Jump to content

வைகாசி 18. ....?


Recommended Posts

வைகாசி 18.......?

எங்கள் முகவரியை  முற்றாக 

தொலைத்த நாள். 

அகத்தினிலே  தீராத வலியை 

புதைத்த நாள். 

யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை 

இழந்த நாள். 

வைகாசி  காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல்  கண்ணீர் 

விட்டநாள்.......

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2017 at 9:27 AM, yakavi said:

வைகாசி 18.......?

எங்கள் முகவரியை  முற்றாக 

தொலைத்த நாள். 

அகத்தினிலே  தீராத வலியை 

புதைத்த நாள். 

யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை 

இழந்த நாள். 

வைகாசி  காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல்  கண்ணீர் 

விட்டநாள்.......

 

 

 

எங்கள் முகவரிகளை இழப்புகள் விழுங்கிவிடமுடியாது யாகவி விழி சொரிந்தோம். விழுந்தோம்.. எதிர்காலத்தின் வழிகள் இருள் சூழ நகரும் திசை அறியாது உறைந்தோம் என்பது உண்மை. சொந்த நிலத்தை இழந்ததென்று முற்றுமுழுதாக முடிவெடுத்துவிடல் ஆகாது. வலிகளின் முகவரிகளோடு நாளைகள் நோக்கி நகர்கிறது இன்றைய பொழுது இது கண்களுக்குப் புலப்படாது. முயல் போல வேகமில்லாவிடினும் நத்தையைப்போல, ஆமையைப்போல..... காத்திரமான பயணத்தினூடாக இனத்தின் வாழ்வு நிமிரும். 

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா. 

நீங்கள் கூறியதுஉண்மைதான் .

ஆனாலும் நாங்கள் அந்த நாளிலேயே பட்ட வேதனைகள் 

தான் கவிதையாய்  வந்தது. 

எனது கவிதையை உற்றுநோக்கியதற்தகு நன்றி. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி 18 ஒரு நல்ல கவிதை அல்லது செய்தி.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.5.2017 at 3:27 PM, yakavi said:

வைகாசி  காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல்  கண்ணீர் 

விட்டநாள்.......

எம்மால் பெருமூச்சைக்கூட விட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளையும், மாடுகளையும்...,

அந்திவேளையில் சாய்ப்பது போல...,

மீள இயலாத...,

மரணப் படுகுழிக்குள்...,

எமை அழைத்துச் சென்ற நாள்!

 

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

வைகாசி 18 ஒரு நல்ல கவிதை அல்லது செய்தி.....!  

நீங்கள் கூறுவது புரியவில்லை. 

6 hours ago, குமாரசாமி said:

எம்மால் பெருமூச்சைக்கூட விட முடியவில்லை.

எங்கே மூச்சை விடுவது அந்த நேரத்தில் நாம் ஒரு ஐடப்பொருள் 

ஆகிவிட்டோம். 

உங்களுக்கு எனது நன்றி. 

Link to comment
Share on other sites

4 hours ago, புங்கையூரன் said:

ஆடுகளையும், மாடுகளையும்...,

அந்திவேளையில் சாய்ப்பது போல...,

மீள இயலாத...,

மரணப் படுகுழிக்குள்...,

எமை அழைத்துச் சென்ற நாள்!

 

ஆடு  மாடுகள்  கூட அந்திவேளையில் தமது வயிற்றை 

நிரப்பி கொண்டு நிம்மதியாக செல்லும். நாம் அப்படியா அந்த இடத்தை விட்டு வந்தோம். ஒரு கனம் நினைத்து பாருங்கள். 

உங்களுக்கு எனது நன்றி. ..

9 hours ago, suvy said:

வைகாசி 18 ஒரு நல்ல கவிதை அல்லது செய்தி.....!  

உங்களுக்கு எனது நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, yakavi said:

நீங்கள் கூறுவது புரியவில்லை. 

 

நீங்கள் ஒரு சிறு கவிதை மூலம் கனத்த செய்தியை சொல்லிவிட்டீர்கள் என்று சொன்னேன்....!

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நீங்கள் ஒரு சிறு கவிதை மூலம் கனத்த செய்தியை சொல்லிவிட்டீர்கள் என்று சொன்னேன்....!

புரிந்து விட்டது உங்கள் கருத்து. 

நன்றி நன்றி. .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.