Jump to content

கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில்


Recommended Posts

கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில்

 
 

இந்தியாவின் சக்தி வாய்ந்த குடும்பங்களில் ஒன்றில் பிறந்த கார்த்தி ப. சிதம்பரம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளவர். விளையாட்டிலும் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குபவர்.

கார்த்தி சிதம்பரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவின் நிதியமைச்சராவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பழனியப்பன் சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகனாக 1971 நவம்பர் மாதம் பிறந்தார் கார்த்தி. செட்டிநாட்டு ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித் தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா.

சென்னையில் உள்ள தொன் போஸ்கோ பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பையும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்த கார்த்தி, இங்கிலாந்தில் இருந்து திரும்ப வந்தபோது தொழில்துறையில்தான் ஆர்வம் காட்டினார்.

சிறிதுகாலம் ஏ.சி. முத்தையாவின் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இதற்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த கார்த்தியின் மற்றொரு ஆர்வம் டென்னிஸ்.

பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் கார்த்தி சிதம்பரம், அகில இந்திய டென்னிஸ் சங்கத்திலும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திலும் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர்.

2004ஆம் ஆண்டில், கருத்துச் சுதந்திரம் தொடர்பாக தமிழகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வந்த காலகட்டத்தில் தி.மு.கவின் கனிமொழியுடன் இணைந்து அனைவரது கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு இணையதளமாக கருத்து.காம் என்ற இணையதளத்தையும் நடத்தினார் கார்த்தி.

ஆனால், 2012ஆம் ஆண்டில் தன்னைப் பற்றி கருத்து ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளித்து அவரைக் கைது செய்ய வைத்து, சர்ச்சைக்குள்ளானார் கார்த்தி.

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் சிபிஐ சோதனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் சிபிஐ சோதனை

நீண்ட காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் 2014ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் கார்த்தி. அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி, அதில் வெற்றிபெறவில்லை.

ஆனால் மாநில காங்கிரசில், கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்திவந்தார். 2014ஆம் ஆண்டுத் தோல்விக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தார் கார்த்தி.

அதேபோல, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை ஜி 67 என்ற பெயரில் சென்னையில் நடத்திய கார்த்தி சிதம்பரம் 2016ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியம் இல்லை என்று பேசியதால் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் பிரதமர் நரேந்திர மோதியையும் புகழ்ந்து பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது.

2015 செப்டம்பர், அக்டோபரில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், கார்த்தி சிதம்பரம் பல நாடுகளில் பல நிறுவனங்களை நடத்திவருவதாக செய்திகளை வெளியிட்டது.

இதன் பிறகு, பல்வேறு நாளிதழ்களில் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் ஆகியோருக்கு வெளிநாடுகளில் உள்ள முதலீடுகள், சொத்துகள் குறித்த விவரங்கள் வெளியாயின.

கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஒரு கண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தின.

சிதம்பரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அண்ணா தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர்.

இந்த நிலையில்தான், ஐஎன்எஸ் நிறுவனம் அன்னிய முதலீடுகளைப் பெறுவதில் செய்த முதலீடுகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய அட்வான்டேஜ் குளோபல் கன்சல்டிங், செஸ் ஆகிய நிறுவனங்களிலும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் மே மாதம் 16ஆம் தேதி மத்தியப் புலனாய்வுத் துறை சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது.

ஆனால், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசும்போதெல்லாம், தன்னைக் குறிவைப்பதற்காகவே தன் மகனையும் அவரது நண்பர்களையும் மத்திய அரசு துன்புறுத்திவருவதாக ப. சிதம்பரம் கூறிவருகிறார்.

கார்த்தி சிதம்பரத்தின் மனைவி டாக்டர் ஸ்ரீநிதி ரங்கராஜன், ஒரு மருத்துவர். இவர்களுக்கு அதிதி என்ற குழந்தை உண்டு.

http://www.bbc.com/tamil/india-39947637

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.