Jump to content

மன்னாரில் பிரதமர்...


Recommended Posts

மன்னாரில் பிரதமர்...
 

article_1495190489-DSC_0102.jpg

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகத்தின் 4 மாடிக் கட்டடத் தொகுதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை, வைபவ ரீதியாகத் திறந்துவைத்து, மக்களின் பாவனைக்காகக் கையளித்தார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியுதவியுடன், 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதி, திறப்பு விழா நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

இதில், அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன, ரிஷாட் பதியுதீன், டீ.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான், மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்டச் செயலக மைதானத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, காணி உறுதிப்பத்திரங்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)

article_1495190499-DSC_0128.jpg

article_1495190509-DSC_0136.jpg

article_1495190519-DSC_0144.jpg

article_1495190528-DSC_0148.jpg

article_1495190537-DSC_0173.jpg

article_1495190546-DSC_0179.jpg

article_1495190563-PKP_1844%281%29.jpg

article_1495190576-PKP_1858%281%29.jpg

article_1495190586-PKP_1869%281%29.jpg

article_1495190594-PKP_1899%281%29.jpg

article_1495190606-PKP_1928%281%29.jpg

article_1495190616-PKP_1947%281%29.jpg

article_1495190625-PKP_2023.jpg

- See more at: http://www.tamilmirror.lk/196937/மன-ன-ர-ல-ப-ரதமர-#sthash.pQy55A3u.dpuf

 

 


பிரதமருக்கு எதிராக மன்னாரில் கறுப்புக்கொடிப் போராட்டம்
 
 

article_1495191250-1.jpg

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கடட்டடத் தொகுதியைத் திறந்துவைப்பதற்காக, மன்னாருக்கு இன்று (19) விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, காணாமற்போன உறவினர்களால் கறுப்புக் கொடிப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இருப்பினும், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாவட்டச் செயலக வளாகத்துக்குள் சென்ற பிரதமர் உள்ளிட்ட குழுவினர், மாவட்டச் செயலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, பின்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

article_1495191278-6.jpg

article_1495191292-7.jpg

article_1495191307-8.jpg

 
- See more at: http://www.tamilmirror.lk/196940/ப-ரதமர-க-க-எத-ர-க-மன-ன-ர-ல-கற-ப-ப-க-க-ட-ப-ப-ர-ட-டம-#sthash.rBuTX2v8.dpuf
Link to comment
Share on other sites

தீர்வு விரைவில் வரும்: பிரதமர்
 
 

article_1495193065-ranil.jpg-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் மாவட்டத்துக்கு இன்று ஒரு விசேட தினமாகும். யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவுகூற வேண்டும். இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளும் அப்பாவிப் பொதுமக்களுமே ஆவர்” என, பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதியை, இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர், நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்கின்றபோது, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும்  மாகாண சபையூடாக நிதித் திட்டங்களை வழங்குவதற்குமான அவகாசத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். யுத்தத்தினால் சேதமடைந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தினை, பல்வேறு வகையிலும் முன்னேற்றுவதற்காக மாகாண சபை, மத்தியரசு எனப் பார்க்காது இரண்டு தரப்பக்களினூடாகவும் இணைந்து, குறித்த திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம் பெறக்கூடாது. அதற்கான வழி வகைகளை நாம் மேற்கொள்ளக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த இளைஞர், யுவதிகளுக்கு இவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வேறு வழிகளும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே, அவர்களையும் நாங்கள் இந்த சமூகத்தோடு இணைத்துக்கொண்டு, அவர்களுக்கான கௌரவத்தை வழங்க ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவகாசத்தை எமக்கு வழங்க வேண்டும்.

அதற்காக இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் பூரணப்படுத்துவது போல, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், தம்புளை போன்ற பிரதேசங்களுக்கான பெருந்தெருக்களை நிர்மாணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோன்று, வீடமைப்புத் திட்டங்களையும் நிர்மாணிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். வடக்கு பிரதேசங்களுக்கு கைத்தொழில் முன்னெற்ற நடவடிக்கைகளுக்கு விசேட சலுகைகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதேபோன்று, சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறையை விருத்திசெய்யத்  தீர்மானித்துள்ளோம். ஒரு சில மாதங்களில், சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், யுத்தத்தினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் முன்வந்துள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பு ஒன்றை ஒழுங்குசெய்ய வேண்டும். இது தொடர்பில், வடமாகாண முதலமைச்சருடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மிக விரைவாக, ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என அங்கு வழியுறுத்தப்பட்டது.

ஆகவே, இவ்விடயம் தொடர்பில் ஒரு சில மாதங்களில் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டு, இறுதியாக பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம். இந்த விடயத்தை நாங்கள் இழுத்தடித்துக்கொண்டு செல்ல முடியாது. இனவாதம், மதவாதம் என்று கதைத்துக்கொண்டு, இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இந்த நாட்டில் பிளவை ஏற்படுத்துகின்ற விடையங்களைக் கலந்துரையாட முடியாது.

நாங்கள் அனைவரும், இந்த விடயத்தில் ஒருமித்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்கவேண்டும். சிறந்த நல்லிணக்கம் உள்ள சமாதானமுள்ள ஒரு தீர்வையே, மக்கள் எங்களிடம் எதிர்ப்பார்க்கின்றனர்.

மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய, மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். செயற்பாடு ரீதியாக, நாடாளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே, இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.

ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், நானும், இவ்விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்திருக்கின்றோம். எனவே, யாப்பு ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் தாயரிப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். அவ்வாறான நிலைமை தோன்றுமாக இருந்தால், நாங்கள் இயல்பான நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/196943/த-ர-வ-வ-ர-வ-ல-வர-ம-ப-ரதமர-#sthash.tUUds0Kh.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.