Jump to content

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை


Recommended Posts

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை

சிறுகதை: சுகா, ஓவியங்கள்: செந்தில்

 

ரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள்.  அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில்  உள்ள  மெடிக்கல்  ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க  முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ‘`இந்த பில்டிங்தான்'’ என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது.

`‘யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?'’

p68a.jpg

`‘C3. வசந்தா பாலசுப்பிரமணியம் வீடு'' என்று பதிலுரைத்தபடி பதிவேட்டில் `உறவினர்' என எழுதிக் கையெழுத்திட்டான்.

அப்போது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது. திருநெல்வேலியில் இருக்கும்போது நேதாஜி போஸ் மார்க்கெட்டில் உள்ள நூலகத்துக்குச் சென்று அவனும் வசந்தாவும் பதிவேட்டில் கையெழுத்திடுவதை நினைத்துப் பார்த்தான். கையெழுத்து போடுவதற்காகவே அவனும் வசந்தாவும் நூலகத்துக்குச் செல்வார்கள். ‘லைப்ரரிக்குப் போறோம்’ என்றால், இருவர் வீட்டிலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

லட்சுமணனைவிட வசந்தா ஆறு வயது பெரியவள். கனகராய முடுக்கு தெருவில் உள்ள ‘எட்டுக்குடி’ வளைவில் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். ``லட்சுமணன் கைப்பிள்ளையாக இருக்கும்போது அவனை ஒக்கலிலிருந்து இறக்காமல், பாவாடை சட்டை போட்டிருந்த வசந்தாதான் தூக்கிச் சுமந்தாள்'' என்பார்கள். ‘`கைப்பிள்ளன்னாலும் நல்லா தண்டியா இருப்பான். இவளுக்கும் ஏளெட்டு வயசுதாம்ளா இருக்கும். தூக்க முடியாம தூக்கிக்கிட்டுத்தான் ரேஷன் கடைக்கு, கோயிலுக்கு, ஆஸ்பத்திரிக்குன்னு அலைவா பாத்துக்கோ’' என்றும் சொல்வார்கள். லட்சுமணனை அவன் அம்மா குளிப்பாட்டித் துடைத்து முடித்ததும், பவுடர் போட்டுவிடுவது, கண் மை இடுவது, சட்டை போடுவது எல்லாமே வசந்தாதான். லட்சுமணனின் தாய் அருகில் நின்று பார்ப்பதோடு சரி.

அருணகிரியில் சினிமா பார்க்கப் போகும் போது லட்சுமணனின் அம்மா கேட்பாள், `‘நான் வேணா வெச்சுக்கிடுதேன்டி. வீட்லேருந்து நீதானே தூக்கிட்டு வாரே... கை வலிக்கும்லா!'’ என்றால், மூச்சு வாங்கியபடி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வரும் வசந்தா, சம்மதிக்க மாட்டாள். ‘`அதெல்லாம் எனக்கொண்ணும் வலிக்கல. நீ முன்னால போ அத்த'’ என்பாள். லட்சுமணனும் வசந்தாவின் இடுப்பிலிருந்து இறங்குவேனா என்பான்.

பேச்சு வந்ததும், லட்சுமணன் சொன்ன முதல் மழலை வார்த்தை ‘க்க்கா’. பிறகு `சந்தக்கா'.

அதன் பிறகுதான் அம்மா, அப்பா, தாத்தா, ஆச்சி எல்லாம். வசந்தாக்காதான் அவன் வாயில் `சந்தக்கா' என வந்தது. அன்றிலிருந்து வசந்தாவை எட்டுக்குடி வளவு `சந்தக்கா' என்றே கேலியாக அழைத்தது.

லட்சுமணனை ‘லெச்சா’ என்று வசந்தாதான் முதலில் அழைத்தவள். அந்தப் பெயர் இன்று வரை நிலைத்துவிட்டது.

