Jump to content

முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:-


Recommended Posts

 

ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு வடக்கில் படையினர் ஏன்?

 

நினைவேந்தல் நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.

(முள்­ளி­வாய்க்­கா­லி­ருந்து ஆர்.ராம்)

போரின் போது அல்­லது போர் முடிவின் போது மனித உரி­மை­க­ளுக்கு மாறான போர்க்­குற்­றங்­களை இழைத்­த­வர்கள் படை­யினர். போர் முடிந்து நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­தப்­போ­கின்றோம் என்று கூறும் அர­சாங்கம் தொடர்ந்து படை­வீ­ரர்­களை வட­மா­கா­ணத்தில் நிறுத்தி வைத்­தி­ருப்­பதன்  காரணம் என்ன? என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். 

தற்­போது மக்கள் ஜன­நா­யக போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளனர். ஆகவே எமது மண்ணில் தங்­கி­யி­ருக்கும் இரா­ணு­வத்­தி­னரே, கடற்­ப­டை­யி­னரே வான்­ப­டை­யி­னரே வௌியேறு என்று எம்­மக்கள் ஒன்று சேர்ந்து குர­லெ­ழுப்பும் நன்நாள் வெகு தூரத்தில் இல்லை எனச் சுட்­டிக்­காட்­டிய முத­ல­மைச்சர் அதற்­காக எங்கள் ஒரு­மித்த குரல் ஒலிக்க வேண்­டிய கட்­டாயம் உண்டு என்­பதை மற­வா­தி­ருக்க வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் எட்டாம் ஆண்டு நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை மாபெரும் கொடூரம் நிகழ்ந்­தே­றிய முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் திடலில் நடை­பெற்­றி­ருந்­தது. இந்­நி­கழ்வில் பங்­கு­பற்றி பிர­தான அஞ்­சலி உரையை ஆற்­று­கை­யி­லேயே வடக்கு முதல்வர் மேற்­கண்­ட­வறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், எமது வட­மா­கா­ண­சபை தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக நடாத்தும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் சோக நாள் இன்று. 2009ஆம் ஆண்டில் இறுதி யுத்­தத்தின் போது போரா­ளிகள் சில­ரையும் அப்­பாவி மக்கள் பல­ரையும் பாகு­பா­டின்றி கொன்­றொ­ழித்த ஒரு துயர நாளின் நினைவு நாளே இன்று. இந் நாள் எமது இலங்கை வாழ் தமிழ்­மக்கள் வாழ்­விலும் புலம்­பெயர் தமிழ் மக்கள் வாழ்­விலும் ஒரு மறக்க முடி­யாத துயரம் தோய்ந்த துன்­பியல் நாள். இந் நாள் தொடர்ந்து எம் மக்­க­ளி­டையே ஒரு துக்க நாளாக அனுஷ்டிக்­கப்­ப­ட­வேண்டும். எமது துய­ரத்தை வேத­னையை பிர­தி­ப­லிக்கும் இந் நாள் அதே நேரம் எமது ஒற்­று­மை­யையும் ஒரு­மித்த எதிர்­பார்ப்­புக்­க­ளையும் உல­க­றிய உதவும் நாளா­கவும் பரி­ண­மிக்க வேண்டும். எமது உற­வு­களின் அநி­யாய இன அழிப்பே எமது இனத்தின் ஒற்­று­மைக்­கான வித்­தாக அமைய வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றேன்.  

