

எமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். நிரந்­த­ர­மாக பிரிந்து விட்­டார்கள். ஒவ்­வொ­ரு­வ­ரையும் இழந்து தற்­போது நடுத்­தெ­ருவில் நிற்­கின்றோம் என நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கேற்ற உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் தெரி­வித்­தனர்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை எட்­டா­வது ஆண்­டா­கவும் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது அந்­நி­கழ்வில் பங்­கேற்­ப­தற்­காக முல்லை மண் உட்­பட தமிழர் தாய­கத்தின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் வருகை தந்­தி­ருந்த உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் வெளிப்ப­டுத்­தினர். அந்த ஆதங்­கங்­களும் நியா­ய­மான கேள்­வி­களும் வரு­மாறு, 

01.எஸ்.லதா எனப்­படும் பெண்­மணி, நாங்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இப்­போது நின்­று­கொண்­டி­ருக்கும் இந்த மண்ணில் கூனிக்­குறுகி நின்­று­கொண்­டி­ருந்தோம். அப்­போது எமக்கு யாரும் கைகொ­டுக்­க­வில்லை. அன்­றை­ய­தி­னமே நாங்கள் அனைத்­தையும் இழந்து விட்டோம். இனி இழப்­ப­தற்கு ஏதுவும் இல்லை.

அப்­ப­டி­யி­ருக்­கையில் இன்று வந்து எங்­க­ளு­டைய உயிர்­களை தொலைத்து அனைத்­தையும் இழந்து அவர்­க­ளுக்கு ஒரு ஆத்ம திருப்­திக்­காக அஞ்­சலி செய்ய முற்­ப­டு­கின்ற போது என்ன செய்­கின்­றார்கள். இந்த நிகழ்­வையும் பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­யப்­பார்க்­கின்­றார்கள்.

நாங்கள் இந்த மண்­ணுக்கு வருகை தரு­வ­தையோ அஞ்­சலி செலுத்­து­வ­தையோ தடுக்­க­வில்லை. எதி­ராக இருக்­கப்­போ­வதும் இல்லை. ஆனால் எம்மை தொடர்ந்தும் பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பதை தாங்­க­மு­டி­யா­தி­ருக்­கின்­றது. இறந்த வர்­க­ளைக்­கூட தங்­களின் இலா­பத்­துக்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள நினைப்­பது தவறு. அதற்­கா­கவே நாங்கள் எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம் என்றார்.

02. தனது பிள்­ளை­களை பறி­கொ­டுத்து தனி­ம­ரமாக நிற்கும் தாயொ­ருவர் கூறு­கையில், நான் ஒன்­றல்ல இரண்­டல்ல என்­னு­டைய பிள்­ளை­களை தொலைத்து­விட்டேன். இப் ­போது என்­னி­டத்தில் எதுவும் இல்லை. நாங்கள் கஷ்­டப்­ப­டு­கின்றோம் என்று அர­சி­யல்­வா­தி­க­ளி­டத்தில் செல்­கின்­ற­போது அங்கு எமக்கு எது­வுமே கிடைப்­ப­தில்லை.

இன்­று­வ­ரையில் எமக்கு எந்த அர­சி­யல்­வா­தி­களும் உத­வ­வில்லை. நாங்கள் அனை­வ­ரையும் நம்பி இன்று நடுத்­தெ­ரு­விற்கு வந்­து­விட்டோம். இப்­போது எங்­களின் சொந்­தங்­களை நினைவு கூர வந்தால் இங்கும் வந்து தொந்­த­ரவு செய்­கின்­றர்கள் என் கூறி கத­றி­ய­ழுதார்.

03.இதே­வேளை இறுதி யுத்­தத்தில் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்டு தற்­போது மாற்­றுத்­தி­ற­னாளி என்னும் பட்­டத்­துடன் இருக்கும் நான் என்ன சொல்வேன் என்று விம்­மத்­தொ­டங்­கிய ஒருவர், இறுதி யுத்தம் செய்­தார்கள். இந்த மண்ணில் ஒவ்­வொரு நொடிப்­பொ­ழுதும் உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு சென்றோம். எனது காலையும் இழந்து விட்டேன்.

இந்த பூமியில் மக்கள் வாழ­வில்­லையா?. இங்கு இருந்த எல்­லோ­ருமே இயக்­கமா? அப்­ப­டித்தான் அவர்கள் முத்­திரை குத்தி யுத்தம் செய்­தார்கள். எத்­தனை உற­வு­களை தொலைத்து விட்டோம் இன்று கண்ணீர் சிந்­து­கின்றோம். இதற்­கெல்லாம் நீதி கிடைக்­குமா என்று கோரி கண்ணீர் சிந்­தினார்.

04. இதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்­விற்கு வரு­கை­தந்­தி­ருந்த காண­ாமல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள், எங்­களை யாருக்­குமே கண்­ணுக்­குத்­தெ­ரி­வ­தில்லை. நாங்கள் அஞ்­சலி செலுத்­து­வதா இல்­லையா என்று கூட தெரி­யாத இக்­கட்­டான நிலை­மையில் இருந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

எங்­க­ளு­டைய உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­று ­கோ­ரி­ போ­ராட்­டங்கள் தொடர்ந்து நடை­பெ­று­கின்­ற­போதும் யாரும் அதற்கு பதி­ல­ளித்­த­தாகவோ ஆகக்­கு­றைந்­தது கருத்­தி­லெ­டுத்­த­தாகவோ இல்லை. எங்­களின் பிள்­ளை­க­ளையே தான் நாங்கள் கேட்­கின்றோம். அவர்கள் எங்கே போனார்கள். இல்­லை­யென்றால் இல்­லை­யென்­றா­வது சொல்­லுங்கள் என்று அடுத்­த­டுத்து கேள்­வி­க­ளைத் ­தொ­டுத்து கத­றி­ய­ழு­தார்கள்.

அதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். மடிந்து விட்­டார்கள். இனி மீண்டு வர­மாட்­டார்கள். இன்று இருந்­தி­ருந்தால் இத்­தனை வயதில் இருந்­தி­ருப்­பார்கள். அவர்­க­ளுக்கு பிடிக்கும் விட­யங்கள் என்­னென்ன? என்­றெல்லாம் புலம்­பிக்­கொண்டு முள்ளிவாய்க்கால் திடலில் அங்கலாய்த்தவண்ணமிருந்தனர்.

அத்துடன் இழப்புக்களை சந்தித்து வறு மையின் பிடிக்குள் இருக்கும் உறவுகள் பொதுவாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் இருப்பவர்கள் தமக்கு எவ்விதமான உதவிகளையும் வழங்குவதில்லை. உதவி கோரிச்செல்கின்றபோதும் ஏதாவது கதைகளைக் கூறி காலம் கடத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.