இப்போது, அவளது அப்பார்ட்மென்ட் வருகைப் பதிவேட்டில்கூட பெயர், முகவரி, வந்த நோக்கம், கைபேசி எண் எல்லாம் எழுதிக் கையெழுத்திடும்போது ‘லெச்சா’ என்றே கையெழுத்திட்டான் லட்சுமணன்.

முதுகுப்பை ஒன்றும், கைப்பை ஒன்றுமாக லிஃப்ட்டுக்குள் நுழையும்போது வசந்தா தன்னை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்பதை நினைக்கும்போதே லட்சுமணனுக்குச் சிரிப்பு வந்தது.

பரமேஸ்வரி அத்தையிடம் முன்தினம் போனில் பேசும்போது, தான் வசந்தாவின் வீட்டுக்குச் செல்லவிருப்பதைச் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தான். இப்போது செக்யூரிட்டியிடமும், `‘ஐயா... போன் பண்ணி, இன்னார் வர்றாங்கன்னு சொல்லிராதீங்க. பன்னண்டு வருஷம் கழிச்சுப் பார்க்கப்போறேன்'' என்று வேண்டுகோளாகக் கேட்டுக்கொண்டான்.

‘`நியாயமா, யார் வர்றாங்கன்னு நாங்க இன்ஃபார்ம் பண்ணணும். நீங்க போங்க தம்பி. உங்களைப் பார்க்கும்போதே நீங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரியுது'’ என்றார் செக்யூரிட்டி. அவரை ‘ஐயா’ என லட்சுமணன் அழைத்ததில் அவர் மகிழ்ந்திருந்தார்.

C3 வாசல் மரக்கதவில், சிறிய பிள்ளையாரைச் செதுக்கி சந்தனமும் குங்குமமும் வைக்கப் பட்டிருந்தன. மரக்கதவுக்கு முன், இரும்பு கிரில் கம்பிக் கதவும் இருந்தது. `இத்தனை பாதுகாப்பு தேவைப்படுகிறதுபோல' என நினைத்துக் கொண்டான் லட்சுமணன். கைப்பையைக் கீழே வைத்துவிட்டு, தேய்ந்துபோயிருந்த அழைப்புமணியை அழுத்திவிட்டுத் தயாராக நின்றான். கதவு திறக்க, சற்றுத் தாமதமானது. லென்ஸ் வழியாக வசந்தா பார்க்கிறாள் என்பதை யூகித்தான் லட்சுமணன். கதவைத் திறந்த வசந்தாவின் முகத்தில் நம்ப முடியாத சிரிப்பும் கோபமும் தெரிந்தன. தலையில் கொஞ்சம் நரையும், உடலில் நிறைய சதையுமாக வேறொரு வசந்தாவாக இருந்தாள். துளிர்த்த கண்ணீருடன் `‘லெச்சா'’ என்று கத்தினாள். ஆனால், குரல் எழவில்லை. அருகில் வந்து அவன் கையைப் பிடித்துக் கிள்ளினாள். கீழே இருந்த கைப்பையை தானே எடுத்தாள். உடைந்த குரலில், `‘உள்ளே வா மூதி'’ என்றபடி கைப்பையுடன் உள்ளே போனாள். பையை வைத்துவிட்டு கதவைச் சாத்திக்கொண்டே லட்சுமணனைத் திரும்பிப் பார்த்து, `‘உக்காரு'’ என்றவள், ஃபேன் ஸ்விட்சைப் போட்டுவிட்டு லட்சுமணனின் அருகில் சோபாவில் உட்கார்ந்தாள். `‘அப்பம்... எங்களையெல்லாம் ஒனக்கு ஞாபகம் இருக்கு... அப்படித்தானல?'’ என்றாள்.

சிரித்தபடியே அவளைப் பார்த்த லட்சுமணன், `‘ஞாபகம் இருக்கப் போய்த்தானே தேடி வந்திருக்கோம்!’' என்றான்.

