Jump to content

சொல்லி மகிழும் பொய்கள்


Recommended Posts

சொல்லி மகிழும் பொய்கள்
 
 

article_1494922330-asmin.jpg- முகம்மது தம்பி மரைக்கார்

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மிகவும் முட்டாள்தனமாக செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கை அடைய முடியாது.   

தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் - நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும்.   

தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு என்பது, பிட்டும் தேங்காய்ப்பூவும் போலானவை என்று சொல்வதில் உண்மையில்லை என்பது நமக்குத் தெரியாததல்ல. ஆனாலும், திரும்பத் திரும்ப அவ்வாறான பொய்களை நாம் சொல்லி மகிழ்கின்றோம்.   

இலங்கை வரலாற்றில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவுமாக வாழ்ந்த காலம் இல்லாமலில்லை. ஆனால், இப்போது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாய் ஒரு பகைமை இருந்து கொண்டிருக்கிறது. சில சமயம் அந்த நெருப்பு, கொழுந்து விட்டு எரியும் நிலையும் அவ்வப்போது ஏற்பட்டுத் தொலைகின்றது.  

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தொன்று சர்ச்சையைக் கிளப்பி விட்டிருந்தது. ஐயூப் அஸ்மின், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்தவர். வட மாகாண சபைக்கான தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனக்குக் கிடைத்த போனஸ் ஆசனமொன்றை , நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கியது. அந்த ஆசனத்துக்கு அஸ்மின் நியமிக்கப்பட்டார்.  

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். அந்த இணைவு இயற்கையானது. மேலும், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்குவதற்கு எதிராக, தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்” என, வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்திருந்தார்.   

இந்தக் கருத்துக்கு எதிராக முஸ்லிம் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் கிளம்பின. குறிப்பாக, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஒருபடி மேலே சென்று, ஐயூப் அஸ்மினையும் அவர் சார்ந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியையும் கடுமையாகச் சாடினார்.  

“முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது எனக் கூறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்” எனவும் ஹிஸ்புல்லா கேள்வியெழுப்பியிருந்தார்.   

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் எனவும், அது இயற்கையானது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியுள்ள கருத்துக்கு, முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்வைக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.  

இதனையடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. ‘வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கும் வகையில், அதிகாரப் பகர்வை மேற்கொள்வதே நடைமுறைச் சாத்தியமான, நீதியான தீர்வாக அமையும்’ என்று, தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.   

இதனையடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பாராட்டுத் தெரிவித்ததோடு, “இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்” எனவும், அவர் வலியுறுத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதுதான் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாடாகும்.   

இன்னொருபுறம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினுடையது அல்ல என்பதை, அந்த முன்னணியின் அறிக்கை மூலம் விளங்கிக் கொள்ள முடிந்தது.

அதேவேளை, ஐயூப் அஸ்மினுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான உறவில் ஏதோ சிக்கல்கள் உள்ளன என்பதையும், மேற்படி சர்ச்சையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைவு குறித்துப் பேசப்படும் ஒவ்வொரு தருணத்திலும், முஸ்லிம்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளிக்கிளம்புகின்றமையைக் காண முடிகிறது. முஸ்லிம்களின் இந்த எதிர்ப்பு எதைச் சொல்கிறது? ‘தமிழர்களுடன் அரசியல் ரீதியாக இணைந்து வாழ, எங்களுக்கு விருப்பமில்லை’ எனும் மனநிலையை அது வெளிப்படுத்துகிறது.  

இந்த நிலைவரம் கவலைக்குரியதாகும். பிட்டும் தேங்காய்ப்பூவுமாக வாழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு மிக மோசமானதாகும்.   

ஆனாலும், அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு சமூகங்களில் ஒன்று, மற்றையதைப் பார்த்து, “அரசியல் ரீதியாக உன்னுடன் ஒன்றிணைந்து வாழ எனக்கு விருப்பமில்லை” என்று சொல்வதற்குப் பின்னாலுள்ள காரண, காரியங்கள், அடையாளம் காணப்படுதல் அவசியமாகும். பிரச்சினைகளை இனங்காணாமல், தீர்வைப் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.  

“வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும்” என்பது தமிழர் தரப்பின் கோரிக்கையாகும். ஆனால், மேற்படி “இரண்டு மாகாணங்களும் பிரிந்திருப்பதையே நாங்கள் விரும்புகின்றோம்” என்று முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் கூறுகின்றனர்.   

ஒவ்வொரு தரப்பினருக்கும் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கான முழு உரிமையும் உள்ளது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு முஸ்லிம்களிடம் தமிழர் தரப்பு கோரலாம். ஆனால், இரண்டு சமூகங்களுக்கும் இடையில் அதற்கான நல்லுறவு இருக்க வேண்டும். இல்லாத நல்லுறவை வைத்துக் கொண்டு, மேற்சொன்ன இலக்கை அடைய முடியாது.  

தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் நீறு பூத்துக் கிடக்கும் பகை நெருப்பு, எந்தளவு மோசமானது என்பதை அண்மையில் கூட அடையாளம் காண முடிந்தது.   

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவியதாக ஹர்த்தால் போராட்டமொன்று இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில், அவர்களின் உறவினர்கள் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  

இதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால், முஸ்லிம்கள் இந்த ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்றன. சாதாரணமாகப் பார்த்தால், இது கவலைக்குரிய விடயமாகும்.   

ஒரே மொழியைப் பேசுகின்ற இரண்டு சிறுபான்மை சமூகங்கள், ஒன்றை இன்னொன்று மறுத்தும், எதிர்த்தும் நடத்தல் மகிழ்ச்சிக்குரியதல்ல. ஆனாலும், முஸ்லிம்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பது குறித்தும் தமிழர் சமூகம் யோசிக்க வேண்டும். அதற்கான காரண, காரியங்கள் குறித்தும் ஆராய வேண்டும். அதை விடுத்து, ‘ஹர்த்தால் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்காமை கவலையளிக்கிறது’ என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போல், தமிழர் சமூகம் பேசுமாக இருந்தால், அது ஆரோக்கியமாக அமையாது.   

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த போது, அப்போதைய தமிழர் நிருவாகத்தின் கீழ், முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு முஸ்லிம்களிடம் இன்னுமுள்ளது.   

புலிகளின் காலத்தில், முஸ்லிம்கள் மீது அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, அவர்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்பட்டமையையும் அந்தச் சமூகம் இன்னும் மறக்காமல் உள்ளது. இதுபோன்ற கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாகத்தான், வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்று, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியிருப்பதைக் கூடப் பார்க்க வேண்டியிருக்கிறது.   

வடமாகாண சபைக்கான ‘போனஸ்’ ஆசனமொன்றை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றெடுத்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக, வடக்கு, கிழக்கு விவகாரத்தில் கருத்துச் சொல்லியிருப்பதை, மேற்சொன்ன கோணத்தில் நின்றுதான் ஆராய வேண்டியிருக்கிறது.  

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவை தமிழர் சமூகம் கோருவதாக இருந்தால், அதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்கிற கேள்வியும் இங்கு உள்ளது. முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை ப் பெற்று விடலாம் என, தமிழர் தரப்பு நினைக்குமானால், அந்த முயற்சி தோற்றுவிடும்.   

ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி, தமிழர் தரப்பு மேற்கொண்ட ஹர்த்தால் போராட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தரப்புகள் ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தன. இதனால், ஹர்த்தால் போராட்டத்துக்கு முஸ்லிம்களின் ஆதரவும் கிடைத்து விடுமென்று தமிழர் தரப்பும் நம்பியது.   

ஆனால், ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கவில்லை. “ஹர்த்தால் ஏற்பாட்டாளர்கள் எவரும், எங்களுடன் நேரடியாகப் பேசவில்லை. அதனால்தான், நாங்கள் கடையடைப்புச் செய்யவில்லை” என்று, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சில வர்த்தக சங்கங்கள் தெரிவித்திருந்தமை அவதானத்துக்குரியது.   

