Jump to content

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்


Recommended Posts

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்
Feature-image1.jpg

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்

 
 
bradby-2017-web-banner-728.gif

இவ்வாண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான பிரிவின் சம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் சுவீகரித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு, புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானம் மற்றும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானம் ஆகிய மைதானங்களில் இடம்பெற்று நிறைவிற்கு வந்துள்ளன.

20 வயதின் கீழ் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி

இதில் பெண்கள் பிரிவிற்குரிய ஆட்டங்கள் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. முதல் இடத்தினை தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் பலம் மிக்க தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து புதுமுக அணியான பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி மோதியது.

தொடரின் முதலாவது அரையிறுதியில் நடப்புச் சம்பியன் மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலய அணியினர் மோதியிருந்தனர். இதில் 5-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற மகாஜனாக் கல்லூரி வீராங்கனைகள் மீண்டுமொருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். மறுமுனையில் கடந்த வருடம் இரண்டாவது இடத்தினைப் பிடித்த சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2014, 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாகாஜனாக் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டவர் தற்போது பண்டத்தரிப்பு மகளிர் பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றமையால் போட்டி பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமானது.

போட்டி விறுவிறுப்பாக ஆரம்பமான போதும், அனுபவம் வாய்ந்த தேசிய வீராங்கனைகளை உள்ளடக்கிய மகாஜனாவிற்கு எதிராக பண்டத்தரிப்பு அணியினரால் நெடுநேரம் ஈடுகொடுக்க முடியாமல் போனது. கௌரி முதலாவது கோலினைப்போட்டு மாகாஜனா அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் கோல் பெறப்பட்டு சில நிமிடங்களிலேயே மத்திய கோட்டிற்கு அண்மித்த பகுதியிலிருந்து ஷானு உதைந்த பந்து நேரடியாக கோல் கம்பத்திற்குள் நுழைய, போட்டி ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள்ளேயே இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றது மகாஜனாக் கல்லூரி.

தொடர்ந்தும் மகாஜனாவின் சுரேக, தர்மிகா ஆகியோரது முயற்சிகள் பண்டத்தரிப்பு  மகளிர் கல்லூரி அணியினரால் முறியடிக்கப்பட, 2-0 என நிறைவிற்கு வந்தது முதற்பாதி.

முதல் பாதி: மகாஜனாக் கல்லூரி 2 – 0 பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி

இரண்டாம் பாதியின் ஆரம்பம் முதல் பண்டத்தரிப்பு மகளிர் அணியின் கிருஷாந்தினி, அணித் தலைவி நிறோசிகா ஆகியோரது முயற்சிகள் மதூசாவினால் தடுக்கப்பட்டு பந்து மத்திய களத்திற்கு பரிமாறப்பட்டவாறு இருந்தது.

தொடர்ந்தும் மாகாஜனாவின் ஷானுவிற்குக் கிடைத்த வாய்ப்புக்கள் அவர்களுக்கு சாதகமான முடிவெதனையும் கொடுக்கவில்லை. மறுமுனையில் நிறோசிகாவின் முயற்சிகள் தொடர்ந்தும் தடுக்கப்பட்டன.

இதன் காரணமாக கோல் ஏதுமின்றி இரண்டாம் பாதி நிறைவிற்கு வர 2-0 என இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய மகாஜனாக் கல்லூரி அணி, தொடர்ச்சியாக நான்காவது வருடமாக (2014, 2015, 2016, 2017) வடக்கு மாகாண பெண்கள் உதைபந்தாட்டக் கிண்ணத்தினைத் தமதாக்கியது.

முழு நேரம்: மகாஜனாக் கல்லூரி 2 – 0 பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி

Thepapare.comஇன் ஆட்ட நாயகி – பாஸ்கரன் ஷானு (தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி)

கோல் பெற்றோர்

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி – சுரேந்திரன் கௌரி, பாஸ்கரன் ஷானு

இரண்டாம் இடம் பெற்ற பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்ற பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

அரையிறுதியில் தோல்வியுற்ற சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் மற்றும் கனகராயன்குளம் மாகா வித்தியால அணியினர் இப்போட்டியில் மோதினர்.

இதில் ஆதிக்கம் செலுத்திய சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்டதுடன், அவர்கள் நிறைவு செய்த மூன்று வாய்ப்புக்களும் ஓஃப் சைட்டாக அமைந்தன. கனகராயன்குளம் அணியிரும் தமக்குக் கிடைத்த ஓரிரு வாய்ப்புக்களையும் நழுவவிட்டனர். இவற்றின் காரணமாக போட்டி ஆட்ட நேரம் கோல் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்ட்டி உதையில் 3-2 என வெற்றிபெற்ற சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் மூன்றாவது இடத்தினை தமதாக்கினர்.

இப்பெண்கள் தொடரானது, வடக்கிலே ஆண்கள் உதைப்பந்தாட்டம் மட்டுமே தரமானது, பெண்கள் உதைப்பந்தாட்டம் வலுவற்றது எனும் கருத்தினை பொய்யாக்கி நிற்கின்றது. பெண்கள் அணியினரின் விளையாட்டில் ஒரு சிறந்த தரத்தையும், சிறந்த வீராங்கனைகளையும் காண முடியுமாக இருந்தது.

பொறுப்புடைய தரப்பினர், பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் வீராங்கனைகளை தொடர்ந்தும் ஊக்குவிக்கும் பட்சத்தில் வடக்கிலிருந்து பல வீராங்கனைகள் தேசிய அணியில் களங்காண்பர் என்பதற்கு இத்தொடர் சிறந்த உதாரணமாக இருந்தது.

3rd-Place மூன்றாம் இடம் பெற்ற சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.