Jump to content

ஜெயலலிதா இல்லாத மாளிகைகள்!


Recommended Posts

ஜெயலலிதா இல்லாத மாளிகைகள்!

 

ஜெயலலிதா தங்கி வாசம் செய்த வீடுகள்  மூன்று. ஆட்சி செய்ய போயஸ் தோட்டம், கொஞ்சம் ஆட்சி - கொஞ்சம் ஓய்வுக்கு கொடநாடு, எப்போதாவது சிறுதாவூர் என அவருடைய கடந்த இருபதாண்டுகளும் இந்த மூன்று வீடுகளுக்குள்தான் கழிந்தன. இந்த மூன்று வீடுகளும் அப்போது எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன?! நேரடி ரிப்போர்ட். 

p36a.jpg

போயஸ் கார்டன்!

ஜெயலலிதாவின் சொத்துகளில் அதிக மதிப்புடையது, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வேதா நிலையம் பங்களாதான்.

1967-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா போயஸ் கார்டன் வீட்டை விலைக்கு வாங்கினார். அப்போது, அந்த வீட்டின் விலை 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். அதன்பிறகு, ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த கணிசமான தொகையை வைத்து, அந்த வீடு மெள்ள மெள்ள மெருகேற்றப்பட்டது. வீடு, தோட்டம் என்று அந்த இடத்தின் மொத்தப் பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடி. அதில் 21 ஆயிரத்து 662 சதுர அடியில் கட்டடம் உள்ளது. ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அதன் மதிப்பு 90 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். அரசாங்கத்தின் வழிகாட்டு மதிப்புப்படி கணக்கிட்டால் 43 கோடியே 96 லட்ச ரூபாய்.

போயஸ் கார்டன் வீட்டின் பிரமாண்டத்தை நேரில் பார்த்த வர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். முதல் தளத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கான்ஃபரன்ஸ் அறை, இரண்டாவது தளத்தில் சொகுசுத் தியேட்டர், உலகப் புகழ் பெற்ற மார்பிள்களால் இழைக்கப்பட்ட தரைகள் என்று வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட அரண்மனை இது.

சசிகலா நுழைந்தது எப்போது?

1980-களில் வினோத் வீடியோ விஷன் என்ற பெயரில் கேசட் கடை வைத்திருந்த சசிகலா, ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொடுக்கும் வேலையை செய்துவந்தார். படிப்படியாக ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று போயஸ் கார்டனுக்குள் அடிக்கடி சென்றுவரும் நபராக மாறினார் சசிகலா. 1987-ம் ஆண்டு பீமண்ணா கார்டன் தெருவில் இருந்த தன் வீட்டைக் காலி செய்துவிட்டு, ஜெயலலிதாவோடு நிரந்தரமாக போயஸ் கார்டன் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். 1987-ல் இருந்து 2017 பிப்ரவரி 16-ம் தேதி வரை சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் போயஸ் கார்டன் வீடு இருந்தது.

சசிகலா மட்டுமல்ல... சசிகலாவின் உறவினர்கள் பலரும் ஒவ்வொரு காலகட்டத்தில் போயஸ் கார்டனுக்குள் செல்வாக்கு மிக்க மனிதர்களாக வலம் வந்துள்ளனர். சசிகலாவின் கணவர் நடராசனுக்கு போயஸ் கார்டனில் மேல்தளத்தில் அலுவலகமே இருந்தது. ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் கட்டடப் பணியை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதன்பிறகு, ஜெயராமனின் மனைவி இளவரசியும் போயஸ் கார்டனிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். ஆனால், ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறைக்குச் சென்றபிறகு,  இப்போது போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலாவின் உறவினர்கள் யாருமே தங்குவதில்லை.

போயஸ்கார்டனும் பூங்குன்றனும்

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் புலவர் சங்கரலிங்கம். அவருடைய மகன் பூங்குன்றன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பூங்குன்றன் கார்டனுக்குள் தலைகாட்டுவதோடு சரி. தமிழகத்தின் சக்தி வாய்ந்த அதிகாரப் பீடமாக போயஸ் கார்டன் இருந்ததையும், அதிகாரம் இழந்து, அங்கிருந்த மனிதர்களையும் இழந்து வாழ்ந்து கெட்ட மாளிகையாக போயஸ் கார்டன் இருக்கும் முரண்பட்ட காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சிகளில் முக்கியமானவர் பூங்குன்றன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது...

ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை எப்படியாவது நம் மீது பட்டுவிடாதா என்று போயஸ் கார்டன் தெருவில் கட்சிக்காரர்கள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருப்பார்கள். நேர்த்தியாக அமைக்கப்பட்ட சாலைகளில் வி.ஐ.பி-களின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால், ஜெயலலிதா  உயிரிழந்தபிறகு இதுபோன்ற காட்சிகள் போயஸ் கார்டனில் இல்லை.

சென்னையில் அழகான வீதிகளின் பட்டியலில் பின்னி சாலையும் இணைந்ததற்கு ஒரே காரணம் ஜெயலலிதாதான். பின்னி சாலையின் துவக்கம் முதல் முடிவு வரை இரண்டு புறமும் அழகான சில்வர் காடர்களை அமைத்தனர்.டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்பும் பின்னி ரோடு, கஸ்தூரி ரங்கன் ரோடு வளைவு, நடிகர் ரஜினி வீட்டுக்குச் செல்லும் தெருவின் திருப்பத்தில் இருந்த போலீஸ் செக்போஸ்ட் எதுவும் தற்போது இல்லை. 

 ஜெயலலிதா வீட்டுக்கு அருகில் சிறிய விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. `ஜெய விநாயகர்' எனப் பெயரிடப்பட்ட இந்த விநாயகர் ஆலயம், ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம். ஜெயலலிதா இருந்த வரை ஜெயலலிதா வீட்டில் பூக்கும் பூக்களைக் கொண்டுதான் ஜெயவிநாயகருக்கு அலங்காரம் நடைபெறும். இப்போது வாரத்தில் ஒருநாள் மட்டும் ஜெயலலிதா வீட்டுப் பூக்களால் அலங்காரம் நடைபெறுகிறது.

 வாடி வதங்கிய நிலையில் பூக்கள்

ஜெயலலிதா பூக்கள் மீது அளவுகடந்த விருப்பம் உடையவர். போயஸ் கார்டனில் குடியேறியதுமே அவர் செய்த முதல் வேலை, வீட்டைச் சுற்றிலும் பூச்செடிகளை நட்டு வளர்த்ததுதான். ஆரம்பத்தில் அவரே பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வழக்கத்தை வைத்திருந்தார். தனது வீட்டில் பூக்கும்  பூக்களைத்தான்,  தனது சாமி அறையிலும் பயன்படுத்திவந்தார். தற்போது அவை வாடிப்போய்க் கிடக்கின்றன.
போர்டிகோவில் இருக்கும் சுவற்றில் கிரானைட் கல்லில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா வீட்டில் இருந்து வாசலை காரில் தாண்டும்போது, தன் முகத்தைத் திருப்பி... காரில் இருந்தபடியே விநாயகரை வணங்கிவிட்டுத்தான் போவார். ஜெயலலிதா இறந்த சமயத்தில், அந்த விநாயகரை மறைத்து பேப்பர் ஒட்டி வைத்திருந்தனர். இப்போது அந்த விநாயகரையே நீக்கிவிட்டனர்.

களை இழந்த கார்ஷெட்

போயஸ் கார்டன் வீட்டைப்போலவே அதற்கு எதிரில் இருந்த ஜெயலலிதாவின் கார் ஷெட்டும், ஊழியர்கள் தங்கும் இடமும் பரபரப்பாகவே இருக்கும். அங்குதான் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்குவார்கள். அதே இடத்தில்தான் ஜெயலலிதாவின் கார்கள் அனைத்தும் நிற்கும். ஜெயலலிதா அவருடைய பயணத்துக்காக டொயேட்டா லேண்ட்க்ரூஸர் கார்களைப் பயன்படுத்தி வந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அந்தக் காரை சசிகலா பயன்படுத்தினார். அவர் சிறை சென்ற பிறகு, அந்தக் கார்களை யாரும் பயன்படுத்துவதில்லை. அந்தக் கார்களும் தற்போது ஷெட்டுக்குள் அடைத்து பூட்டப்பட்டுவிட்டன. ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் திரும்பப் பெறப்பட்டதால், தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் தற்போது ஜெயலலிதா வீட்டு வாசலில் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் பயன்பாட்டில்தான் ஜெயலலிதாவின் கார்ஷெட் உள்ளது.

புல்லட் ப்ரூஃப் கார்?