ஒன்­று­ப­ட­வேண்டும்

தமிழ்ப் பேசும் மக்கள் எங்­கி­ருந்­தாலும் ஒன்­று­பட வேண்டும் என்ற கருத்தை நான் அண்­மைக்­கா­லங்­களில் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்றேன். எமக்குள் கட்சி பேதம் உண்டு் வர்க்க பேதம் உண்டு் சாதி பேதம் உண்டு் சமய பேதம் உண்­டு்­இன்னும் பல முரண்­பா­டுகள் உண்டு. ஆனாலும் நாம் யாவரும் தமிழ்­மொ­ழியைப் பேசு­கின்­ற­வர்கள் அல்­லது அதைப் பேசி­ய­வர்கள் வழி­வந்­த­வர்கள் என்ற பொது­வான அடை­யாளம் எமக்­குண்டு. உள் நாட்­டிலும் புலம் கடந்தும் நாம் பிரி­பட்டு நிற்­கின்றோம். ஆனாலும் எம்மை எல்லாம் ஒற்­று­மைப்­ப­டுத்தக் கூடிய ஒரு நிகழ்வு இந்த நினை­வேந்தல் நிகழ்வே என்­பது எனது கருத்து. ஏனென்றால் அநி­யா­ய­மாக கார­ண­மின்றி அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்ட நாள் இது. அவர்கள் எல்­லோரும் போரா­ளிகள் என்று பிதற்­று­வோரும் உண்டு. அவர்­க­ளுக்கு எமது அனு­தா­பங்கள். கைக்­கு­ழந்­தை­களும் வலு­வி­ழந்த வயோ­தி­பர்­களும் போரா­ளி­களே என்று கூற இவர்­க­ளுக்கு எப்­படி மனம் வந்­ததோ! சமய ரீதி­யான சம்­ப­வங்கள் உண்டு. அவை மதம் சார்ந்­தவை. சமூ­க­ரீ­தி­யான சில பண்­டி­கைகள் உண்டு. அவை யாவ­ரையும் உள்­ள­டக்­க­மாட்டா. ஆனால் எமது மக்­களின் உற­வுகள் அநி­யா­ய­மாக உயிர் நீத்த இந்ந நாள் எம்­மெல்லோர் நினை­விலும் என்­றென்றும் இருக்க வேண்­டிய சோக நாள். எமது சிந்­தையில் கரும்­புள்­ளி­யொன்றை இட்­டுச்­சென்ற இந்த நாள், எம் எல்லோர் மன­தையும் உலுக்­கிய இந் நாள், சோகம் தந்த இந் நாள் எம்­மெல்­லோ­ரையுஞ் சேர்க்கும் நாளாக அமைய வேண்டும். எமது வேத­னை­களின் அடிப்­ப­டையில் எமது பரந்து வாழும் தமிழ்ச்­ச­மூகம் தமிழ் மொழி பேசும் சமூ­கங்கள் ஒன்­று­ப­ட­வேண்டும்.

புதிய ஆட்­சியில் உத்­வேகம்

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி நாட்டின் புதிய ஜனா­தி­பதி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டதும் புதிய உற்­சா­கமும் உத்­வே­கமும் எமது மக்கள் மனதில் ஏற்­பட்­டது. காரணம் அவரின் தேர்­வுக்கு நாமும் ஒரு முக்­கிய கார­ண­மா­க­வி­ருந்தோம். எனவே அவ்­வ­ரு­டத்தைத் தொடர்ந்து வந்த மே மாதம் 18ஆந் திகதி முன்­னை­ய­வ­ருட அந்நாள் போலல்­லாது அவ் வருடம் எம்­மவர் எல்­லோ­ரையுஞ் சேர்த்து முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்­தலில் ஈடு­ப­ட­வைக்க வேண்டும் என்ற கருத்து எம்முள் மேலோங்­கி­யது. அதற்­கான புர்­வாங்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.

நினை­வேந்­தலை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள்

நினை­வேந்தல் நிகழ்­வுக்கு முதல் நாள் வட­மா­காண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்­கவை தொலை­பே­சியில் நான் தொடர்பு கொண்டேன். "நாளை நான் இந்த நினை­வேந்தல் நிகழ்ச்­சியில் கலந்­து­கொள்ள உள்ளேன். உங்­க­ளுக்கு ஏதேனும் ஆட்­சே­பனை உண்டா?" எனக் கேட்டேன். "உண்டு" என்றார். ஏனென்றால் "முல்­லைத்­தீவு நீதி­மன்றம் கூட்­டங்­க­ளுக்குத் தடை விதித்­துள்­ளது" என்றார்."கூட்­டங்­க­ளுக்கு அல்­லவே" என்றேன். தன்­னிடம் நீதி­மன்றக் கட்­டளை இருப்­ப­தாக கூறினார். என்­னி­டமும் இருப்­ப­தாகக் கூறினேன். ஆராய்ச்சி செய்த போது "பெல­பாளி" என்ற பேர­ணிக்­கான சிங்­களச் சொல்­லுக்குப் பதில் "ரஸ்வீம்" என்ற கூட்­டங்­க­ளைக்­கு­றிக்கும் சொல் பிழை­யாக மொழி­பெ­யர்ப்பில் இடம்­பெற்­றமை தெரி­ய­வந்­தது. திரு.ஜய­சிங்க அவர்கள் இதைத் தெரிந்து கொண்­ட­போது எமது பிரார்த்­தனைக் கூட்­டத்­திற்கு தமக்கு ஆட்­சே­பனை இல்லை என்றார்.

