Jump to content

ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை


Recommended Posts

ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை
 
 

article_1495091049-trump-new.jpg- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவியென்பது, மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதிப் பதவிகளுள் ஒன்றாகும். அதனால் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இருப்போரை, “சுதந்திர உலகின் தலைவர்” என்று அழைப்பர்.

அந்ததளவுக்கு, ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் பொறுப்பு, அந்தப் பதவிக்கு உள்ளதெனக் கருதப்படுகிறது.  
இந்த நிலைக்கு, எவ்வாறு தள்ளப்பட்டோம்; இந்த நிலைமையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.அமெரிக்கா எவ்வாறு தலையிட்டது; இதனால் ஏற்பட்ட பாதக நிலைமைகள் போன்றன எல்லாம், ஒருபுறமிருக்கட்டும்.  

ஆனால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது ஏற்பட்ட அச்சங்களில் ஒன்று, அவரது வெறுப்புப் பேச்சுகளும் தடாலடியான தன்மையும் இனவெறி கொண்டவர்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவும், உலகெங்கும் பரவி விடும் என்பது தான். “ஐ.அமெரிக்காவிலேயே நடக்கிறது. இதிலென்ன பிழை?” என்ற கேள்விகள் எழுப்பப்படும் என்பது தான். எனவே தான், ஜனாதிபதி ட்ரம்ப்பை விரும்பாதவர்கள் கூட, அவர் மோசமாகத் தோல்வியடையக்கூடாது என்று விரும்பினர். அந்தளவுக்கு முக்கியமானது அவரது பதவி.  

இவையெல்லாம் அடிப்படைகளாக இருக்க, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது, தலைகீழானதாக இருக்கிறது என்பது தான், குறிப்பிட வேண்டியதாக உள்ளது.  

ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யாவின் வெளிநாட்டமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவையும் ஐ.அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் சேர்ஜெய் கிஸ்லியாக்கையும், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வைத்து, கடந்த வாரம் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பே, பல கேள்விகளை எழுப்பியிருந்ததுடன், புருவங்களை உயர்த்தியிருந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள செய்தி, முழுமையான கேள்விகளை எழுப்பிச் சென்றிருக்கிறது. 

இந்தச் சந்திப்பின் போது, ஐ.அமெரிக்காவின் தோழமை நாடொன்றால் வழங்கப்பட்ட, அதி இரகசியமான புலனாய்வுத் தகவலை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தினார் என்பது தான் தற்போதுள்ள செய்தி. இந்தச் செய்தியை, வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, முதன்முதலில் வெளிப்படுத்தியது.  

ஐ.எஸ்.ஐ.எஸ் சம்பந்தமான இந்தத் தகவலை, தோழமை நாடுகளுக்கிடையிலான புலனாய்வுத் தகவல் பகிர்வு அடிப்படையில், குறித்த நாடு வழங்கியதாகவும், அதை, ரஷ்யாவிடம் பகிர்வதற்கு, அந்நாடு அனுமதி வழங்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் குறிப்பாக, நாடொன்றின் குறித்த நகரத்திலிருந்து தான், இந்தப் புலனாய்வுத் தகவல் பெறப்பட்டது என்பதை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம், புலனாய்வுத் தகவல் மூலம் வெளிப்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாகக் கருதப்படுகிறது. அதேபோல், தோழமை நாட்டுடனான புலனாய்வுத் தகவல் பகிர்வும் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.  

இதில் முக்கியமாக, ஜனாதிபதி என்ற அடிப்படையில், தான் விரும்பும் தகவலை, விரும்பும் நபரிடம் தெரிவிக்கும் அதிகாரம், ட்ரம்ப்புக்கு உண்டு. எனவே, இது, சட்டத்தை மீறிய ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

மாறாக, நாட்டின் அமைதியையும் தோழமை நாட்டின் புலனாய்வையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பையே இது ஏற்படுத்தும்.  

