Jump to content

வான்கலந்த மாணிக்கவாசகம்


Recommended Posts

வான்கலந்த மாணிக்கவாசகம் 26: நெஞ்சம் அன்பானால் நொடிப்பொழுதில் சிவனருள்!

 

 
sivan

உயிர் அழிவற்றது; தொடக்கமும் முடிவும் இல்லாதது என்னும் பொருளில் ‘ஆதம் இலி’ என்றார் மணிவாசகர். (ஆதம்=ஆதி+அந்தம்; ஆதி-தொடக்கம்; அந்தம்-முடிவு; இலி-இல்லாதது.) எனவே உயிர்களுக்குள் மூத்தது, இளையது என்று இல்லை. ‘காலம்’ என்னும் பரிமாணத்துக்கு உட்பட்ட உலகில், உயிர்கள் வாழும் உடல்பிறவியில்தான், தாய், தந்தை, அண்ணன்(மூத்தவன்), தம்பி(இளையவன்) போன்ற உறவுகளும், வயது வழக்குகளும் வருகின்றன. இதை விலங்குகள் அறிவதில்லை; இதை அறியாத மனிதர்கள் விலங்குகளுக்குச் சமம்; அத்தகையவர்களின் நிலையைத் தம் குற்றமாகப் பாவித்து ‘நாயேன்’ என்றார் மணிவாசகர்.

சாதி, குலம், பிறப்பு என்னும் சுழிப்பட்டு. . .

சாதி என்பது நால்வகை வருணம் மூலம் மனிதர்களுக்குள் தோன்றிய பல பிரிவுகள்; குலம், சாதியின் உட்பிரிவுகள்; பிறப்பு என்பது, தொன்று தொட்டு வரும் குடும்பப் பெருமை. சில சாதியுள் வரும் ‘குடி’ அல்லது 'கோத்திரம்’ என்பதும் இதுவே. இச்சுழலில் அகப்பட்ட உயிர், சாதியைத் தன் அடையாளமாக நினைத்துத் தடுமாறுகின்றது; சாதிச்சுழலில் சிக்கி, வீண்பெருமையில், கிடைத்தற்கு அரிய மனிதப்பிறவியை வீணாக்குகிறது. இதை, ‘சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்' என்றார் பெருமான். விலங்காகப் பிறந்த உயிர்களுக்குச் சாதி-குலம்-பிறப்பு என்ற தடுமாற்றமில்லை.

துன்பம் நீக்கி ஆட்கொண்ட இறைவன்!

உடல் தோன்றிய குடும்பத்தின் அடிப்படையில், உயிருக்குச் சாதி, குலம், பிறப்பு என்னும் அடையாளங்கள் ஏற்றப்படுகின்றன. பிறப்புக்குமுன்னும், பின்னும், உயிர்களுக்கு இவ்வடையாளங்கள் இல்லை; ‘சாதி-குலம்-பிறப்பு’ அடையாளமிட்ட உடல்களைவிட்டு உயிர்கள் நீங்கியதும், எல்லா உடல்களுக்கும் பெயர் ‘பிணம்’தான்; பின் அவை புதைக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ அழிக்கப்படுகின்றன. இதை உணராமல், சாதி-குலம்-பிறப்பு, நான், எனது என்ற சுழியில் அகப்பட்டு மயங்கி நிற்கின்றனர். சாதி மயக்கம் தெளிவித்து, பிறவித்துன்பங்கள் நீக்கி, தம்மை ஆட்கொண்ட திருப்பெருந்துறை இறைவனையே, தில்லையில் கண்டுகொண்டேன் என்கின்றார் மணிவாசகர்.

சாதி! குலம்! பிறப்பு! என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை! அல்லல் அறுத்து ஆட்கொண்டு!

பேதைகுணம்! பிறர்உருவம்! யான்! எனது! என்னும் உரை மாய்த்துக்

கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லை கண்டேனே!

(திருவாசகம்:31.5)

முன்பே செய்த வினைகளின் அடிப்படையில் உடல்பிறவிகள் கிடைக்கின்றன; மனிதப்பிறவியில், ‘நான் யார்? என்னைப் படைத்தவன் யார்?’ என்ற பகுத்தறிவால் இறைவனை உணரும் ஆற்றல் வருகிறது; இறைவனை அடையவிடாமல் சாதி தடுக்கிறது. மனிதன் சாதி-மத மயக்கத்தால் விலங்கினும் கீழ்நிலையடைகிறான்.

அறியாமையால் வரும் பேதைகுணம்!

‘ஆணவம்’ என்னும் ‘அறியாமை’யே உயிர்களின் உண்மையான குறைபாடு; உயிர்கள் தாமே அறிய இயலாதவை; ஆனால், சொல்லிக்கொடுத்தால் அறிந்துகொள்பவை; உயிருக்குச் சொல்லிக்கொடுக்கும் கருவி, இறைவன் தந்த உடல்; மனிதப்பிறவியில்தான், உயிர்கள் தன்னையும், தன் தலைவனையும் அறிந்து முழுமைபெறும். அதற்குத் தடையாக உள்ள பேதைகுணங்கள் ‘சாதி-குலம்-பிறப்பு-மதம்’ என்னும் சுழிகள் என்கிறார் பெருமான்.

குற்றமற்ற இன்பப்பொருள் இறைவன்!

தம் தவறுகளுக்குப் பிறரைக் குற்றம்கூறும் மனப்போக்கைப் 'பிறருருவம்' என்கிறார்; சில நற்செயல்களுக்குத் தாமே காரணமாக நினைக்கும் போக்கை ‘யான்’ என்றார்; அனைவரின் பயன்பாட்டுக்காக இறைவனால் கொடுக்கப்பட்டதை, ‘என்னுடையபொருள்’ என்று பறித்துக்கொள்வதை ‘எனது’ என்றார்; இவை அனைத்தையும் இறைவன் நீக்கியதை ‘யான், எனது என்னும் உரை மாய்த்து’ என்றார். இவ்வறியாமை நீங்கிய அனுபவ நிலையில், குற்றமற்ற இன்பப்பொருளாய் இறைவன் விளங்குதலால், ‘கோது இல் அமுது ஆனானை' என்றார்.

சாதி பேதம் சாடும் கவிஞர் கண்ணதாசன்

மனிதகுலத்தை வேறுபடுத்தும் பொய்நீதி, சாதிபேதங்களை வேதம் விதி என்று மதத்தின் பெயரால் புகுத்தும் போக்கைச் சாடும் கவியரசு கண்ணதாசனின் திரைக்கவிதை இங்கு குறிப்பிடத்தகுந்தது. அன்பும், இன்பமுமே இயற்கையின் நீதி என்கிறார் கவியரசு.

நிலை மாறினால் குணம் மாறுவான்! பொய்

நீதியும் நேர்மையும் பேசுவான்! தினம்

ஜாதியும் பேதமும் கூறுவான்! - அது

வேதம் விதி என்று ஓதுவான்!

மனிதன் மாறிவிட்டான்! மதத்தில் ஏறிவிட்டான்! . . .

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி!

ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி!

(கவியரசு கண்ணதாசன்)

சாதிக்கொள்கை தமிழ்மறைக்கு ஏற்புடையது அன்று. ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அனைத்து உயிர்களின் சமத்துவத்தையும், வாழும் உரிமையையும் முழங்கியது திருக்குறள்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

சாதியைச் சைவ அருளாளர்கள் தொடக்கமுதலே எதிர்த்து வந்துள்ளனர். “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்பது திருமூலர் தந்த வாழ்வியல் கொள்கை. சைவத்திலும், உயர்ந்த சாதி, மிக உயர்ந்த சாதி, மிகமிக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மிகத் தாழ்ந்த சாதி, மிகமிகத் தாழ்ந்த சாதி எனச் சாதிப்புற்றுநோய் பரவியதைக் கண்டு, பொங்கிஎழுந்தார் அமைதியே வடிவான அப்பரடிகள்.

சாதிக்கெதிரான நாவுக்கரசரின் சீற்றம்!

சமய உண்மைகளைப் பேசும் சாத்திரங்களைக் கடைப்பிடிக்கவே ஒழுக்கவிதிகளும், சடங்குகளும் தோன்றின. காலப்போக்கில், போலிச் சாத்திரங்கள் தோன்றி, போலி விதிகளும், போலிச் சடங்குகளும் பெருகி, சாதிகள் உருவாயின. சாதிப்பாகுபாடு பார்க்கும் குற்றத்தால் தாம் இறைநீதி என்னும் சட்டகத்துள் இல்லை; எனவே, இறைவனை அடைய முடியவில்லை என்றார் மணிவாசகர்.

“சட்டம் நேர்பட வந்திலாத சழக்கனேன்! உனைச் சார்ந்திலேன்!

(திருவாசகம்:30:2.2)

மனிதர்களின் குற்றத்துக்காக, தம்மையே ‘சழக்கன்' என்றழைத்து வேதனையுற்றார் மணிவாசகர். அறிவுநூல், சாத்திரங்களைப் பேச்சளவில் பேசிக்கொண்டு, அறிவுக்குப் பொருந்தாத சாத்திரம் பேசி, சாதிப்பாகுபாட்டைத் தூக்கிப்பிடிப்பவரைச் “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்” எனக் கடுமையாகக் கண்டித்தார் அப்பரடிகள்.

சழக்கு என்னும் சொல்லுக்கு அறியாமை, பொய், பயனின்மை, குற்றம், தீமை எனப் பலபொருள் உண்டு. சாதிப்பாகுபாடு என்பது அறியாமையின் விளைவு, உண்மைக்குப் புறம்பானது, பயன் இல்லாதது, குற்றம் மிகுந்தது, தீமை விளைவிப்பது என இத்துணைத் தீமைகளையும் ஒருசேரக் கண்டிக்கும் பொருட்டே `சழக்கர்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்; ‘நாவுக்கு அரசர்’ என்று இறைவனால் அழைக்கப்பட்டவர் அல்லவா அப்பர் பெருமான்.

“சாத்திரம் பேசும் சழக்கர்களே! கோத்திரத்தையும், குலத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று சினம் கொண்டு வினவுகின்றார் நாவுக்கரசர். சமயத்தையும், சமுதாயத்தையும், தம்மையும் கெடுத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர கோத்திரம், குலம் கொண்டு வேறு பயனில்லை.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்!

மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே!

(தேவாரம் 5.60.3)

“அன்பே சிவம்” என்ற திருமூலர் தமிழும், “பாத்திரம் சிவம்” என்ற நாவுக்கரசர் தமிழும் சொல்லும் செய்தி இதுதான்: மனிதகுலம் கொள்ளவேண்டுவது அன்பு; தள்ளவேண்டுவது சாதி என்பதே!

“சாதி உணர்வை விடுத்து, அன்பால் நெஞ்சை நிறைத்துப் பணிவீர்!! நொடிப்பொழுதில் சிவனருள் கிட்டும்” என்கிறார் நாவுக்கரசர். சாதிஉணர்வின் தீமையையும், அன்பின் ஆற்றலையும் உணர்த்தவே “மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே” எனச் சைவநெறி, அன்புநெறி என்று அப்பர் நம்மை நெறிப்படுத்துகின்றார்.

மலை பள்ளத்தாக்கு, அருவி கடல் என இவ்வுலகையே ஏற்றத்தாழ்வுடன் படைத்திருக்கிறான் இறைவன்; எனவே, ஏற்றத்தாழ்வுகளே இறைநீதி என்று ஏன் கொள்ளக்கூடாது என்று வினவும் கேள்விகளுக்கு விடைதந்து உங்கள் சிந்தனையை இனிமையாக்கும் திருவாசகத் தேன் அடுத்தவாரம் துளிர்க்கும்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-26-நெஞ்சம்-அன்பானால்-நொடிப்பொழுதில்-சிவனருள்/article9665518.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே

 

 
sivan

இறைவனின் படைப்பில் மலைகளும், அருவிகளும், பள்ளத்தாக்குகளும், கடல்களுமாய் ஏற்ற-இறக்கங்களான பன்மைத்துவமே உலகின் அழகு! இறைநீதிக்கு எதிராக மனிதர்கள் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் சாதித் துயரம்! இவை விளக்கும் மணிவாசகரின் திருவாசகங்களை இங்கு சிந்திப்போம்!