அவ்­வாறு தான் வட­மா­கா­ணத்தின் முதல் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெற்­றது. சுமார் 1500 பொலிசார் முல்­லைத்­தீவில் எம்­முடன் முரண்­பட ஆயத்­த­மாக்­கப்­பட்டு கொண்­டு­வந்து குவிக்­கப்­பட்டும் சிரேஸ்ட பொலிஸ்மா அதி­பரின் கட்­டளை எம்மை அவர்கள் வழி­விட அடி­ச­மைத்­தது.ஒரு சொல்லின் சரி­யான மொழி பெயர்ப்பில் இருந்தே அந்த முதல் நினை­வேந்தல் நிகழ்ச்சி பிரச்­சனை இன்றி நடை­பெற்­றது. சென்ற வருடம் முள்­ளி­வாய்க்கால் சூழலில் மட்டும் பொலிசார் நின்­றார்கள். வழி­நெ­டுக பொலி­சாரைக் கொண்­டு­வந்து குவிக்­க­வில்லை. ஆகவே உயிர் நீத்­தோ­ருக்­கான எமது பிரார்த்­தனை நிகழ்வு தற்­போது அர­சாங்­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவே நான் காண்­கின்றேன்.

ஒன்­றி­ணைக்கும் நிகழ்­வாக வேண்டும்

எனவே இந்த நிகழ்வு வரு­டந்­தோறும் எமது மக்­களை ஒன்­றி­ணைக்கும் ஒரு நிகழ்­வாக மாற­வேண்டும். அஹிம்சை முறையில் எமது எண்­ணப்­பாடைத் தெரி­விக்கும் ஒரு நாளாக மாற­வேண்டும். அந்த வகையில் எமது வருத்­தந்­தெ­ரி­விக்கும் ஏகோ­பித்த எண்­ணக்­கி­டக்­கை­களை வௌிப்­ப­டுத்தும் ஒரு நாளா­கவும் இந் நாளை அடை­யாளம் காண்­பதில் ஒரு பிழையும் இல்லை என்று கரு­து­கின்றேன்.

பிரச்­சி­னைக்கு அடிப்­படை

தற்­போது எம் மக்கள் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் அமை­தி­யான போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். காணி­களைத் திருப்­பித்­தா­ருங்கள் என்­கின்­றார்கள். காணா­த­வர்­களின் கதி என்­ன­வென்று உரக்கக் கேட்­கின்­றார்கள். சிறையில் வாடும் அர­சியல் கைதி­களை பொது­மன்­னிப்பில் விடு­விக்கக் கோரு­கின்­றார்கள். வேலை­யற்­ற­வர்கள் வேலை­கோரி நிற்­கின்­றார்கள். மீன­வர்கள் கடற்­ப­டை­யி­னரின் காரி­யங்கள் பற்றி கார­சா­ரமாய்க் கதைக்­கின்­றார்கள். இவற்­றிற்கு அடிப்­ப­டைக்­கா­ரணம் என்ன என்று பார்த்தால் போர் முடிந்து எட்டு வரு­டங்­க­ளுக்­குப்­பின்­னரும் எந்­த­வித அர­சியல் ரீதி­யான வன்­மு­றைகள் தலை­தூக்­காத நிலை­யிலும் 150000க்கு மேலான படை­யினர் வட­மா­கா­ணத்தில் குவித்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கனடா நக­ர­பி­தாவின் கேள்வி

அண்­மையில் இந்த இடத்­திற்கு பிரார்த்­த­னைக்­காக வந்த கன­டாவின் ஒன்­டா­ரியோ மாநி­லத்தின் நகர பிதா ஜோன் டொரி இதான் செல்லும் வழியில் இருக்கும் ஒவ்­வொரு இரா­ணுவ முகாம்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­திச்­சென்றார். போருக்­குப்பின் ஏன் இத்­தனை படை முகாம்கள் என்று இங்குங் கேட்டார் கன­டா­விலும் கேட்டார். அதற்குப் பதில் சொல்ல வேண்­டிய காலம் இப்­பொ­ழுது கனிந்­துள்­ளது. போரின் போது அல்­லது போர் முடிவின் போது இழைக்­கப்­பட்ட மனித உரி­மை­க­ளுக்கு மாறான போர்க்­குற்­றங்­களை இழைத்­த­வர்கள் படை­யினர். போர் முடிந்து நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­தப்­போ­கின்றோம் என்று கூறும் அர­சாங்கம் தொடர்ந்து படை­வீ­ரர்­களை இங்கு நிறுத்தி வைத்­தி­ருப்­பதன் காரணம் என்ன?

