Jump to content

‘மோடியின் கோபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கொந்தளித்த அமைச்சர்


Recommended Posts

‘மோடியின் கோபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கொந்தளித்த அமைச்சர்

 

சசிகலா

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சரிபார்த்து வருகின்றனர். 'சேகர் ரெட்டி விவகாரத்தில் லஞ்சம் பெற்ற சிலரது பெயரை மட்டுமே, தலைமைச் செயலாளரின் பார்வைக்கு அனுப்பினோம். இன்னும் சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அது கடைசி ஆயுதமாக இருக்கும்' என அதிர வைக்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். 

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர். 'கே.பி.முனுசாமி என்ற ஒருவர் இருக்கும் வரையில் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை' என எடப்பாடி பழனிசாமி அணியினர் பேசி வருகின்றனர். 'சசிகலா குடும்பத்துடன் உறவு இல்லை என்று சொல்லிக் கொண்டு நாடகமாடுகின்றனர்' என வரிந்துகட்டுகிறது பன்னீர்செல்வம் அணி. "கடந்த சில நாள்களாக நடக்கும் விவகாரங்களால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் பன்னீர்செல்வம். தொடக்கம் முதலே மத்திய அரசிடம் நல்ல அணுகுமுறையில் இருந்து வருகிறார். அவர் எதிர்பார்த்தது போல மாநில அரசில் எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. கடந்த சில நாள்களாக, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு டெல்லி கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் ரசிக்கவில்லை. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, 'சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கக் கூடாது. பன்னீர்செல்வமே மக்கள் ஆதரவு பெற்றவர்' என வலியுறுத்தி வந்தனர்.

இதனை விரும்பாத பழனிசாமி அணியினர், பா.ஜ.க தலைமையிடம் மிகுந்த நெருக்கம் காட்டத் தொடங்கினர். 'பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவி கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். இனி அந்தப் பதவியும் அவருக்குக் கிடையாது. அவரோடு சென்றவர்களுக்கும் பதவி இல்லை' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர். கடந்த நான்கு மாதங்களாக கூட்டம் கூட்டுவது முதல் பொதுப் பிரசார மேடை வரையில் பன்னீர்செல்வம்தான் கைக்காசு போட்டு செலவு செய்து வருகிறார். 'இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிவிட்டதே' என்ற கவலைதான் அவரை வாட்டி வதைக்கிறது. இதுகுறித்து, டெல்லியில் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, 'இருவரும் இணக்கமாக இருந்து செயல்படுங்கள்' என ஒற்றை வார்த்தையோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் மனதளவில் இன்னும் நொந்து போய்விட்டார். டெல்லி கொடுத்த தைரியத்தில் தமிழக அமைச்சர்கள் வலம் வருகிறார்கள். 'மாநில சுயாட்சிக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துகிறார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு' என்ற குற்றச்சாட்டுகளைப் பற்றியெல்லாம் அரசில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

எடப்பாடி பழனிசாமி"டெல்லியைப் பொறுத்தவரையில், பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துத்தான் பார்க்கிறார்கள். 'சசிகலா குடும்பத்தை வீழ்த்துவதற்கு இருவரும் போதும்' என்ற எண்ணத்தில் சில வேலைகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், பழனிசாமி அணியினர் சசிகலா குடும்பத்து உறவுகளிடம் நட்பு பாராட்டுவதாக, பா.ஜ.க நிர்வாகிகளிடம் புகார் கூறியது பன்னீர்செல்வம் அணி. இதைப் பற்றி அவர்கள் விசாரிக்கவும், 'நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் அவ்வாறு செயல்பட மாட்டோம்' என உறுதி அளித்த கொங்கு மண்டல சீனியர் அமைச்சர் ஒருவர், டெல்டா மாவட்டத்தில் இருக்கும் சசிகலா உறவினர் ஒருவரை அழைத்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில், 'கட்சியை வழிநடத்த வந்த சின்னம்மாவும் டி.டி.வியும் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பதவிக்கு வரக் கூடாது என்றுதான் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் வந்ததைக் கூட அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சி.எம் பதவிக்கு ஆசைப்பட்டபோதுதான் நெருக்கடி அதிகமானது. இப்போதும்  அவர்கள் கோரிக்கை ஒன்றுதான்.

சின்னம்மாவிடம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அவரிடம் அந்தப் பதவி இருப்பதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஒருவேளை அவர் அந்தப் பதவியை விட்டு விலகினால், சீராய்வு மனுவின் மீது நல்ல தீர்ப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது. சென்னை சிறைக்கு மாற்றும் கோரிக்கையும் நிறைவேறலாம். அவர் குடும்பத்தில் உள்ள சிலரை, தேசத்துக்கு விரோதமானவர்களாகத்தான் மோடி பார்க்கிறார். இதைப் புரிந்து கொண்டு ஒதுங்கியிருப்பது நல்லது. இல்லாவிட்டால், தொடர் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்' என விளக்கியிருக்கிறார். 'இதை சின்னம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்' என உறுதியளித்தார் அந்த உறவினர். சசிகலாவிடம் இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை, அவரே ராஜினாமா செய்யட்டும் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக. 

 

" எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் மிக முக்கியமான ஆயுதமாக சேகர் ரெட்டி விவகாரத்தைப் பார்க்கிறது பா.ஜ.க. இதை வைத்துக் கொண்டே இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இரண்டு அணிகளின் நிர்வாகிகளும் மோதுவதைக் கண்ட பா.ஜ.க நிர்வாகிகள், 'சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதியைத்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தோம். இரண்டாம்கட்ட ஆவணத்தை வெளியிட வைத்துவிட வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளனர். இதனை இரண்டு அணிகளும் எதிர்பார்க்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் இந்தப் பஞ்சாயத்து நீண்டு கொண்டே போகும். அதன்பிறகு, அணிகளே இல்லாத அளவுக்கு அ.தி.மு.க மொத்தமாகக் கரைந்துவிடும்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/89555-understand-modis-anger---sasikala-faces-the-heat.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.