Jump to content

முத்தரப்புக்களதும் ஆதரவாளர்கள் குறித்து அவதானமாகச் செயற்ப்பட வேண்டும்


Recommended Posts

முத்தரப்புக்களதும் ஆதரவாளர்கள் குறித்து அவதானமாகச் செயற்ப்பட வேண்டும்

 

அர­சில் அங்­கம் வகிக்­கும் இரு­பி­ர­தான கட்­சி­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள் உச்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும், அதன் பிர­கா­ரம் எதிர்­வ­ரும் நாள்­க­ளில் அரசு வீழ்ச்­சி­யுற நேரிக்­கூ­டும் என்ற தக­வ­லொன்று நாட்­டின் அர­சி­ய­ல­ரங்கை சூடு­பி­டிக்க வைத்­துள்­ளது.

இருப்­பி­னும் நாட்­டின் பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ள அரசு பொரு­ளா­தார ரீதி­யில் தற்­போது பார­தூ­ர­மான சிக்­கலை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­கத் தோன்­று­கி­றது.

இது அர­சின் இருப்­புக்கு அத்­தனை தூரம் ஆ­ரோக்­கி­மா­ன­தல்ல. அது­வும், இரண்­டாண்­டு­கள் என்ற குறு­கிய கால நிர்வாகத்தில் அத்தகைய பின்னடைவு ஏற்­பட்­டுள்­ளமை மேலும் சிக்­க­லைத் தோற்­று ­விக்­கும் நிலை­மை­யா­கும்.

ஐ.தே.கவின் நட­வ­டிக்­கை­யில் சந்­தே­கம்

ஐ.தே.கட்சி தனது பொரு­ளா­தார செயற்­பாட்டு முகா­மைத்­து வத்­தைத் தனி­யார் துறையினரிடம் வழங்க நட­வ­டிக்கை மேற்­கொள்­வது, நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­துக்கு நன்மை பயக்­குமா என்­பது குறித்து நாட்டு மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் நில­வு­கின்­றது.

“போர்ட் சிற்றி” திட்­டத்தை சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கி­யுள்­ள­தும், அதே சம­யம் அம்­பாந்­தோட்­டைத் துறை­முக நிர்­வா­கத்­தைத் தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் வழங்­க­வி­ருப்­ப­தும் அர­சி­யல் ரீதி­யில் இலா­ப­க­ர­மா­ன­தல்ல. கூட்டு எதி­ர­ணி­யின் நிலைப்­பாட்­டின்­படி, அது நாட்­டின் வளத்தை வெளி­யா­ருக்கு விற்­ப­தா­கக் கொள்­ளப்­ப­டும்.

அண்­மைக்­கால உலக நடை

மு­றை­யில், அரச செயற்­பா­டு­கள் தனி­யார் தரப்­புக்­க­ளு­டன் கூட்­டி­ணைந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றமை சிறப்பு அம்­ச­மா­கும். கிறீஸ் போன்ற நாடு­கள் அந்­த­வித முகா­மைத்­து­வத்­தில் தோல்வி கண்­டுள்­ளன. அந்த நடை­மு­றையை இலங்கை ஒரு விதத்­தில் செயற்­ப­டுத்த விளைந்து சிர­மத்தை எதிர்­நோக்க நேர்ந்­தது. இதுவரை அரச மற்­றும் தனி­யார் துறை­கள் இணைந்து முகாமைத்துவம் செய்த இலங்கை விமான சேவை­யில் நட்­டத்தை எதிர்­நோக்­கிய ‘டெக்­ஸாஸ் பசு­பிக் குறூப்’ என்ற நிறு­வ­னம், தான் இலங்கை விமான சேவை­யில் மேற்­கொண்­டி­ருந்த முத­லீ­டு­க­ளைத் திரும்­பப் பெற்றுக் கொண்டுள்ளது.

எந்த நாட்டு முத­லீட்­டா­ள­ரும் இலா­பத்தை நோக்­க­மா­கக் கொண்டு செயற்­ப­டு­வா­ரே­யொ­ழிய, நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத் துக்கு பங்­க­ளிப்­புச் செய்து நற்பெயரீட்ட முனைய மாட்டார். அந்த வகை­யில் தனி­யார் நிறு­ வ­னத்­து­டன் இணைந்து முகா­மைத்­துவம் மேற்­கொள்­வது குறித்து ஐ.தே.கட்­சி­யும் அதன் தலை­வர் ரணி­லும் ஒரு முறைக்கு இரு­முறை சிந்­தித்­தாக வேண்­டும்.