இசட் பிளஸ் பாதுகாப்பில் ஜெயலலிதா இருந்ததால், அவருக்கு புல்லட் ப்ரூஃப் காரை மத்திய அரசு வழங்கியிருந்தது. ஜெயலலிதா அந்தக் காரை பயன்படுத்தாமல் இருந்தார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அந்த புல்லட் ப்ரூஃப் காரை மத்திய அரசு வாபஸ் வாங்கிவிட்டது.

முதல் மாடியில் இருந்த ஜெயலலிதா, சசிகலா தங்கியிருந்த அறைகளுக்கு பூட்டு போடப் பட்டுள்ளது. கீழ் தளத்தில் உள்ள வரவேற்பறையை மட்டும் தினமும் திறந்து சுத்தபடுத்திவருவதாக கார்டன் பணியாளர்கள் சொல்கிறார்கள். முப்பது ஆண்டுகளாக இந்த வீட்டில் சமையல் செய்துவந்த ராஜம் அம்மாளை அவருடைய  சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் போர்டிகோவில் டிசைனர் லைட், வாயிலில் உள்ள கார்டனில் வரிசையாக விளக்குள், மாடியில் ஃபோகஸ் லைட் என இரவு நேரத்தில் ஒளிவெளிச்சத்தில் ஜொலித்தது வேதா இல்லம். அதேபோல் ஜெயலலிதா வீட்டின் நுழைவு வாயிலின்  ஒருபுறம் வேதா இல்லம் என்றும், மறுபுறம் ஜெயலலிதா என்ற பெயர்ப் பலகைகளும் இருக்கும். `ஜெயலலிதா' என்ற பெயரில் ஒளிவிடும் வெளிச்சத்தில் மட்டும் இப்போது ஜெயலலிதா பளிச்சிடுகிறார்.

 கொடநாடு பங்களா....

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், சசிகலா மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் வாங்கினார் ஜெயலலிதா. அதில் முக்கியமானது கொடநாடு எஸ்டேட்.

p36b.jpg

கொடநாடு எஸ்டேட்டை வாங்கலாம் என சசிகலா அறிவுறுத்த, 1992ம் ஆண்டு நேரில் பார்வையிட்டார் ஜெயலலிதா. குளிர்ச்சியான காலநிலையும், ரம்மியமான சூழலும் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போக விலை பேசப்பட்டது கொடநாடு எஸ்டேட்.

கிரேக் ஜோன்ஸ் என்பவரிடம் இருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் ராமசாமி உடையார் மூலம் சசிகலா குடும்பத்தினருக்கு கை மாறியது இந்த எஸ்டேட்.

2006 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆட்சியில் இல்லாத அந்த 5 ஆண்டுகளில்  பெரும்பான்மையான நாள்களை கொடநாட்டிலேயே கழித்தார் ஜெயலலிதா. அப்போது கொடநாடு வாசம் மிகவும் பிடித்துப்போக... `மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் இங்கிருந்தே அரசு பணிகளை கவனிக்கலாம்' எனச் சொன்னதோடு, அதற்கேற்ற வசதியுடன் எஸ்டேட்டின் மேல் பகுதியில் பங்களா ஒன்றை கட்டவும் சொன்னார் ஜெயலலிதா.

இரு தளங்கள் தான் என்றாலும்,போயஸ் கார்டன் இல்லத்தை விட கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டது கொடநாடு எஸ்டேட். வி.ஐ.பி. ஹால், சிட்டிங் ஹால், 100 பேர் அமரும் கான்ஃபிரன்ஸ் ஹால், பொது டைனிங் ஹால் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. முதல்வர்  அலுவலகத்தில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இங்கு இருக்கின்றன. கூடவே ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மினி மருத்துவமனையும் உள்ளே இயங்கியது. முதல்மாடியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரெதிராய் பிரம்மாண்ட அறைகள் இருந்தன. பங்களா முழுக்க விலையுயர்ந்த மரங்களால் பிரம்மாண்டமாக அழகுபடுத்தப்பட்டது.

p36d.jpg

ஜெயலலிதா சொன்னபடியே 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்னர் கொடநாடு எஸ்டேட் பங்களா, முதல்வர் முகாம் அலுவலகமாக மாறியது. இனி கொடநாடு பங்களாவுக்கு வரும் கடிதங்கள், தமிழக முதல்வர் முகாம் அலுவலகம் என பெயரிட்டே அனுப்ப வாய்மொழி உத்தரவு கூட பிறப்பிக்கப்பட்டது. அதற்கேற்ப அடிக்கடி கொடநாடு வருவதை வழக்கப்படுத்திகொண்டார் ஜெயலலிதா.