இப்போது எழுந்து அவன் அருகில் வந்தவள், இன்னொரு முறை அவன் தோளில் கிள்ளினாள். `‘யக்கா... யக்கா... வலிக்கி!'’ என்றான் லட்சுமணன்.

p68b.jpg

``நல்லா வலிக்கட்டும். எங்களுக்குல்லாம் எப்படி வலிச்சிருக்கும்? நீ காதலி, கல்யாணம் பண்ணு, கட்டமண்ணாப் போ. யாரு உன் கையப் புடிச்சு இளுத்தா? அதுக்காக ஒண்ணா மண்ணா வளந்த மனுஷாள் எல்லாரையும்லாலே விட்டுட்டு ஒரேயடியா வடக்கே ஓடிட்டே! ஒன்னல்லாம் வாரியலக் கொண்டு அடிக்காண்டாம்?'’ எனப் பேசிக் கொண்டே போனாள் வசந்தா. லட்சுமணனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது.

`‘இப்பம் என்னத்துக்குல சிரிக்கே?'’ வசந்தாவுக்குக் கோபம் அதிகரித்தது.

`‘இல்லக்கா. நீ இன்னும் நம்மூரு பாஷய மறக்கலியே. அதான் சிரிப்பு வந்தது'’ என்றான் லட்சுமணன்.

`‘பேச்ச மாத்தாதல படுக்காளி பயலே! ஒரு லெட்டர், ஒரு போன் பண்ணுனியால நீ?’'

‘`அதான் நேர்லயே வந்துட்டெம்லா?’'

`‘ஆ. . .மா! நேர்ல வந்து கிளிச்சான்.''

ஒரு லெட்டரோ போனோ பண்ணியிருக்கலாம் தான். லட்சுமணனுக்கு அதற்கெல்லாம் நேரமு மில்லை; சூழலும் சரியில்லை. பயத்தினால்தான் எவருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. பெரிய தெருவில் ஞானதுரை சார்வாளிடம் கெமிஸ்ட்ரி டியூஷன் படிக்கப்போன இடத்தில்தான் ஜெயராணி பழக்கமானாள். வசந்தாவுக்குக் கல்யாணம் ஆகி, சென்னைக்குக் கிளம்பிச் சென்ற சில மாதங்களிலேயே லட்சுமணனும் ஜெயராணியும் ஊரைவிட்டு ஓடுவது என்ற முடிவை எடுத்துவிட்டார்கள். படிப்பைக்கூட முடிக்கவில்லை.

கையில் இருந்த பணமும், ஜெயராணியிடம் கொஞ்சம் நகைகளும் இருக்கும் வரையில் சமாளிக்க முடிந்தது. பிறகு, பாஷை தெரியாத வடநாட்டில் நாய்ப்பாடு, பேய்ப்பாடு. இப்போதுதான் கொஞ்சம் நிமிர்ந்திருக் கிறார்கள். இப்போது ஊருக்குப் போனாலும் லட்சுமணனை வெட்ட இருவீட்டாரும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

சென்னைக்கு வேலை நிமித்தமாகக் கிளம்பும்போது ஜெயராணிதான் சொன்னாள், ‘`உங்க வசந்தாக்கா மெட்ராஸ்லதானே இருக்காங்க? உங்க அம்மையையோ, எங்க அம்மையை யோதான் பார்க்க முடியாம ஆயிட்டு. அவங்களை யாவது பார்த்துட்டு வாங்க.'’
 
பரமேஸ்வரி அத்தையின் போன் நம்பரை, சென்ற மாதம்தான் வாரணாசியில் தற்செயலாகப் பார்த்த குற்றால அண்ணனிடம் வாங்கியிருந்தான். அப்போதுகூட குற்றால அண்ணன் எவ்வளவோ கேட்டும் தன்னுடைய கைபேசி எண்ணை லட்சுமணன் கொடுக்கவில்லை. ‘`உன் நம்பரைக் குடுண்ணே. நான் பேசுதேன்.'’