கீதா குமா­ர­துங்க விட­யம்

மறு­பு­றம் கீதா குமா­ர­துங்­க­வின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை இல்­லா­தொ­ழிக்க மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­யைக் குறிப்­பி­ட­லாம். நீதி­மன்­றத் தீர்ப்­பின்­படி நாடா­ளு­மன்ற அதி­கா­ரி­கள் தமது கட­மையை விரை­வாக முன்­னெ­டுத்தபோதி­ லும், கூட்டு எதி­ர­ணி­யின் கருத்­துப்­படி அது அர­சின் பழி­வாங்­கலே. ஆனால் அர­சுத்­த­லை­வரோ அந்த விட­யம் குறித்­துத் தாம் எது­வும் தெரிந்து கொண்­டி­ருக்க வில்லை என்ற விதத்­தில் நடந்து கொள்­கி­றார்.

அரச தலை­வர் மாகாண சபை­க­ளது செயற்­பா­டு­கள் குறித்து தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்.

அர­ச­மைப்­புத் தி­ருத்­த­ மொன்­றின் மூலம் மாகா­ண­ச­பை­கள் உரு­வாக்­கப்­பட்ட போதி­லும், 9 மாகா­ண­ச­பை­க­ளும் தத்­த­மது தீர்­மா­னங்­க­ளுக்­க­ மை­யவே செயற்­ப­டு­கின்­றன என அரச தலை­வர் குறிப்­பிட்­டுள்­ளமை முற்று முழு­தா­ன­தொரு உண்­மையே.

ஆயி­னும் மாகாண சபை­கள் குறித்து முடி­வு­களை மேற்­கொள்­ளும் அர­ச­ த­லை­வர், இந்­த­வி­தம் மாகாண சபை­கள் தத்­தம் விருப்­புக்கு ஏற்­ற­படி செயற்­ப­டு­கின்­றன என்று விமர்­சிப்­பது மட்டும் போது­மா­னதா என்­பது குறித்துச் சிந்­தித்­தாக வேண்­டும்.

சைட்­டம் தொடர்­பான பிரச்­சினை

அதே சம­யம் “சைட்­டம்” பிரச்­சினை தொடர்­பாக பணிப்­பு­றக்­க­ணிப்பு அச்­சு­றுத்­த­லு­டன் ஆரம்­பித்த வாரத்தில், குறித்த பணிப்­பு­றக்­க­ணிப்­பால் அதில் ஈடுபட்ட தரப்பினர் பல தரப்­பட்ட விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாக நேர்ந்­துள்­ளது.

தொழிற்­சங்­க­மும் அர­சும் இந்த விட­யத்­தில் நியா­ய­மான நிலைப்­பாட்­டையே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. தமது கோரிக்­கையை வென்­றெ­டுக்க பணிப்­பு­றக்­க­ணிப்பு முடி­வைத் தவிர வேறெந்த மாற்றுவ­ழி­யும் தொழிற்­சங்­கத்­துக்கு இருந்­த­தில்லை. ஆனால் அர­சுக்கோ சைட்­டத்தை மூடி­விட விருப்­பம் கிடை­யாது.

ஐ.தே.கட்­சி­யின் கொள்கை நிலைப்­பாட்­டின்­படி தனி­யார் மயப்­ப­டுத்­த­லூ­டாக அர­சின் செயற்­பாட்­டைத் துரி­தப்­ப­டுத்­திப் பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வது சாத­க­மான பல­னைத்­த­ரு­மென அந்­தக் கட்சி நம்­பு­வ­தால் சைட்­டத்தை மூடி­விட ஐ.தே.கட்சியி னருக்கு விருப்­ப­மில்லை. ஒரு­வ­கையில் அதனை இடை­ந­டு­வில் மூடி­வி­டு­வ­தென்­பது கூடச் சிக்­கல்­க­ளுக்கு வழி வகுக்­கும்.

இது­வரை கால­மும் பெருந்­தொகை நிதி­யைச் செல­விட்­டுக் கற்­றல் செயற்­பா­டு­களை மேற்­கொண்ட மாண­வர்­கள், அநா­தை­க­ளாக்­கப்­பட்டு விடு­வர். இவற்­றை­யெல்­லாம் அவதானித்துப் பார்த்தால் இவற்­றை­யெல்­லாம் உற்று நோக்­கிக் கொண்­டி­ருக்­கும் பொது­மக்­களே நியா­ய­மற்ற தரப்­பி­ன­ரா­கக் கொள்­ளத்­தக்­க­வர்­கள் என்றாகிறது.

