Jump to content

கூட்டு அரசின் போக்கு மாற்றம் பெறவேண்டும்


Recommended Posts

கூட்டு அரசின் போக்கு மாற்றம் பெறவேண்டும்

 
கூட்டு அரசின் போக்கு  மாற்றம் பெறவேண்டும்

 

கொழும்பு அர­சின் போக்கை அச்­சொட்­டாக, அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தும் விதத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது பன்­னாட்டு நெருக்­க­டி­கள் குழு­வின் அறிக்கை. மாற்­றம் என்ற முழக்­கத்துடன் 2015ஆம் ஆண்டு தை மாதம் தொடங்­கிய இந்த ஆட்­சி­யின் விறு­வி­றுப்பு படிப்­ப­டி­யா­கக் குறைந்து – கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பாகிப் போனது.

வழக்­க­மான சிங்­கள, பௌத்த அர­சியல் மாயைக் குள்ளேயே இந்த அரசும் சிக்கிக் கொண்டுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெள்­ளத் தெளி­வா­கக் குறிப்­பி­டு­கி­றது.

“அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற முதல் 9 மாதங்­க­ளில் அர­சின் சீர­மைப்­புகள் மள­ம­ள­வென்று நடந்­தே­றின. அதன் பின்­னர் வேகம் தணிந்து தவ­ளத் தொடங்­கின; அல்­லது எது­வுமே நடக்­கா­மல் போயின. இப்போது சமூ ­கப் பதற்­றம் அதி­க­ரித்து வரு­கின்­றது. அர­சின் கூட்­டுக்­குள் வெடிப்­பு­கள் தோன்­றத் தொடங்­கி­விட்­டன. புதிய அர­ச­மைப்பு, நாடா­ளு­மன்­றத்­தின் ஊடா­கவா அல்­லது பொது வாக்­கெ­டுப்பு ஒன்­றின் ஊடா­கவா உரு­வாக்­கப்­ப­டும் என்­பது தெளி­வற்­றுள்­ளது.

குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக்­கா­மல் விடும் இலங்­கை­யின் போக்­கைச் சரி­செய்­யும் வகை­யில் தேசிய பாது­காப்பு அமைப் ­பு­க­ளில் அரச தலை­வரோ தலைமை அமைச்­சரோ காத்­தி­ர­மான சில மாற்றங்­களைச் செய்தால் அது இனங்­க­ளுக்கு இடை ­யில் உட­ன­டி­யாக அமை­தி­யின்­மையை உரு­வாக்­கு­வ­து­டன் பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்­து­கி­றது. “

இவ்­வாறு தெரி­விக்­கி­றது அறிக்கை. கள நில­மையை அப்­ப­டியே படம்­பி­டித்­துக் காட்­டு­வ­தைப்போன்று இருக்­கி­றது இது.

அதில் கூறப்­பட்­டி­ருப்­ப­தைப் போன்றே, இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் அரச தலை­வர் மீதும் இந்த அரசு மீதும் மக்­ க­ளுக்கு, குறிப்­பா­கச் சிறு­பான்மை மக்­க­ளுக்கு இருந்த எதிர் ­பார்ப்­புக் குறைய ஆரம்­பித்­து­விட்­டது. ஆரம்­பத்­தில் இந்த அரசு சில காரி­யங்­க­ளைச் செய்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

இரா­ணு­வத்­தின் வசம் இருந்த காணி­கள் சில விடுவிக்­கப்­ பட்­டன, காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பாக ஆராய்­வதற்­ காக அலு­வ­ல­கம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்­டம் இயற்­றப்­பட்­டது, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக முழு நாடா­ளு­மன்­ற­மும் அர­ச­மைப்பு உரு­வாக்­கச் சபை­யாக மாற்­றப்­பட்­டது, அர­சி­யல் கைதி­கள் சிலரை விடு­வித்­தது, போரில் உயி­ரி­ழந்த – விடு­த­லைப் புலி­கள் உள்­ ளிட்ட அனை­வ­ரையும் – தமது உற­வி­னர்­களை நினை­வு ­கூர்­வ­தற்­குத் தமி ­ழர்­களை அனு­ம­தித்­தமை போன்ற சில காரியங்கள் நடந்தேறின.

எனி­னும் ஆரம்­பிக்­கப்­பட்ட விட­யங்­க­ளி­லேயே முடிக்க வேண்­டியவை இன்­னும் பல. ஆரம்­பிக்­கப்­ப­டா­ம­லேயே இருப்பவையோ அதனிலும் பல. அவற்­றைச் செய்­வ­தற்கு அரசு இப்­போது தயங்­கு­கி­றது அல்­லது ஒதுங்­கு­கி­றது.

தெற்­கில் ­கி­ளம்­பும் சிங்­கள, பௌத்த பேரி­ன­வா­தத்­திற்குப் பயந்து அடி­ப­ணிந்து அல்­லது அத­னால் தமது அர­சி­யல் எதிர்­ ­காலத்­திற்­குப் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும் என்று கரு­தியே ஆட்­சி­ யா­ளர்­கள் இவ்­வாறு பின்­ன­டிக்­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள் என்­பதை, இலங்­கை­யின் அர­சி­யல் வர­லாறு தெரிந்த எவ­ரும் மறுக்­க­மாட்­டார்­கள்.

ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­குச் சிறு­பான்மை இனங்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தும், பின்­னர் ஆட்­சி­யைத் தக்க வைக்­க­வும் அர­சி­ய­லில் நீடிக்­க­வும் பேரி­ன­வா­தத்­தின் பிடிக்­குள் வீழ்வதை­யுமே கொழும்­பின் ஆட்­சி­யா­ளர்­கள் காலம் கால­மா­கச் செய்­த­னர். இந்­தப் போக்­கி­லி­ருந்து மாறாத வரை­யில் இலங்­கைக்கு விடிவு கிடைக்­காது.

வர­லாற்­றில் முன்­னெப்­போ­தும் இல்­லாத கூட்­டான மைத்தி ரியும் ரணி­லும் பழைய போக்­கி­லி­ருந்து நாட்டை மீட்­பார்­கள் என்ற நம்­பிக்­கை­யும் பொய்த்­துப் போயி ருப்­ப­தையே நெருக் கடி­கள் குழு­வின் அறிக்கை எடுத்­தி­யம்பு கிறது. அந்த அறிக் கையே குறிப்­பி­டு­வ­தைப் போன்று மக்க ளாட்­சி­யால் கிடைத்த பய­னைப் பாது­காக்­க­வும், நீடித்­தி ­ருக்­கக்­கூ­டிய மறு­சீ­ர­மைப்பை மீண்­டும் ஆரம்­பிக்­க­வும் சமூக மற்­றும் அர­சி­யல் பிணக்­கைத் தணிக்­க­வும் வேண்­டு­மா­னால் தற் போதைய அரசு கட்சி மற்­றும் தனி­ந­பர் அர­சி­யல் நலன்­களை ஒரு­பு­றம் ஒதுக்கி வைத்­து­விட்டு மறு­சீ­ர­மைப்பு அர­சி­ய­லுக்கு திறந்த மன­து­டன் திரும்­ப­வேண்­டும்.

http://uthayandaily.com/story/3476.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.