`‘உன் சாமர்த்தியம் எனக்கு வர மாட்டங்கேடே! சரி சரி. நல்லா இருக்கேல்லா? அது போதும்'’ என்றார், தூத்துக்குடிக்காரர்களை பக்திச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருந்த குற்றாலம் அண்ணன்.

அதென்னவோ பரமேஸ்வரி அத்தையின் போன் நம்பரை மட்டும்தான் வாங்கத் தோன்றியது. தன் பெற்றோர் குறித்த தகவல்களை அவ்வப்போது நதானியேலுக்குப் போன் பண்ணிக் கேட்டுக்கொள்வான்.

நதானியேலை நம்பலாம். அவன் ஜெயராணிக்கு உறவுக்காரன். அவன் இடத்தில் வேறு யார் இருந்தாலும் லட்சுமணனுக்கு உதவ மாட்டார்கள். ஏனென்றால், லட்சுமணன் ஜெயராணியுடன் இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிய பிறகு, இரண்டு வீட்டார்களும் நதானியேலைத்தான் துவைத்தெடுத்தார்கள். அத்தனை அவமானத் துக்குப் பிறகும், நதானியேல் வாயைத் திறக்கவில்லை. அந்தச் சமயம் உள்ளபடியே அவனுக்கு லட்சுமணன் எங்கு போயிருக்கிறான் எனத் தெரியாது. நாள் சென்ற பிறகு, ஏதோ ஒரு தொலைதூர எண்ணிலிருந்து லட்சுமணன் அழைத்தபோதுகூட நதானியேல் நிதானமாகவே பேசினான்.

லட்சுமணனுக்குத் தான் கூச்சமாகவும் குற்ற உணர்வாகவும் இருந்தது. இப்போது வசந்தா திட்டித் தீர்க்கும்போதும் அதே குற்ற உணர்வுதான். `எத்தனை ப்ரியம் வைத்திருக்கிற உறவுகளை எல்லாம் உதறிவிட்டு, இவ்வளவு காலம் தனித்திருந்துவிட்டோம்' எனத் தோன்றியது.

`‘சரி, அண்ணன் எங்கே?’' என்றான் லட்சுமணன்.

``இன்னிக்கு சீக்கிரமே ஆபீஸ் போயாச்சு.'’

‘`சாப்பிட வருவாங்கள்லா?'’

`‘இல்ல. மதியச்சாப்பாடெல்லாம் கட்டிக் குடுத்துட்டேன். இரி, அவாளுக்கு போன் பண்ணி நீ வந்திருக்கேன்னு சொல்லிருதேன். அப்புறம் ஏன் சொல்லலன்னு சத்தம்போடுவா.'’

எழுந்து அங்கும் இங்குமாக போனைத் தேடினாள் வசந்தா. `‘எளவு போன எங்கெயோ வெச்சுட்டேன்போலுக்கே! எல லெச்சா... கொஞ்சம் என் நம்பருக்கு அடி'’ என்றாள்.

`‘உன் நம்பர் எனக்கெப்படித் தெரியும்?’'

`‘அட்ரஸ் கண்டுப்புடிச்சு வந்தவன், போன் நம்பர் வாங்காமலயா இருந்திருப்ப? அடில..!'’ என்கவும், சிரித்தபடி பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து வசந்தாவின் எண்ணுக்கு டயல் செய்தான் லட்சுமணன்.

‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...’ பாடலின் தொடக்கக் குரல்கள் இசையுடன் இணைந்து எங்கோ ஒலித்தன. கடைசியில் லட்சுமணனுக்குப் பக்கத்தில்தான் அந்த இசை ஒலித்ததை அறிந்த வசந்தா, அவனைத் தொட்டு எழுப்பி, `‘எந்தி, போன் மேலதான் நீ உக்காந்திருக்கே'’ என்றாள்.