இறைவன் பேதமிலாப் பெருமையன்!

“பேதங்கள் அனைத்துமாய், பேதம் இலாப் பெருமையனை!” என்றார் இறைவனை! வேறுபாடுகள்(பேதங்கள்) அனைத்தும் தானேஆகி, தான் எந்த வேறுபாடும் அடையாத பெருமையுடையவன் இறைவன்.

இறைவன் கொள்ளும் வேறுபாடுகள் யாவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்து ஆகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களாகி, உலகின் ஏனைய எல்லாப் பொருள்களும் ஆகி, அவைகளில் இரண்டறக் கலந்திருக்கிறான் இறைவன்; இதை, “பூதங்கள் ஐந்து ஆகி! புலன் ஆகி! பொருள் ஆகி, பேதங்கள் அனைத்துமாய்!!” என்றார் மணிவாசகர். அவ்வாறு இரண்டறக் கலந்திருந்தும், இறைவன் அப்பொருட்களின் தன்மைகளால் பற்றப்படாதவன், மாற்றமடையாதவன் என்பதைப் “பேதமிலாப் பெருமையனை!” என்று வியக்கிறார் பெருமான். எம் துன்பங்களைப் போக்கி, ஆண்டுகொண்ட, கிளர்ந்து எழும் ஒளியாக, பச்சை மரகதமணியாக, சிவசக்தி வடிவானவனை தில்லையில் கண்டேன் என்றார் மணிவாசகர்.

பூதங்கள் ஐந்து ஆகி! புலன் ஆகி! பொருள் ஆகி!

பேதங்கள் அனைத்துமாய்! பேதம் இலாப் பெருமையனை!

கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர்ஒளியை!-மரகதத்தை!

வேதங்கள் தொழுது ஏத்தும், விளங்கு தில்லைக் கண்டேனே! (திருவாசகம்:31.10)

மேற்கூறியவைகள் இன்னும் சற்று ஆழமாய் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியவை. கண்ணுக்குப் புலனாகாத சடப்பொருளான மாயையிலிருந்தே, கண்ணுக்குப் புலப்படும் ஐம்பூதங்களால் ஆன உலகங்கள் இறைவனால் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்கள், உயிர்களின் அறியாமையை நீக்க, இறைவனால் படைக்கப்பட்ட கல்விக்கூடங்கள். ஐம்பூதங்களால் ஆன உடல்களிலேயே உயிர்கள் வாழ்ந்து, தங்கள் அறிவுப்பயணத்தைத் தொடர்கின்றன; மனிதப்பிறவியில்தான், தன்னையும், தன் தலைவனாம் இறைவனையும் அறிந்து, முழுமையான அறிவு பெற்று விடுதலையடைந்துப் பேரின்பம் என்னும் இறைமுத்தி அடைகின்றன.

இறைவனே பிறவிச் சங்கிலியை நீக்குவான்!

ஒரு உயிர், பலபிறவிகளில் ஈட்டிய ஒட்டுமொத்த நல்வினை-தீவினைகளில்(பழவினைகள்/சஞ்சிதகர்மம்) சிலவற்றை துய்த்துத் தீர்ப்பதற்கே(ஊழ்வினைகள்/பிராரர்த்தகர்மம்) உடல்பிறவி ஏற்படுகிறது. எடுத்த பிறவியில் செய்யும் நல்வினைகள்-தீவினைகள்(வருவினைகள்/ஆகாமியகர்மம்), அவ்வுயிரின் பழவினைக் கணக்கில் ஏறிக்கொள்ளும். இவ்வாறு, வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று பிறவித்தொடர்-சங்கிலி விடாது துரத்தும். அச்சங்கிலியை அறுக்க வல்லவன் இறைவன் ஒருவனே! அவ்வுயிர் இறைவனிடம் மனமார வேண்டினால் மட்டுமே இறைவன் பிறவித்தொடரை நீக்குவான். உலகியல் பொருட்களை வேண்டியே வழிபாடும், வேண்டுதல்களும் நடக்கும்வரை உடல்பிறவிகளும் தொடரும்.

“எல்லா உயிர்களும் வசதியோடு, செல்வச் செழிப்பாக வாழவே விரும்பும். பிறவிச் சூழ்நிலையை, தாய்-தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உயிர்களிடம் இல்லை! ஏற்றத் தாழ்வுகளோடு பிறவிகளைத் தந்த இறைவனை “வேண்டுதல்-வேண்டாமை இல்லாதவன்” என்று கூறுவது தவறு”, என்று சிந்தனை செல்கிறதல்லவா?

மோசமான பிறப்பு வருவது என்?

உண்மை! மோசமான பிறவிச் சூழ்நிலையை எந்த உயிரும் தேர்வுசெய்வது இல்லைதான். ஆனால், மோசமான பிறவி பெறுதற்குரிய தீவினைகளை மகிழ்வோடு செய்துவிட்டு, நற்கதியை விரும்பினால் எவ்வாறு கிடைக்கும்? எல்லா மாணவர்களும் மாநிலத்தில் முதலாவதாக வரவே விரும்புவார்கள். ஆனால், அதற்கான உழைப்பைச் செய்யாமல், இனிமையாகப் போழுதுபோக்குவதிலேயே காலத்தைப் போக்கினால் விரும்பியது கிடைக்காதல்லவா!

விருப்பத்துக்கும், செயலுக்குமான இடைவெளியே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கிறது! அதை உருவாக்கியது நாமே! இறைவனல்லன்! நம் தீவினைக்கான பலனைச் சந்திக்க நேரிடும்போது, விதி (ஊழ்வினை) அல்லது இறைவன்மேல் பழியைப் போட்டுத் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுகின்றோம்.

விதியை மதியால் வெல்க!

ஒரு உயிர், ஏழ்மைச் சூழலில் அல்லது செல்வச்செழிப்பில் பிறப்பதற்கு மட்டுமே அவ்வுயிரின் ஊழ்வினை காரணமாகிறது. இவ்வூழ்வினை, அவ்வுயிர் செய்த பழவினைகளின் ஒரு பகுதியே! இதையே, “தீதும் நன்றும் பிறர்தர வாரா!” என்றார் கணியன் பூங்குன்றனார். கிடைத்த பிறவியில் நன்கு செயல்பட்டு விதியை வெல்லவோ, அல்லது விதியில் ஒன்றி வீழவோ, அவ்வுயிருக்கு, முழுமையான சுதந்திரம் உண்டு. இங்குதான் உயிர்கள் தங்களுக்குத் தரப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி முத்தி என்னும் விடுதலை அடைவதோ, தீவினைகள் செய்து, மீண்டும் பிறவிகள் பெறுவதோ நிகழ்கின்றன.

விதியை வெல்லும் தொண்டு!

செல்வச் சூழலில் பிறந்த உயிர்கள், அன்பே சிவமாம் கருணையுடன் துன்புறும் பிற மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும், தொண்டு செய்தால், இறைவன் உள்ளம் குளிர்ந்து, முத்தி என்னும் வீடுபேறு நல்குவான். மாறாக, வேதத்தின் பெயராலும், இறைவனின் பெயராலும் சாதி, குலம், பிறப்பு என்று பொய்நீதி நூல்கள் செய்து, பிற மனிதர்களையும், உயிர்களையும் அடிமைப்படுத்தும் தீவினைகள் செய்தால், விலங்கினும் கீழ்நிலையடைந்து, கடும்நரகில் சிக்கி உழல்வர்.

உண்மையுமாய்! இன்மையுமாய்!

வான் முதலிய ஐம்பூதங்களாக மட்டுமல்லன், ஊன்உடலாகவும், உயிரில்-உயிராகவும் உள்ளான் இறைவன்; இறைவன் “மெய்யன்பர்களுக்கு” உண்மை என்னும் உள்பொருளாகவும், “இறைவன் இல்லை” என்போர்க்கு இன்மை என்னும் இல்பொருளாகவும் உள்ளான். (இக்கருத்தையே, திருவம்மானை-13ம் பாடலில் ‘அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’ என்று தெளிவாக விரித்துக் கூறியுள்ளார் மணிவாசகர்.) உலகப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தலைவனாகி, இவைகளின் ஊடே பயணிக்கும் ஒவ்வொரு உயிரையும் ‘யான்’, ‘எனது’ என்று கூத்தாட்டுபவனும் அவனே; இவைமூலம் உயிர்கள் தம்மையும், தம்தலைவனையும் அறியுமாறு செய்து நின்ற இறைவனை என்ன சொல்லி வாழ்த்துவேன் என்று நெகிழ்கின்றார் மணிவாசகர்.

வான் ஆகி! மண் ஆகி! வளி ஆகி! ஒளி ஆகி!

ஊன் ஆகி! உயிர் ஆகி! உண்மையும் ஆய்! இன்மையும் ஆய்!

கோன் ஆகி! யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு-

வான் ஆகி நின்றாயை! என் சொல்லி வாழ்த்துவனே! (திருவாசகம்: 5-15)

தீமையான வல்வினைகள் காரணமாக ஒரு உயிர் மிக மோசமான சூழ்நிலையில் பிறக்கின்றது; அப்பிறவிக்கு அவ்வுயிரின் தலைவிதி (ஊழ்வினை) காரணம். ஆனால், அவ்வுயிர்-உடலுடன் உடன் கலந்து வாழ இறைவனுக்கு என்ன தலையெழுத்து? வசதியாக வாழும் மகன் வீட்டில் ஓரிருநாள் மட்டுமே வாழும் தாய்-தந்தையர், வறுமையில் வாடும் மகனுக்குத் தம் ஓய்வு ஊதியத்தைத் தந்து, அவனுடன் கடினவாழ்க்கை வாழ்வது கருணையால் அல்லவா?

இறைவனை அறியாதவர்கள்!

வேண்டுதல் வேண்டாமை இல்லாமல், உயிரின் வினைப்பயனில் ஒருபகுதியை, ஊழ்வினையாகத் தருபவன் இறைவன்; ஊழ்வினையால் ஏழ்மையில் வாடும் மனிதர்கள் மீது மிக்க கருணைகொண்டு, அவர்களுடன் தானும் வாழ்கின்றான். நல்-ஊழ்வினையால் நற்பிறவி பெற்றவர்கள், பிறவியையும், செல்வத்தையும் காரணங்களாக்கி, பொய்நீதி செய்து, சாதியால் ஏழைகளை அடிமைப்படுத்தும்போது இறைவனுக்கே கொடுமை செய்கின்றனர்; ஏனெனில், அவர்கள் செய்யும் சாதி அநீதியை முதலில் நுகர்பவன் அந்த ஏழைகளுடன் உறையும் இறைவனே! அனைத்து உயிருடம்புகளிலும், அனைவர் உள்ளங்களிலும் இறைவனே உறைகின்றான் என்பதை இத்தகையோர் உணர்வதில்லை என்கிறார் திருமூலர்.

உள்ளத்து ஒருவனை! உள்ளுறு சோதியை!

உள்ளம்விட்டு ஓரடி நீங்கா(த) ஒருவனை!

உள்ளமும் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவு அறியாதே! – திருமந்திரம்: 417

உயிருக்கு உயிராய் உள்ளத்தில் நீங்காது நிற்கின்ற ஒப்பிலாத இறைவனையே உள்ளத்து ஒருவன், உள்ளுறு சோதி என்றார் திருமூலர். இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தையும் விட்டு ஓரடிகூட விலகாமல் நின்றருள்கின்றான். உயிர்-உள்ளமும் சிவமும் இரண்டறக் கலந்திருந்தாலும், உள்ளமாகிய உயிர், தன் சுட்டறிவைக்கொண்டு இறைவனைக் காண்பதில்லை. கருணையும், அன்புமே இறைநீதி. சித்தம் என்னும் உறுதியான கயிற்றைக்கொண்டு, இறைவனின் திருவடிகளைக் கட்டிப்போடும் வித்தையைக் நமக்குக் கற்பிக்கும் மணிவாசகம் உங்களுக்காக அடுத்தவாரம் துளிர்க்கும். 

