Jump to content

‘எடப்பாடி பழனிசாமியை ஏன் பிடிக்கவில்லை?!’ - ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்? #VikatanExclusive


Recommended Posts

‘எடப்பாடி பழனிசாமியை ஏன் பிடிக்கவில்லை?!’ - ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்? #VikatanExclusive

 

எடப்பாடி பழனிசாமி

மிழக அரசை அச்சத்துடன் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த நல்ல தலைமை இல்லாததால், அமைச்சர் பொறுப்பைக் கேட்டு எம்.எல்.ஏக்கள் பலரும் நெருக்கடி கொடுக்கின்றனர். 'குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்ற தகவலால், எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில்.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில், நேற்று மாலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமையில் ரகசியக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாகவும் செய்தி வெளியானது. ‘எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில்கூட முதலமைச்சர் இல்லை. தனக்கு வேண்டப்பட்ட அமைச்சர்களை மட்டும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அனைவருக்கும் பொதுவான அரசாக இது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்காது’ என அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள். முதல்வருக்கு எதிரான இந்தக் கூட்டத்தால், அமைச்சர்கள் மத்தியில் ‘திடீர்’ கலக்கம் நிலவியது. 

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் கொங்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவர், “எம்.எல்.ஏக்களின் பிரச்னை என்பது ஏதோ முதல்வருடன் மட்டுமே முரண்பாடு ஏற்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை நேற்றைய கூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. உண்மை அதுவல்ல. மாவட்டங்களில் நிலவும் அதிகாரப்போட்டிதான் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் மூல காரணம். கரூரில் எடுத்துக் கொண்டால், மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக நீதிப் போராட்டத்தையே நடத்தினார் செந்தில் பாலாஜி. அவருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையில் நேரடி தகராறு ஏற்பட்டது. தர்மபுரியில் அன்பழகனுக்கும் பழனியப்பனுக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது. ஈரோட்டில் செங்கோட்டையனுக்கும் கருப்பண்ணனுக்கும் இடையில் பனிப்போர் சூழ்ந்துள்ளது. கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.

தோப்பு வெங்கடாச்சலம்இதேநிலைதான், மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் நிலவுகிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருந்த காலத்திலேயே, பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தார் தினகரன். அதன்படி, 'தொகுதிக்குள் நடக்கும் அரசு ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை; மாதம்தோறும் மாவட்ட அமைச்சரின் கணக்கில் இருந்து அன்பளிப்பு' என எம்.எல்.ஏக்கள் மனதைக் குளிர வைத்தார். ஆனால், ஆட்சி அமைந்ததில் இருந்து தொகுதி நிதியை ஒதுக்கீடு செய்யும்படி கேட்டால், 'நிதிப் பற்றாக்குறையில் அரசு தவிக்கிறது. விரைவில் ஒதுக்கீடு செய்கிறோம்' என்கின்றனர். ஆனால், முதல்வருக்கு வேண்டப்பட்ட அமைச்சர்களின் தொகுதிகளுக்கு மட்டும் சலுகைகளைக் காட்டுகின்றனர். மாநிலம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 'தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும்' என்று நிதியைக் கேட்டால், முகத்தைச் சுழிக்கிறார் பழனிசாமி. அரசு ஒப்பந்தங்களிலும் அமைச்சர்களின் கையே ஓங்கியிருக்கிறது. எம்.எல்.ஏக்கள் பலரையும் அவர்கள் ஓரம்கட்டுகின்றனர். எனவேதான், எங்கள் எதிர்ப்பைக் காட்ட 11 எம்.எல்.ஏக்களும் அணி திரண்டோம்" என்றார் விரிவாக. 

"எடப்பாடி பழனிசாமி அரசை நகர்த்திக் கொண்டு போவது 123 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான். கடந்த மாதம் பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ தலைமையில் அட்டவணைப் பிரிவு எம்.எல்.ஏக்கள் தனிக்கூட்டம் நடத்தினர். ‘அமைச்சர் பதவியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இவர்களை சமாதானப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அதற்குள், புதிய கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தோப்பு வெங்கடாச்சலம். இவர்களின் நோக்கம் எல்லாம், மீண்டும் அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தை நிறைவேற்ற தங்களுக்குச் சாதகமான எம்.எல்.ஏக்களைத் துணைக்கு அழைக்கின்றனர். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அமைச்சர் என்றால்தான், அரசு விழாக்களில் மரியாதை களைகட்டும். ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தக் கண்டிப்பான தலைமை இல்லாததால், ஆளாளுக்கு போர்கொடி உயர்த்துகின்றனர். இவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்தால், புதிதாக 50 அமைச்சர் பதவிகளை உருவாக்க வேண்டும். அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. 'பத்து எம்.எல்.ஏக்கள் கழன்றுவிட்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்ற அச்சத்தை விதைத்துக் கொண்டே காரியம் சாதிக்க நினைக்கிறார்கள். செந்தில்பாலாஜியின் மருத்துவக் கல்லூரி கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசு எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து அவர் விலகிவிடுவார். இதேபோல்தான், கூட்டம் போட்ட ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது. இவர்களை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாதானப்படுத்தப் போகிறார் என்று தெரியவில்லை" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

ரகசியக் கூட்டம் குறித்து பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசினோம். "கூட்டத்தில் (?) இருக்கிறேன். இதுகுறித்து விரைவில் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

 

'தலைவன் இல்லாத படை சிதறி ஓடும்' என்பதை தினம்தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/89644-mlas-preparing-to-bring-down-edappadi-palanisamy-s-government.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.