Jump to content

மன்னிக்க மாட்டோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


தரையில் தமிழன்

வீழ்ந்திட்ட நாள் இது அல்ல
தன் நாடு மீட்க தன் உயிரை

தமிழன் ஈய்ந்த நாள் இது
 

மீண்டும்  நாம் நிமிர்வோம்

எப்போதும் நிமிர்ந்து நிற்போம்
 

ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில்

எமக்கானவை எல்லாம் இழந்தோம்

தன் மானத்தை மட்டும்

இழக்கவில்லை

காத்திருக்கின்றோம்

எம்மைக்கான காலம் வரும் வரை
 

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

 

கொலைக்களங்கள் பல கண்டும்

கொடுமைகள் நிதம்கொண்டும்

அடிமைகளாய் வாழ மாட்டோம்....

விடுதலைத் தாகம் உண்டு...

அதற்கான குரலும் உண்டு...

கோழைகளாய் வீழ மாட்டோம்...

மீண்டும் எழுந்திடுவோம்

பீனிக்ஸ் பறவைகளாய் .....

 

செங்குருதி தோய்ந்து

செத்தழிந்து போனவர்கள்

கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள்

உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள்

அத்தனை பெருக்கும் வீரவணக்கங்கள்

 

மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை

மரணத்தின் வாசலிலும் உங்களை

மறக்க மாட்டோம்

 

எம்மால் முடிந்தவரை உங்கள் கரம் சேர்ந்தோம்  

ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து

அழுவதாய் மற்றவர் முன்

பாசாங்கு செய்பவர்கள்

நாம் இல்லை

எம் இதயத்தில் உம்மை இருத்தி

இழப்புக்களை வலிப்புக்களை எல்லாம்

ஒன்று சேர்த்து

மீண்டும் வருவோம்

உமக்காக உமது இரத்தத்திற்காக

நாம் மீண்டும் வருவோம்

ஆனால் இன்று.....

காத்திருக்க மட்டுமே முடிகிறது......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை

மரணத்தின் வாசலிலும் உங்களை

மறக்க மாட்டோம்

 

மீண்டும் எழுந்திடுவோம்

பீனிக்ஸ்ப்பறவைகளாய் .....  நன்றி  பாராட்டுக்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

நன்றி...வாத்தியார் !

உங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்!

மற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

நாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை!

ஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எம்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்!

எமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன!

ஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை!

அதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

தரையில் தமிழன்

வீழ்ந்திட்ட நாள் இது அல்ல
தன் நாடு மீட்க தன் உயிரை

தமிழன் ஈய்ந்த நாள் இது

-------

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

எட்டு வருடமாகியும்... இன்னும் அதற்கான, விடிவை பெற்றுத்  தர... 
ஒரு துரும்பையும், சர்வதேச த்தை நோக்கி அசைக்காமல்.....
ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்... தமிழ் தலைமையை நினைக்க...
வெறுப்புத் தான்... ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

தன் நாடு மீட்க தன் உயிரை

தமிழன் ஈய்ந்த நாள் இது
 

மீண்டும்  நாம் நிமிர்வோம்

எப்போதும் நிமிர்ந்து நிற்போம்

 

வர்ணாச்சிரமத்துக்கு அடிமையாகி இவ்வுலக வாழ்வை வெறுத்து மேலுலக வாழ்வைத் தேடிய போலி வாழ்க்கை முடிவுபெறும் அடையாளமே முள்ளிவாய்க்கால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

உங்கள் சொல்லியங்கள் மெய்நிலையடைந்து தமிழினம் மேல்மைநிலையடைவேண்டுமென்பதே வேணவா. ஆழமான வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.5.2017 at 1:50 AM, நிலாமதி said:

மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை

மரணத்தின் வாசலிலும் உங்களை

மறக்க மாட்டோம்

 

மீண்டும் எழுந்திடுவோம்

பீனிக்ஸ்ப்பறவைகளாய் .....  நன்றி  பாராட்டுக்கள் 

 

வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாமதி அக்கா

On 19.5.2017 at 4:20 AM, புங்கையூரன் said:

நன்றி...வாத்தியார் !

உங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்!

மற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

நாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை!

ஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எம்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்!

எமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன!

ஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை!

அதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை!

நன்றி அண்ணா
இலக்கை எட்டும்வரை... அதற்கான தலைமையும் மக்களின் எழுச்சியும்.....
வரும்வரை நாங்கள் தூங்கிவிடக் கூடாதல்லவா,,,,
மக்கள் சோர்ந்து விடாமல் இருக்க வேண்டுமல்லவா...
எழுதுகோல்கள்தானே போராட்டத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.5.2017 at 4:56 AM, தமிழ் சிறி said:

எட்டு வருடமாகியும்... இன்னும் அதற்கான, விடிவை பெற்றுத்  தர... 
ஒரு துரும்பையும், சர்வதேச த்தை நோக்கி அசைக்காமல்.....
ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்... தமிழ் தலைமையை நினைக்க...
வெறுப்புத் தான்... ஏற்படுகின்றது.

இன்று நம் முன்னே இருக்கும் தலைமைகளினால் மக்களுக்கு எந்த விடிவும் வரப்போவதில்லை என்பது எட்டு வருடங்களுக்கு முன்னரே தெரிந்த விடயம் சிறி அண்ணா.