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-27-விளங்கு-தில்லைக்-கண்டேனே/article9678788.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 28: பசு பாசம் என்னும் உலகப்பற்று

 

 
sivan

“பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளி” என்று இறைவனின் கருணையைப் போற்றுகிறார் மணிவாசகர். பசு என்றால் உயிர்; “பசுபாசம்” என்பது உயிரைப் பிடித்துள்ள உலகப்பற்று. விலங்குகளின் பசுபாசம், இனப்பெருக்கம் செய்யவும், குட்டிகள் வளர்ந்து, அவைகளின் தேவையை அவைகளே பார்த்துக்கொள்ளும் வரை மட்டுமே உள்ளன. அதனால், அனைத்து விலங்குகளும் தங்களின் தேவைக்குத் தாங்களே உழைக்கின்றன. சொத்துப்பாசம், பணப்பாசம், உறவுப்பாசம், சாதிப்பாசம், இனப்பாசம், மொழிப்பாசம், மதப்பாசம் போன்ற தளை(பாசங்)கள் விலங்குகளுக்கில்லை. மனிதனே இப்பாசங்களால் துயரமடைகின்றான்; ஆயினும், மனிதனே இறைவனின் கருணையையும் உணரவல்லவன்.

பசுபாசத்தால் உருவாகும் வேடிக்கை மனிதர்கள்

பசுபாசமாம் உலகப் பற்றில் சிக்கிய மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை விளக்குகிறார் பாரதியார். தினம் தேடிச் சோறு உண்ணுவது, வெட்டிக்கதைகள் பல பேசுவது, தேவை தகுதி கடந்த ஆசைகளில் மனம் வாடித் துன்பபப்படுவது, பிறரை வாட்டிக் காயப்படுத்தும் செயல்கள் பல செய்வது, இறுதியில், நரைத்து, வயதாகி, மரணமடைவது. பசுபாசத்தில் சிக்கிய மனிதர்கள் தேடிய பொருட்செல்வங்கள், அவர்களின் வாரிசுகளுக்கு உழைப்பில்லாமல் கிடைப்பதால், பல வேடிக்கை மனிதர்கள் உருவாகின்றனர்.

தேடிச்சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக வுழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

(மகாகவி பாரதியார்)

வேடிக்கை மனிதன் ஒருவன் இறந்தால், சுற்றத்தார் என்ன செய்வார்கள்?

இறந்தவுடன் மறக்கப்படும் மனிதன்!

ஊரையே கூட்டி, உரக்க அழுவார்கள்; இறந்தவன் பெயரை நீக்கிப் பிணம் என்று பெயரிடுவார்கள்; அப்பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று சுட்டு எரித்துவிட்டு, நீரினில் மூழ்கிக் குளித்துவிட்டு, அவனை ஒரேயடியாக மறந்துவிடுவார்கள் என்கிறார் திருமூலர்.

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பெயர் இட்டுச்

சூரையங் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!

(திருமந்திரம் :189)

முதலாளியின் பெயரைச் சொல்லமாட்டோம் என்று போலி மரியாதை காட்டி, கூழைக் கும்பிடு போடும் அடிவருடிகள், முதலாளி இறந்ததும், “பொணத்தை எப்போ எடுப்பீங்க?” என்று கூசாமல் கேட்பார்கள். வாரிசுகளோ, பிணத்தை வைத்துக்கொண்டே, சொத்துப் பிரிக்கச் சண்டையிடுவார்கள். காதற்ற ஊசியைக்கூட எடுத்துச் செல்ல முடியாத உயிர், வாரிசுகளின் செயல் கண்டு, “இவர்களுக்காகவா இத்தனைக் காலம் உழைத்து, வாழ்வை வீணடித்தோம்?; கிடைத்த பிறவியில் தொண்டு செய்து, இறைவனை அடையும் அரிய வாய்ப்பைத் தொலைத்தோம்?” என்று வருந்தும். தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப, தனது அடுத்த உடல் பிறவிக்காகக் காத்துக் கிடக்கும் அவ்வுயிர். இந்நிலையிலிருந்து தம்மை இறைவன் மீட்டான் என்பதையே “பத்திமையும், (முத்திப்)பரிசும் இலாப் ‘பசுபாசம்’ அறுத்து அருளி” என்றார் மணிவாசகர்.

பசு பாசம் அன்பாக மலரவேண்டும்

பசுபாசம் என்னும் உலகப்பற்றே, ‘நான்’என்னும் வட்டத்தை விட்டு, “தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, குழந்தைகள்”, என்று பிறருக்காக வாழும் பண்பை மனிதனுக்குக் கற்றுத்தந்தது. அப்பாசம் முதிர்ந்து, அனைத்து உயிர்களுக்கும் தொண்டு செய்யும் பக்தி கலந்த இறையன்பாக மலர வேண்டும். அப்படிப்பட்டவனின் வாழ்வே, அவன் மனைவி, மக்கள், சுற்றத்தார்க்கு நல்வழி காட்டும் வாழ்வியல் நூலாகி, நல்ல சமுதாயத்தைப் படைக்கும்.

மனிதனின் தகுதியை உயர்த்த...

மனிதப் பிறவியின் நோக்கம், இல்லறக் கடமைகளை அறவழியில் நடத்தி, இறைவனுக்குத் தன் தொண்டால் பக்தி செலுத்தி, இறைவனுடன் இரண்டறக் கலக்கும் முக்திப் பரிசைப் பெறுவதே! உலகப் பொருட்களிடம் மட்டுமே பாசம் வைக்கும் (பசு)உயிர்கள், பாசத்தை இறைபக்தியாக்கி அன்பைச் செலுத்த மறக்கின்றன. இறைவன் வாழும் சகஉயிர்கள் மீது அன்பு வைத்தால் தன் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம் என்பதை மனிதன் ஏனோ உணர்ந்துகொள்வதில்லை.

பசுபாசம் அறுத்தருளி . . .

“பத்திமையும், (முத்திப்) பரிசும் இல்லாத “உலகப்பற்று என்னும் பசுபாசம்” என்னைச் சேராமல் நீக்கி அருளிய திருப்பெருந்துறைச் சிவபெருமானே! என்னை உலகவர் பித்தன் என எண்ணும்படியாக, உன்பால் எனக்கு நீங்காத அன்பைத் தோற்றுவித்து அருளிய எம்பெருமானே! என்னுடைய மனத்தை இங்கும் அங்கும் அலையவிடாமல், எனது சித்தம் என்னும் உறுதியான கயிற்றால், உன்னுடைய அழகிய பாதமலர்களை என்னைக் கொண்டு கட்டுவித்து அருளிய வித்தகப் பெருமானே! உன் கருணையை என்னென்பது! உனது திருவிளையாடலை விளங்கித் தோன்றும் இத்தில்லையம்பலத்தே கண்டுகொண்டேன்!” என்று பக்திப் பிழம்பானார் மணிவாசகர்.

பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி!

பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து! பேராமே,

சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த!

வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

(திருவாசகம்:31:7)

பசுபாசம் நீங்கி, தன்னிடம் கொண்ட அன்பால் பித்தனாக மாறிய மணிவாசகரின் உள் புகுந்தான் இறைவன்; அண்ட பேரண்டங்கள் யாவையும் கடந்து, யாராலும் காண இயலாத தன் திருவடிக் காட்சியை மணிவாசகர் காணுமாறு தந்தான்.

திருப்பாதம் கட்டுவித்த பேரருள்

அன்பில் உருகிய இறைவன் தாமாகவே முன்வந்து, மணிவாசகரின் சித்தம் என்னும் திண்கயிற்றால், தனது திருவடிகளைக் கட்டிப்போட அருள்செய்து, ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினான் என்பதை, “கட்டுவித்த” என்ற சொல்லால் உணர்த்துகிறார் மணிவாசகர்.

“சித்தமென்னும் திண்கயிற்றால்” என்னும் திருவாசகத் தமிழ், பரந்தாமன் திருவடிகளைப் பரமஞானி சகாதேவன் கட்டிய நிகழ்வை, வில்லிபுத்தூராரின் சொல்லாட்சியில் தமிழ்க் காவியமாக்கிற்று. வில்லிபாரதத்தில், பாரதப் போரைத் தவிர்க்க கண்ணபிரானைத் தூது செல்லத் தருமன் வேண்ட, பாண்டவர் ஐவரின் கருத்தையும் கேட்டான் பரந்தாமன். தருமன் சமாதானம் வேண்ட பீமன், அர்ஜுனன், நகுலன் ஆகியோர் போர் வேண்டினர். பரந்தாமனை உணர்ந்த பரமஞானியான சகாதேவனோ, “இடையர் குடியில் வளர்ந்த திருமாலே! உன் திருவுளக் கருத்து எதுவோ, அதுவே என் கருத்தும்” என்றான். “வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே! (திருவாசகம்-33:6)” என்னும் திருவாசகத் தமிழை வில்லிபாரதத்தில் சுவைக்கிறோம்.

அன்பால் பரந்தாமனைக் கட்டிய சகாதேவன்

மற்றவர்கள் முன் பேசினால் காரியம் கெடும் என்று சகாதேவனைத் தனியே அழைத்துச் சென்ற கண்ணன், “சகாதேவா! போர் நிகழாதிருக்க முடிந்தால் வழி சொல்!” என்றான்; “கண்ணா! போரை நிறுத்த வேண்டுமானால், கர்ணனை நாட்டை ஆளச்செய்து, பார்த்தனைக் கொன்று, பாஞ்சாலியின் கூந்தலைக் களைந்து, பீமன் காலில் விலங்கிட்டு, கைபிடித்து உன்னையும் நான் கட்டினால், பாரதப் போரைத் தடுக்கலாம்” எனப் பக்தியோடு விடை சொன்னான் சகாதேவன். “நீ கூறிய மற்றவற்றை முடித்தாலும், என்னை எவ்வாறு கட்டுவாய்?” என்று வியந்தான் பரந்தாமன். “உன் வடிவை நீ காட்டினால், உன்னை நான் கட்டுகிறேன்” எனப் பணிவோடு சொன்னான் சகாதேவன்.

சகாதேவன் அன்பின் ஆற்றலை உலகுக்குணர்த்த, பார்க்குமிடமெங்கும் பரந்தாமனேயாக விஸ்வரூபம் எடுத்து எண்ணற்ற வடிவு கொள்கிறான் உலகளந்த பெருமான்! விஸ்வரூப-மூலத்தை உணர்ந்த சகாதேவனின் சித்தமாம் திண்கயிற்றால், தன் திருவடிகளைச் சிக்கெனக் கட்டுவதற்கு அருளினான்; சகாதேவன் கண் களிக்க முன் நின்று, “பற்றிய பாதம் விடுக” என்று இறைஞ்சினான் பரந்தாமன் என்கிறார் வில்லிபுத்தூரார். “பாரதப் போரில் ஐவரையும் காத்தருள்க!” என்று வேண்டி, “ஓம்” எனும் வரம்தந்த கண்ணனை விடுவித்தான் சகாதேவன்.

அன்பர்கள் சிலர், 'நாயேன், 'நாயினும் கடையேன்', 'ஊர் நாயின் கடையானேன்' என்னும் சொற்கள் வரும் பல திருவாசகப் பாடல்களைப் பாடச் சங்கடப்படுவதாகத் தெரிவித்தனர். ஐயம் தெளிவிக்கும் மணிவாசக விளக்கம் அடுத்த வாரம் துளிர்க்கும்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-28-பசு-பாசம்-என்னும்-உலகப்பற்று/article9692414.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 29: நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

 

 
sivan

அறுநூற்றி ஐம்பத்தியெட்டுப் பாடல்களை ஐம்பத்தியொரு பதிகங்களில் கொண்டது திருவாசகம். ஊனையும், உயிரையும் உருக்கும் திருவாசகத்தின் முப்பது பதிகங்களில், அறுபத்தியெட்டு இடங்களில், நாயேன், நாயடியேன், என நாய்க்கு இணையாக, நாயினும் கீழாகப் பாவித்துப் பாடப்பட்ட திருவாசகப் பாடல்கள் அறுபத்திஒன்று உள்ளன. “மனமறிந்து தவறோ, யாருக்கும் தீங்கோ, செய்ததில்லை. ‘நாயேன்' என்ற சொல் வரும் திருவாசகங்களைப் பாட, மனம் சஞ்சலப்படுகிறது” என்னும் அன்பர்களின் ஐயம் குறித்து இக்கட்டுரையில் சிந்திக்கலாம்.

