Jump to content

லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா


Recommended Posts

லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா

லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் 4-1 என எதிரணிகளை வீழ்த்தியதால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும்போட்டி நிலவுகிறது.

 
லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா
 
லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்காக ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற லா லிகா லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - செவிலா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 10-வது நிமிடத்தில் நசோ பெர்னாண்டஸ் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 23-வது நிமிடத்தில் நம்பிக்கை நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 2-0 என் முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 49-வது நிமிடத்தில் செவிலா அணியின் ஸ்டீவன் ஜோவெடிக் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2-1 என இருந்தது. அதன்பின் 78-வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார். 84-வது நிமிடத்தில் டோனி க்ரூஸ் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 4-1 என அபார வெற்றி பெற்றது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா லாஸ் பால்மாஸ் அணிகள் மோதின. நெய்மர் ஹாட்ரிட் கோல் (25, 76 மற்றும் 71-வது நிமிடம்) அடித்தார். சுவாரஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4 கோல்கள் அடித்தது. லாஸ் பால்மாஸ் அணியின் பிகாஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-1 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா 37 போட்டிகள் முடிவில் 87 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 87 புள்ளிகள் பெற்று கோல்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

பார்சிலோனா அணிக்கு இன்னும் ஒரு போட்டியும், ரியல் மாட்ரிட் அணிக்கு இரண்டு போட்டிகளும் உள்ளன. இந்த இரண்டில் ஒரு போட்டியில் ரியல் மாட்ரிட் தோல்வியடைந்து, பார்சிலோனா கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை வென்றுவிடும். ரியல் மாட்ரிட் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, ஒன்றில் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை வென்றுவிடும்.

இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/15193058/1085406/La-liga-bracelona-real-madrid-ride-to-champion.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.