Jump to content

”வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்”


Recommended Posts

”வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்”

 
 

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக, வட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

_96053977_gettyimages-679196960.jpgபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் கொரியாவில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள சில நாட்களில் நடைபெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனை, தென் கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்று எபிசி நியூஸிடம் அவர் கூறியுள்ளார்.

வட கொரியா தொடர்பான விடயங்களில் அமெரிக்கா தன்னுடைய கடும் அணுகுமுறையை தொடரும் என்று ஹேலி தெரிவித்திருக்கிறார்.

குசொங்கின் வட மேற்குப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வட கொரியாவோடு ஆழமான நட்புறவு கொள்ள விரும்புகிற தென் கொரியாவின் புதிய அதிபராக பொறுப்போற்றுள்ள மூன் ஜயே-இன் இந்த ஏவுகணை சோதனையை "பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்" என்று விம்ர்சித்துள்ளார்..

கட்டுப்பாட்டுடன் இருக்க சீனா வலியுறுத்தியுள்ள நிலையில், வட கொரியாவுக்கு எதிராக "வலுவான தடைகளை" விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயார்

"சந்திப்பு கிடையாது"

வட கொரியாவின் ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் அவையால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வட கொரியா நடத்தியுள்ள தொடர் ஏவுகணை சோதனைகள், உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவோடு பதட்ட நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் ராக்கெட்கள் வெடித்து சிதறியதால் சோதனை தோல்வியில் முடிந்தது.

கிம் ஜாங்-உன்னை நல்லதொரு சூழ்நிலையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்த பின்னர், சூழ்நிலைகள் நல்லதாக அமைந்தால் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று வட கொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இத்தகைய சந்திப்புக்களை உருவாக்குவதற்கு ஏவுகணைகளை அனுப்புவது சரியான வழியாக இருக்காது என்று தெரிவித்திருக்கும் ஹேலி, எம்முடைய நிபந்தனைகளை ஏற்காத வரை அவரோடு நாங்கள் சந்திக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

புதிய வகை ஏவுகணையா?

இந்த ஏவுகணை எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் சோதனை செய்த ஏவுகணைகளை விட அதிக தொலைவு சென்று தாக்கக்கூடியதாக இருக்கலாம் என்பதை இந்த ஏவுகணை சோதனை காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானிய கடலில் விழுவதற்கு முன்னால், இந்த ஏவுகணை ஏறக்குயை 30 நிமிடங்கள் பறந்தது. எனவே புதிய வகை ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஏவுகணை 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவையும், 2 ஆயிரம் கிலோமீட்டருக்கு (1,245 மைல்) அதிகமான உயரத்தையும் அடைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வட கொரியா ஏவிய இடைநிலை தொலைவு தாக்கும் ஏவுகணையை விட இது அதிக சக்தி வாய்ந்ததாகும் என்று அமைச்சர் டோமோமி ஐனாடா கூறியிருக்கிறார்.

ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகள், பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் உயரத்தை தொடுகின்ற சக்தியுடையவை.

இவ்வளவு உயரம் சென்றுள்ளதற்கு ராய்டஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிற நிபுணர்கள், பாய்ந்து தாக்கும் தொலைவை குறைத்து, உயரமான இடத்திலிருந்து இது ஏவப்பட்டிருக்கலாம். இதன் தாக்குதல் தொலைவு குறைந்தது 4 ஆயிரம் கிலோமீட்டராக இ.ருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வகையான ஏவுகணை பற்றி ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், இதனுடைய பறத்தல் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகனைகளின் சக்திக்கு இணையானதாக இல்லை. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகள் 6 ஆயிரம் கிலோமிட்ருக்கு மேலான தொலைவில் இருக்கும் அமெரிக்க பெருநிலப்பகுதியை தாக்கும் சக்தியுடையவை என்று அமெரிக்க பசிபிக் கட்டளையகம் தெரிவித்திருக்கிறது.

வட கொரியா இரண்டு வகையான கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வடிவமைத்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால், அத்தகைய எந்த வகையும் இன்னும் சோதிக்கப்படவில்லை.

பதில் நடவடிக்கை

இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து, தன்னுடைய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்றை தென் கொரியாவின் அதிபர் மூன் ஐயே-இன் கூட்டியுள்ளார்.

வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு வட கொரியா தன்னுடைய அணுகுமுறையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளையில், சீனாவில் முக்கியமானதொரு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தென் கொரிய ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர், வட கொரிய பிரதிநிதிகளிடம் நேரடியாக இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஏவுகணை சோதனையால் கவலையடைந்துள்ளதாக கிரம்ளின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

வட கொரியாவின் ஒரேயொரு கூட்டாளியாக இருக்கின்ற சீனா, இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

http://www.bbc.com/tamil/global-39918627

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையே அமெரிக்கா செய்தால்.. சாதனை. வடகொரியா செய்தால்.. சித்தப் பிரமை. எல்லாம் பெரியவா ஊடகங்களின் சித்தம்.

நீங்க செய்யுங்கப்பு.. வல்லுவனுக்கு வல்லவன் இவ் வையகத்தில் உண்டு.. என்று எங்கட தமிழ் மூதாதையர் எப்பவோ சொல்லிட்டினம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.