மக்களின்  எழுச்சியைச் சரியான பாதையில் எடுத்துச் செல்பவனே உண்மையான தலைவன்
வரவிற்கு நன்றி சிறி அண்ணா

On 19.5.2017 at 6:16 AM, Paanch said:

 

வர்ணாச்சிரமத்துக்கு அடிமையாகி இவ்வுலக வாழ்வை வெறுத்து மேலுலக வாழ்வைத் தேடிய போலி வாழ்க்கை முடிவுபெறும் அடையாளமே முள்ளிவாய்க்கால். 

கருத்திற்கு  நன்றி பாஞ்ச் அண்ணா

இதற்கு ஒரு சிறிய விளக்கம் தாருங்கள்   

 

18 hours ago, nochchi said:

உங்கள் சொல்லியங்கள் மெய்நிலையடைந்து தமிழினம் மேல்மைநிலையடைவேண்டுமென்பதே வேணவா. ஆழமான வரிகள்.

நன்றி நொச்சியர்

நம்பிக்கையுடன் காத்திருப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற அருமையான கவிதை.....கடந்து போக முடியாது கையைப் பிடித்து இழுக்கின்றது.....!

பகிர்வுக்கு நன்றி வாத்தியார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தேவை நாளாந்தம் கூடிக் கொண்டே போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-19 at 8:26 AM, வாத்தியார் said:

கொலைக்களங்கள் பல கண்டும்

கொடுமைகள் நிதம்கொண்டும்

அடிமைகளாய் வாழ மாட்டோம்....

அருமையான காலத்திற்கு ஏற்ற பகிர்வு,தாயக மக்கள்  இன்றும் தம்மால் முடிந்தவரை போராடி வாழ்கின்றார்கள்

Link to comment
Share on other sites

19 hours ago, வாத்தியார் said:

கருத்திற்கு  நன்றி பாஞ்ச் அண்ணா

இதற்கு ஒரு சிறிய விளக்கம் தாருங்கள்   

ஆதித் தமிழர் வாழ்வுமுறையை இங்கு யாழிணையத்திலும் பலர் எழுத வாசித்து வியந்துள்ளோம். ஒரு வீரமிக்க இனமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழினத்தைத் தொழில் முறையை வைத்துக் கூறுபோட்டு, இயற்கைக்கும் பல்வேறு வடிவங்கள் கொடுத்து இவர்கள்தான் கடவுள்கள் என்று இயற்கையிலும் பிரிவினை ஏற்படுத்தியதோடு, உலகத்தை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிப் பலரை வெறுக்கவும் வைத்து, வேற்றினம் இலகுவாக அடிமைகொள்ளக்கூடிய வகையில் தமிழினத்தைக் கொண்டுவந்து வைத்துள்ளது வர்ணாச்சிரமம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

காலத்திற்கேற்ற அருமையான கவிதை.....கடந்து போக முடியாது கையைப் பிடித்து இழுக்கின்றது.....!

பகிர்வுக்கு நன்றி வாத்தியார்....!

தன்னம்பிக்கையும் தளர்வற்ற நோக்கமும் இலக்கை நோக்கி முன்னேற முக்கியமானது. வருகைக்கு நன்றி சுவி அண்ணா

13 hours ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகளின் தேவை நாளாந்தம் கூடிக் கொண்டே போகிறது.

அவர்களும் மக்களிடையே இருந்து தானே வந்தார்கள்
நன்றி ஈழப்பிரியன் அண்ணா 

12 hours ago, putthan said:

அருமையான காலத்திற்கு ஏற்ற பகிர்வு,தாயக மக்கள்  இன்றும் தம்மால் முடிந்தவரை போராடி வாழ்கின்றார்கள்

அந்தப் போராட்ட வாழ்வையும்...  தவறியும்... ஆதரிக்காத.. எமது தலைமைகள்

இல்லாது போகும் வரை..... காத்திருப்போம்
நன்றி புத்தரே

4 hours ago, Paanch said:

ஆதித் தமிழர் வாழ்வுமுறையை இங்கு யாழிணையத்திலும் பலர் எழுத வாசித்து வியந்துள்ளோம். ஒரு வீரமிக்க இனமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழினத்தைத் தொழில் முறையை வைத்துக் கூறுபோட்டு, இயற்கைக்கும் பல்வேறு வடிவங்கள் கொடுத்து இவர்கள்தான் கடவுள்கள் என்று இயற்கையிலும் பிரிவினை ஏற்படுத்தியதோடு, உலகத்தை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிப் பலரை வெறுக்கவும் வைத்து, வேற்றினம் இலகுவாக அடிமைகொள்ளக்கூடிய வகையில் தமிழினத்தைக் கொண்டுவந்து வைத்துள்ளது வர்ணாச்சிரமம்.
 

கேட்டதும் விளக்கம் தந்தமைக்கு நன்றி பாஞ்ச் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணையா நெருப்பு நமக்குள் உண்டு என்று மீண்டும் மீண்டும் உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். நமக்காக அந்தநாள் காத்திருக்கிறது. நாம்தான் எட்டுக்கால் நண்டுகள்போல போகவேண்டிய திசை நோக்கி முகம் இருந்தாலும் ஒத்துழைக்காத கால்களால் தடம் மாறி இலக்கைச் சென்றடைய முடியாமல் தத்தளிக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

அணையா நெருப்பு நமக்குள் உண்டு என்று மீண்டும் மீண்டும் உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். நமக்காக அந்தநாள் காத்திருக்கிறது. நாம்தான் எட்டுக்கால் நண்டுகள்போல போகவேண்டிய திசை நோக்கி முகம் இருந்தாலும் ஒத்துழைக்காத கால்களால் தடம் மாறி இலக்கைச் சென்றடைய முடியாமல் தத்தளிக்கிறோம். 

அருமையான உவமானம் சகோதரி......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.