Jump to content

திரும்பிய பக்கம் எங்கும் பிணங்கள் ! குருதியால் வரையப்பட்ட தமிழீழ அழிப்பு


Recommended Posts

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள்.

அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நகரமெனும் கொடூரத்தையும் கூட கண்முன்னே காட்ட வைத்தது ஓர் யுத்தம். காலம் அதற்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் எனப் பெயர் பொறித்துப்போனது.

இரத்தச் சரித்திரத்திரமான அந்த இன அழிப்புப் படலம், இன்றுரை இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயமாக மாறாத வடுவை ஏற்படுத்தியது 2009 மே 18 இல்.

குருதியால் வரையப்பட்ட அந்த நாளை தமிழர்கள் மட்டுமல்ல அத்தனை எளிதில் எவருமே மறந்து விடமாட்டார்கள் என்பது திண்ணம்.

நாட்டில் தீவிரவாதத்தை அழிக்கின்றோம், அதற்காக விடுதலைப்புலிகளைக் கொல்கின்றோம் என்ற பெயரில், திட்டமிட்டு தமிழர்கள் தலைகளில் அள்ளி வீசிய குண்டுகளால் கண் திரும்பிய பக்கம் அனைத்திலும் புதைக்கப்படாத உடலங்கள்.,

அத்தோடு சிதறிப்போன அவையவங்களால் ஏற்பட்ட செங்குருதி ஆறாக மாறி நந்திக்கடல் எனும் சிறப்புக்கடற்கரையை சிவப்பாக்கிய நாற்களை இன்று நினைக்கையிலும் இரு விழிகளும் சிவப்பாகும் ஒன்று கோபத்தில், மற்றொன்று வேதனையில்.

அத்தகைய கொடூரங்களையும் சுமந்து கொண்டு, வேர் அறுக்கப்பட்டதாக பலர் இன்றும் நினைக்கும் ஓர் விடுதலைப் போரின் வடு இன்று மௌனமாய் காற்றில் இரத்த வாடை கலந்து வீசுகின்றது முள்ளிவாய்க்கால் பகுதியில்.

2009 மே 18 ஆம் திகதிக்கு சில நாட்களுக்கு முன்னர் வரையிலும் ஓர் விடுதலைக் கனவு மெய்படப் போகின்றது என்ற ஆவல் ஈழத் தமிழர்களிடையே மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரிடமும் இருந்த ஓர் அவா.

ஆனால் திடீரென தலைகீழாகிப் போனது ஓர் சரித்த வரலாறு. தமிழரின் தலைகளில் குண்டுகளும் மனங்களிலும், நம்பிக்கையிலும் மண்ணும், மரணமும் வாரி இரைக்கப்பட்டன.

அதனால் என்ன நடக்கின்றது?, ஏன் நடக்கின்றது? ஏன் கொல்லப்படுகின்றோம்? என்பது கூட தெரியாமல் பதறிய பெண்களுக்கும், புரியாத குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏன் முதியோருக்கும் கூட, என அனைவருக்கும் பாகுபாடுகளும், பாரபட்சமும் இன்றி அவல மரணம் எனும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டன.

அந்த கொலை (இன) வெறி கொண்ட யுத்தம், இப்போது 8 வருடங்களை விழுங்கி விட்டு சலனமின்றி நிற்கின்றது என்பது தீராத வேதனையே.

ஆனால் யுத்தம் என்று கூற முடியாத அளவு நடைபெற்ற அந்த இன அழிப்பு, கொடூரங்களுக்கு தீர்வுகளோ, தண்டிப்புகளோ இன்று வரை கொடுக்கப்பட வில்லை என்பதற்கு ஆத்திரப்படுவதா அல்லது துயரப்படுவதா என்பதும் புரியாத மனநிலை.

அந்த இன அழிப்பிற்கான தண்டிப்பை பற்றி கேட்கும் போது பதிலமைகின்றது இவ்வாறாக அதாவது.,

“அந்த யுத்தம் இன அழிப்பு இல்லை, இனப்படுகொலை மட்டுமே, தண்டிப்பிற்கு ஆதாரம் வேண்டும், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தமே அது”.

இந்த கேலிக்குரிய வாதத்தினை, மனித உரிமை அமைப்புகளும் தலையாட்டி பொம்மைகளாய் கேட்டுக் கொண்டிருப்பது எத்தகையதோர் மிகப்பெரிய கேலிக் கூத்து. கொடுத்த, கிடைத்த ஆதாரங்களுக்கு என்ன நடந்தது?

