Jump to content

எப்படி மறப்பது இந்த மே 18 ஐ .....?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மறப்பது இந்த மே 18 ஐ .....?
-------------------

பகீரதன்


தாழம் பூவோடும்
தாமரைத் தட்டோடும் 
நாகதீபம் வரை 
வந்து போகிறீர்கள் 

.
வெள்ளை உடுப்புடுத்தி  
நீங்கள் வரும்போது 
வெள்ளைக் கொடியோடு 
வெண் புறாக்கள் போன கதை 
வந்து வந்து போகுது.
.

எதோ கொண்டு வருகிறீர்கள் 
கொடுத்ததும் பார்க்கிறீர்கள்.
இனி இவர்கள்
மறந்து போவார்கள் 
மாண்ட தமிழர்களை 
மறைத்த உறவுகளை.
.

எப்படி மறப்பது 
இந்த மே 18 ஐ..... ? - இது
கொன்ற தினத்தை 
கொண்டாடிய நாள் அல்லவா!
.

மேனி கருகி 
மேடாய் தெரிந்த நாள் 

கூட்டாய் கொன்று குவித்ததை 
கூகிளில் பார்த்து 
கூக்குரல் இட்ட நாள்.

குழிவெட்டி எம் குஞ்சுகளை 
குடும்பத்தோடு
புதைத்த நாள்.

எப்படி மறப்பது 
இந்த மே 18 ஐ ....?

சரண் புகுந்த 
தாய் குலத்தை 
சட்டை அவிழ்த்து 
பங்கு போட்ட நாள்.

சங்கர் மேனனும் 
சங்கர் தயாள் சர்மாவும் - சேர்ந்து 
செய்து முடித்த நாள் 

எப்படி மறப்பது
இந்த மே 18 ஐ ....?

ஐநா வரும் என்று 
அதன் பொய்..நா... பார்த்து 
பொசுங்கிப் போன நாள் 

அமெரிக்க நரிகளை நம்பி 
நடந்து போகையில் 
நடு நெஞ்சில் சூடு 
வாங்கிய நாள் 

எப்படி மறப்பது
இந்த மே 18 ஐ....?

வெள்ளை கொடியோடு 
போனவனை 
வெட்டிப் போட்டு 
வெற்றி என்று சொன்ன நாள்.

வெம்பி நின்ற சிறுசுகளை 
கை கால் கட்டி 
பின்னுக்கு நின்று 
பிடரியில் சுட்ட நாள் 

எப்படி மறப்பது 
இந்த மே 18 ஐ .... ?

புனர் வாழ்வு என 
புது வான் இல் ஏற்றி - இன்றும் 
புதிராய் இருக்கும் 
காணாமல் போனோரை 
கைது செய்த நாள்.

கண்ணை கவரும் 
நம் கன்னியரை 
கவுன்சிலிங் என்று 
கட்டிப் பிடித்த நாள் 

எப்படி மறப்பது 
இந்த மே 18 ஐ ....?

அகதி என்று 
அனாதரவாக   
அரை துண்டோடு  
முட் கம்பிகளுக்குள் 
முடங்கிக் கிடந்த நாள் 

இறந்த எம் பிணங்களை 
இழுத்துச் சென்று
இரசித்து, இச்சை தீர்த்தது
இன்புற்ற நாள்.

எப்படி மறப்பது 
இந்த மே 18 ஐ .... ?

கெடுத்து, கெடு தீர்த்து 
மீண்டும் உடுத்தி 
உலகுக்கு காட்டி 
மருந்து போட்ட நாள் 

மாசக் கர்ப்பிணிகளை 
மழலை குஞ்சுகளை 
பல குழல் பீரங்கிகள் 
பதம் பார்த்த நாள் 

எப்படி மறப்பது
இந்த மே 18 ஐ .... ?

வெற்று முலையில் 
பால் கொடுத்து 
வெம்பிய தாயையும் 
முலை வற்றி மூச்சிழந்த 
குழந்தையையும்
முள்ளி வாய்க்காலில் 
பார்த்த நாள். 
.

ஒட்டுக் குழுக்களோடு
ஒன்பது நாடுகள் கூடி 
ஒழித்திருந்து 
காட்டிக் கொடுத்ததை 
ஓட ஓட அடித்ததை 
எப்படி மறக்க முடியும் 
.

அந்த நந்தி கடலும் 
முள்ளி வாய்க்காலும் 
மூன்று முறை பிறந்தாலும் 
முன்னூறு ஆண்டுகள் கடந்தாலும் 
மறக்க முடியுமா என்ன ?

 

https://www.facebook.com/Pakeek/posts/10212162782772256

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மறப்பது இந்த மே 18 ஐ ....!

எலியும் பூனையுமாய் இருந்த  இருக்கின்ற நாடுகளைனைத்தும் எம்மினத்தை அழிப்பதற்காக கைகோர்த்து முகமூடி கிழித்து கோரப்பற்களால் கொன்று போட்ட நாள் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழுது முடிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் ஆனால் அழுகை என்னை மறுத்துவிட்டு தூரப்போய் நிற்கிறது. அழுது தீர்க்காதே சோகத்தை மறந்துவிடுவாய் என்று உள்மனம் வேறு கோபப்படுகிறது. உணர்வு கொந்தளிக்கும் நிலையில் இருந்து எட்டவாக போய் நிற்கிறேன் ஆற்றவேண்டிய பணிகள் மலையாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.