மறுமுனையில் பாலசுப்பிரமணியம் உற்சாகமாகப் பேசியிருக்க வேண்டும். `‘இந்தா, அண்ணன் உன்கிட்ட பேசணுங்காங்க'’ என, போனை லட்சுமணனிடம் கொடுத்தாள், வசந்தா.

`‘வணக்கம்ணே, சும்மா இருக்கீங்களா?'' என்றான் லட்சுமணன்.

`‘சும்மா இருக்கோமோ, சுமந்துக்கிட்டு இருக்கோமோ... நீரு எங்களையெல்லாம் மறந்துட்டேருல்லாவே! உங்க அக்கா கல்யாணம் ஆன நாள்லேருந்து `எங்க லெச்சா... எங்க லெச்சா'ன்னு ஒரு நாளைக்கு முந்நூறு மட்டம் சொல்லுவா தெரியும்லா! என்னைய விடு, நான் அசல். கூடவே கிடந்த அக்காவை எப்படி மறந்தே?'’ என, லட்சுமணனைப் பேசவே விடவில்லை பாலசுப்பிரமணியம்.

போனை வாங்கிய வசந்தா, `‘சரிதான். அப்பம் வாங்க'’ என்றவள் போனை வைத்துவிட்டு, `‘உங்க அண்ணன் சாப்பிட வீட்டுக்கு வந்திருதேன் னாங்க'’ என்றாள்.

`நானும் போகாத கோயில் இல்ல பாத்துக்கோ. அவளும்தான் எத்தனையோ டாக்டர்கிட்ட போயிட்டு வந்துட்டா. உங்க மாமா பேரன் பேத்தியப் பார்க்காமலேயே கருப்பந்துறைக்குக் கிளம்பிட்டாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு.

எங்க அம்மைக்கு நாப்பது நெருங்கும்போதுதான் நான் பொறந்தேன். அதே மாதிரிதான் இவளுக்கும் பேறுகாலம் ஆகும்னு ஏற்கெனவே வன்னிக் கோனேந்தல் ஜோசியர் சொன்னாரு' என, பரமேஸ்வரி அத்தை, வசந்தாவுக்கு இன்னும் குழந்தை இல்லாததை இப்படி போனில் சொல்லியிருந்தாள். தனக்கு ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதைச் சொல்லலாமா, வேண்டாமா என மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான் லட்சுமணன்.

ஒன்றாக அமர்ந்து மதியச் சாப்பாடு சாப்பிடும்போது பாலசுப்பிரமணியம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘`எங்களுக்குக் கல்யாணம் ஆகிக் கிளம்பும்போது நீ ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு அழுத அழுகை, இன்னும் என்னால மறக்க முடியலப்பா'’ பாலசுப்பிரமணியம் இப்படிச் சொல்லும்போது லட்சுமணனுக்கு வெட்கமாக இருந்தது. அகமதாபாத்தில் இருக்கும்போது எத்தனையோ முறை அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்திருக்கிறான்; தன் மனைவியிடம் சொல்லிச் சிரித்திருக்கிறான்.

சொல்லப்போனால், வசந்தாவுக்குத் திருமணம் ஆனபோது, அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். வசந்தாவின் கல்யாண வேலைகளில் சந்தோஷமாகச் சிரிப்பும் கேலியுமாகச் சுற்றிக்கொண்டுதான் இருந்தான். ஆனால், நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் அவள் கணவனுடன் சென்னைக்குக் கிளம்பும்போது அவனிடமிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்துவிட்டன. ரயில் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க அடிவயிற்றைப் பிசைந்துகொண்டுவந்தது. சீட் பார்த்து உட்கார வைத்துவிட்டு இறங்கி, ஜன்னலோரம் நிற்கும்போது கலங்க ஆரம்பித்தவன், ரயில் நகரும்போது வாய்விட்டு ‘சந்தக்கா...’ என அழுதான். ரயிலுக்குள் இருந்து வசந்தாவும் வாயைப் பொத்திக்கொண்டு கதறினாள். அதைத்தான் பாலசுப்பிரமணியம் இப்போது சொல்லிக்காட்டுகிறார்.

