Jump to content

மே 18.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழர் உலக நீதியை நம்பி கைகளை கட்டியபடி தர்ம யுத்தம் செய்தபடி பின்னோக்கி பின்னோக்கி நகர்ந்து அனைத்து நம்பிக்கைளும் பொய்த்தநிலையில் அனைத்து துரோகங்களையும் கண்டநிலையில் தன்னிடமிருந்த அனைத்தையும் பறி கொடுத்து இனிமேலும் போராடினால் மேலும் உயிரிழைப்பை தவிர வேறெதுவும் இல்லை என்றநிலையில் வேறு வழி எதுவுமற்று தன் எதிரியிடமே தன் வாழ்வை விட்டநாள்.

இது தான் சந்தர்ப்பமென எதிரியும் துரோகிகளும் சர்வதேசமும் தமது கொடூர உண்மை முகத்தை தமிழருக்கு காட்டியநாள்.

முள்ளிவாய்க்காலில் உயிரைக்கொடுத்த உறவுகளே 
எம்மை மன்னியுங்கள். எமது வலிமைவரை போராடினோம்
எம்மைவிட பல ஆயிரம் மடங்கு வலிமையான நரிகளே தர்ம யுத்தம் செய்த எம்மை முதுகில் குத்தி அழித்தன. உங்கள் பிணங்களின் மீது நின்று அவர்களது கொடூர முகங்களை காட்டி நின்றன. நிற்கின்றன.
தமிழருக்கு தீர்வு தருவோம் என்றவர்கள் இன்றும் கள்ள மயக்கத்தில்.
உங்கள் வீரமும் தியாகமும் வரலாற்றில் ஒருநாள் கணக்கு வைத்து சரி செய்யப்படும்.
அதுவரை உறங்குங்கள்.

மறக்கமாட்டோம்
மன்னிக்கமாட்டோம்
என் பிள்ளைக்கும் பேரனுக்கும் உறுதியாக ஊட்டியே சாவேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.