Jump to content

தமிழக அரசியல் களம்: ரஜினி தர்பாரில் நடக்கும் மாஸ்டர் பிளான்


Recommended Posts

.

 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
 
 

ஏற்கெனவே ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் தேதியை மாற்றினார் ரஜினி. தனித்தனியாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக ரசிகர்களை வரவழைத்து புகைப்படம் எடுப்பது எளிதாக இருக்கும் என்று திட்டம் மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அதற்கு பதில் விளக்கம் ரஜினி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து மாவட்டத்திற்கு 500 பேர் வீதம் ரஜினி மே 10-ம்தேதி முதல் ரசிகர்களை சந்திப்பார். தனித்தனியாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் ரசிகர்கள் தலைமை மன்றம் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதையடுத்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விண்ணப்பங்களை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளே வாங்கி ரசிகர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.

இதன் மூலம் 32 மாவட்டங்களை 32 நாட்கள் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற தலைவரை ரஜினியே நியமிக்க ரசிகர்கள் மத்தியில் சீட்டியொலியும், கரவொலியும் பறந்தது. இதுவரை மாவட்ட தலைவர்களை அகில இந்திய ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள்தான் நியமித்து வந்தார்கள். இந்த முறை ரஜினியே நேரடியாக செய்தது புதுமையிலும் புதுமை. இதுவே அவர் அரசியலுக்கு வருவதற்கான முதல் தொடக்கம் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் இடைவிடாத பேச்சு தொடங்கியது. அதுவும் தவிர எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் இல்லையோ அங்கெல்லாம் அடுத்த கட்டமாக உள்ள நிர்வாகிகள் தங்களையும் ரஜினி அழைப்பார்; மாவட்ட தலைவர் பொறுப்புக்கு மகுடம் சூட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியது.

ஆனால் பிறகும் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக 10-ம் தேதி நடக்க இருந்த ரஜினி- ரசிகர் புகைப்பட செஷன் 15-ம் தேதிக்கு தள்ளிப் போனது.

இந்த முதல்கட்ட சந்திப்பில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார். இதில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. 5 நாட்கள் நடக்கும் இந்த சந்திப்பை அடுத்து இரண்டாம் கட்டமாக மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தை ரஜினி ரசிகர்கள் அல்லாதோர் தரப்பு எப்படிப் பார்க்கிறது என்பதை விட அறிவார்ந்த உலக வட்டாரம் இதை கேலிக்கூத்தாகவே பார்க்கிறது.

'ரஜினி ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் அந்தப் படம் வியாபார ரீதியாக சக்ஸஸ் ஆக வேண்டுமே என்ற பதட்டம் தொற்றிக் கொள்ளுவது வாடிக்கை. அதற்காக ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏதாவது ஒரு பரபரப்பை உண்டு பண்ணுவதும் வழக்கம்தான். இந்த முறை ஜெயலலிதா மறைவு, கருணாநிதி செயல்பாடின்மை, தமிழக அரசியலில் வெற்றிடம், ஆட்சி அதிகாரத்தில் தடியெடுத்தவர் எல்லாம் அதிகார மையம் என்கிற நிலை. இதற்கேற்ப தமிழக பாஜகவின் அடுத்தடுத்த அழைப்பு. ரஜினி குறித்து அவர்கள் கொளுத்திப் போடும் பஞ்ச் டயலாக். லேட்டஸ்ட்டாக நக்மாவின் கமெண்ட்!' எல்லாம் சேர்ந்து அவரின் '2.0' பட வசூலுக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது என்னவோ உண்மை. ஆனால் அவர் நிச்சயம் எப்போதும் போல் அரசியலுக்கு வரப் போவதில்லை. மறுபடியும் இந்த ரசிகர்கள் அவரை நம்பி பைத்தியம் பிடித்துத்தான் அலையப்போகிறார்கள்!' என தெரிவிக்கிறார் அறிவுஜீவி இலக்கிய வட்டாரத்தை சேர்ந்த ஒருவர்.

ஆனால் அரசியல் விமர்சகர்களின் பார்வையோ இதில் வேறுபட்ட விதமாகவே இருக்கிறது.