கொடநாடு எஸ்டேட்டுக்கு மொத்தம் 13 வாயில்கள். இதில் எந்த வாயிலிலும் அனுமதி இல்லாமல் ஒருவரும் நுழைய முடியாது. 9,10 வது கேட்கள் தான் பங்களாவுக்கு செல்லும் கேட். இதில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அனுமதி இருந்தால் மட்டுமே இந்த கேட்டை கடக்க முடியும்.

கொடநாடு எஸ்டேட் பகுதியில் ஒருவர் நுழைந்து விட்டால் அவரை கண்காணிக்கும் வகையில் முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். எஸ்டேட்டில் செல்போனில் ஒரு போட்டோவை கூட யாரும் தெரியாமல் எடுக்க முடியாது. அந்தளவு பாதுகாப்பு நிறைந்தது கொடநாடு எஸ்டேட்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாட்டிலும் பாதுகாப்புகள் தளர்த்தப் பட்டன. செக்போஸ்ட் அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எஸ்டேட் முழுக்க இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் உயரிய பொறுப்புகளில் இருந்த தலைமை செயலாளரும், தமிழக காவல்துறை தலைவருக்கும் உள்ளே செல்ல அனுமதி தேவைப்பட்ட இந்த கொடநாடு மாளிகையில் தான் இப்போது கொலையும், கொள்ளையும் நடந்துள்ளன.

சிறுதாவூர் பங்களா

ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த இடங்களில் சிறுதாவூர் பங்களாவுக்கும் முக்கியமான இடம் உண்டு. சித்ரா என்பவரின் பெயரில் சிறுதாவூர் பங்களா உள்ளது. பங்களாவை சுற்றியுள்ள இடத்தில் சசிகலா, இளவரசி பெயரிலும் நிலங்கள் இருக்கின்றன. பங்களாவை சுற்றி 116 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில் 36 ஏக்கரில்  அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு நிலுவையில் உள்ளது.
சிறுதாவூர் பங்களாவின் வாயிற் பகுதி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது. 17,500 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அடுக்கு பங்களா கட்டப்பட்டுள்ளது. ஓய்வு நேரங்களில் ஜெயலலிதா வாக்கிங் செல்வதற்காக வாக்கிங் ட்ராக் ஒன்றும் இருக்கிறது. ஓய்வு நேரத்தில் பேட்டரி காரில் அங்குள்ள தோட்டங்களை ஜெயலலிதா சுற்றிப்பார்ப்பார். பங்களாவை சுற்றியுள்ள நிலங்களில் தர்பூசணி, வேர்கடலை, காய்கறி தோட்டம், மாந்தோப்பு போன்றவை உள்ளன. இவற்றை அப்பகுதியை சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார்.

p36c.jpg

2014 தீபாவளியின் போது ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் கடைசியாகத் தங்கினார். சிறுதாவூர் பங்களாவில் வேலை செய்பவர்களோடு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.  அதன் பிறகு அவர், சிறுதாவூருக்கு வரவில்லை.

p36e.jpg

சிறுதாவூர் பங்களாவின் மூன்று வாயில்களிலும் எப்போதும் இருந்த போலீஸ் பாதுகாப்பு இப்போது இல்லை. ஆனால் வழக்கம் போலவே விவசாயம் நடைபெறுகிறது. இந்த வருடமும் காய்கறி, தற்பூசணி, வேர்கடலை என பயிரிடப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர்கள் இப்போது அடிக்கடி வந்து செல்லும் ஒரே இடம் சிறுதாவூர் பங்களா மட்டுமே!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் அந்தக் காலத்திலேயே சொன்னாங்க.. போக முன் புண்ணியத்தை தேடி வை.. மாளிகைகளை இல்லைன்னு. சிலருக்கு தாங்கள் ஏதோ சிரஞ்சீவிகள் என்ற நினைப்பு. இப்ப மாளிகைகள் எல்லாம் பேய் வீடுகளாகி... சொந்தங்களை நிம்மதியாக தூங்க முடியாத சுடுகாடுகளாகி விட்டன. இதிலும்.. எத்தனையோ.. ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிச்சதுக்கு கொட்டி வழங்கி இருக்கலாம்.. அதுகளின் வருமானத்தை நிரந்தரமாக்கி இருக்கலாம்... உந்தக் காசுகளை வைச்சு. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.