அதற்கும் மேல் ஆதாரம் வேண்டும் எனில் சுட்டுக் கொன்றதால், சுடுகாடு கூட செல்லாமல் சொர்க்கம் சேர்ந்த உயிர்கள் தான் மீண்டு வந்து சாட்சியமளிக்க வேண்டுமா? என்றும் கேட்கத் தூண்டும்.

கொத்துக் கொத்தாக குண்டுகள் போட்டும், தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை கொட்டியும் பல பொதுமக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அடைக்கலம் அளிக்கின்றோம் எனக் கூறி வெளிப்படையான துரோகத்தனமான அழிப்பு நடந்தேறியது முள்ளிவாய்க்கால் களத்தில்.

வரலாற்றில் இந்த முள்ளிவாய்க்கால் இன அழிப்பும், அழிந்து போகாமல் பதியப்பட வேண்டிய ஒன்றே. 8 வருட பூரணத்தைச் சந்தித்து விட்ட நிலையிலும், இனியும் என்றாவது இந்த கொலைகளுக்கு தண்டிப்புகளும் பதில் கூறல்களும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் வேடிக்கைத் தனமானது.

அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கின்றது அதாவது, சர்வதேசமே இணைந்து நடத்தி அப்பாவிகளைக் கொன்றதோர் கோர யுத்தத்திற்கு சர்வதேசமே நீதி பெற்றுத் தரும் என எதிர்ப்பார்ப்பதும் கூட அறியாத்தனமானதோர் முட்டாள் தனம் எனலாம்.

அதுவும் தவிர இன்றுவரை மர்மம் காத்துக் கொண்டிரும் முள்ளிவாய்க்காலில் கொலைகள் மட்டுமா அரங்கேறியது?

அதனையும் தாண்டி கொலை செய்யப்பட்டவர்களை தவிர எஞ்சியவர்கள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். அதிலும் பலர் சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட, கணக்கிலடங்காதோர் பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர்.

அவ்வாறு தொலைந்து போக வைக்கப்பட்ட உறவுகள் இன்று உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என்று இன்றும் கதறும் பொதுமக்கள் கணக்கற்றவர்கள்.

ஆனால் இதற்கு கூட தீர்ப்போ அல்லது தீர்வோ தர எவரும் இதுவரை மெய்யாக முன் வந்ததாக தெரிய வில்லை. ஆனாலும் ஒன்று அரசியல் இலாபம் இருந்தால் இதுவும் கூட தீர்க்கப்படலாம்.

எவ்வாறெனினும் அழிப்புகளை மீட்டிப்பார்ப்பது வேதனையை மீண்டும் வரவழைப்பதற்கு சமமானது என்பது நன்றாகவே தெளிவான விடயம்.

இருந்தாலும் நடந்த அழிப்புச் சம்பவத்தை மீட்டாவிட்டால் சிலவேளைகளில் அந்த இன அழிப்பை பொய்யாகக் கூட பலர் சித்தரித்து விடலாம் என்பது பின்னோக்கிய காலப் பயணத்தை பார்க்கும் போது தெளிவாகப் புலப்படலாம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராஜபக்ச அதிபராக இருந்த காலப்பகுதியில் ஈழத்தின் விடுதலைப்போர் உச்சத்தை எட்டியது. அதனால் இலங்கையின் முப்படைகளும் இணைந்து வடக்கை தும்சம் செய்து கொண்டிருந்தது.

இதற்கு இலங்கை இராணுவம் மட்டுமல்ல, பலம் மிக்க சில நாடுகளின் பக்க பலமும் இலங்கைக்கும், இலங்கை இராணுவத்திற்கும் தாராளமாக கிடைத்தன.

அதனால், முள்ளிவாய்க்காலினை கடல், வான், தரை மும்புறமாகவும் இராணுவம் (கள்) சிதைக்கத் தொடங்கின. அங்கு பொழிந்து கொண்டிருந்த குண்டுகளுக்கும், எறிகணை வீச்சுகளுக்கு எவரும் தப்பிப் பிழைக்கவில்லை.

அலறியபடி மக்கள் அவலச் சாவினை அடைந்து கொண்டிருந்தனர். அங்கே சிதறிய உடல்களைக் கண்டு சிரித்தபடி வெறி கொண்டு இராணுவங்கள் புலிகள் என்ற போலிப் போர்வையில் அப்பாவிகளை அழித்தன.