கோவையை சேர்ந்த சீனியர் அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகிறார். 'தமிழகத்தைப் பொறுத்தவரை சிந்தனாவாதிகள், அறிவுலகவாதிகள் எல்லாம் ஆண்ட காலம் மலையேறி விட்டது. அண்ணாதுரையின் அடுக்குமொழி நாடகபாணி வசனம் எப்படி மக்களை ஈர்க்க, அதையே தன் பிம்பமாக கொண்டார் கருணாநிதி. அவர் ஆட்சிக்கு வரவே எம்ஜிஆர் என்கிற நடிக சக்தியின் ஆதரவு தேவையாக இருந்தது. அண்ணாதுரை காலத்திலேயே எம்ஜிஆருக்கான கூட்டம் ஒரு பக்கம் திமுகவிற்கு பெரும் பலம் சேர்த்தது. ஆக, 1970 ஆம் ஆண்டு தொடங்கி நாடகபாணி வசனமும், நடிகர்களின் வரவுமே தமிழக அரசியலை தீர்மானித்து வந்திருக்கிறது.

அந்த வகையில் அதிமுக என்பது நட்சத்திர அந்தஸ்துள்ள கட்சியாகவே இருக்கிறது. அதுதான் எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவை சுடர்விடவும் செய்தது. அப்படிப்பட்ட நட்சத்திர கட்சி தற்போது மக்கள் செல்வாக்கு பெற்ற நட்சத்திரம் இல்லாமல் திண்டாடுவதுதான் தற்போதைய நிலை. அதை உடைக்க ரஜினியோ, அஜித்தோ வந்தாக வேண்டிய நிலை. அஜித்துக்கு இளைஞர்கள் பட்டாளம் பெரிதாக இருக்கிறது. ரஜினிக்கோ இளைஞர் முதல் பெரியவர்கள் வரை உள்ளார்கள். அதை விட மேலாக பெண்கள் ஓட்டு என்பது இன்றைக்கும் பந்தயக் குதிரையாய் இருக்கும் ரஜினிக்குத்தான். அவருக்கு 1996 வாய்ஸ் கொடுத்ததோடு அரசியல் செல்வாக்கு முடிந்து விட்டது என்று சொல்பவர்கள், இன்றைக்கு வரை அவர் சினிமா ரேஸில் முதலாவதாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.

அவர் வாய்ஸ் கொடுத்தது என்பது வேறு. அரசியலுக்குள் நேரடியாக நுழைவது என்பது வேறு. புதிய கட்சி ஆரம்பித்து தலைவராவது என்பது வேறு. 1996க்கு பின் அவரது வாய்ஸ் எடுபடவில்லை. எடுபடாது. அடுத்தது ஏதாவது ஒரு கட்சிக்குள் நுழைவது. அது பாஜகவாக இருக்கலாம்; அதிமுகவின் தலைமைப் பொறுப்பாக கூட இருக்கலாம். அதற்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ புதிய கட்சி என்பது அவருக்கேயானதாக இருக்கும். அதில்தான் அவரின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்போது ரஜினி ரசிகர்களை சந்திப்பதில் இப்படிப்பட்ட நோக்கங்கள் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தவிர இப்போதைக்கு தமிழக அரசியலில் சூழ்ந்துள்ள கருமேகத்தை ரஜினி போன்றவர்கள் வந்து சரிகட்டுவதுதான் வழி. இல்லாவிட்டால் இந்த அரசியல் போக்கு ஸ்திரத்தன்மையில்லாமலே இருக்கும்!' என்கிறார்.

திமுகவைப் பொறுத்தவரை பெரும்பாலான பிரமுகர்கள் ரஜினிக்கு 1996 ஆம் ஆண்டுடனே அரசியல் வாய்ஸ் முடிந்து விட்டது. அது எடுபடவே படாது என்கிறார்கள். ஆனால் நுட்பமாக தமிழக அரசியலை கண்காணிக்கும் உடன்பிறப்புகள் கருத்தோ வேறுமாதிரியாக உள்ளது. அதைப்பற்றி ஒரு பிரமுகர் இப்படிக்கூறுகிறார்:

'தமிழக மக்கள் தங்களை தெரிந்தவர்களுக்கு ஓட்டுப்போடுவதை விட, தாங்கள் அறிந்தவர்களுக்கு ஓட்டுப் போடுவதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் சினிமா கதாநாயகர்களுக்கு மட்டும்தான் இந்த சக்தி இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டின் சினிமா வரலாற்றில் இரண்டு படம் கதாநாயகனாக நடித்துவிட்டால் கூட ஒரு நடிகன் அரசியலில் குதித்து விடுகிறார். அதில் எதிலும் சிக்காதவராக இருக்கும் ரஜினிக்கு அதுவே அரசியல் ஆற்றலாக மாறியிருக்கிறது. அவருக்கு அரசியல் ஆசை இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி இருந்திருந்தால் 1996ல் திமுக-தமாகாவுக்கும், அதைத் தொடர்ந்து பாஜகவுக்கும் சாதகமாக வாய்ஸ் கொடுத்திருக்க மாட்டார். அப்புறமும் அரசியலே பேசியிருக்க மாட்டார்.

