Jump to content

பளையில் துப்பாக்கிச் சூடு//முகமாலையில் இராணுவத்தினர் குவிப்பு


Recommended Posts

பளையில் துப்பாக்கிச் சூடு

 
 
பளையில் துப்பாக்கிச் சூடு
  •  

கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கற்சிலைவெளிப் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர். ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாப் பொலிஸார் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

 

media-share-0-02-06-4d02611722738bb81f8e

media-share-0-02-06-6ea35380f31b096d3b16

media-share-0-02-06-ae45d89ba777f830bd7e

media-share-0-02-06-f85cf5634061ace59bd0

 

http://uthayandaily.com/story/3359.html

Link to comment
Share on other sites


முகமாலையில் இராணுவத்தினர் குவிப்பு
 
19-05-2017 10:14 AM
Comments - 0       Views - 26

article_1495169435-aa1.JPG

எஸ்.என்.நிபோஜன், கி.பகவான், சுப்பிரமணியம் பாஸ்கரன்  

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப்  பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான  வீதியின் முகமாலை கச்சார்வெளி பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏ-9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார், கச்சார்வெளி கிராமப் பக்கமாக சந்தேகத்துக்கு இடமான சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்றுள்ளனர்.

தாம், டோர்ச் லைட் ஒளி  மூலம் அவதானித்த போது, இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி 56 ரகத் துப்பாக்கியினால் நான்கு தடவை பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிப் தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட, பொலிஸாரின் ரோந்துக் காரையும் ரயில் சமிக்கை கட்டுப்பாட்டு பெட்டிகளையும் தாக்கியுள்ளன.

இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

முகமாலை  தொடக்கம் கச்சார்வெளி வரையான 3 கிலோமீற்றர் நீள தூரமும்  முகமாலை தொடக்கம் கிளாலி வரையான 3 கிலோ மீற்றர் தூர அகலத்தில் படையினர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு தேடுதல் நடாத்திவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

article_1495169451-aa2.JPG

article_1495169467-aa3.jpg

article_1495169478-aa4.jpg

article_1495169489-aa5.jpg

article_1495169499-aa6.jpg

article_1495169507-aa7.JPG

- See more at: http://www.tamilmirror.lk/196913/ம-கம-ல-ய-ல-இர-ண-வத-த-னர-க-வ-ப-ப-#sthash.aoRY4e76.dpuf
Link to comment
Share on other sites

முகமாலை மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது

 

DSC04091.jpg

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற் அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளைக்கு பின்னரான காலப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர்; ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு  சத்தம் கேட்டதனைத் தொடர்ந்து   போக்குவரத்து டோர்ச் லைட்  வெளிச்சம் மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள்  காவல்துறையினர்; மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

இதன்போது காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை  காவல்துறையினரால்  ஒலிபெருக்கி மூலம் கச்சாவெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன. பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

18578540_634165096778347_1024294954_n.jp18578960_634165090111681_945136648_n.jpg18624450_634165083445015_1716268289_n.jpDSC04045.jpgDSC04047.jpgDSC04053.jpgDSC04066.jpgDSC04073.jpgDSC04086.jpgDSC04087.jpgDSC04088.jpgDSC04090.jpgDSC04091-1.jpg

 

https://globaltamilnews.net/archives/27338

Link to comment
Share on other sites

முகமாலையில் பதற்றம் : பொலிஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் : இராணுவத்தினர் குவிப்பு (Video)

 

 

முகமாலையில் பொலிஸார் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.Shooting-at-jaffna.jpg

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. 

இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

 போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது  போக்குவரத்து பொலிஸார்  டோர்ச் லைட் ஒளி  மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர்.

 இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன.

இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20148

Link to comment
Share on other sites

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் முன்னுக்கு நின்ற கொஞ்சம் புத்திசாலித்தனம் கொண்டதுகளை இலக்கு வைத்து விட்டினம் இப்படி அப்பிடி என்று கொஞ்சபேரை காவு வாங்குவதுக்கு அயத்த்மாகினம்.

Link to comment
Share on other sites

யாழ். முகமாலை தாக்குதலின் பின்னணியில் வெளியான புதுத் தகவல்

யாழ். முகமாலை பகுதியில் இன்று காலை பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பில் அரசியல் ஆய்வாளரொருவர் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிமித்தம் சற்றுக் குழப்பமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மேற்கொள்ப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகம் மஹிந்த அணியினுடைய வேலையாக இருக்கலாம். ஏனெனில் அந்த பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளகூடியவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பகிர்ந்துள்ளதாவது,

 

http://www.tamilwin.com/interviews/01/146260?ref=view-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ விளையாட்டுக்கு உசுப்பி விட்டு இருக்கினம்:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா உளவவமைப்பினது நாடகம். தமிழர்களை அடைத்துவைக்க எடுக்கும் நகர்வு. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. அண்மைய படையமைப்பின் செயலாளரின் கூற்று நடைமுறையாகிறது. அவளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் சொறீலங்காவின் ஆக்கிரமிப்பை அப்படியே அப்பட்டமாகக் காட்டி நிற்குது.. இது.  மகிந்த அணி சுட.. மைத்திரி அணி தமிழரை அடக்கி ஆளும் தந்திரத்தை செப்புது.

ஏமாளிகள் எங்களில் சிலர். பகடைக்காய்கள்.. முன்னாள் போராளிகள்.

