Jump to content

உறவுகளைத் தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கின்றோம் - நினைவேந்தல் நிகழ்வில் உறவுகள் கண்ணீருடன் ஆதங்கம்


Recommended Posts

01-1adfb252d1b6ec06f3eb03f7837b6e56b508375d.jpg

எமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். நிரந்­த­ர­மாக பிரிந்து விட்­டார்கள். ஒவ்­வொ­ரு­வ­ரையும் இழந்து தற்­போது நடுத்­தெ­ருவில் நிற்­கின்றோம் என நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கேற்ற உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் தெரி­வித்­தனர்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை எட்­டா­வது ஆண்­டா­கவும் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது அந்­நி­கழ்வில் பங்­கேற்­ப­தற்­காக முல்லை மண் உட்­பட தமிழர் தாய­கத்தின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் வருகை தந்­தி­ருந்த உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் வெளிப்ப­டுத்­தினர். அந்த ஆதங்­கங்­களும் நியா­ய­மான கேள்­வி­களும் வரு­மாறு, 

01.எஸ்.லதா எனப்­படும் பெண்­மணி, நாங்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இப்­போது நின்­று­கொண்­டி­ருக்கும் இந்த மண்ணில் கூனிக்­குறுகி நின்­று­கொண்­டி­ருந்தோம். அப்­போது எமக்கு யாரும் கைகொ­டுக்­க­வில்லை. அன்­றை­ய­தி­னமே நாங்கள் அனைத்­தையும் இழந்து விட்டோம். இனி இழப்­ப­தற்கு ஏதுவும் இல்லை.

அப்­ப­டி­யி­ருக்­கையில் இன்று வந்து எங்­க­ளு­டைய உயிர்­களை தொலைத்து அனைத்­தையும் இழந்து அவர்­க­ளுக்கு ஒரு ஆத்ம திருப்­திக்­காக அஞ்­சலி செய்ய முற்­ப­டு­கின்ற போது என்ன செய்­கின்­றார்கள். இந்த நிகழ்­வையும் பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­யப்­பார்க்­கின்­றார்கள்.

நாங்கள் இந்த மண்­ணுக்கு வருகை தரு­வ­தையோ அஞ்­சலி செலுத்­து­வ­தையோ தடுக்­க­வில்லை. எதி­ராக இருக்­கப்­போ­வதும் இல்லை. ஆனால் எம்மை தொடர்ந்தும் பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பதை தாங்­க­மு­டி­யா­தி­ருக்­கின்­றது. இறந்த வர்­க­ளைக்­கூட தங்­களின் இலா­பத்­துக்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள நினைப்­பது தவறு. அதற்­கா­கவே நாங்கள் எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம் என்றார்.

02. தனது பிள்­ளை­களை பறி­கொ­டுத்து தனி­ம­ரமாக நிற்கும் தாயொ­ருவர் கூறு­கையில், நான் ஒன்­றல்ல இரண்­டல்ல என்­னு­டைய பிள்­ளை­களை தொலைத்து­விட்டேன். இப் ­போது என்­னி­டத்தில் எதுவும் இல்லை. நாங்கள் கஷ்­டப்­ப­டு­கின்றோம் என்று அர­சி­யல்­வா­தி­க­ளி­டத்தில் செல்­கின்­ற­போது அங்கு எமக்கு எது­வுமே கிடைப்­ப­தில்லை.

இன்­று­வ­ரையில் எமக்கு எந்த அர­சி­யல்­வா­தி­களும் உத­வ­வில்லை. நாங்கள் அனை­வ­ரையும் நம்பி இன்று நடுத்­தெ­ரு­விற்கு வந்­து­விட்டோம். இப்­போது எங்­களின் சொந்­தங்­களை நினைவு கூர வந்தால் இங்கும் வந்து தொந்­த­ரவு செய்­கின்­றர்கள் என் கூறி கத­றி­ய­ழுதார்.

03.இதே­வேளை இறுதி யுத்­தத்தில் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்டு தற்­போது மாற்­றுத்­தி­ற­னாளி என்னும் பட்­டத்­துடன் இருக்கும் நான் என்ன சொல்வேன் என்று விம்­மத்­தொ­டங்­கிய ஒருவர், இறுதி யுத்தம் செய்­தார்கள். இந்த மண்ணில் ஒவ்­வொரு நொடிப்­பொ­ழுதும் உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு சென்றோம். எனது காலையும் இழந்து விட்டேன்.

இந்த பூமியில் மக்கள் வாழ­வில்­லையா?. இங்கு இருந்த எல்­லோ­ருமே இயக்­கமா? அப்­ப­டித்தான் அவர்கள் முத்­திரை குத்தி யுத்தம் செய்­தார்கள். எத்­தனை உற­வு­களை தொலைத்து விட்டோம் இன்று கண்ணீர் சிந்­து­கின்றோம். இதற்­கெல்லாம் நீதி கிடைக்­குமா என்று கோரி கண்ணீர் சிந்­தினார்.

04. இதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்­விற்கு வரு­கை­தந்­தி­ருந்த காண­ாமல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள், எங்­களை யாருக்­குமே கண்­ணுக்­குத்­தெ­ரி­வ­தில்லை. நாங்கள் அஞ்­சலி செலுத்­து­வதா இல்­லையா என்று கூட தெரி­யாத இக்­கட்­டான நிலை­மையில் இருந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

எங்­க­ளு­டைய உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­று ­கோ­ரி­ போ­ராட்­டங்கள் தொடர்ந்து நடை­பெ­று­கின்­ற­போதும் யாரும் அதற்கு பதி­ல­ளித்­த­தாகவோ ஆகக்­கு­றைந்­தது கருத்­தி­லெ­டுத்­த­தாகவோ இல்லை. எங்­களின் பிள்­ளை­க­ளையே தான் நாங்கள் கேட்­கின்றோம். அவர்கள் எங்கே போனார்கள். இல்­லை­யென்றால் இல்­லை­யென்­றா­வது சொல்­லுங்கள் என்று அடுத்­த­டுத்து கேள்­வி­க­ளைத் ­தொ­டுத்து கத­றி­ய­ழு­தார்கள்.

அதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். மடிந்து விட்­டார்கள். இனி மீண்டு வர­மாட்­டார்கள். இன்று இருந்­தி­ருந்தால் இத்­தனை வயதில் இருந்­தி­ருப்­பார்கள். அவர்­க­ளுக்கு பிடிக்கும் விட­யங்கள் என்­னென்ன? என்­றெல்லாம் புலம்­பிக்­கொண்டு முள்ளிவாய்க்கால் திடலில் அங்கலாய்த்தவண்ணமிருந்தனர்.

அத்துடன் இழப்புக்களை சந்தித்து வறு மையின் பிடிக்குள் இருக்கும் உறவுகள் பொதுவாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் இருப்பவர்கள் தமக்கு எவ்விதமான உதவிகளையும் வழங்குவதில்லை. உதவி கோரிச்செல்கின்றபோதும் ஏதாவது கதைகளைக் கூறி காலம் கடத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.