இந்தத் தகவல் வெளியானதும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆலோசகர்களும் தொடர்பாடல் ஆளணியினரும், பல்வேறு ஊடகச் சந்திப்புகளுக்கும் அனுப்பப்பட்டனர். “சந்திப்பு நடந்த அறையில் நான் இருந்தேன். அப்படியான ஒன்று நடக்கவேயில்லை” என்பது தான், அனேகரின் கருத்தாக இருந்தது.  

இவ்விடயத்தில் வொஷிங்டன் போஸ்ட், உறுதியுடன் இருந்தது. “ஜனாதிபதி ட்ரம்ப், என்ன விடயத்தைக் கதைத்தார், எந்த நகரத்திலிருந்து அந்தத் தகவல் கிடைத்தது என்று கூறினார் என்றுகூடத் தெரியும். ஆனால், புலனாய்வு மூலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற ஐ.அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், அத்தகவல்களை வெளியிடுவதிலிருந்து தவிர்க்கிறோம்” என்பது, அப்பத்திரிகையின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.  

இவற்றுக்கு மத்தியிலேயே, “அப்படி ஒன்று நடக்கவேயில்லை” என, ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஊடக ஆளணியினர், தங்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர்.  

ஆங்கிலத்தில், தனிப்பட்ட சுயநல நோக்கங்களுக்காக நெருங்கிய ஒருவரைக் காட்டிக் கொடுத்தல்  என்ற அர்த்தத்தில், “ஒருவரை பஸ்ஸுக்கு அடியில் எறிதல்” என்ற சொற்றொடர் காணப்படுகிறது.

அவ்வாறு செய்வது போல, அவர்களையெல்லாம் காட்டிக் கொடுப்பது போல, தனது டுவிட்டரின் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “ஜனாதிபதியாக நான், எனக்குச் செய்வதற்கு உரிமையுள்ள வகையில், ரஷ்யாவிடம் (வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட வெள்ளை மாளிகைச் சந்திப்பில்), பயங்கரவாதம், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்தேன்.

மனிதாபிமானக் காரணங்கள் தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான அவர்களது போராட்டத்தை, ரஷ்யா உயர்த்த வேண்டுமென நான் விரும்புகிறேன்.  கோமியிடமும் ஏனையோரிடமும், எனது நிர்வாகத்தின் ஆரம்பத்திலிருந்து, புலனாய்வுச் சமூகத்தில், தகவல்களைக் கசியவிடுவோரைக் கண்டுபிடிக்குமாறு கோரிவந்தேன்” என்று தெரிவித்தார்.  

இதன்மூலம், ரஷ்யர்களிடம் இரகசியத் தகவல்களை வழங்கினார் என்ற விடயத்தை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியதோடு, தனது ஆலோசகர்களையும் ஊடகத் தொடர்பாளர்களையும் காட்டிக் கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை, ஏனையோரால் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதை அவர் விரும்புவதில்லை. “எனக்கு அதிகாரமிருக்கிறது, நான் செய்கிறேன். அதைக் கேட்க நீங்கள் யார்?” என்ற மனநிலையே அது.  

இவ்வாறு அவரது ஆலோசகர்களும் ஊடகத் தொடர்பாளர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டமை, இதுவே முதன்முறை கிடையாது. இதற்கு முன்னர், புலாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளராக இருந்த ஜேம்ஸ் கோமி, தடாலடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது, சர்ச்சை எழுந்தது. ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டனவா என்று, எப்.பி.ஐ-ஆல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதைத் திசைதிருப்புவதற்காக அல்லது நிறுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என, கடுமையான விமர்சனம் எழுந்தது.

எனினும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆலோசகர்களும் ஊடகத் தொடர்பாளர்களும், “அதற்கும் இதற்குமிடையில் தொடர்பு கிடையாது” என்று, உரத்தச் சொல்லி வந்தனர். ஆனால், தொலைக்காட்சியொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கிய ஜனாதிபதி ட்ரம்ப், இரண்டுக்குமிடையில் தொடர்பு காணப்படுவதை உறுதிப்படுத்தினார்.  