அந்த கடைசி மூன்று நாள் யுத்தத்தில் மட்டும் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழராக, அதுவும் வடக்கில் பிறந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டனர்.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் திக்கெட்டும் மரண ஓலம் எதிரொலித்துக் கொண்டிருந்த தருணம்..,

செல்களின் தாக்குதலால் படுகாயமடைந்து தப்ப முடியாத காரணத்தால் பரிதாபமாக கிடந்த பல அப்பாவிகளை கொத்தாக அள்ளி உயிருடன் புதைத்தன யுத்தக்கள இராணுவம்.

யுத்தம் என்ற பெயரில் அப்போது நடைபெற்ற இனப்படுகொலைகளை வார்த்தைகளால் விரிவு அல்லது தெளிவு படுத்த முடியாது. வடக்கு தமிழர்களுக்கு எதிராக வெறித்தனங்கள் அவை.

பாதுகாப்பு வலயங்களுக்குள் வந்தவர்கள், சரணடைந்தவர்கள், உட்பட அனைவருக்கும் மரணங்கள் வாரி வழங்கப்பட்டன. யுத்த ஆரம்ப கட்டத்தில் இரசாயன குண்டுகளான பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்த ஜெனிவா அமைப்பு முற்றாக தடை விதித்தது.

ஆனால் முள்ளிவாய்க்காலில் அவை தாராளமாகவே பயன்படுத்தப்பட்டன. பொது மக்கள் தவிர பாடசாலைகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அப்போது ஜெனிவா ஓய்விற்காக சென்று விட்டதா என்பதும் இன்றுவரை மர்மமே.

அதனால் இவற்றினை இன அழிப்பு எனச் சொல்லாமல் வேறு எப்படி சொல்ல வேண்டும், சொல்ல முடியும் எனத் தெரியவில்லை.

யுத்தம் என்பது அங்கு வெளிக்காட்டப்பட்ட போலியான விடயம் ஆனால் அன்று முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டது தமிழர்களை அழிக்கும் இன அழிப்பு தான் என்பதனை உண்மையறிந்தவர் எவரும் மறுக்கமாட்டனர்.

இவ்வாறான ஓர் கொடுங்கொலைகளை செய்து, பிணங்களை பார்த்த பின்பும் கூட கொலை வெறி அடங்கவில்லை அப்போது புலிகளுக்கு எதிராக போர் செய்கின்றோம் எனக் கூறிக் கொண்டவர்களுக்கு.

அதனால் போரின் பின்னர் முள்வேலிகளால் அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் எஞ்சிய மக்கள் அனுப்பப்பட்டனர் திருத்தம் அடைக்கப்பட்டனர். முகாம் என்ற பெயரில் அங்கும் சாவினைவிடக் கொடிய துன்பம் அனைவருக்கும் கிடைத்தன. குறிப்பாக பெண்களுக்கு.,

பிணத்தையும் விட்டுவைக்காத வெறிமிக்கவர்கள் சதைப்பிண்டமாக பெண்களைப் பார்த்தால் என்ன நடக்கும்? தமிழ்ப் பெண்கள் மீது வெறித்தனமான பாலியல் வன் கொடுமைகள் நடாத்தப்பட்டன.

இதனைச் செய்வதனை விடவும் சுட்டுக் கொன்றிருந்தால் மன மகிழ்வுடன் செத்திருப்பார்கள் அங்கு பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்கள்.

மாற்றான் மனைவியாக இருந்தால் என்ன? பிள்ளைக்கு தாயாக இருந்தால் என்ன? சிறுமியாக இருந்தால் என்ன? முள்ளிவாய்க்காலில் யுத்தம் செய்த இராணுவத்தினருக்கு அவர்கள் சதைப் பிண்டமான காமப் பொருள் மட்டுமே.

கூட்டாகச் சேர்ந்து இத்தகைய ரணக் கொடூரத்தை செய்து விட்டு இன்று “இந்திய இராணுவமே தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிந்தது, இலங்கை இராணுவம் ஒழுக்கமானது” என கேவலம் எனும் பட்டம் மாறி மாறி சூட்டப்பட்டு வருகின்றது.

இங்கு குற்றம் செய்தவன் மானம் கெட்டவன் என்றால், அதனை வேடிக்கை பார்த்தவன் கேடு கெட்ட கேவலமானவன் என்பதனையும் அறியாமல் கதை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர் என்பது என் அகராதியில் இல்லை.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை இன்று மறைக்கப் பார்க்கலாம், மறுக்கவும் கூட பார்க்கலாம் ஆனால் மாற்றியமைக்க முடியாது, என்பதனை குற்றம் செய்தவர் உணரவேண்டிய காலம் எப்படியும் வந்தே தீரும்.

