Jump to content

செய்தி இணைப்பவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்தால் என்ன..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும்  உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை..  நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும்  கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும்.

நிர்வாகம்.. இதற்கான சாத்தியப்பாட்டை பரிசீலிக்கலாமே.. சாத்தியம் என்றால். 

நன்றி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே சாரம்சம் உள்ள செய்தியை பல ஊடகங்கள் பலவிதமாக  தமது கவர்ச்சிக்காக பலகோணத்தில் எழுதி வெளியிடுவார்கள். அதையும் மீள மீள இணைப்பதாலும் வாசிப்பவர்களுக்கு  சலிப்பையும் தருகின்றது.....
ஏதோ எழுத்துப்பிழை கண்டுபிடிக்கும் போட்டிபோல் இருக்கின்றது.:grin:

Link to comment
Share on other sites

ஒரு திரியை இன்னொரு பகுதிக்கு நகர்த்துவதும், ஏற்கனவே இணைக்கப்பட்ட திரியில் ஒட்டுவதும் மட்டுறுத்தல்களிற்கு உரிய அனுமதிகள்.  ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் மட்டுறுத்தல் செய்ய அனுமதிக்கும் முறைகள் இங்கு (மென்பொருளில்) இல்லை.  ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மட்டுறுத்த ஒருவரை அனுமதிக்கும் போது அப் பகுதிக்கான அனைத்து மட்டுறுத்தல்களுக்கான அனுமதியையும் வழங்க வேண்டி வரும். இது நீண்ட கால அளவில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் இதை தவிர்க்க விரும்புகின்றோம்.

--------------------------------------------------

செய்திகளை இணைப்பவர்கள் தாம் இணைக்கும் செய்தி தொடர்பான செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என ஒரு முறை பார்த்து இணைத்தால் ஒரே செய்தி பல திரிகளில் இணைப்பது நிகழாது. உதாரணத்துக்கு ஊர்ப்புதினத்தை சேர்ந்த ஒரு செய்தியை இணைக்கும் போது அது தொடர்பாக ஏற்கனவே ஒரு திரி உள்ளதா என ஊர்ப்புதினப் பகுதியில் பார்த்து விட்டு இணைக்க வேண்டும். இதற்கு ஒரு சில நிமிடங்கள் தான் செலவழிக்க வேண்டி இருக்கும். அதே போன்று செய்தி தொடர்பான நிகழ்வு நடந்து சில மணி நேரம் கழித்து ஒருவர் செய்தியை இணைக்கும் போது அது தொடர்பான ஒரு திரி ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. அப்படி ஊகித்து அதற்கான திரியில் இணைக்கும் போது இப் பிரச்சனைகள் எழாது..

எல்லாருக்கும் நேரப்பிரச்சனை இருப்பது போலத்தான் செய்திகளை இணைப்பவர்களுக்கும் இருக்கின்றது. தமக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் தம்மால் முடிந்த அளவுக்கு செய்திகளை இணைக்கின்றனர். தம் நேரத்தையும் சொந்த வளங்களையும் பயன்படுத்தி எந்த பிரதிகூலத்தினையும் எதிர்பாராமல் யாழுக்காக செய்கின்றனர். அப்படி செய்யும் போது ஒரே செய்தியை ஏற்கனவே இணைத்து உள்ளதா என பார்க்கும் அவகாசம் சில நேரங்களில் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. அப்படியான நேரங்களில் ஒரே செய்தி வெவ்வேறு திரிகளில் காவப்படுகின்றது. நிர்வாகத்தில் உள்ள நாம் முடிந்தளவுக்கு இவற்றை ஒன்றாக இணைத்து வருகின்றோம். சில நேரங்களில் இப்படியான திரிகளை பல மணி நேரத்தின் பின் கண்ணுற்றோம் எனில் அதை ஒன்றாக்குவதை விட அப்படியே விடுவதே உசிதம் என கருதி அதை அப்படியே விட்டும் விடுகின்றோம்.

கள உறவுகளும் ஒரே செய்தி இன்னொரு திரியில் இணைக்கப்பட்டதை கண்ணுற்றால் report செய்து எமக்கு அறியத்தந்தால் இவ் விடயத்தில் இன்னும் மெருகேற்றிய விளைவுகளை காண முடியும்.