இந்த நிகழ்வு நல்லதொரு படிப்பினையுமாகும். எல்லா விடயங்களிலும், அரசியல் கட்சிகளின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதற்கு மக்கள் தயாரில்லை என்பதை, மேற்படி சம்பவம் நிரூபித்திருக்கிறது. மேலும், மக்களுடன் நேரடியாகப் பேசுவதுதான் சில தீர்வுகளைக் கிட்டச் செய்யும் என்பதையும் இந்த நிகழ்வு, மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது.  

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்களா? இல்லையா? என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரும் வகையில், தமிழர் தரப்பு, இதுவரை மேற்கொண்டுள்ள ஆரோக்கியமான விடயங்கள் எவை என்பதனை மீளாய்வு செய்தல் அவசியமாகும். 

சம்பந்தனும் ஹக்கீமும் மூடிய அறைகளுக்குள்ளிருந்து பேசுவதன் மூலம், தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வெறுப்பையும் கசப்பையும் அகற்றி விட முடியாது. இரண்டு சமூகங்களுக்குமிடையில் ஆழமானதொரு பகைமை இருப்பதனை இரண்டு தரப்பினரும் முதலில் ஏற்றுக் கொள்தல் வேண்டும். அந்தப் பகைமையை நினைத்தாற்போல் கழற்றி விட முடியாது. அவை, கறைகளல்ல; காயங்களாகும்.   

முதலில், தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான வெறுப்புணர்வுக்கு முடிவு காணப்படுதல் வேண்டும். அதனை முந்திக் கொண்டு மேற்கொள்ளப்படும், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.   

இன்னொருபுறம் ‘சுடுகிறது மடியைப்பிடி’ என்பது போல், அவசரமாகவும் இதனை நிறைவேற்ற முடியாது. இதற்கு நீண்ட காலம் தேவையாக இருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துக்கு சமாந்தரமாக, தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இதுவரையில் அது நடைபெறவில்லை.  

மாறாக, “வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கினால், இணைந்த வடகிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்குவோம்” என்று, தமிழர் தரப்பின் பழுத்த அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது, குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்துப் பராக்குக் காட்டுவதற்கு ஒப்பானதாகும்.   

இவ்வாறான கூற்றுகள் ஒன்றுக்கும் உதவாதவை. சிந்தனைத் தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உணர்வு ரீதியாகக் கையாளப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை, ஒரு மோசடிக்கார வியாபாரியின் மன நிலையுடன் அணுக நினைப்பது பெருந் தவறாகும்.  

தற்போதைய அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு சற்று அதிகமாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு ஒரு தீர்வு கிடைப்பது சந்தோசமான விடயம்தான்.

ஆனால், தமக்கான சித்திரம் பற்றி சிந்திப்பவர்கள் அதனைத் தீட்டுவதற்கான சுவர்கள் விடயத்தில் அசட்டையாக இருக்கக் கூடாது. சுவர்கள் என்று இங்கு நாம் குறிப்பிடுவது, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லுறவாகும்.  

தமிழர் - முஸ்லிம் நல்லுறவென்பது சம்பந்தனுக்கும், ஹக்கீமுக்கும் இடையிலான தனிநபர் நட்பல்ல; அது ஆழமானது; பரந்து பட்டது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முன்னர், இரு சாராருக்கும் இடையிலுள்ள பகைமை களையப்படுதல் வேண்டும்.

பிறகுதான் நல்லுறவு பற்றிய பேச்சுகளுக்குச் செல்ல வேண்டும். சில கசப்பான உண்மைகளை ஏற்பதற்கும், சொல்லி மகிழும் பொய்களைத் துறப்பதற்கும் நாம் தயாராக இல்லாத வரை, அதனை நம்மால் அடைந்து கொள்ள முடியாது.    

- See more at: http://www.tamilmirror.lk/196730/ச-ல-ல-மக-ழ-ம-ப-ய-கள-#sthash.qDRwDNrS.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.