நேற்று வெளியான செய்தியொன்றின்படி, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து, ரஷ்யர்களுடனான தனது தொடர்பை வெளிப்படுத்தாதன் காரணமாக, பதவியிலிருந்து விலகுவதற்குப் பணிக்கப்பட்ட மைக்கல் பிளின் மீதான விசாரணையை நிறுத்துமாறு, ஜனாதிபதி ட்ரம்ப், அப்போதைய எப்.பி.ஐ பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியிடம் கோரியிருந்தார் எனத் தெரிகிறது. இது, இவ்விடயத்தை மேலும் சிக்கலாக்குகிறது.  
இவ்வாறு, ஜனாதிபதி ட்ரம்ப்பின் கீழ் பணியாற்றுவது என்பது, மிகவும் கடினமானதாக மாறி வருகிறது என்பதே, அனைவரதும் கருத்தாக இருக்கிறது. அவர், எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்பது, தெளிவில்லாமல் காணப்படுகிறது. எனவே, அவரது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதென்பது, இன்னமும் கடினமானதாகவே மாறிவிடுகிறது.  

ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பற்றி வெளிவரும் செய்திகள், எவ்வளவு நிலையில்லாதவராக அவர் காணப்படுகிறார் என்பதைக் காட்டுகின்றன. அவர், உடற்பயிற்சி செய்வதில்லை. கல்லூரிக் காலத்துக்குப் பின்னர், உடற்பயிற்சியே செய்ததில்லை. ஏனென்று கேட்டால், உடல் என்பது மின்கலம் (பற்றறி) போலவெனவும், உடற்பயிற்சி செய்யும் போது அதிலுள்ள சக்தி தீர்ந்துவிடுமெனவும் தெரிவிக்கும் அவர், சக்தியைச் சேமிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கிறார்.  

வெள்ளை மாளிகையில் உணவுண்ணும் போது கூட, ஏனையோருக்குத் தண்ணீர் வழங்கப்பட, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு மாத்திரம் குளிர்பானம் வழங்கப்படுகிறது. ஏனையோருக்கு ஒரு “ஸ்கூப்” வனிலா ஐஸ்கிறீம் வழங்கப்பட, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு 2 “ஸ்கூப்” வழங்கப்படுகின்றன. கோழியிறைச்சி உண்ணும் போது, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு மாத்திரம், மேலதிக தட்டில் சுவைச்சாறு (சோஸ்) வழங்கப்படுகிறது.  

இவ்வாறு, அனைத்திலும் தனியான கவனம் செலுத்தப்பட்டு, அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில், குழந்தைகளைப் போல, இலகுவில் தனது விருப்பப்படி விடயங்கள் நடைபெறாவிட்டால், கோபமடையும் பழக்கத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டிருக்கிறார்.  இவ்வாறான ஒருவர் தான், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கிறார்.

அதன்மூலம், உலகம் முழுவதற்கும் வழிகாட்டியாகச் செயற்பட வேண்டியவராக இருக்கிறார். எனவே தான், ஐ.அமெரிக்காவில் நடப்பவை பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.   

அடம்பிடிக்கும் குழந்தையொன்றை, நாட்டின் ஜனாதிபதியாக, அமெரிக்கர்கள்  தெரிவுசெய்திருக்கின்றனர். அந்தக் குழந்தை, தன் பதவியின் முக்கியத்துவம் பற்றி அறியாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம், ஓரளவு அமைதியாக இயங்க வேண்டுமானால், சிறந்த வழிகாட்டல் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தான், பிரான்ஸின் புதிய பிரதமர் இமானுவேல் மக்ரோன், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல் போன்றோர், நவீன உலகின் புதிய வழிகாட்டிகளாக மாற வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால், இங்கு ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளே, போதுமானவை.    

- See more at: http://www.tamilmirror.lk/196864/ட-ரம-ப-ப-வ-ட-ட-வத-க-க-ம-ரஷ-ய-வ-ச-ரண-#sthash.0ZwRlVRA.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.