கருணையுள்ளம்!

மக்களிடம் பரவலாகக் காணும் இழிகுணங்களான நோய்களை, உயிர்களிடத்து அன்புடைய, அறிவார்ந்த பெரியோர்கள் எவ்வாறு காணுவார்கள் என்று திருக்குறள் சொல்வதைக் காண்போம். “அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.” (குறள் 315) “பிற உயிர்களின் நோய் தமக்கே வந்ததாக எண்ணாவிட்டால் அறிவைப் பெற்றதால் என்ன பயன்?”, என்ற வினாவை முன்வைக்கிறது இக்குறள். அறிவின் அடையாளமாக இங்கு காட்டப்படுவது கருணையான தன்வேதனையே (empathy), பரிதாபம் (sympathy) அன்று. அனைத்து உயிர்களிடத்தும் அன்புசெலுத்தும் அறிவுடைய இறையன்பர்கள், பிற உயிரின் மனம் சார்ந்த இழிகுணங்கள், உடல் துன்பங்கள் முதலிய நோய்கள் தமக்கே வந்ததாக எண்ணுவர்.

இக்குறளை, அரசியல்-அறிவுடைமை அதிகாரத்தில் வைக்காமல், துறவறம்-இன்னாசெய்யாமை அதிகாரத்தில் வைத்தது ஊன்றிக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. முதலமைச்சர் வாதவூரருக்கு, “கொலையாளியை வேந்தன் தண்டித்தல், களையெடுப்பதற்குச் சமம்”, எனத் திருக்குறள்-550 கூறும் அரசியல் அறமே அறம்.

அருளாளரான மணிவாசகருக்கு (வாதவூரர்), மனிதர்களின் இழிகுணங்களைத் தனதாகக் கொண்டு பாடும் கருணை இயல்பானது என்று தெளிவோம். இறையருள் வேண்டும் நாமும், கருணையுள்ளத்தோடு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், மகிழ்வுடன் அத்தகைய திருவாசகங்களை ஓதி இறைவனருளைப் பெறுவோம்.

குறிக்கோள் இன்றி அலைவதில் மனிதர்கள் நாய்க்கு இணையானவர்கள் என்பதால் ‘நாயே அனைய நம்மையெல்லாம்’, ‘நாயேன்’ என்று பாடியுள்ளார் மணிவாசகர். இனி, ‘நாயினும் கடையேன்’ என்று மணிவாசகர் கூறுவதால், பல மனிதர்களிடம் இல்லாத, நாயிடம் மட்டுமே சிறப்பாகக் காணப்படும் சில குணங்களைப் பற்றி, பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவணமுதலியார், வாரியார் சுவாமிகள், பண்டிதமணி கதிரேசச்செட்டியார் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியவற்றை இங்கு சிந்திப்போம்.

தலைவனை அடையாளம் காணும் குணம்

மாபெருங்கூட்டத்திலும், எங்கோ அமர்ந்திருக்கும் தன் தலைவனைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளும் தன்மை நாய்க்கு உண்டு. மனிதப் பிறப்பே, தலைவனாம் இறைவனை அறிவதற்கும், இறைவனிடம் இரண்டறக் கலந்து முக்திப் பேரின்பம் பெறுவதற்குமானது. ஆனால், இறைவனைப் பற்றிய சிந்தனை துளிக்கூட இல்லாத மனிதர்களே (agnost) உலகில் அதிகம். இறைவனை அடையாளம் காணும் தேவையே இவர்களுக்கு வருவதில்லை.

இறைவன் இல்லை என்றும், நானே தலைவன் என்றும், பணம் படைத்தவனைத் தலைவன் என்றும், இறைவனுக்குரிய குணங்கள் இல்லாதவரைத் தலைவன் என்றும், “இறைவன் இருக்கலாம்; ஆனால், அந்தத் தலைவனை யாருக்கும் தெரியாது”, என்றும், பல நிலைகளில், தலைவனை அறியாத மனிதர்கள் உள்ளனர்.

. . . யான் யாவரினும் கடையன் ஆய

நாயினேன்! ஆதலையும் நோக்கிக் கண்டு!

நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்!

ஆயினேன்! ஆதலால் ஆண்டுகொண்டாய்!

(திருவாசகம்-5:23)

தலைவனை அடையாளம் காணவியலாத, நாயினும் கடையனான தம்மை, இறையன்பன் என்று ஆனதாலேயே ஆண்டு அருளினான் என்னும் ‘நமக்கான மணிவாசகம்’ இது.

செய்நன்றி பாராட்டும் பெருங்குணம்

எப்போதோ ஒரு நேரம் உணவிட்டவனை, தன் வாழ்நாள் முழுவதும், எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு, வாலைக் குழைத்துத் தன் நன்றியைத் தெரிவிக்கும் இயல்புடையது நாய். அறியாமை என்னும் இருளில், அறிவற்ற குருடர்களாய்க் கிடந்த உயிர்களுக்கு, பொறிபுலன் கருவிகளுடனான உடல்களைத் தந்து, வாழ இவ்வுலகம் தந்து, காத்து, அவ்வுயிர்களுடன் ஒன்றாக வாழ்பவன் இறைவன்;

உயிர்களுக்குப் பொருட்களை அறியுமாறு அறிவிப்பதற்காக, உயிர்களை விட்டு வேறாகக் காணப்படுபவன் இறைவன். அறிந்த பொருட்களை, அறிந்தபடியே நுகர்விப்பதற்காக, உயிர்களின் உடனாகவும் நிற்பவன் இறைவன். இவ்வாறு, உயிர்களின் அறிவுப் பயணத்தின் ஒவ்வொரு நொடியிலும், அசைவிலும், பயன் கருதாமல், உணவு முதல் அனைத்தும் படைத்து, காத்து, அருளும் இறைவனின் கருணைக்கு நன்றி செலுத்தும் கடமை, ஆறறிவு பெற்ற மனிதனுக்கே அதிகம் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இறைவனுக்கு அவ்விதம் நன்றி செலுத்துவது இல்லை.

செய்நன்றி செலுத்துவதில் மனிதர்கள் நாயினும் கடைநிலையில் இருக்கிறார்கள். இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க! என்னும் மணிவாசகம் ஓதி, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்..

தலைவனின் கட்டளையை உடனே ஏற்றுச் செயலாற்றுதல்

தன் உயிரே போகும் ஆபத்தான வேலையாக இருந்தாலும், தலைவன் கட்டளையிட்டால், அவ்வேலையில் உடனே இறங்கும் பண்பு கொண்டது நாய். இறைவன், மனிதர்களை நெறிப்படுத்தத் தன் திருவருள் பெற்ற அருளாளர்கள் மூலம், அற நூல்களையும், அறிவு நூல்களையும் அருளி, இரண்டு கடமைகளைச் செய்யப் பணித்தான்.

முதலாவது, அற நூல்களில் கூறியபடி, இன்முகம், நல்மொழி, தூய உள்ளம், நடுவுநிலை, நன்றியுடைமை, அடக்கம், தவறாத ஒழுக்கம் ஆகியன கடைப்பிடித்து அற நெறியில் வாழ்தல்; பிறன்மனை நோக்காது, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இல்லறக் கடமை தவறாமல், நன்மக்களைப் பெற்று, அன்பால் விருந்தோம்பி, வறியவர்க்கு ஈகை, தொண்டுகள் செய்து, இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக வேண்டும். இரண்டாவது, அறிவு நூல்களில் விளக்கப்பட்ட, உயிர்களின் அறிவை மறைக்கும் மும்மலத்தின் தன்மை, உயிர்களின் இயல்பு, இறைவனின் தன்மை போன்றவை அறிந்து, இறையருள் பெற்று முத்திபெற வேண்டும்.

எளிதாகச் செய்ய முடிந்த இவ்விரண்டு கடமைகளையும் செய்யாத மனிதர்களே அதிகம். நாய் செய்து முடிக்கும் பணியின் பலனைஅடைவது நாயின் தலைவனே! ஆனால், மனிதனுக்கு இறைவன் இடும் பணியின் பலனை அடைவது மனிதனே! இறைவனல்லன்! இருந்தும், தனது நன்மைக்காகத் தலைவனிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாத மனிதர்களே அதிகம்; தலைவனின் கட்டளை எதுவாயினும் தலைமேற்கொள்ளும் நாயுடன் ஒப்பு நோக்கினால், மனிதன் நாயினும் மிகக் கீழானவன்.

தலைவனிடம் கொள்ளும் அசைக்க முடியாத பற்று-நம்பிக்கை!

தலைவனிடம் காட்டும் அசைக்க முடியாத பற்று-நம்பிக்கை நாய்க்கே உரியது. ரத்தம் வரக் கொடுமையாக அடித்தாலும், கோபப்படாமல், வாலைக் குழைத்துத் தலைவனின் கருணையை நோக்கி அமைதியாக நிற்கும் நாய்.இறை நம்பிக்கை கொண்ட மனிதர்களில் பலரும், தமக்கு நேர்ந்த துன்பம், தாம் முன்செய்த தீவினைப்பயன் என்பதை மறந்து, “பாழாய்ப்போன இரக்கமற்ற கடவுளே! உனக்குக் கண்ணில்லையா!”, என்று பழித்து, நம்பிக்கையற்று, ‘கடவுள் இல்லை’ என்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர்.

பற்று-நம்பிக்கையிலும் மனிதன் நாயைவிடக் கீழானவனாகிறான்.

எந்தச் செயலையும் காரணத்துடன் செய்யும் இயல்பு!

நாய் எந்தச் செயலையும் காரணத்துடனேயே செய்யும். எடுத்துக்காட்டாக, கல்லால் அடிபட்ட நாய், தன்மேல் பட்டுக் காயம் உண்டாக்கிய கல்லைக் கடிக்காமல், கல்லை எறிந்தவன்மேல் பாய்ந்து கடிக்கும்.

எய்தவன் இருக்க, அம்பை நோகும் மனிதனோ, கல்லில் மோதிவிட்டு, கல் தன்னை இடித்ததாகக் கூறுவான்; இதுபோலவே, தன்னுடைய முன்வினைப் பயனால் தனக்கு வந்த துன்பத்திற்கு, பிறரைக் குற்றம் கூறுவான்.

காரணம் காணும் தன்மையில், மனிதன் நாயினும் கடையவன்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே (திருவாசகம்-1:60-61)

என நாயினும் கடைப்பட்ட நமக்கெல்லாம் தாயினும் சிறந்த கருணையை வாரி வழங்கும் இறைவனின் அருளைத் தரும் திருவாசகத்தை உள்ளம் ஒன்றி ஓதி உயர்வோம். நம் உயிரையே குழைத்து இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்க உதவும் திருவாசகத் தேனை வரும் வாரம் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-29-நெஞ்சில்-நீங்காதான்-தாள்-வாழ்க/article9704207.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 30: சிவபூசைக்கான சிறந்த மலர்!

 

 
sivan

சிவபூசை வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கும் படையல்களில் இறைவனுக்கு மிகவும் உகந்த மலர் நம் இதயத்தாமரையே! மூடாமல் மலர்ந்திருப்பதால்தான் மலர் என்கிறோம். இதயமாகிய தாமரை, அர்ப்பணிப்பு உணர்வால் இறைப்பணியில் முழுமையாக மலர்ந்து, தன் உயிரையே இறைவனுக்குப் படையலாக்குவதை ‘ஆத்தும நிவேதனம்’ என்று வடமொழியில் வழங்குவர்.