உலகம்.. இதைப் பார்த்திட்டு உறங்கும். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

 

உலகம்.. இதைப் பார்த்திட்டு உறங்கும். :rolleyes:tw_angry:

அவர்களது வியாபர்த்திற்கு தீங்கு வந்தால் திடுக்கிட்டு எழும்பும் இல்லையேல் உறங்குவது போல நடிக்கும்.....தற்பொழுது அவ்ர்களது வியாபாரம் சிறிலங்காவில் ஒகோ ஓகோ ....

Link to comment
Share on other sites

சொல்லப்படும் கதைகள்

 
சொல்லப்படும் கதைகள்
 

கச்­சார் வெளிப் பகு­தி­ யில் நேற்று அதி­கா­லை­யில் சுற்­றுக் காவல் பொலி­ஸார் மீது நடத் தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுக்கு என்ன கார­ ணம் என்­பது உட­ன­டி­யா­கத் தெரி­ய­வ­ர­வில்லை என்­றா­லும் பல­வித ஊகங்­கள் மக் கள் மத்­தி­யில் பேசப்­ப­டு­கின்­றன. அவை வரு­மாறு,

1. இது, கிளி­நொச்­சி­யில் தனிச் சிங்கக் கொடியைக் கட்டிய மஹாசேன் பலகாயவின் குழப்பும் முயற்சி. இப்படிச் செய்வதன் மூலம் மீண்டும் வடக்கில் ஆயுதப் போர் ஏற்பட்டதாகக் காட்டி தெற்கில் அரசியல் செய்யும் உத்தி.

2. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படையினர் ஏன் போர் முடிந்த பின்னரும் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார். அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் புலனாய்வாளர்கள் செய்த வேலையாக இது இருக்கும்.

3. மணல் மற்றும் கஞ்சா கடத்துபவர்களுக்குப் பளைப் பொலிஸாரின் அண்மைக் கால தீவிர நடவடிக்கைகள் இடைஞ்சலாக இருக்கின்றன. இரவுச் சுற்றுக் காவலை அவர்கள் அதிகரித்ததன் மூலம் கடத்தலைச் செய்ய முடியாதிருப்பதால் பொலிஸாரை அவர்களது நிலையத்திற்குள் முடக்குவதற்காகக் கடத்தல்காரர்களால் செய்யப்பட்டதாக இது இருக்கும்.

4. வேறு யாரையோ இலக்கு வைத்துப் பதுங்கியிருந்த தாக்குதலாளிகள் இடக்கு முடக்காகப் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டதால் தப்பியோடுவதற்காகச் சுட்டுவிட்டுச் சென்றிருக்கலாம்.

5. அவ்வப்போது புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாகச் சொல்லப்படும் வழக்கமான கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

6. போர் முடிந்து 8 வருடங்களாகியும் அரசு ஒரு தீர்வைத் தராமல் இழுத்தடிப்பதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கியிருக்கலாம்.

இந்தக் காரணங்களில் எந்த ஒன்றையும் பொலிஸாரோ இராணுவத்தினரோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வி◌சாரணைகளின் பின்னரே காரணத்தை அறிய முடியும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

http://uthayandaily.com/story/3527.html

Link to comment
Share on other sites

பளை­யில் நடந்­தது சாதா­ரண சம்­ப­வம்

பொன்­சேகா விளக்­கம்

 
 
பளை­யில் நடந்­தது சாதா­ரண சம்­ப­வம்
 

கிளி­நொச்சி, பளை­யில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வ­மா­னது நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளில் இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­களை போன்­ற­தே­யா­கும். அத­னைத் தேசி­யப் பாது­காப்­புக்கு எதி­ரான சம்­ப­வ­மா­கக் கருத முடி­யாது என்று பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த வாரம் பிலி­யந்­த­லை­யி­லும் சம்­ப­வம் இடம்­பெற்­றது. பாத­ளக் குழு­வால் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். அதே­போல், கழுத்­து­றை­யில் சிறைச்­சா­லைப் பேருந்து மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தை­யும் நாம் அறி­வோம்.

இது­போல் நாட்­டில் எல்லா இடங்­க­ளி­லும் பாதா­ளக் குழுக்­கள் இருக்­கக்­கூ­டும். யாழ்ப்­பா­ணத்­தி­லும் பல குழுக்­கள் உள்­ளன. கடந்த காலங்­க­ளில் பல சம்­ப­வங்­கள் அங்கு இடம்­பெற்­றன. ஆவாக் குழு என்ற பெய­ரில் ஒரு குழு இயங்­கு­வ­தும் அது பல வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளில் ஈடு­பட்டு வந்­த­மை­யும் நாம் அறி­வோம்.

கிளி­நொச்சி பளைப் பிர­தே­சத்­தில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வ­மும் இந்த வரி­சை­யில் இடம்­பெற்­ற­து­தான். பொலி­ஸார் களத்­தில் இறங்கி இதைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். அத­னைத் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான ஒன்­றா­கக் கருத முடி­யாது. தெற்­கில் இடம்­பெ­று­வ­து­போல் ஒரு சம்­ப­வம்­தான் இது.

தெற்­கில் இடம்­பெற்­றால் அதைச் சாதா­ரண சம்­ப­வம் என்று கூறும் நாம் வடக்­கில் இடம்­பெற்­றால் தேசிய பாது­காப்­புக்கு எதி­ரான சம்­ப­வம் என்று கூறு­வது எந்­த­வ­கை­யில் நியா­யம்? நாட்­டின் சட்­டத்தை உரிய முறை­யில் பயன்­ப­டுத்­தி­னால் இவ்­வா­றான சம்­ப­வங்­களை இல­கு­வா­கக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் – என்­றார்.

http://uthayandaily.com/story/3619.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.