Jump to content

வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..!


Recommended Posts

வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..!

 

north.jpg

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/20021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் பலபக்ககங்களாலும் சீறுகின்றன. தமிழினம் மீண்டும் பேரழிவுக்குள் வீழ்ந்துவிடாதிருக்க கொல்லப்பட்டோர் கொல்லப்பட்டோராகவே போகட்டுமெனப் பேசாமலிருப்பதே மிச்சமுள்ள தமிழரைப் பாதுகாக்கும் வழியாகுமோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை தண்டிக்கவிடமாட்டோம் என்று சொல்லும்போது ஒட்டுமொத்த சிறிலங்கா இராணுவமும் தண்டிக்கப்படப்போகிறது என்ற பீதியை கிளப்பிவிடுவதிலேயே சிங்களம் முனைப்புக்காட்டுகிறது. அப்படியாயின் இலட்சக்கணக்கில் கீழ்நிலை இராணுவம் குற்றவாளிகளாக இனங்காணப்படலாம் என்ற ஆணித்தரமான கூச்சலும் எழுகிறது. இந்த இடத்தில் யதார்த்தம் என்ன என்பதையும் இராணுவத்தில் யார் எந்த படிநிலையில் உள்ளவர்கள்  மற்றும் கட்டளை அதிகாரிகள் தண்டிக்கப்படலாம் என்பதிலும் சர்வதேச விதிமுறைகள் உள்ளன  என்பது அனைவருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.

எனவே சம்பந்தன் சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் சிங்களத்தின் கேலிக்கூத்தை முறியடிக்க தெற்கில் உண்மையான  புரிதலை உருவாக்க தலைப்படவேண்டும். சிங்களவர் மத்தியில் பரப்புரைக்கான  வேலைத்திட்டங்களை தமிழர் தரப்பு உருவாக்கி செயற்படுத்தவேண்டும். அரசியலை வயிற்றுப்பிழைப்புக்கு தொழிலாக கொண்டவர்களுக்கு இதெல்லாம் கடினமான வேலையாகத்தான் தெரியும். 

எத்தனை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிள்ளை குட்டி குடும்பம் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்பதற்கு யாரிடமாவது விபரம் தெரிந்தால் இங்கே போட்டுவிடுங்கள். இப்படியான அரசியல்வாதிகள் தமிழருக்கு எந்தகாலத்திலும் சேவை செய்யப்போவதில்லை. இதை தமிழினமும் புரிந்து செயல்படவேண்டிய தருணமிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

சிங்களம் பலபக்ககங்களாலும் சீறுகின்றன. தமிழினம் மீண்டும் பேரழிவுக்குள் வீழ்ந்துவிடாதிருக்க கொல்லப்பட்டோர் கொல்லப்பட்டோராகவே போகட்டுமெனப் பேசாமலிருப்பதே மிச்சமுள்ள தமிழரைப் பாதுகாக்கும் வழியாகுமோ!

தமிழன் சுத்தக் காந்தீயவாதியாக இருந்த போதும் சிங்களவன் அடிச்சிருக்கான் தானே. இப்ப என்னவோ அடிக்கமாட்டான் என்பது போல எப்படி அவனை நம்புறீங்க. சிங்களவன் அடிப்பான்.. அவனுக்குள்ள ஒரே பயம்.. புலம்பெயர்ந்துள்ள புலி எச்சங்கள் தான். அதனை மடக்குவதற்கு முடக்குவதற்கு வழி தேடிப்பார்க்கிறான்.. அவ்வளவே. தாயக மக்களையும் அதே பயத்தை காட்டி முடக்கினால்.. புலம்பெயர் புலி எச்சங்கள்.. முன்னாள் போராளிகள் போல முடக்கப்படலாம் என்று நினைக்கிறான் சிங்களவன். அப்ப தான்.. அவன் நினைக்கிற நேரம் தமிழனை அடிக்கலாம் கொல்லலாம்.. அதனை யாரும் தடுக்க முடியாது.. ஆனால்.. புலம்பெயர் புலி எச்சங்கள் இருந்தால்.. உலக அரங்கில் கூச்சல் போடுமே என்ற பயம் மட்டுமே இப்ப அவனை அடக்கி வாசிக்கச் செய்யுது. அதுவும் எம்மவர்களேலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு பலவீனப்பட்ட பின்.. சிங்களவன் இன்னும் தான் நினைச்சப்படி ஆடுவான். அதில் எம்மவர் சிலர் நல்லாக் குளிர் காய்வர். ஆனால்.. அப்பாவி தமிழ் மக்கள் மட்டும் விடிவின்றி வாழ்ந்து முடிவர்.:rolleyes:tw_angry:

சிங்கள அமைச்சர் உணரனும்.. இது நாடகங்கள் அல்ல... தாங்கள் விதைத்த வினையின் விளைவு என்று.  எனியும் அதனை தொடராது.. சிங்கள இராணுவத்தை கூப்பிட்டு தங்களோடு வைச்சுக் கொள்வதே.. செய்த வினைக்கான குறைந்த பட்ச நல்வினையாக இருக்க முடியும். மமதைச் சிங்களம் இதனை உணருமா என்பது பெரிய கேள்விக்குறியாகும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை என்றுமே விட்டுக்கொடுக்காது இலங்கை அரசாங்கமும் சரி சிங்கள மக்களும் சரி  இவரின் பேச்சென்ன ஜனாதிபதியின் பேச்சும் சான்று 

51 minutes ago, vanangaamudi said:

எத்தனை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிள்ளை குட்டி குடும்பம் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்பதற்கு யாரிடமாவது விபரம் தெரிந்தால் இங்கே போட்டுவிடுங்கள். இப்படியான அரசியல்வாதிகள் தமிழருக்கு எந்தகாலத்திலும் சேவை செய்யப்போவதில்லை. இதை தமிழினமும் புரிந்து செயல்படவேண்டிய தருணமிது.

.............................................................................

Link to comment
Share on other sites

On 15/5/2017 at 6:45 PM, நவீனன் said:

இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை

தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கு ஒரே தீர்வென சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.5.2017 at 3:15 PM, நவீனன் said:

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

"தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டிவரும்" எண்டதின்ரை சாரம்சம் ஆருக்கும் விளங்கிச்சுதோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

"தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டிவரும்" எண்டதின்ரை சாரம்சம் ஆருக்கும் விளங்கிச்சுதோ????

கு.சா அண்ணர் சும்மா பகிடியாய் எடுக்காதையுங்கோ. தமிழர் வெறும்கையோடை நிற்கிறம். குருதிகடலிலை கலந்து தமிழகத்தை நனைச்சாக்கூடக் கேக்க நாதியில்லை. அடக்கம் அடக்கம். 

21 hours ago, nedukkalapoovan said:

தமிழன் சுத்தக் காந்தீயவாதியாக இருந்த போதும் சிங்களவன் அடிச்சிருக்கான் தானே. இப்ப என்னவோ அடிக்கமாட்டான் என்பது போல எப்படி அவனை நம்புறீங்க. சிங்களவன் அடிப்பான்.. அவனுக்குள்ள ஒரே பயம்.. புலம்பெயர்ந்துள்ள புலி எச்சங்கள் தான். அதனை மடக்குவதற்கு முடக்குவதற்கு வழி தேடிப்பார்க்கிறான்.. அவ்வளவே. தாயக மக்களையும் அதே பயத்தை காட்டி முடக்கினால்.. புலம்பெயர் புலி எச்சங்கள்.. முன்னாள் போராளிகள் போல முடக்கப்படலாம் என்று நினைக்கிறான் சிங்களவன். அப்ப தான்.. அவன் நினைக்கிற நேரம் தமிழனை அடிக்கலாம் கொல்லலாம்.. அதனை யாரும் தடுக்க முடியாது.. ஆனால்.. புலம்பெயர் புலி எச்சங்கள் இருந்தால்.. உலக அரங்கில் கூச்சல் போடுமே என்ற பயம் மட்டுமே இப்ப அவனை அடக்கி வாசிக்கச் செய்யுது. அதுவும் எம்மவர்களேலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு பலவீனப்பட்ட பின்.. சிங்களவன் இன்னும் தான் நினைச்சப்படி ஆடுவான். அதில் எம்மவர் சிலர் நல்லாக் குளிர் காய்வர். ஆனால்.. அப்பாவி தமிழ் மக்கள் மட்டும் விடிவின்றி வாழ்ந்து முடிவர்.:rolleyes:tw_angry:

சிங்கள அமைச்சர் உணரனும்.. இது நாடகங்கள் அல்ல... தாங்கள் விதைத்த வினையின் விளைவு என்று.  எனியும் அதனை தொடராது.. சிங்கள இராணுவத்தை கூப்பிட்டு தங்களோடு வைச்சுக் கொள்வதே.. செய்த வினைக்கான குறைந்த பட்ச நல்வினையாக இருக்க முடியும். மமதைச் சிங்களம் இதனை உணருமா என்பது பெரிய கேள்விக்குறியாகும். :unsure:

சிங்களம் உணராதென்பதை அதிபர் மற்றும் வெளிநாட்டமைச்சர் இப்போது இவரென அனைவரது உரைகளும் ஒன்றையே உரைக்கின்றன. ஆனால் வெவ்வேறுபாணியில். இதிலை ரனில் என்ற நரிமட்டும் கதைக்காமற் காய்நகர்த்துது.  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு மோடி மஸ்தான் வந்துபோன கையோடை சீனாவுக்குப்போய் நீர்மூழ்கிவிவகாரத்தைத் தாஜாபண்ணித் தங்கடைகாரியத்தை சாதிக்க. எனவே சிங்களம் உணரவோ உருப்படியானதொரு தீர்வை முன்வைக்கவோ போவதில்லை. தமக்கு அழுத்தம்தராதவரைதான் கூத்தமைப்புன் தேன்நிலவு. என்று சீறுகிறார்களோ(ஒருவேளை உப்பபை்போட்டுச் சாப்பிட்டா) அன்றே தேன்நிலவு விடைபெறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கு ஒரே தீர்வென சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள்!

அந்த அச்சத்தின் பிரதிபலிப்புக்கான கரணியத்தை சிங்களம் அறிந்தே வைத்தள்ளது. ஏனெனில் இனஅழிப்பை செய்தவொரு இனத்தோடு சேர்ந்துவாழ நிர்பந்திக்கும் உரிமை யாருக்கும் கிடையாதென்பதை சிங்களம் அறியும். அறியாவிடினும் மேற்கிலை இருந்துபோறவ ஒருகதைக்காவேணும் சுட்டாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஏற்படும் பதட்டம். மறக்கப்பண்ணி முழுங்கடித்து மூடிவிட முனைய மூன்றாம் தலைமுறைக்கு விடயம் ஊட்டடப்படுவதானது  சிங்களத்துக்கு ஆரோக்கியமானதல்ல. மூன்றாம் தலைமுறையானது இருபகுதியிலும் ஒரு புதியபரிணாமத்துள் புரிந்துணர்வோடு வரலாற்றாய்வோடு உண்மைகளைக் கண்டறிந்து ஒரு நாகரிகமான தீர்வுக்குச் சென்றால் சிங்களம் என்ன செய்வதென்ற அங்கலாய்ப்பே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

"தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டிவரும்" எண்டதின்ரை சாரம்சம் ஆருக்கும் விளங்கிச்சுதோ????

உது விளங்கவில்லையே ....வலு சிம்பிள் 
மீண்டும் புலிகள் என்று சொல்லி மீதி இருக்கும் தமிழர்களையும் மனிதாபிமான யுத்தம் நடத்தி கொன்றொழிப்பது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.