பெற்றோரைக் காணாத சிறு குழந்தை, மழலை மொழியில், “அம்மே! அப்பா!” என்று அகம் குழைந்து அழுதால், நம் மனம் குழைந்து பதைத்தோடி வந்து, குழந்தையைத் தாவி அணைத்து ஆரத்தழுவி நிற்போம் அல்லவா? இங்கு, நம்மைக் குழைத்து உருக்கியது, குழந்தையின் மழலை மொழி.

ஆற்றல்மிக்க அன்பை உருவாக்கும் வழி!

திருப்பெருந்துறையில் இறைவனின் திருவடி தீண்டப்பெற்று, இறையனுபவம் பெற்ற மணிவாசகர், அம்மையப்பனைக் காணாது, அகங்குழைந்து, பெரிதும் பணிந்த மொழிகளால் பாடிய பதிகம் குழைத்த பத்து. இப்பத்து மணிவாசக மொழிகளையும் கேட்ட இறைவன், திருவுள்ளம் குழைந்து, ஓடி வந்து அருளினான். இப்பாடல்களை மனமுருகிப் பாடி வேண்டுவோருக்கு, நொடிப் பொழுதில் திருவுள்ளம் குழைந்து இறைவன் அருள்வான் என்பதால் சான்றோர்கள் இப்பதிகத்துக்குக் ‘குழைத்த பத்து’ என்ற பெயரிட்டு, ‘ஆத்தும நிவேதனம்’ என்னும் உட்குறிப்பும் தந்தனர்.

இங்கு, ஆத்தும நிவேதனம் என்பது, நம்மிடம் உள்ள `யான்’ என்னும் அகங்காரத்தைச் சமைத்து அன்பாக்கி, இறைவனுக்குப் படைத்தலாகும். வாயிலார் நாயனார் தமது மன வழிபாட்டில் செய்தது இதுவே. ஒரு பாடலின் முடிவு, அடுத்த பாடலின் தொடக்கமாக இருப்பதால் இப்பதிகம் அந்தாதியாய் உள்ளது. முதலிலும், முடிவிலும், `குழைத்தல்’ என்னும் சொல் வருவதால், `குழைத்த பத்து ’ என்பது மிகவும் பொருத்தமான பெயரே!

துன்பத்திலிருந்து மீட்கும் குழைத்தபத்து!

‘குழைத்தல்’ என்பதற்கு ‘வாடச்செய்தல்’ என்றும் ஒரு பொருள் உண்டு. திருவாசகம் அருளும் பொருட்டு மணிவாசகரை, இறைவன் உலகத்தில் இருந்து வாடச்செய்ததைக் கூறும் பதிகமாதலால், குழைத்த பத்து என்றும் சிலர் கூறுவர். நம்மைத் துன்பத்திலிருந்து மீட்கும் வல்லமை கொண்ட பதிகம் இது.

உடையவனே! கொடுவினையிலிருந்து காத்தருள்க!

முதல் பாடலில், “என்னை உடையவனே! வாட்டி வதைக்கும் என்னுடைய பழைய கொடுவினைகளின் கொடுமையிலிருந்து என்னைக் காத்தருள்வாய்! எனதுஅன்னை உமையவளின் மணவாளனே! என்னை ஆள்பவனே! கொடுவினையேனாகிய நான் உழைத்தாலும் கொடுவினைப்பயன்களிலிருந்து உறுதியாக விடுபட இயலாது என்பது நீ அறியாததா? பிறைநிலவைச் சடையில் சூடிக்கொண்டவனே! உன்னுடைய உடமையான நான் பிழைசெய்தால் பொறுத்தருள வேண்டாமா? என் அம்மானே! முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தும், அருளாமல் மறைந்துபோவது உனக்கு அழகாகுமா? உன் அடியவனான நான் எங்கு செல்வேன்?”, என்று கரைந்துஉருகி நிற்கின்றார் மணிவாசகர்.

குழைத்தால், பண்டைக் கொடுவினை நோய், காவாய்! உடையாய்!; கொடுவினையேன்

உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்!

பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ?

`பிறை சேர் சடையாய்! ‘முறையோ?' என்று

அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே! உன் அடியேற்கே?

(திருவாசகம்-33:1)

இறைவனிடம் சரணடைந்து நம்மை ஒப்புவித்துவிட்டால், நாம் இறைவனின் உடைமை ஆகிவிடுவோம்! இறைவன் நம்மை உடையவன் ஆவான்!

சரணாகதியின் சக்தி!

உடைமைகளைப் பாதுகாப்பது உடையவனின் கடமை! முன்செய்த கொடுவினைகள் வாட்டினால், நம்மைக் காக்க வேண்டிய கடமை, நம்மை உடையவனான இறைவனுடையதாகும். “உடையாய்!” என்னும் ஆற்றல்மிக்க திருவார்த்தையைக் கொண்டது இம்மணிவாசகத்தின் முதல் வரி.

நம்மைக் காக்கும் உமையன்னையின் அருள்!

“செய்த கொடுவினைப் பயனை அனுபவிப்பதற்கே இவ்வுடல் பிறவி! இன்னும் துய்க்க வேண்டிய பழவினைகளுடன், இப்பிறவியில், ‘நான்’ என்னும் உணர்வால் உழைத்துச்செய்த புதுவினைகளும் சேர்ந்து, மீண்டும், மீண்டும் பிறவிகளைத் தரும்; எனவே, உழைத்தால் பிறவி நீக்கம் கிடைப்பது உறுதியில்லை! எனையாளும் இறைவா! உன் திருவடிகள் மட்டுமே எனது பிறவி நோயை நீக்கும் அருமருந்து! கருணையே வடிவான எனதன்னை உமையாள் என்பொருட்டு உன்னிடம் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பாள்!” என்ற உட்குறிப்பைச் சொல்லும் இரண்டாம் வரி அருள்வாசகம்.

உலகியலில், தாயே, தவறுசெய்த மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு தன் கணவனிடம் பரிந்துரைப்பதைக் காணுகின்றோம். இங்கு, நமக்குப் பரிந்துரை செய்ய, அன்னை உமையம்மை உண்டு என்கின்றார் மணிவாசகர். இறைவனருள் மட்டுமே பிறவியை நீக்கி, வீடு பேறு தரவல்லது என்பது இவ்வரியின் உட்குறிப்பு.

பிழை பொறுக்கும் பேரருளாளன்!

மூன்றாவது வரி சொல்லும் செய்தி இன்னும் சிறப்புமிக்கது.. ‘பிறைசேர் சடையாய்!, பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ? ’ என்று கேட்கும் மணிவாசகம், இறைவன் தனது மெய்யடியார்கள் செய்த பிழைகளை மன்னிக்கும் பேரருளாளன் என்பதைச் சொல்லும் அற்புதமான இடமாகும்.

சந்திரனை மன்னித்துத் தலையில் சூடிக்கொண்டவன்!

இவ்வுலகில் மனிதர்கள் செய்யும் பிழைகள், உடல்பொறி-புலன்கள் தூண்டுவதால் நிகழ்வன. மனிதர்களைவிட பல மடங்கு உயர்ந்த சந்திரதேவன், தன் தலைவன் இறைவனை அவமானப்படுத்தியவன் என்று தெரிந்தும், தக்கன் வேள்வியில் பங்கெடுத்தது மன்னிக்க முடியாத குற்றம். அத்தகைய சந்திரனையே மன்னித்து, எப்போதும் தன்னுடன் இருக்குமாறு தன் தலையில் இறைவன் சூடிக்கொண்டதைப் ‘பிறைசேர் சடையாய்’ என்று குறித்தார். “தாழ்ந்தநிலை மனிதனான என் பிழையை நீ பொறுத்து அருள வேண்டாமோ?” என்று உரிமையுடன் இறைவனிடம் வேண்டும் வரி, மனிதனுக்குத் தன் தவறை மன்னிக்குமாறு இறைவனை அணுக நம்பிக்கை தரும் மணிவாசகம்.

உன்னைவிட்டால் எங்கு செல்வேன் இறைவா!

“இவ்வாறெல்லாம் உன் அடியவனான நான் அழைத்தும், நீ அருளாமல் செல்வது என் அம்மையப்பனாகிய உனக்கு அழகோ! எனக்கு உன்னை விட்டால் போக்கிடம் ஏது?”, என்ற பொருள் தரும் கடைசி வரி இறைவனின் உள்ளத்தைக் குழைத்து அருள் சுரக்கச் செய்யும் ஆற்றல் மிக்க வாசகம்.

நாம் என்ன தவறு செய்தாலும் இறைவன் மன்னிப்பான்; எனவே, மன்னிப்புக் கேட்டுவிட்டு, மீண்டும் தவறு செய்யலாம் என்று இத்திருவாசகத்துக்குப் பிழையாகப் பொருள் கொள்ளக் கூடாது. இறைவனிடம் சரணடைவதே நாம் மீண்டும் பிழை செய்யாமல் இருக்கத்தான் என்பதைத் தெளிவாக்கும் சுந்தரரின் திருவாரூர் திருமுறை முதல் திருப்பாட்டு இங்கு குறிப்பிடத்தக்கது.

தவறு செய்யாமல் காப்பான் இறைவன்!

“இறைவன், இவ்வுலகில் வாழத் தேவையான செல்வமும்(பொன்னும்) நிலைத்த மெய்ப்பொருளான அவன் திருவடிகளை அடைவதற்கான மெய்யுணர்வையும் தருபவன்; செல்வத்தினால் கிடைக்கும் உலகின்பத்தையும், மெய்ப்பொருள்-விளக்கத்தால் கிடைக்கும் வீடு பேறையும் ஒன்றாக இணைப்பவன்; உலகின்பங்களை நுகரும்பொழுது நான் செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக் கொள்பவன்; அவனைச் சரணடைந்த பின், என் செயல்களிலெல்லாம் பிழைகளே வாராமல் தவிர்க்குமாறு என்னைப் பணித்து அருள்பவன்; இன்ன தன்மையை உடையவன் என்று அறிய முடியாதவனான எம்பெருமான், அடியவர்க்கு எளியவன்; இவ்வளவு பெருமைபெற்ற, அன்னப் பறவைகளுக்கு வாழ்விடம் தரும் வயல் பண்ணைகளையுடைய, அழகிய திருவாரூர் இறைவனை என்னால் எப்படி மறக்க இயலும்?” என்று வினவுகிறார் சுந்தரர்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை! போகமும் திருவும் புணர்ப்பானை!

பின்னை என் பிழையைப் பொறுப்பானை! பிழை எலாம் தவிரப் பணிப்பானை!

இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை!

அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே?

- திருமறை: 7.59.1

உலக இன்பத்தை நுகரும் மனிதன் செய்யும் பிழை, இறைவனை மறந்து, இவ்வுலகப் பொருள்களிலேயே நாட்டம் கொள்வதாகும். வீட்டின்பத்தை மனிதன் நுகரும்பொழுதும்கூட, பழைய பழக்கத்தால், மனம் சிற்றின்பத்தையே நாடும் பிழையைச் செய்யும்; இறைவனைச் சரணடைந்த தன் அடியார்க்கு, இப்பிழை வராமல் இறைவன் தவிர்த்து அருளுவான் என்று (இங்கு குறிப்பிட்ட) திருவாசகத்துக்குச் சரியான விளக்கமாகிறது சுந்தரர் தேவாரம்.

மெய்யறிவு அருளவே, இறைவன் உடல் பிறவி தந்தான். ஆனால் தீமை தரும்(செடிசேர்) உடலை ஏன் இன்னும் சிதைக்கவில்லை என்று இறைவனிடம் கேட்கும் மணிவாசகத்தின் உண்மைப் பொருளை அடுத்த வாரம் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-30-சிவபூசைக்கான-சிறந்த-மலர்/article9711593.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்

‘இறைவா! உன் அருள்பெறும் விதியில்லா விட்டாலும், திருவடியால் ஒரு அடியாவது தருவாய்!', என்று அகம்குழைந்து வழிபடும் இம்மணிவாசகம், கொடு வினைப் பயனால் அல்லலுறும் மனிதர்களுக்கு வழிகாட்டும் இன்னுமொரு விடியலாகும்.