நாட்டு மக்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட அர­சைக் கவிழ்க்க தொழிற்­சங்­கங்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­போ­வ­தில்­லை­யென தலைமை அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார். அதே­ச­ம­யம் அர­ச­த­லை­வ­ரும் இந்த அரசு தனது ஐந்­தாண்டுகால சேவையை மேற்­கொண்டு முடிக்­கும்வரை அதனை எவ­ரா­லும் வீழ்த்த இய­லா­து என உறு­திப்­ப­டத் தெரி­வித்­துள்­ளார்.

53 கோடிக்­கான குறை நிரப்பு மதிப்­பீடு

இவை அனைத்­துக்­கும் மத்­தி­யில் மேலும் 53 கோடி ரூபாய்­க­ளுக்­கான குறை நிரப்பு மதிப்­பீடு நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­சர்­கள், ராஜாங்க அமைச்­சர்­கள் மற்­றும் தலைமை அமைச்­ச­ரது செய­லா­ளர் ஆகி­யோ­ருக்கு வாக­னக் கொள்­வ­ன­வுக்­கான தொகைக்­கான மதிப்­பீடே அது­வா­கும். அரசு இத்­த­கைய செயற்­பா­டு­க­ளால் தறுக்­க­ணித்­துப் போயுள்ள அதே வேளை, நிதி அமைச்­சர், மின்­சா­ரக் கட்­ட­ணங்­களை உயர்த்­து­வது குறித்­துக் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக சமூ­க­வ­லைத்­த­ளங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மகிந்த தலை­மை­யி­லான அரசு ஊழல், லஞ்­சம், வீண்­வி­ர­யம் ஆகிய செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­தன் கார­ண­மா­கவே அதி­கா­ரத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்­டது.

இது ஐ.தே.கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் தரப்­பின் நிலைப்­பாடு. மகிந்த அர­சின் அத்­த­கைய செயற்­பா­டு­களைத் தடுத்து நிறுத்­தும் வல்­லமை அரச தலை­வர் தேர்­த­லி­லா­யின் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­மும், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லா­யின் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­ட­மும் மட்­டுமே உள்­ள­தாக குறித்த தரப்­பி­னர் தீவி­ர­மாக நம்பி வந்­த­னர். ஆனால் மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற ஊழல் மோசடி லஞ்­சச் செயற்­பா­டு­கள் யாவும் தற்­போது தடுத்து நிறுத்­தப்­பட்டு விட்­ட­னவா? என நல்­லாட்சி அர­சுக்கு எதி­ரா­னோர் இன்று கேள்வி எழுப்பி வரு­கின்­ற­னர்.

மௌனம் காத்து வரும் மைத்­தி­ரி­ தரப்பினர்

இவை இரண்­டுக்­கும் மத்­தி­யில் மைத்­தி­ரி­பால தரப்­பில் செயற்­ப­டு­வோர் எந்­த­வித கருத்­தும் வெளி­யி­டாது வாய்­மூடி மௌனம்காத்து வரு­கின்­ற­னர். எதற்­காக அவர்­கள் அவ்விதம் நடந்து கொள்­கின்­ற­னர் எனத் தற்­போது ஊகிக்க முடி­யா­துள்­ளது.

ஆனால், அரச தலை­வரோ மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­கள் குறித்த சிக்­கல்­க­ளில் மத்­தி­யட்ச முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார். அந்த விட­யத்­தில் மைத்திரி மகிந்த தரப்­பி­னர் உள்­ளக அதி­கா­ரப் போட்­டி­யில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இதில் எவ­ரது தரப்பு வெற்றி பெற்­றா­லும் அது மகிந்த தரப்­பி­ன­ருக்கே இலா­ப­க­ர­மாக அமை­யும். ஆத­லால் மகிந்த தரப்பு ஆத­ர­வா­ளர்­கள் மற்றும் ஐ..ேத.கட்சி ஆத­ர­வா­ளர்­கள் ஆகிய இரு தரப்பினர்கள் குறித்­தும் கவ­ன­மா­கச் செயற்­பாட்­டாக வேண்­டும்.

http://uthayandaily.com/story/3478.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.