நவீ­னத்­துவம் உண்டு

அண்­மையில் நாம் பழைய வட­மா­காண இரா­ணு­வத்­த­ள­ப­தி­யிடம் இந்த எட்­டு­வ­ரு­டங்­களில் அர­சியல் ரீதி­யான முறையில் எமது மக்கள் ஏதா­வது வன்­மு­றை­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள் என்று உங்­க­ளுக்கு அறி­ய­வந்­துள்­ளதா என்று கேட்டோம். "இல்லை! ஆனால் பிரான்­சிலும் நோர்­வே­யிலும் இருந்து வந்த தொலை­பேசி அழைப்­புக்கள் ஊடாக புலிகள் இன்­னமும் சுறு­சு­றுப்­பாக உள்­ளார்கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது" என்றார். "அந்தத் தொலை­பேசி பரி­மாற்­றங்கள் தான் உங்­களை இங்கு தொடர்ந்து வைத்­துள்­ளதா?" என்று கேட்டோம். "ஏதேனும் வரு­மெனில் அவற்றைத் தடுக்க நாம் இங்­கி­ருக்க வேண்டும்" என்றார். இத்­தனை ஆயிரம் போர் வீரர்கள் அதற்­கா­கவா இங்­கி­ருக்­கின்­றார்கள் எனக் கேட்­ட­தற்கு "ஆம்" என்றார்.

போர் முறைகள் தற்­போது மாற்­ற­ம­டைந்­துள்­ளன. ஒரு அறைக்குள் இருந்­து­கொண்டே வட­மா­காணம் புரா­கவும் என்ன நடக்­கின்­ற­தென்­பதை நவீனத் தொழில்­நுட்ப அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

எந்­த­வி­த­மான நியா­மு­மில்லை

அதற்­காக எமது காணி­களைச் சுவீ­க­ரித்து, வீடு­க­ளைக்­கை­ய­கப்­ப­டுத்தி, தொழில்­களைத் தம்­வ­சப்­ப­டுத்தி, எமது நீர்­நி­லை­களைக் கைப்­பற்றி, வௌிமா­காண மீன­வர்­களை வருந்­தி­ய­ழைத்து எம்­மக்­களின் வாழ்­வா­தா­ரங்­களை முடக்கச் செய்து, எம் பாதிக்­கப்­பட்ட பெண்­களின் பாது­காப்­புக்­களை கேள்­விக்­கு­றி­யாக்கி, வருந்­தி­ய­ழைத்து வௌிமா­காண மக்­களை எம்­மா­கா­ணங்­களில் குடி­யி­ருத்தி, பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் புத்த உரு­வச்­சி­லை­களை உரு­வ­மைக்க உத­வி­செய்­து­வ­ர­வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது. இரா­ணு­வமே வௌியேறு! கடற்­ப­டையே வௌியேறு! வான்­ப­டை­யி­னரே வௌியே­றுங்கள்! என்று எம்­மக்கள் சேர்ந்து குர­லெ­ழுப்பும் நன்நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எண்­ணு­கின்றேன். கார­ண­மின்றி காழ்ப்­பு­ணர்ச்­சி­யுடன் இங்கு அவர்கள் காலங்­க­டத்­து­வதைக் கார­சா­ர­மாக விவா­திக்­கப்­போகும் நாள் தொலைவில் இல்லை.

படை­யி­ன­ருக்க வடக்கில் வேலை­யில்லை

உண்­மையில் இரா­ணு­வத்­திற்கும் கடற்­ப­டைக்கும் வான்­ப­டைக்கும் இங்கு வேலை­யில்லை. பாது­காப்பைப் பொலிஸ் படை­யினர் செய்­யலாம். வான்­ப­டை­யினர் வானூர்தி சேவை­களைத் தாம் நடாத்­து­வ­தற்குப் பதி­லாக தனி­யார்­க­ளுக்கு அந்தப் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்டு அவர்கள் தமது தலை­மை­யக முகாம்­க­ளுக்குச் சென்­று­வி­டலாம். இரா­ணு­வத்­தினர் காணி­களை விட்­டுச்­சென்றால், வீடு­களை விட்டுச் சென்றால், வர்த்­த­கங்­களை எம்­ம­வ­ருக்கு வழி­விட்டுச் சென்றால், கடற்­க­ரை­களை கடிந்து அவர்கள் விட்­டுச்­சென்றால் வேலை­யில்லா எம் இளை­ஞர்­க­ளுக்குக் கூட வேலை­வாய்ப்­புக்கள் கிடைப்­பன. தமது சொந்தக் காணி­களில் பயி­ரிட முடி­யா­த­வர்கள் கூட எம்மைத் தேடி வேலை வாய்ப்­புக்­காக வரு­கின்­றார்கள். ஆகவே இந்தத் தினத்தை நாம் கட்சி, மத, வர்க்க, பிராந்­திய பேதங்கள் இன்றி ஒரு­மித்து நினை­வேந்­துவோம்!