“கொடிஇடையாள் உமையன்னையின் பங்கனே! என்அரசே! நீ முன்னம் என்னை ஆட்கொண்டபோதே என் கொடுவினையால் விளைந்த அல்லல்கள் யாவும் நீங்கிவிட்டன என்றல்லவா எண்ணியிருந்தேன்! எங்கள் சிவலோகனே! என்னை வா என்று அருளி, துன்பம் தரும் என் உடலை ஏன் இன்னும் அழிக்கவில்லை? என்னை உடையவனே! என்னைக் கூவிப் பணிகொள்ளாதிருக்க என்ன காரணமிருந்தாலும், நின் திருவடிகளால் என்னைத் தண்டித்தாலே எனக்குப் போதுமானது!” என்று இறைவனிடம் மனமுருகி விண்ணப்பிக்கின்றார் மணிவாசகர்.

அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்!

கொடியேர் இடையாள் கூறா! எங்கோவே! ஆவா! என்று அருளிச்

செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!

உடையாய்! கூவிப் பணிகொள்ளாது, ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(திருவாசகம்:33.2)

உயிர்களிடம் இறைவன் கொண்ட கருணையை உணர்ந்துகொள்ளவும், மணிவாசகரே மனித உடலைப் புகழ்ந்தும் பழித்தும் பல்வேறு இடங்களில் ஏன் பாடியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளவும் இத்திருவாசகம் உதவும்.

அருள்பெற்றும் துன்பங்கள் ஏன்?

“என்னை ஆட்கொண்ட இறைவனின் திருவடிகளைத் தீண்டி நான் பேரின்பம் அடைந்தேன்! இறைவன் ஆட்கொண்டதால், கொடுவினைப் பயனான துன்பங்கள் உடன் அகன்றுவிடுமே! ஆட்கொள்ளப்பட்டும், இறைவனைப் பிரிந்து, மனித உடலிலேயே துன்பத்தில் துயருருகின்றேன்; இது எங்ஙனம்?”, என்ற தன் ஆற்றாமையையே “அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்!” என இறைவனிடம் வெளிப்படுத்துகின்றார் மணிவாசகர்.

துன்பம் தரும் உடலை அழிக்காதது எதற்காக?

அடுத்ததாக, “எங்கள் சிவலோகா! என்னை ஆட்கொண்ட பின், எனக்குப் பாவமும், துன்பமும் தரும் இவ்வுடலை அழித்து, என்னை வா என்று அருளி, உன்னுடன் அழைத்துச் செல்லாதது எதற்காக?” என்ற கேள்வியை இறைவனிடம் வைக்கிறார்; திருவாசகத் தேனில் மூழ்கி, அவ்வின்பக் கடலில் நீந்திக் குளிக்கும் நமக்கோ பரபரப்பு தொற்றிக்கொள்கின்றது!; இறைவன் மனமிரங்கி, மணிவாசகரை உடன் அழைத்துச் சென்றுவிடுவானோ திருவாசகம் இங்கு முற்றுப்பெற்றுவிடுமோ அடுத்து என்ன நடக்குமோ என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது! அதேவேளை, மணிவாசகரின் தவிப்பையும் இறைவன் உடனே நீக்கியருள வேண்டும் என்ற வேண்டுதலும் நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கின்றது. இது திருவாசகத்தில் 'நாம்' கலந்ததால் பெற்ற அன்புருவத்தின் வெளிப்பாடு! அருளுருவத்தின் பரிமாணம்!

இறைப் பேரின்பமடைந்த எவரும் மனித உடலில் வாழ்ந்ததில்லையே! அதனாலன்றோ, ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்னும் பழமொழி நிலவுகின்றது! மனித உடலிலேயே இறைப் பேரின்பத்தை நுகர்ந்த மணிவாசகரின் அநுபவத்தைத் திருவாசகமாகத் தருவதற்காக அல்லவா இறைவன் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்துகின்றான்! நமக்கான திருவாசகம் முழுவதையும் படைத்து முடிக்கும்வரை, மணிவாசகரின் கேள்விக்கு இறைவன் விடைதரப் போவதில்லை!

உடலைப் போற்றுவதும்! பழிப்பதும்! - மயக்கத்துக்கு விடை!

இங்கு, 'செடிசேர் உடலை' என்று பழிக்கும் மணிவாசகரே, கோயில் திருப்பதிகத்திலும், இன்னும் பல இடங்களிலும், “இறைவன் என் உடலில் இடம் கொண்டதற்கு எப்படி நன்றி செலுத்தப்போகின்றேன்!” என்ற பொருளில் “இறைவனே! நீ என் உடலிடம் கொண்டாய்! இனியுன்னை என் இரக்கேனே!” என்றும் “எந்தையே! ஈசா! உடலிடம் கொண்டாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!” என்றும் பாடியுள்ளார். இதில் எதை நாம் சரி என்று ஏற்றுக்கொள்வது என்ற மயக்கத்துக்கு இப்போது விடை காண்போம்.

அமுதமும் மலமும்

உயிர், இவ்வுடலில் வாழ, நீர், உணவு, காற்று ஆகியன, தவிர்க்க முடியாதவை என்ற வகையில் அவை உடலுக்கு அமுதாகின்றன. உடல் உட்கொள்ளும் அமுத நீர், தன் வேலை முடிந்து, எஞ்சிய கழிவுகளுடன் மூத்திரப் பையில் சேரும்போது, நஞ்சு (மலம்) ஆகின்றது; உடல் உட்கொள்ளும் அமுதமான உணவு, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுத்துவிட்டு, எஞ்சியது மலம் ஆகின்றது. உடல் சுவாசிக்கும் அமுதமான உயிர்க் காற்று, தன் பணி முடிந்து கரியமிலவாயுவாகும்போது நஞ்சு(மலம்) ஆகின்றது. அமுதமாகும் பொருட்களின் பணி முடிந்தது எஞ்சிய பகுதிகள், மலமாகின்றன, நஞ்சாகின்றன; மலமான அவை உடலை விட்டு வெளியேறாவிட்டால், உடலையே அழிக்கும் நஞ்சாகிவிடுகின்றன.

உடல் எப்போது ஆலயமாகும்?

அதேபோல், உயிருக்கு, மரணமில்லாப் பேரின்பம் பெற உதவும் கருவியாக உடல் செயலாற்றும்போது, மறைப்பு சக்தியால் உயிருக்குத் தெரியாமலேயே இறைவன் அவ்வுடலில் வாழ்ந்து உயிருக்கு வழிகாட்டுகிறான்; இங்கு, 'ஊனுடம்பு ஆலயம்' என்ற நிலைப்பாடு எடுக்கின்றார் மணிவாசகர்.

உடல் எப்போது அழிய வேண்டும்?

பக்குமடைந்த உயிர், உடலை விட்டு நீங்கி, இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் எய்துகிறது. உயிர் பக்குவமடைந்தும், உடலுடன் வாழ்ந்தால், புலன் மயக்கங்களில் உயிரை ஆழ்த்தி, மீண்டும் பிறவி என்னும் படுகுழியில் வீழ்த்தும் மலமாகிறது; உயிர் இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறத் தடையாகிறது உடல்; துன்பம்தரும் (செடி-சேர்) உடலாகிறது. “செடி-சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு?”, என்ற கேள்வியை பக்குவ நிலையில் கேட்கிறார் மணிவாசகர். (எரிப்பதற்காக விறகின் மேல் வைக்கப்பட்ட பிணத்தைச் 'சிதை' என்பர்; 'சிதைக்குத் தீ வைத்தல்')

ஒறுத்தால்கூடப் போதுமே!

“என்னை உடையாய்! நீ என்னைக் கூவியழைத்துப் பணியாளாக வைத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை! சினம்கொண்டு, உன் திருவடிகளால் எனக்குத் தண்டனையாவது தா! அதுவே எனக்குப் போதும்!” என்னும் கடைசி வரி, உள்ளத்தை உருக்கிக் குழைக்கும் மணிவாசகம்!

'ஆயுள் பதினாறு' என்ற விதி முடிந்ததால், சிவபெருமானின் திருவடிகளைச் சரணடைந்திருந்த மார்க்கண்டேயனை நோக்கிப் பாசக்கயிற்றை வீசி, சிவபெருமானின் திருவடிகளால் உதைபட்டு வீழ்ந்தான் காலன். 'சிவபெருமானின் எதிரிலேயே வந்து, சிவபூசையில் ஈடுபட்டிருந்த மார்க்கண்டேயரின் உயிரை எடுக்கமுயன்று, இறைவனின் தாமரை மலர்த் திருவடிகளால் தண்டனை பெற்ற, கூற்றுவனின் கொள்கையைப் போன்றது என் கொள்கை' என்னும்,

ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்

கூற்றம் அன்னது ஓர் கொள்கை,

என் கொள்கையே!

(திருவாசகம்:5.5.3-4)

மணிவாசகமும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடமைக்குப் பரிசு!

தன் தலைவன் சிவபெருமானின் திருவுள்ளக்குறிப்புக்கு எதிரானது என்று தெரிந்தும், கடமையைச் செய்யத் துணிந்தான் காலன். உதைபட்டாலும், சிவபெருமானின் திருவடிகளால் தீண்டப்பட்டதால், மார்க்கண்டேயருடன், காலனும் நிலைத்த வீடுபேறு பெற்றான். “அனைத்து தேவர்களிலும் உயர்ந்தவர்களான, நான்முகன் மேலும்மேலும் உயரச் சென்றும், திருமால் ஏழுலகுக்குக் கீழ் சென்றும், அறிய முடியாத இறைவனின் திருவடிகளை, சிவ வழிபாடு செய்த பாலன் மார்க்கண்டேயனிடம் சென்று, பாசக்கயிற்றை வீசிய காலன் எளிதில் அறிந்தான்” என்று வியக்கிறார் நாவுக்கரசர் பெருமான்.

மேலும் அறிந்திலன்!,

நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து

மாலும் அறிந்திலன்! மால் உற்றதே;

வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று,

பாசம் விசிறி, மறிந்து சிந்தைக்

காலன் அறிந்தான்!,

அறிதற்கு அரியான் கழல்அடியே!

(தமிழ் மறை: அப்பர்: தனி விருத்தம்)

இறைவன் திருவடிகளால் பெற்ற “உதை” கடுந்தண்டனையாக நமக்குத்தோன்றினாலும், எமனுக்கு இன்பமயமான திருவடிப் பேறானதால், “காலன் அறிந்தான், அரிதற்கு அரியான் கழலடியே!!” என்கின்றார் அப்பர் பெருமான்.

கிறித்துவ அருட்தந்தையின் திருவாசகக் காதல்!

நம் ஆத்தும விடுதலைக்காக, நம் அனைவரின் கொடுவினைகளாம் சிலுவைகளைத் தன் தோளில் சுமந்து, நமக்கான திருவாசகம் படைத்த மணிவாசகருக்கு நாம் என்றென்றும் நன்றி செலுத்துவோம்! மணிவாசகரிடம் இயேசுபிரானைக் கண்டுகொண்ட அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்கள் திருவாசகத்தில் உருகியதும், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரையெழுதியதும் இயல்பே அல்லவா! உண்மையையும், இறைவனையும் தேடும் அருளாளர்களுக்கு மொழியேது? மதமேது?, சின்னங்கள் ஏது? “ஓர் நாமம்! ஓர் உருவம்! ஒன்றுமிலா ஈசனுக்கு! ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!” என்ற திருவாசகம் தெளிவோம்! அன்பில் மலர்வோம்!