கேட்டுவிடக் கூடாதே என லட்சுமணன் அஞ்சிக்கொண்டிருந்த கேள்வியை, அடுத்துக் கேட்டார் பாலசுப்பிரமணியம். `‘உனக்கும் உன் காதல் மனைவிக்கும் எத்தனை பிள்ளைங்க? அதைச் சொல்லுப்பா'’ என்றார்.

சோற்றை முழுங்கியபடி, பரிமாறிக் கொண்டிருந்த வசந்தாவைப் பார்த்தான் லட்சுமணன். அவள் தன் கணவன் கேட்ட கேள்வியைக் கவனித்த மாதிரியும் தெரியவில்லை; லட்சுமணனின் முகத்தைப் பார்க்கவுமில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுகளில் காலியான பதார்த்தங்களை வைப்பதிலேயே மும்முரமாக இருந்தாள்.

`‘ரெண்டு பிள்ளேண்ணே. மூத்தது பொண்ணு. ரெண்டரை வயசாச்சு. பயலுக்கு இப்பதான் மூணு மாசம் ஆகுது'’ என்றான் லட்சுமணன்.
 
`‘சந்தோஷம்பா’' என்று பாலசுப்பிரமணியம் சொன்னபோதும் வசந்தாவிடம் எந்த உணர்வும் இல்லை. `‘பாத்தியா... மோரை வெளியே எடுக்க மறந்துட்டேன்'’ என, எழுந்து ஃபிரிட்ஜை நோக்கி ஓடினாள்.
பாலசுப்பிரமணியம் அன்று மதியத்துக்குமேல் விடுப்பு எடுத்துக்கொண்டது வசந்தாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மண்டையிடிக் காய்ச்சல் என்றால்கூட மாத்திரையைப் போட்டுக்கொண்டு வேலைக்குப் போகிற ஆள், கொண்டுபோன சாப்பாட்டையும் எடுத்தபடி வீட்டுக்கு வந்து இப்போது லீவும் போட்டதை அவளால் நம்பவே முடியவில்லை.

``வாராதவன் வந்திருக்கான். அதான் லீவு போட்டேன்'’ என்று அதற்கான காரணம் சொன்னது அவளுக்கு நிறைவாக இருந்தது. ``சாயங்காலம் சினிமாவுக்குப் போயிட்டு, அப்படியே வெளியே சாப்பிடலாம்'’ என்றார் பாலசுப்பிரமணியம்.

`‘எதுக்கு வெட்டிச் செலவு? வீட்ல என்னமாது பண்ணுதேன்'’ என்று வசந்தா சொன்னதை, அவர் ஏற்கவில்லை.

`‘சும்மா கெட. லெச்சாகூட ஜாலியா பேசிக்கிட்டு, அப்படியே போயிட்டு வருவோம்’' என்றார்.

லட்சுமணனை தன் கணவனும் `லெச்சா' எனச் சொன்னதில், வசந்தாவுக்கு அத்தனை சந்தோஷம். `‘அண்ணே... வீட்ல இருந்து பேசிக்கிட்டிருப்போமே’' என்று லட்சுமணன் சொன்னதையும் அவர் ஏற்கவில்லை.

