Jump to content

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்


Recommended Posts

கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம்

 

 

வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்; உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

fsfa.JPG

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20115

Link to comment
Share on other sites

வெள்ளவத்தையில் அனர்த்தம்: 8 பேர் படு காயம்
 
 

article_1495086529-1.jpgகொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், எட்டு பேர் படுகாமயடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

விழா மண்டபமாக காணப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/196858/வ-ள-ளவத-த-ய-ல-அனர-த-தம-ப-ர-பட-க-யம-#sthash.oKgTWd3E.dpuf

Update: வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் காயம்

 

 

வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

18486166_1376946669020690_90808658382433

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20115

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்.. சிறந்த கட்டடப் பொறியலாளர்களை உருவாக்கிய இலங்கை.. இன்று இந்தியா நிலைக்கு வந்திட்டுது. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விடிஞ்ஞ மில்லியனியர் ஆகிவிடவேண்டும் என்ற நினைப்புத்தான் இந்த அவலங்களுக்கு காரணம்

Link to comment
Share on other sites

வெள்ளவத்தையில் அனர்த்தம்: 19 பேர் படுகாயம்
 
 

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், 19 பேர் படுகாமயடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 13பேர்களுபோவில வைத்தியசாலையிலும் மேலும் 6பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றே, இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. அக்கட்டடத்தின் மேலும் ஒரு பகுதி, இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கட்டட இடிபாடு காரணமாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

article_1495087558-Building-collapses-in

- See more at: http://www.tamilmirror.lk/196858/வ-ள-ளவத-த-ய-ல-அனர-த-தம-ப-ர-பட-க-யம-#sthash.9BvSluSK.dpuf
Link to comment
Share on other sites

Update: வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!

Published by RasmilaD on 2017-05-18 12:34:43

 

வெள்ளவத்தை - சாவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் இதுவரையில் 21 பேர் காயமடைந்துள்ளனர். 

DAFsDbTV0AAMzS5.jpg

கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

DAFu7JeVwAAd5Cl.jpg

இந்நிலையில், காயமடைந்தவர்கள் 15 பேர் களுபோவில வைத்தியசாலையில் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

DAFuJ4TUwAIel9A.jpg

அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலும் பலர் இதில் சிக்கியிருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

DAFuJ4TUwAA9VQH.jpg

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

18486008_1330724287034994_67269360293758

 

 

Tags

http://www.virakesari.lk/article/20120

Link to comment
Share on other sites

வெள்ளவத்தை அனர்த்தத்தால் பாரிய போக்குவரத்து நெரிசல்
 
 

article_1495091390-traffic02.jpgகாலி வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தார்.

வெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்று இடிந்து விழுந்தமையடுத்தே, இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 19 பேர் படுகாமயடைந்துள்ளனர்.

எனினும், கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

- See more at: http://www.tamilmirror.lk/196865/வ-ள-ளவத-த-அனர-த-தத-த-ல-ப-ர-ய-ப-க-க-வரத-த-ந-ர-சல-#sthash.eQNZDP3I.dpuf

 

 

10 அம்புலன்ஸ்கள் உஷார்
 
 

article_1495092044-Ambulance.jpgவெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடத்தின் ஒருபகுதி, இடிந்து விழுந்ததில், காயமடைந்த 21பேர், களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

இந்நிலையில், அந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

ஆகையால், சவோய் திரையரங்கை அண்மித்த பகுதியில் சுமார் 10 அம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொழும்பு-காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மற்றும் அங்கு விரைந்த முச்சக்கரவண்டிகளின் ஊடாகவே வைத்தியசாலைகளுக்கு உடனடியாக எடுத்துசெல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/196866/-அம-ப-லன-ஸ-கள-உஷ-ர-#sthash.LH19ZyGB.dpuf
Link to comment
Share on other sites


மழைக்கு மத்தியிலும் வௌ்ளவத்தையில் மீட்புப் பணிகள்
 
18-05-2017 06:05 PM
Comments - 0       Views - 10

article_1495111086-DSC_1777.jpg

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்துக்கு அருகிலுள்ள கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டிடமொன்று, இன்று (18) முற்பகல் 11 மணியளவில் சரிந்து விழுந்ததில், 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் பணிகளை  முப்படையினரும், பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கடும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவ அதிகாரிகள் 10 பேர், இராணுவ சிப்பாய்கள் 100 பேர், விமானப்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட விமானப்படையினர் 30 பேர் குறித்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

article_1495111099-DSC_1822.jpgarticle_1495111119-DSC_0007.jpg

- See more at: http://www.tamilmirror.lk/196892/மழ-க-க-மத-த-ய-ல-ம-வ-ளவத-த-ய-ல-ம-ட-ப-ப-பண-கள-#sthash.Mul3FZ8b.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை சவோய் சினிமா பக்கத்தில் புதிய வீடமைப்பு கட்டுமானம் சரிந்து விழுந்தது.

கட்டுமானப் பணியில் இருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். 9 பேர் வரை மீட்கப் பட்டு கொழும்பு தெற்கு வைத்தியசாலைக்கு அனுப்பட்டனர்.

மீட்ப்புப் பணியில் போலீசாரிடம், தீயணைக்கும் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

 

Link to comment
Share on other sites

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

 

 

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
 

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே இன்று காலை 10.30 மணியளவில் சரிந்து வீழ்ந்தது.

இராணுவம், விமானப்படை, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் இதன்போது சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையில் எவரும் இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்போரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

http://newsfirst.lk/tamil/2017/05/வெள்ளவத்தையில்-ஐந்து-மாட/

Link to comment
Share on other sites

பாரியளவு உயிரழப்புகள் ஏற்படாதது நிம்மதியை தருகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டிடம் தமிழருக்கு சொந்தமானதா:unsure: அல்லது இந்தியத் தமிழருக்கு சொந்தமானதோ<_<

Link to comment
Share on other sites

வெள்ளவத்தை கட்டடம் இடிந்து விழுந்த சிசிடிவி காணொளி : பதறி அடித்து ஓடிய இளைஞர்கள் : மனதை பதறவைக்கும் காணொளி

 

 

வெள்­ள­வத்தை சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வரவேற்பு மண்­டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் சரிந்து விழும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில், இளைஞர்கள் வழமைப் போன்று பணியில் ஈடுபட்டிருப்பதும் திடீரென கட்டடம் இடிந்து விழுவதும், இளைஞர்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள பதறியடித்து ஓடுவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

குறித்த ஐந்து மாடிக் கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்­ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் இருவர் காணாமல் போயுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அன்னலட்சுமி என்ற பெண் ஒருவரும் பத்தனையைச் சேர்ந்து 20 வயதுடை ராமர் நிரோஷன் என்பவருமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

 காய­ம­டைந்­த­வர்கள் களு­போ­வில - கொழும்பு தெற்கு போதன வைத்­தி­ய­சா­லையிலும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையிலும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.  

நிலத்தின் கீழ் இரு மாடி­க­ளையும் நிலத்தின் மேல் ஐந்து மாடி­க­ளையும் கொண்ட உற்­சவ மண்­ட­பத்தின் பின்பகுதியே இவ்­வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. 

மண்­ட­பத்தின் நில மேல் மட்­டத்தில் அமைந்­துள்ள ஐந்து மாடி­களே இதன்போது இடி­பா­டு­க­ளுக்கு உள்­ளாகி சரிந்­துள்­ளன.  

மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/20161

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.