தந்தையிடம் உரிமையுடன் வாதாடும் மகனைப்போல, இறைவனிடம் உரிமையுடன் வாதாடி, அருள் வேண்டும் சுவாரசியமான மணிவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-31-திருவடியால்-ஒருஅடியாவது-தருவாய்/article9716873.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!

lingam

தண்டனை பெற்றாவது இறைவனின் நேரடிக் கவனத்தில் இருக்க விண்ணப்பித்த மணிவாசகர், தகுதிபார்க்காமல் தம்மை அழைத்து ஆட்கொண்ட இறைவனின் கருணை இன்று இல்லாமல் போய்விட்டதோ என்று ஏக்கம் கொண்டு, இறைவனிடம் உறுதியானதொரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.

குற்றங்களைக் குணமாகக்கொண்டால் என்ன கெட்டுப்போய்விட்டது?

“ஏழை பங்கா! எம் அரசே! ஒன்றுக்கும் அற்ற நாயான என்னை, அன்று ஆட்கொண்டு உயர்வளித்த உன்கருணை, இன்று எனக்கு அறவே இல்லாமல் போயே போய்விட்டதோ? என்னை நீ ஆட்கொண்டும், அழைத்துச் செல்லாமைக்குக் காரணம், நான் செய்த மலையளவு குற்றங்களே என்றால், உனக்கு ஒன்று சொல்கிறேன்! மலைபோன்ற என் குற்றங்களை, நீ, "(உயிர்க்)குணம் அப்படித்தான் இருக்கும்" என்று எண்ணி மன்னித்தால், என்ன கெட்டுப்போய் விட்டது? உன்னை யார் கேள்வி கேட்பார்கள்? எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையுமுடைய எம்மானே! எனக்கு இரங்கி அருள்வாய்!”, என்றார் பெருமான்.

ஒன்றும் போதா நாயேனை! உய்யக் கொண்ட நின் கருணை!

இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!

குன்றே அனைய குற்றங்கள்!, குணமாம் என்றே, நீ கொண்டால்!,

என் தான் கெட்டது? இரங்கிடாய்!; எண்தோள், முக்கண், எம்மானே! (திருவாசகம்:33-3)

ஆட்கொண்டவுடனேயே கொடுவினைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதுதானே இறைத்தன்மை! வினைகளே இல்லாத நிலையில், முன்வினைப்பயனால் மணிவாசகர் பெற்றஉடல் வீழ்ந்திருக்கவேண்டும்; அப்படி வீழாமல், சாமர்த்தியமாக, மணிவாசகரின் உடலைத் தன் அருள் என்னும் ஆதாரம்கொண்டு, இவ்வுலகில் நிறுத்தினான் இறைவன்! இது திருவாசகம் தருவதற்காக இறைவன் செய்த திருவிளையாடல்.

உய்யக்கொண்ட கருணை எங்கே?

இதையறியாத குற்றமற்ற மணிவாசகர், “தகுதிஏதும் அற்றவனான, எதற்கும் பயன்படாத நாயேனை, நீ ஆட்கொண்டதற்கு ஒரே காரணம், என்னிடம் நீ கொண்ட கருணை மட்டுமே! அக்கருணை, இப்போது இல்லாமல் போனது எவ்வாறு?”, என்று மருகினார்.

கருணைப்பெருங்கடலில் கரையும் மலையளவு குற்றங்கள்!

இறைவனிடமிருந்து விடையேதும் கிடைக்காததால், ஆட்கொண்டபின், பெற்ற கருணையை இழக்கும்வகையில், பல புதிய குற்றங்களைத் தாம் செய்துவிட்டதாக ஒரு விடை கற்பித்துக்கொண்டு, “ஐயா! உன் கருணைப் பெருங்கடலில் நான் செய்த மலைஅளவு குற்றங்களும் கரைந்துவிடுமல்லவா? எனவே, என் குன்றே அணையக் குற்றங்களை, நீ, “உயிர்க்குணம் அப்படித்தான் இருக்கும்”, என்றுகொண்டு மன்னித்து அருள்வதால், எந்தக் குறைவும் வரப்போவதில்லை! என்னை உடையவனான நீயே எனக்காக இரக்கப்பட்டு இதைச் செய்வாய்!”, என்றார் பெருமான்.

‘குன்றே அனைய குற்றங்கள், குணமாம் என்றே நீ கொண்டால், என்தான் கெட்டது?’, அட! விரக்தி நிலையிலிருந்து மீண்டுவர, இறைவனிடம் மன்றாடுவதற்காகக் கிடைத்த நமக்கான மணிவாசகம் இதுவல்லவா?

மணிவாசகரின் இத்திருவாசகத்தில் தாம்கலந்து திளைத்த வள்ளலார், தம் இறையனுபவத்தை இரண்டு திருவருட்பாக்களில் அருளியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசையுடன் வள்ளலாருக்கு அணிவித்த சிவமாலை!

தெருவினில் விளையாடித்திரிந்த சிறுகுழந்தையான தம்மை ஆசையுடன் வலிய அழைத்து, தன் அருள் என்னும் சிவமாலையை தமக்கு அணிவித்து மகிழ்ந்தான் இறைவன் என்கின்றார் வள்ளலார். “என்னிடம் நீ கொண்ட அத்தகைய ஆசையெல்லாம் இன்று உன்னிடம் இல்லாமலே ஓடிவிட்டதோ?”, என்று ஆதங்கத்துடன் இறைவனிடம் விண்ணப்பிக்கிறார் பெருமான்.

தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை, வலிந்தே

சிவமாலை அணிந்தனை! அச் சிறுவயதில், இந்த

உருவிடத்தே நினக்கிருந்த ஆசை எலாம், இந்நாள் ஓடியதோ? ..... (திருவருட்பா: 3808:1-4)

வள்ளலாரின் திருவருட்பா, இங்கு தரப்பட்ட திருவாசகப் பாடலின் முதல் இரண்டு வரிகளில் சொல்லப்பட்ட இறையனுபவமாகும்.

குற்றம் குணமாகக்கொண்டு அருட்பெருஞ்சோதி அருள்க!

இறைவன் தன் அடியவரின் குற்றங்களைக் குணமாகவே கொண்டு அருளுவான் என்று தெளிந்த வள்ளல்பெருமான், ஆறாம் திருமுறைத் திருவருட்பா பாடல் ஒன்றில், “எனக்கு இயல்பு குற்றம் புரிதல்! அதை உயிர்க்குணமாகக் கொண்டு, பொறுத்தருளுதல் உனக்கு இயல்பு! சிற்றம்பலத்தாடும் பெருமானே! இச்சிறியேன் உன் பேரருள் குறித்துச் சொல்லும் வாழ்த்து எதுவும் உண்டோ? சட்டென்று அடியேனுடைய சிந்தனையைத் தெளிவித்து, அச்சம், துயர் ஆகியன தீர்த்து, இப்பொழுதே அருட்பெருஞ்சோதி நீ எனக்குத் தருவதற்கான சரியான சமயம் இதுவேயாகும்”, என்று இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்.

குற்றம் புரிதல் எனக்கியல்பே! குணமாக் கொள்ளல் உனக்கியல்பே!

சிற்றம்பலவா! இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாது உளது?

தெற்றென்று, அடியேன் சிந்தைதனைத் தெளிவித்து! அச்சம் துயர்தீர்த்தே!

இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே!

(திருவருட்பா: 5350)

வள்ளல் பெருமானின் இத்திருவருட்பா, இங்கு விளக்கப்பட்ட திருவாசகப்பாடலில், மணிவாசகப்பெருமான் இறைவனிடம் வைத்த கேள்விக்குப் பதிலாகவே அமைந்துவிட்டது! என்னே இறைவனின் கருணை!

குற்றங்களைக் குணமாய்க் கருதும் இறைவனின் கொள்கை!

இறைவன் தன் அடியவர்கள் குற்றம் செய்யினும், உயிர்க்குணம் எனக் கருதி மன்னிக்கும் கொள்கையுடையோன் என்பதால் அவன் திருவடிகளைச் சரணடைந்ததாகப் பாடுகின்றார் சுந்தரமூர்த்தி நாயனார். “பொன்திரள் போன்ற அழகிய தாமரைமலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! ‘நல்ல தமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தன்,நாவுக்கரையன், நாளைப்போவான், சூதாடுதலை நன்குகற்ற மூர்க்கன், நல்ல சாக்கியன்,சிலந்தி(கோட்செங்கட்சோழ நாயனார்), கண்ணப்பன், கணம்புல்லன்’ என்ற இவர்கள் செய்த குற்றமான செயல்களைக் குணமானவே கருதும் உன் கருணைத் திருவுள்ளத்தின் கொள்கை கண்ட அடியேன்,உனக்கே மீளாஅடிமையாய், நின் ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைச் சரணடைந்தேன்! என்னை ஏற்றுக் கொண்டருள்க!”, என்றார் சுந்தரர்.

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்! நாவினுக்கு அரையன்! நாளைப்போவானும்!

கற்றசூதன்! நற்சாக்கியன்! சிலந்தி! கண்ணப்பன்! கணம்புல்லன்! என்று இவர்கள்

குற்றம் செய்யினும்! குணம் எனக்கருதும் கொள்கைகண்டு! நின் குரைகழல் அடைந்தேன்!

பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே!

(திருமறை:சுந்தரர்:55.4)

சுந்தரர் குறிப்பிட்ட அருளாளர்களான நாயன்மார்கள், (உலகவர் பார்வையில்) செய்த குற்றங்கள்: திருஞானசம்பந்தர்: (சம்பந்தரின் அனைத்துப் பாடல்களுக்கும் பண் அமைத்துப் பெருமைசேர்த்த) திருநீலகண்ட யாழ்ப்பாணர், பண் அமைக்க இயலாதவாறு யாழ்முறிப்பாடல் ஒன்று பாடியது;

நாவுக்கரசர்: இறைக்கொள்கைஇல்லாச் சமண சமயம் ஏற்று இறைவன் திருவருளை இகழ்ந்தது;

நாளைப்போவார்: இறைவன் உறையும் தன்னுடலையே இழிவாகக் கருதியது;

மூர்க்க நாயனார்: சூதாடியது; சாக்கியநாயனார்: இலிங்கத் திருமேனியைக் கல்லால் எறிந்தது;

கோச்செங்கண்சோழன் - சிலந்தியாக இருந்போது செய்தது: வாய்நூலால் லிங்கத்தின் மேல் வலைவேய்ந்தது;

கண்ணப்பர்: செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும், வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும், எச்சில்பட்ட இறைச்சியைப் படைத்ததும் ஆகியன;

கணம்புல்லர்: திருக்கோயிலில் தம் தலைமயிலை விளக்கென்று எரித்தது.

உலகவர் பார்வையில் இவை குற்றங்கள்; இவ்வருளாளர்கள், தூயமனதுடன், அருள்வழியாலும், அன்பாலுமே இவற்றைச் செய்தார்கள் என்பதை உலகவர் அறிய மாட்டார்கள்! திருநீலகண்ட யாழ்ப்பாணரின் பெருமையை உலகோர் அறியச் செய்வதற்காகவே யாழ்முறிப்பாடல் பாடினார் ஞானசம்பந்தர் என்பதை இறைவன் மட்டுமே அறிந்து, அருள்செய்தான் என்றறிந்து, திருவடிகளை வந்தடைந்ததாகக் குறிப்பிட்டார் சுந்தரர். எனவே, சுந்தரர், தன் காதலுக்காக, இறைவனைப் பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டியதைக் குற்றமாகக் கொள்ளமாட்டான் என்பது இப்பாடலின் உட்பொருள்.

வினைத்தொகுதியிலிருந்து விடுதலைபெற...

மனிதர்களின் குற்றங்களே குன்றளவு வினைத்தொகுதிகளாக நிற்கின்றன. வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று இக்குற்ற வினைத்தொகுதிகள் வளருமே அன்றி, மனிதர் எவரும் தன்முயற்சியால் தீர்க்கக்கூடியதன்று. மனமுருகவேண்டி, இறைவனின் திருவடிப்பேறு பெறும்போதுதான் வினைத்தொகுதியிலிருந்து உயிர் முழுவிடுதலையைப் பெறுகிறது.