அது அரசன் வடிவில் வந்தாலும் சரி, தெய்வத்தின் வடிவில் வந்தாலும் சரி தீர்ப்புகளும் தண்டனைகளும் கிடைக்கும் என்பதும் திண்ணம். ஆனால் அது யாரால்? எப்போது? எப்படி என்ற கேள்விகளுக்கு மட்டும் இப்போதைக்கு மௌனம் அர்த்தம் மிக்க பதிலாகும்.

இலங்கையில் நடந்த இந்த கொலைகளை, கொடூரங்களை இலங்கை (அப்போதைய) அரசு மறுத்த போது 2010ஆம் ஆண்டு நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற சர்வதேச அமைப்பு விசாரணை செய்து பல போர்க் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.

அதன் பின்னர் அமெரிக்க சட்ட வல்லுநரான பிரான்சிஸ் போய்ல் என்பவர்...,

“1948 ஆம் ஆண்டு இன அழிப்பு தொடர்பாக ஓர் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கையெழுத்தினை இட்டுள்ள 140 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு அல்லது பல, இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்தப் படும் எனத் தெரிவித்தார்.

ஆனால் அது என்னவாயிற்று அதற்கடுத்து தொடர்ந்து என்ன நடக்கின்கின்றது என்பது இன்றும் மர்மமாகவே இருக்கின்றது.

இங்கு இலங்கை செய்த இனப்படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் நேரடி, மறைமுக உதவிகளைச் செய்த நாடுகள் இன்று, இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவு அளப்பறியவை என்பதனையும் மறக்கலாகாது.

அதனால் நாளையாவது இதற்கான தீர்ப்புகள் கிடைக்கும் என்பதும் சீச் சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாகிவிடுமோ என்பதும் இப்போதைக்கு ஐயம் கலந்த அச்சம்.

அதேபோல 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாடுகளிடம் செய்து கொண்ட இனப்படுகொலைகளை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்பாடு மூலம் இலங்கை மீது போர்க்குற்றம் விசாரிக்கப்படும் எனப்பட்டது. இதுவும் நடந்ததா எனத் தெரியவில்லை.

இவை தவிர சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை போன்றனவிடம் இன அழிப்புகளுக்கு, இனப்படுகொலைகளுக்கு, போர்க்குற்றங்களுக்கு எதிராக பல உடன்பாடுகள் காணப்படுகின்றன.

அவை அனைத்தும் இலங்கை விடயத்தில் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளன. தப்பித் தவறிக் கூட நடைமுறைப்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சர்வதேசமும் மிக உன்னிப்பாக இருக்கின்றன என்பதே மறைக்கப்படும் உண்மை.

உதாரணமாக அயல் நாடான இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவாம். இருந்தும் என்ன பயன் இலங்கையில் இன அழிப்பிற்கு பங்களிப்பு செய்ததே அந்த தொப்புள் கொடி உறவுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஈழத்தமிழர்கள் என்பவர்கள், அவர்களின் அரசியல் இலாபங்களுக்கான பகடைக்காய்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

முள்ளிவாய்க்கால் என்பது இறுதியில் செய்யப்பட்ட வெளிப்படையாக தெரிந்ததோர் இன அழிப்பு. இது தவிர தொடர்ந்து முத்தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர்களுக்கு பாரிய அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டன.

அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை என்றுமே வார்த்தைகளால் வர்ணித்திட முடியாது. அவை உணரவும் கூட முடியாத அளவு கொடூரமானவை.

எது எவ்வாறாயினும் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பினை ஒட்டுமொத்த சர்வதேசமே வேடிக்கைத் தான் பார்த்தது இன்றும் அதனையே செய்கின்றது.

ஆனால் பெயருக்கு மட்டும் ஏதோ போர்க் குற்றம், விசாரணை, தீர்ப்பு என்ற மாயச் சித்தரிப்பு இன்றும் இருக்கத்தான் செய்கின்றது.

இவ்வகையில் முள்ளிவாய்கால் எனப்படும் குருதிச் சரித்திரம் மறைக்கப்படலாம், ஆனால் அதனால் ஏற்பட்ட வடுவினை தமிழர்கள் மனதில் இருந்து அகற்றிட முடியாது என்பது மட்டும் உண்மை. இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்பதும் ஓர் எதிர்ப்பார்ப்பு...

http://www.tamilwin.com/articles/01/145905?ref=view-latest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.