Jump to content

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு எழுப்பிய அரசியல் சர்ச்சை


Recommended Posts

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு எழுப்பிய அரசியல் சர்ச்சை

 

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி, வெங்கைய நாயுடுபடத்தின் காப்புரிமைTNGOVT Image captionதிட்டங்களை தமிழக தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்த மத்திய அமைச்சரை வரவேற்கும் தமிழக முதல்வர்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

பொதுவாக இந்த அரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே நடக்கும்.

அது தவிர, தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் நடக்கும்.

முதல் முறையாக மத்திய அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் இந்த அரங்கில் நடைபெற்றது.

சர்ச்சையை ஏற்படுத்திய கூட்டம்படத்தின் காப்புரிமைTNGOVT Image captionசர்ச்சையை ஏற்படுத்திய கூட்டம்

`அஞ்சி நடக்கிறது அதிமுக அரசு`- ஸ்டாலின்

மெட்ரோ ரயில் துவக்கவிழா நடக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை நெடுக அ.தி.மு.க. கட்சி கொடிகளுடன் பாரதீய ஜனதாக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு வெங்கய்ய நாயுடு இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது." என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சரியா, தவறா ?

ஆனால், மத்திய அமைச்சர் தமிழக தலைமைச் செயலகத்தில் வந்து ஆய்வு நடத்தியதில் தவறில்லை என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பூர்ணலிங்கம்.

"நாம் இருப்பது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கூட்டாட்சி முறையில். பல துறைகள் மத்திய - மாநில அரசுகளின் பட்டியலில் இருக்கின்றன. அவற்றில் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. அந்தத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வுசெய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் பூர்ணலிங்கம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலகட்டத்தில் மின்சாரத் துறையில், உதய் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பல முறை ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தும், அவர் நேரம் கொடுக்கவில்லை.

இதை வெளிப்படையாகவே தெரிவித்தார் அவர்.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாகக் கையாளுவதாகவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டுவருகின்றன.

"முந்தைய முதலமைச்சர் மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவே மாட்டார். அது சரியா, தற்போது நடந்திருப்பது சரியா என்று கேட்டால் இப்போது நடந்ததுதான் சரி என்பேன்" என்கிறார் பூர்ணலிங்கம்.

வெளிநாடுகள் நிதியுதவி செய்யும்போது, அவர்களே வந்து நமது திட்டங்களைப் பார்வையிடுவதுண்டு. அப்படியிருக்கும்போது மத்திய அமைச்சர் பார்வையிடுவதில் என்ன தவறு என்கிறார் அவர்.

ஆனால், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம் இதில் முரண்படுகிறார்.

மத்திய அமைச்சர் ஆய்வு செய்ய விரும்பினால், துறை சார்ந்த அமைச்சரையும் அதிகாரிகளையும் வைத்து ஆய்வுசெய்ய வேண்டியதுதானே என்கிறார் தேவசகாயம்.

"மத்திய அமைச்சர்கள் ஆய்வு நடத்துவதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளையும் அமைச்சரையும் வைத்து ஆய்வு நடத்தலாம். முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு, அவரை தனக்கு கீழானவரைப் போல அவர் முன்பாகவே ஆய்வு நடத்தியது சரியல்ல. முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் பிரதிநிதி. மத்திய அமைச்சர் அப்படியல்ல. இது தவறான முன்னுதாரணம்" என்கிறார் தேவசகாயம்.

சங்கடத்தில் அதிமுக

இந்த சம்பவம் குறித்து ஆளும் அ.தி.மு.கவினர் வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லையென்றாலும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ள எதிர்ப்பையும் கேலியையும் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

"இதற்கு முன்னுதாரணம் இல்லை. இப்படி நடந்திருக்கக்கூடாது. தமிழக மக்கள் இது குறித்து ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கக்கூடும். பெரிய மீனான பாரதீய ஜனதாக் கட்சி சிறிய மீனான அ.தி.மு.கவை விழுங்கப் பார்க்கிறதோ என கட்சியினரும் பொதுமக்களும் கருதக்கூடும்" என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்திலேயே புதிய பொதுவிநியோகத் திட்டம், உதய் திட்டம் உள்பட, ஜெயலலிதா ஏற்காத பல திட்டங்களுக்கு அதிமுக அரசால் அனுமதி வழங்கப்பட்டது.

அவர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா நிறுத்திவைத்திருந்த மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு.

இம்மாதிரியான தருணங்களில், பாரதீய ஜனதா கட்சி அ.தி.மு.க. அரசை நெருக்கடிக்குள்ளாக்கி இந்த விஷயங்களைச் சாதித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

"மத்திய அமைச்சர்கள் இதற்கு முன்பாகவும் தலைமைச் செயலகம் வந்து ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பாரதீய ஜனதாக் கட்சி தமிழக அரசை ஆட்டிவைக்க விரும்புகிறது என்று பேசப்படும் நிலையில், முதல்வரின் முன்பாக மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியிருப்பதுதான் இந்த விவகாரத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. இது தவிர்க்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கே. வெங்கடராமன்.

நியாயம்தான் என்கிறது பாஜக

இந்த ஆய்வுக்கூட்டம் முடிவடைந்த பிறகு, வெங்கய்ய நாயுடுவும் முதல்வர் பழனிச்சாமியும் இணைந்து செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினர்.

அதில் எழுதிவைக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் வாசித்து முடித்துவிட, 45 நிமிடங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் வெங்கய்ய நாயுடு.

ஆனால், மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கைகளை பாரதீய ஜனதாக் கட்சி நியாயப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "மத்திய அரசின் அதிகாரிகளை அழைத்து வந்து மாநில அரசு அதிகாரிகளோடு இணைந்து அமர்ந்து சுமார் 1500 கோடி ரூபாய்க்கான திட்டங்களை உடனே நடைமுறைப்படுத்துவதற்கு வெங்கய்ய நாயுடு அறிவித்திருக்கிறார். தமிழக நலன் காக்க புதிய முறை கூட்டங்கள் நடத்துவதில் என்ன தவறு?" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மாநில அரசு இந்த விமர்சனங்கள் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-39945790

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.