`‘நீயும் அவகூட சேந்துக்கிட்டு சொல்லாதப்பா. அதான் மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ல இருந்தாச்சுல்லா... அப்புறமென்ன?'’ என்றார். இரண்டு நாள் அலுவலகப் பயிற்சி நடக்கவிருக்கும் கிண்டிப் பகுதியில் தனக்கு அறை ஒதுக்கப் பட்டிருப்பதை லட்சுமணன் சொன்னபோது, `‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இங்கேயே தங்கு. நாங்க பொறகு எதுக்கு இருக்கோம்?’' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

‘`ஆ . . .மா! இத்தன வருஷத்துல துரைக்கு ஒரு போன் பண்ணத்தோணல. பாசமில்லாத பய எங்கயும் இருந்துட்டுப்போறான். விடுங்க!’' என்று வேடிக்கையாக வசந்தா சொன்னதற்கு லட்சுமணனிடம் சிரிப்புதான் பதிலாக வந்தது.

நெரிசல் நிறைந்த மாலில் உள்ள தியேட்டரில் படம் பார்க்கும்போது பாப்கார்னைக் கொறித்தபடி வசந்தா கேட்டாள்... `‘லெச்சா, நாம கடைசியா என்ன படம் பார்த்தோம்... சொல்லு பாப்போம்!'’ கொஞ்சம்கூட யோசிக்காமல் `` ‘தவமாய் தவமிருந்து’ '' என்றான் லட்சுமணன்.

``கல்யாணம் நிச்சயம் ஆயிட்டு, `சினிமாவுக் கெல்லாம் போகக் கூடாது'ன்னு மாமா சத்தம் போட்டா. அத்தைதானே சமாதானம் பண்ணி நம்ம ரெண்டு பேரையும் கூட்டிட்டுப்போனா!''

‘`படம் பார்த்துட்டு வரும்போது உங்க அத்தையும் நீயும் மூக்கைச் சிந்திக்கிட்டே வந்தேளே... ஞாபகம் இருக்கா?'’ சிரித்தபடி கேட்டாள் வசந்தா.

அவள் சினிமா பார்க்கும்போது அழ மாட்டாள். ஆனால், பரமேஸ்வரி அத்தையும் லட்சுமணனும் எல்லா படங்களுக்கும் அழுவார்கள். அதுவும் `தவமாய் தவமிருந்து’ பார்த்து அழுததில் லட்சுமணனுக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் வசந்தாதான் கூட்டிக்கொண்டு போனாள்.

``ஏட்டி, கல்யாணம் நிச்சயமான பிள்ளை. உன்னை எப்படி வெளியே விட்டாங்க?’' என்று கேட்டபடியே, லட்சுமணனைப் பார்த்து `‘வேட்டிய எறக்குல. பெரிய வஸ்தாது மாதிரி கையல்லா மடக்குதான்’' என்று சொல்லி, ஊசி போட்டார் ராதாகிருஷ்ணன். லட்சுமணன் ஊசி வலியையும் பொறுக்க முடியாமல் கண்ணீர்விட்டான்.

p68c.jpg

அதை நினைத்து இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இதற்குள் இன்னொரு பாப்கார்னும் குளிர்பானங்களும் வாங்கி வந்த பாலசுப்பிரமணியம், ‘`எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டுச் சிரிச்சீங்கன்னா, நானும் சேர்ந்து சிரிப்பேன்லா’' என்றபடி அருகில் வந்து அமர்ந்தார்.

லட்சுமணனுக்குப் படத்தில் ஒன்ற முடியவில்லை. `எல்லாம் இருக்கின்றன. சந்தோஷ மாகத்தான் இருக்கிறார்கள். வசந்தாக்காவை நன்றாக வைத்திருக்கிறார். இருந்தாலும்...அவர்கள் பார்க்கும் மருத்துவம் குறித்து ஏதேனும் பேசிப்பார்க்கலாமா? அப்படியே பேசுவதாக இருந்தாலும் யாரிடம் பேசுவது? வசந்தா அக்காவிடமா, அண்ணனிடமா?’ இந்தச் சமயத்தில் சைக்கிள் கடை நம்பி மாமா கேலி பண்ணுனுது நினைவுக்கு வந்தது.