ரஜினி ஒரு பக்கம் ஜெயலலிதாவிற்கு பாதகம் நினையாதவராக இருந்தார். இன்னொரு பக்கம் கருணாநிதி மீது மதிப்பு வைத்திருந்தவராக இருந்தார். இது கூட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் பார்வையாக இருக்கிறது. இப்போது அந்த இரண்டு தலைவர்களில் ஒரு தலைவர் உயிருடன் இல்லை. இன்னொரு தலைவர் செயலில் இல்லை. இப்படியிருக்க மரியாதைக்குரிய தலைவரின் மகன் முடிசூட்டிக் கொள்வதற்காக தன் அரசியல் பிரவேசத்தை விட்டுக் கொடுப்பார் என்றும் தோன்றவில்லை. இப்போது அவர் ரசிகர்களை சந்திப்பதும், புது, புதுசாக செயலில் இறங்குவதும் அரசியல் ஒத்திகையே தவிர மற்ற காலங்களை போல பட விற்பனைக்கான களமாக நாங்கள் பார்க்கவில்லை.

எப்படிப் பார்த்தாலும் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வெயிட் பண்ணுகிறது. அது முடிந்தவுடன் தமிழக சட்டப்பேரவை கலைப்பாகத்தான் இருக்கும். அப்படி நடந்தால் உடனே தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விடும். அதில் ரஜினியின் நிலைப்பாடு பாஜக பக்கம் போவதாக இருப்பதை விட புதிய கட்சி ஆரம்பிப்பது. பாஜவுக்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து கூட்டணி ஏற்படுத்துவது. ஆந்திராவில் ராமாராவ் ஏற்படுத்தியது போல் கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்தது போல் தானும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக கூட இருக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அவர் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு அதிமுகவின் முக்கிய தலைகள் முழுவதும் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வளவு ஏன் திமுகவில் உள்ள ஒரு பெரிய அணியே கூட அவர் பின்னால் போகக்கூடும். இவையே இப்படி என்றால் தேமுதிக நிர்வாகிகளின் நிலை சொல்லவா வேண்டும்?' என்றார்.

முதல்கட்டமாக ரஜினியை சந்திக்கும் குழுவில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தன் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இதுகுறித்து இப்படி பேசினார்:

'இந்த முறை தலைவர் ரஜினியின் போக்கே முற்றிலும் மாறுபாடு மிக்கதாக உள்ளது. அதை வேலுாரில் மாவட்ட தலைவரை அவரே நியமனம் செய்தது மட்டுமல்ல; இந்த முதல் கட்ட சந்திப்பின்போது சில மாவட்டங்களின் தலைவர்களை அவரே நியமனம் செய்ய வாய்ப்புள்ளது. அவர் இந்த முறை ரசிகர்கள் சந்திப்பை நடத்துவது ரிலீஸாகும் படத்திற்காக அல்ல. நிச்சயம் அரசியல் பிரவேசத்திற்கானதுதான். அவர் தற்போது தமிழகத்தில் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்தே வருகிறார். அதிலொன்றாகவே நக்மாவை போன்றவர்களை பேச விடுகிறார். அதை எங்கள் தலைமை ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களே தெரிவிக்கிறார்கள்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். விண்ணப்பம் கொடுத்து டோக்கன் போட்டு, தேதி குறிப்பிட்டு, அதை தள்ளி வைத்து, விண்ணப்பங்களை கணினியில் பதிவிறக்கம் செய்து, பார் கோடு கொடுத்து, நிர்வாகிகளை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்து, பிறகு ரசிகர்களை சந்திக்க நாட்கள் குறித்து இப்படியொரு ரசிகர்கள் சந்திப்பை எப்போதாவது ரஜினி நடத்தியதுண்டா? அதை வைத்தே தெரிய வேண்டாமா? இதற்குப் பின்னால் அரசியல் மாஸ்டர் பிளான் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று. நிஜமாக சொல்கிறேன். இந்த ஜூன் மாதத்திற்கு பின்பு அனைவரும் புரிந்து கொள்வார்கள். ரஜினியை விட்டால் தமிழக அரசியலுக்கு ஆளில்லை என்பதை!' என்றார்

http://tamil.thehindu.com/tamilnadu/தமிழக-அரசியல்-களம்-ரஜினி-தர்பாரில்-நடக்கும்-மாஸ்டர்-பிளான்/article9697254.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.