Jump to content

ரகசிய தகவலைப் பரிமாறிய விவகாரம்: சர்ச்சையில் தலையிடுகிறார் ரஷிய அதிபர் புதின்


Recommended Posts

ரகசிய தகவலைப் பரிமாறிய விவகாரம்: சர்ச்சையில் தலையிடுகிறார் ரஷிய அதிபர் புதின்

 

கடந்த வாரம் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது, அதிபர் ரகசிய பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டாரா என்பது பற்றிய சர்ச்சையில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தலையிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

ரஷிய அமைச்சரிடம் எந்த ரகசியங்களும் அளிக்கப்படவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவைபட்டால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கூட்டத்தின் விவரங்களை அளிக்கத் தயார் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் ரஷிய எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்துவோர் முட்டாள்கள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று தெரிவித்தார்.

தனது முக்கிய அரசியல் போட்டியாளர் எல்லாவற்றிலும் ரஷ்யாவை தொடர்புபடுத்தி, தொடர் நெருக்கடிகளில் சிக்குவதை பார்த்து ரஷ்யா ரசித்துக் கொண்டிருப்பதாக மாஸ்கோவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

புதின்படத்தின் காப்புரிமைMIKHAIL SVETLOV/GETTY IMAGES

முன்னாள் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணையைக் கைவிடும்படி அதிபர் டிரம்ப் கேட்டார் என்று எப் பி ஐயின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி சுட்டிக்காட்டிய குறிப்பாணை ஒன்றை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளனன.

இரண்டு விவகாரங்களிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஜனநாயக கட்சியினர் சுயாதீன ஆணையத்தை தொடங்கும் நகர்வுகள் வேகம் பெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம், கடலோரக் காவல்படையின் புதிய பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ''வரலாற்றில் எந்த ஓர் அரசியல்வாதியும் மோசமாகவோ நியாயமற்ற முறையிலோ நடத்தப்பட்டது இல்லை,'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

கடந்த வாரம் புதன் கிழமை ரஷியாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாஃப்ரோவ் மற்றும் ரஷிய தூதர் செர்ஜி கிஸ்லாக் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்தனர்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்பது தொடர்பான எப்.பி.ஐ விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தின் விசாரணைகளுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

அதேபோல ஜேம்ஸ் கோமி பதவி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே இந்த சந்திப்பு நடைபெற்றது.

டிரம்ப், ரஷ்ய அதிகாரிகளிடம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு தொடர்பான தகவல்களை அளித்துள்ளார் என்றும் அது தகவலை அளித்த அமெரிக்கக் கூட்டாளி நாட்டுக்கு ஆபத்தானது என்றும் திங்களன்று, வாஷிங்டன் போஸ்டும், பல அமெரிக்க ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.

இரண்டாவதாக எப்.பி.ஐ அமைப்பின் தலைவர் கோமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் செல்வாக்கு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்திய நேரத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ரஷிய தூதர் செல்கெய் கிஸ்லேக்குடன் நடந்த சந்திப்பின்போது பரிமாறப்பட்ட தகவல்கள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல்களைக் கொடுத்ததாக, ஏற்கெனவே, டிரம்பின் முதலாவது தேசிய ஆலோசகர் மைக்கெல் ஃபிளின் பதவி நீக்கப்பட்டார்.

அதிபர் டிரம்ப்பை பிப்ரவரி 14ம் தேதி சந்தித்ததற்கு பிறகு கோமி எழுதிய குறிப்பாணையில், டிரம்ப், பிளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையை நிறுத்திவிடுமாறு கேட்டுக்கொண்டார் என்று செவ்வாய்க்கிழமை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

http://www.bbc.com/tamil/global-39954725

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.