‘ஏ... லெச்சுமணா! அம்மைக்காரியை அத்தைங்கே! அவ மகள அக்காங்கெ! அதெப்படிடே? நாளைக்கு அவளுக்கு கல்யாணம் ஆனா, அவ மாப்பிள்ளைய அத்தான்பியோ?'

அதென்னவோ பரமேஸ்வரி அத்தையின் மகள் வசந்தாவை `அக்கா' என்று அழைத்தது மாதிரி, அவளது கணவனை பெண் பார்க்க வரும்போதே லட்சுமணன் ‘அண்ணன்’ என்றுதான் அழைத்தான். அவன் மனதில் அதுதான் பதிந்திருக்கிறது.

மறுநாள், அதிகாலையிலேயே லட்சுமணன் கிளம்பவேண்டியிருந்தது. முதல் நாள் இரவே சொல்லிவிட்டான், ‘`நீங்க சாவகாசமா தூங்கி எந்திரிங்க. நான் காலையில கிளம்பிப் போயிருவேன். மீட்டிங்லாம் முடிஞ்சு வர ராத்திரி லேட் ஆயிரும்.'’

ஹாலில் உள்ள சோபாவிலேயே லட்சுமணன் படுத்துத் தூங்கியிருந்தான். கைபேசியில் உள்ள அலாரம் அடிக்கும்போது வசந்தாவோ பாலசுப்பிரமணியமோ எழுந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்தில், தூக்கக் கலக்கத்துடன் வேக வேகமாக கைபேசியை அணைத்தான். சத்தமில்லாமல் எழுந்து, குளியலறைக்குச் சென்று, பல் தேய்த்து, குளித்து, உடை மாற்றி வெளியே வரும்போது வசந்தா எழுந்திருந்தாள். டைனிங் டேபிளில் ஒரு பெரிய டம்ளரில் காபி இருந்தது. ‘`அதுக்குள்ள எந்திரிச்சுட்டியா? நான்தான் ராத்திரியே சொன்னெம்லா... காபி போற வழியில குடிச்சுக்கிட மாட்டேனா?’' என்றபடி காபி டம்ளரை எடுத்தான். ‘`யப்பா! என்னா கொதிகொதிக்கி!'’ டேபிளில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். வட்டகையைக் கொண்டுவந்து, டம்ளரில் உள்ள காபியை ஆற்றி, லட்சுமணனின் கையில் கொடுத்தாள் வசந்தா. ஊதிக் குடித்தபடி, ‘`ராத்திரி நான் சாப்பிட்டு வந்திருவேன்க்கா.

நீ எதுவும் செய்யாதே’' என்றான். ‘`போகும்போது உன் பையையெல்லாம் எடுத்துக்கிட்டுப் போயிரு. உனக்கு அங்கே ரூம் போட்டிருக்காங்கன்னு சொன்னெல்லா'’ என்றாள் வசந்தா.

காபியை முழுங்கியபடி, ‘`ஓகோ! நீங்க சொன்னா அந்தாக்ல நாங்க பொட்டியத் தூக்கிட்டுப் போயிருவோமாக்கும். எங்க அண்ணன் வீடு இது, தெரிஞ்சுக்கோ!'’ என்று லட்சுமணன் சொல்லவும், ‘`உன்னைக் கிளம்பச் சொன்னதே உங்க அண்ணன்தாம்ல, கோட்டிக்காரப்பயலே. அந்த பேதீல போவான் எந்திரிக்கிறதுக்குள்ள கிளம்பு, நல்லாயிருப்ப`’ என, சாத்தியிருந்த தன் கணவனின் படுக்கையறையின் கதவைப் பார்த்தபடி, குரல் தாழ்த்திக் கண் கலங்கியவாறே லட்சுமணனைப் பார்த்து கைகூப்பிச் சொன்னாள் வசந்தா.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகம் ஒரு பெரும் வியாதி....அது சாம்பல் பூத்த நெருப்பாய் இருக்கும் சமயத்தில வெளியே வந்து பல்லைக் காட்டும்.....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.