ஒரு­மித்த குரல்

எங்கள் ஒரு­மித்த குரல் ஒலிக்க வேண்­டிய கட்­டாயம் உண்டு என்­பதை மற­வா­தி­ருப்­போ­மாக! வட­மா­கா­ண­ச­பை­யா­கிய எமக்கு அதி­கா­ரங்கள் போதிய அளவு இருக்கின்றதோ இல்லையோ வடமாகாண மக்களின் வாக்குகளின் பிரதிபலிப்பே நாங்கள். ஜனநாயக ரீதியாக எமது மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பே வடமாகாணசபை. அதன் தலைமகன் என்ற முறையிலேயே நான் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டுள்ளேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் ஏகோபித்த குரலாக, கரமாக, அதிகாரமாக நான் செயற்பட்டே இந்தச் சுடரை ஏற்றியுள்ளேன். இதே போன்று இந்த நிகழ்வு தொடர்ந்தும் எம் மக்களின் துயரத்தையும் சோகத்தையும் அதே நேரம் எமது ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கும் நாளாக வருடாவருடம் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்றைய தினத்தில் 2009ம் ஆண்டு அநியாயமாக மரணத்தைத் தழுவ வேண்டி நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட எமது உறவுகள் அத்தனை பேரினதும் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்போமாக! அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எமது உளமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்களின் மனச்சுமைகளை நாம் சுமக்கமுடியாதவிடத்தும் எமது பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உங்கள் சோகப்பட்ட உள்ளங்களை ஒரு அளவிற்கு நெகிழவைக்கும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-1

Link to comment
Share on other sites

அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!
  •  

முள்­ளி­வாய்க்­கா­லில் நேற்­றைய தினம் நினை­வேந்­தல் நிகழ்வு இடம்­பெற்­ற­போது திடீ­ரென உணர்ச்­சி­வ­சப்­பட்ட பெண் ஒரு­வர் அங்கு கூடி­யி­ருந்த அர­ சி­யல்­வா­தி­க­ளைப் பார்த்து ‘‘இங்கு வந்து அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!’’ என்று கோபா­வே­சத்­து­டன் விரல்­களை நீட்­டிக் கொந்­த­ளித்­தார்.

நினை­வேந்­தல் நிகழ்­வில் முத­லா­வ­தாக அமை­தி­யாக இருந்து மூன்று நிமி­டங்­கள் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் ஆகி­யோ­ரின் உரை­கள் இடம்­பெற்­றன.

 

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் உரை முடிந்­த­தும் முதன்­மைச் சுடர் ஏற்­றப்­பட இருந்த பீடத்­திற்­குள் நுழைந்த பெண் ஒரு­வர் கோபா­வே­ச­மா­கக் கத்­தி­னார்.

‘‘நாங்­கள் இங்கே எங்­கள் உற­வு­க­ளை­யும், குழந்­தை­க­ளை­யும், கண­வர்­க­ளை­யும் இழந்து பரி­த­வித்­துப்­போய் வந்­தி­ருக்­கி­றோம். இங்கே வந்து நீங்­கள் உங்­கள் அர­சி­ய­லைப் பேசிக் கொண்­டி­ருக்­கா­தீர்­கள்.

வந்­தீர்­களா, அஞ்­சலி செய்­தீர்­களா, உணர்­வோடு நடந்­து­கொண்­டீர்­களா என்று இருங்­கள். அதை­வி­டுத்து உங்­கள் அர­சி­யல் இங்கே தேவை­யில்லை’’

முத­ல­மைச்­சர் முதன்­மைச் சுடரை ஏற்­று­வ­தற்கு வந்த சம­யத்­தில் அந்­தப் பெண்­மணி அவ­ரை­யும் ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் பார்த்­துச் சுட்­டு­வி­ரலை நீட்டி இவ்­வாறு உணர்ச்­சி­யோடு கொந்­த­ளித்­ததை அடுத்து அந்த இடத்­தில் பதற்­றம் தொற்­றிக் கொண்­டது.

எனி­னும் ‘‘நீங்­கள் சொல்­வ­தைப் போன்­று­தான் அஞ்­சலி செலுத்­தப்­போ­கி­றோம். அமை­தி­ய­டை­யுங்­கள்’’ என்று அந்­தப் பெண்­ணைச் சிலர் அமை­திப்­ப­டுத்­தி­யைத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் சுடரை ஏற்றி வைத்­தார்.

http://uthayandaily.com/story/3426.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.