 

 

Link to comment
Share on other sites

இங்கு பிரச்சினை என்னவென்றால் ஒரு செய்தி இணைக்கபட்டு இருக்கும் அதற்க்கு ஒரு சிலர் கருத்துக்கள் வைத்திருப்பார்கள் திடிரென்று பார்த்தால் அதே செய்தி வேறு வேறு தமிழ் தளங்களில் இருந்து ஒரே நபரால் இணைக்கபட்டு இருக்கும் அதுவும் சில தளங்கள் குறிக்கபட்ட செய்திக்கு கூடுதல் சார்பு நிலையை எடுத்து போட்டுருக்கும் இப்படி அண்மைய யாழின் ஆக்கபூர்வமான திரிகள் இடையில் நின்று இருப்பதை காணலாம் அப்படி இணைப்பது பிழை என்று சொல்லவில்லை திரி கருத்தாடல் தொடங்கியபின் அப்படி ஒன்று இரண்டை இணைத்தால் பரவாயில்லை சில சமயம் ஐந்து ஆறு இணைய இணைப்புகளும் காணப்படுது இது படிப்பவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் விடயம் என்பது என் தாழ்மையான கருத்து நிர்வாகம் கருத்தில் எடுக்குமா ?

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19.5.2017 at 11:13 AM, spyder12uk said:

இங்கு பிரச்சினை என்னவென்றால் ஒரு செய்தி இணைக்கபட்டு இருக்கும் அதற்க்கு ஒரு சிலர் கருத்துக்கள் வைத்திருப்பார்கள் திடிரென்று பார்த்தால் அதே செய்தி வேறு வேறு தமிழ் தளங்களில் இருந்து ஒரே நபரால் இணைக்கபட்டு இருக்கும் அதுவும் சில தளங்கள் குறிக்கபட்ட செய்திக்கு கூடுதல் சார்பு நிலையை எடுத்து போட்டுருக்கும் இப்படி அண்மைய யாழின் ஆக்கபூர்வமான திரிகள் இடையில் நின்று இருப்பதை காணலாம் அப்படி இணைப்பது பிழை என்று சொல்லவில்லை திரி கருத்தாடல் தொடங்கியபின் அப்படி ஒன்று இரண்டை இணைத்தால் பரவாயில்லை சில சமயம் ஐந்து ஆறு இணைய இணைப்புகளும் காணப்படுது இது படிப்பவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் விடயம் என்பது என் தாழ்மையான கருத்து நிர்வாகம் கருத்தில் எடுக்குமா ?

செய்திகளும் கருத்துகளும்.................

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு,

யாழ்களத்திலே செய்தி,இணைக்கும் விதத்திலே ஒருமாற்றமொன்றைக் கொண்டுவருவது நன்றென எண்ணுகின்றேன். ஒருதலைப்பிலான செய்திகளை ஒரேதிரியில் இணைப்பது ஓரளவு நகர்கின்றபோதும்,  ஒரு செய்திக்குக் கருத்தெழுதியபின்னர்  அதேசெய்தியை வேறொரு தளத்திலிருந்து, வேறொரு வடிவில்  இணைக்கும்போது   எழுதியவரும் வாசகருமாக அடுத்து என்ன கருத்தெனப்பார்க்கும் நோக்கிலே நுளையும்போது ஏமாற்றமே மிஞ்சும். இதுகூட வாசகனைச் சற்றுத் தள்ளிச்செல்ல உந்தலாம். எனவே: 
1. கருத்துகளிற்கு முன்பாக, அதாவது செய்திகள் தொடர்ச்சியாக இருக்கும் வகையிலே அமைக்க முடியுமாயின் நன்று. இது  தொழில் நுட்பரீதியில் சாத்தியமில்லாதுவிடில்
2.கருத்தெழுதியபின்னர் செய்தியை இணைக்காது அதனது மூல இணைப்பை மட்டும் கொடுத்தவிடலாம். முதல் செய்தியை இணைத்தவரே அடுத்த செய்தியையும் இணைக்க வருபராயின்(Edit)  தொகுப்புச்சுட்டியூடாக நுளைந்து தொடராக இணைத்துவிடுதல் நல்லதென்பது எனது கருத்தாகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.