“இறைவா! உன் பெருமையனைத்தும் மறக்கச் செய்து ஊனுடம்பில் என்னைப் புகுத்திவிட்டாயே! உன்னைக் காணாது திகைத்து நின்கும் என்னைத்தேற்றி, அழைத்துச் செல்வாய்!" என்று வேண்டும் தேன் வாசககங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-32-பிழை-பொறுக்கும்-பேரருளாளன்/article9721865.ece

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-32-பிழை-பொறுக்கும்-பேரருளாளன்/article9721865.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 33: உன் சீர் புகழ்பாடி இன்புற்றிருப்பேன்

 

 
sivan

பதவி, பணம், பெரும் செல்வாக்கு, புகழ் ஆகியவற்றுடன் பவனிவந்த பாண்டியப் பேரரசின் முதலமைச்சரான திருவாதவூராரைக் கூவியழைத்துத் திருவடிப்பேறு தந்து, மணிவாசகராக்கினான் இறைவன். மெய்யடியவர்களுடன் கலந்து, இறையின்பச் சுவையை மனிதவுடலிலேயே பெற்று, இறைவனின் சீர்மையை அறிந்தும், உணர்ந்தும் உயிர் அனுபவம் அடைந்தார் மணிவாசகர்.

கல்வி-கேள்விகளில் கரைகண்டு, கவிபாடவும் வல்லமைகொண்ட மணிவாசகரின் திருவாக்கால் இவ்வனுபவத்தைத் திருவாசகத் தேனாக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், தன் சீர்பாடித் திளைத்திருந்த மணிவாசகரை, அச்சீர் மறக்கச் செய்தான்; மனிதவுடலிலேயே மணிவாசகரை இன்னும் சிலநாள் இருக்குமாறு பணித்தான்.

மனிதவுடலில் மீண்டும்

இந்நிகழ்வை, “மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்வூனே புக, என்தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்!”, என இறைவனிடமே தம்மை இவ்வுலகில் அலையச் செய்ததை முறையிடுகிறார்.

“தாங்க முடியாத இத்துயரை எனக்கு ஏன் தந்தாய் என்று உன்னைக் கேட்கமாட்டேன்! ஏன் தெரியுமா? உன் திருவடிப்பேறு பெறும் தகுதியோ அறிவோ உழைப்போ என்னிடம் இல்லை என்பது எனக்கே தெரியுமே! எதற்கும் உதவாத என்னை உன் பேரருளாலும், பெருங்கருணையாலும் உய்யக்கொண்டாய்; சிறிது காலம் உன் திருவடிப் பேறு அருளி, இறையின்ப விடுதலை நல்கினாய்! அதுவே, என் தகுதிக்கு மிகமிக அதிகம்! இப்போது, நீ என்னை, மனிதவுடலில் கிடந்து உழலுமாறு செய்தது, முற்றிலும் சரியானதே!”, என்றார் மணிவாசகர்.

உன் சீர்பாடும் நாள் எப்போது வரும்?

மீண்டும், இறைவனை நோக்கி, “என் தலைவனே! நான் தகுதியற்றவனே ஆனாலும், பெருமானே! முன்பு செய்ததுபோல, அடியேனுடைய அறியாமையை அறிந்து, மன்னித்து, நீயே அருள்செய்து, மறுபடியும் என்னைக் கூவியழைத்துப் பணிகொள்ளும் நாள் எப்போது என்று கூறுவாய்! அந்நாளை எண்ணி, உன் திருவடிகளைச் சிந்தித்து, உன் சீர்புகழ்பாடி இன்புற்றிருப்பேன்”, என்று அகம்குழைந்து வேண்டும் நமக்கான திருவாசகம்:

மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்

ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்!;

ஆனால், அடி யேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,

கோனே! கூவிக்கொள் ளும் நாள் என்று? என்று? உன்னைக் கூறுவதே! (திருவாசகம்:33-4)

இறைவன் திருவடிகளில் அவன் சீர்பாடும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எண்ணி ஏங்குகின்றார் மணிவாசகர். இத்திருவாசகத்தை ஒத்த அப்பர் பெருமானின் தனிப்பாடலொன்று இங்கு குறிப்பிடத்தகுந்தது.

உன்னை மறந்தும், உனக்கு நான் இனியனாய்...

"இறையவனே வாழ்க! உன்னை எப்போதும் நினைத்திருக்க என்னை நீ விடுவதில்லை! உறுதிகொண்டு உன்னையே எண்ணுவதற்கு நான் முயற்சித்தால், அப்போதே அவ்வெண்ணத்தை மறக்கச் செய்து, வேறொரு பொருளில் என் மனம் ஈடுபடுமாறு செய்கிறாய்! எப்போதாவதுதான் உன்னை நினைக்கிறேன்; இருந்தாலும், இனியவனாய், பல துன்பங்களிலிருந்தும் என்னைக் காக்கிறாய்! உன்னையே மறந்துவிட்டு, உனது அன்பினைப் பெறுகின்ற என்னைப்போல் எவரேனும் இருக்கின்றனரா என்பதை எனக்குச் சொல்வாய்!", என்றார் அப்பர்.

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய்!, நீ; நினையப் புகில்,

பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;

உன்னை எப்போதும் மறந்திட்டு, உனக்கு இனிதா இருக்கும்

என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே! (தமிழ்மறை: 4.112.4)

இறைவனைத் தொடர்ந்து நினைக்காத குறையைப் பொருட்படுத்தாமல் அருள்பவன் இறைவன் என்கிறார் அப்பரடிகள். தன்னைத் தவிர, இறைவனின் அருளைப் பெறும் அனைவரும், இறைவனையே தொடர்ந்து நினைப்பதாகக் கூறுகிறார் அப்பர்பிரான்.

தீமை, நன்மை முழுவதும் இறைவனே!

பேசுகிற நாவாகவும், நினைக்கிற மனமாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறார் மணிவாசகர் “இறைவா!, பேசுகிற நாக்கு முதல், அந்நாவுக்குக் கட்டளைகூறும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் உள்ளிட்ட அகக் கருவிகள் அனைத்தும் நீயே! நினைக்கும் மனத்துக்குத் தெளிவும், திகைப்பும் தருபவனும் நீயே! மனதின் தெளிவால் விளையும் நன்மையாகவும், திகைப்பால் வரும் தீமையாகவும் இருப்பவனும் நீயே!” என்று கூறும் பெருமான், உண்மை இறைவனைப் பற்றி விரிவாகச் சொன்னால், அவனையன்றி வேறாய் நிற்கும் பொருள் எதுவுமில்லை என்கிறார். “சிவலோகநாதனே! உன்னையன்றி, தெளிவடையும் வழி எனக்கு ஏதுமில்லை! நான் திகைப்படைந்து கலங்கினால், என்னை நீ தேற்றித் தெளிவிக்க வேண்டாவோ?” என்று கசிந்துருகிக் கேட்கும் மணிவாசகரின் திருவாசகம் இதுதான்:

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!

தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!

வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,

தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ? (திருவாசகம்: 33-5)

நம் பேச்சு, செயல் யாவும் இறைவன் தந்தது. நாம் ஒன்றை அறிவதும், அறியாமலிருப்பதும் (தேறும்வகை/திகைப்பு) அவனருளாலே நிகழ்வது. தீமை, நன்மை என்று நாம் ஏது செய்தாலும் இறைவனையே சென்றடையும்.

இறைவனுக்கு மேலாக, வேறாக எப்பொருளும் இல்லை!

மெய்ப்பொருளான இறைவனை, அவனது அருள்சக்தியை, முழுவதும் விரித்துச் சொன்னால் இறைவனைவிட மேலான, இறைவனுக்கு வேறாய் நிற்கும் தன்மை உள்ள பரிசுப்பொருள் என்று இங்கு எதுவும் இல்லை (மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின், வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை) என்றார் பெருமான்.

அத்தகைய மெய்ப்பொருளான இறைவனை, அவனது அருள்சக்தியை, எங்ஙனம் விரித்துச் சொல்ல? (தேறும் வகை என்?) அதைச் சொல்லும் வழிதெரியாமல் மணிவாசகர் திகைக்கிறார். இறைவனே எல்லாமாய் நிற்கும் தன்மையை எடுத்துக்கூறி, தம் திகைப்பை, மயக்கத்தை நீக்கித் தெளிவு தருமாறு வேண்டுகிறார் மணிவாசகர்.

நன்மை, தீமை அனைத்தும் இறைவனுக்கே போகும்!

இறைவன் அனைத்து உயிர்களுக்குமான பல்வகை உடல்களைப் படைத்து, அனைத்து உயிர்களின் உள் உறைந்தும் இருக்கிறார். எனவே, நாம் சக மனிதர்களுக்குச் செய்யும் நன்மை, தீமை அனைத்தும் இறைவனுக்கே போய்ச் சேருகின்றன. இதை அறிந்துகொண்டால் மனிதர்கள் எவ்விதத் தீமையையும் செய்யத் துணிய மாட்டார்கள்!

பித்தனைப் போலேகைப்பிரம்பாலே பட்ட அடி!

வந்தியின் கூலியாளாய், பித்தனைப் போல் பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் முதுகில், பாண்டிய மன்னன் கைப்பிரம்பாலே பட்ட அடி, மன்னன், மணிவாசகர் உள்ளிட்ட மக்களனைவரின் முதுகிலும் விழுந்ததைக் கண்ட பட்டறிவால் மணிவாசகர் இதைச் சொல்கிறார். இறைவன் எங்கும் நிறைந்துள்ளதால் இது நிகழ்ந்தது. இன்றைய உலகில் இறைவனின் திருப்பெயரால் சிலர் நிகழ்த்தும் கொடுஞ்செயல்களை முக்காலமும் உணர்ந்த மணிவாசகர் கண்டுகொண்டே, அற்புதமான இத்திருவாசகத்தை நமக்கு அருளியுள்ளார். பேச வாயும், செயலாற்றக் கை,கால்களையும், வழிநடத்த அறிவையும் தந்த இறைவனே, அறிவு எழுப்பும் குழப்பங்களையும் நீக்கியருள வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்!

முரண்பாடுகளில் முழுமுதற் கடவுளைக் காணும் நுட்பம்!

மணிவாசகப் பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று, முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் கண்டுகொள்வது எப்படி என்னும் நுட்பமே! திருவாசகமெங்கும் இந்த நுட்பம் திகழக் காணலாம்.

இறைவனுக்கு எதிரானதீய சக்தியின் இருப்பு

‘இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன்’ என்ற உண்மைக்கு முரண்பாடாக, அத்தகைய கருதுகோள் அமைந்துவிடும் அபாயத்தை மிக எளிதாகக் கடக்கவும், முழு முதற்கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் திருவாசகம் நமக்கு உதவுகிறது.

முரண்பாடுகளில் முழுமுதலாம் இறைவனைக் கண்டுகொள்வதும், களிப்பதும் சைவ அருளாளர்களின் இறைவழிபாட்டில் நாம் காணும் தனிச்சிறப்பு! தமிழ் மறைகள் நெடுகிலும் இதைக் காணலாம், நாம் முரண்களாகக் கருதும் பொய்/மெய், குற்றம்/குணம், நன்மை/தீமை, பகை/நட்பு ஆகியன இறைவனைப் பொறுத்தமட்டில், ஒன்றையே சுட்டுகின்றன என்பதே மணிவாசகரின் பட்டறிவால் விளைந்த திருவாசகம் தரும் செய்தி! இச்செய்தியைக் கூறும் மற்ற தேன்வாசக விளக்கங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-33-உன்-சீர்-புகழ்பாடி-இன்புற்றிருப்பேன்/article9726802.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 34: தோன்றாப் பெருமையன் இறைவன்

sivan

முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் காணும் நுட்பம் - மணிவாசகப்பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று! இதைப் பாடும் திருவாசகங்கள், தமிழர்களின் தத்துவ மரபின் செறிவை உலகுக்குப் பறைசாற்றும் சான்றாவணங்கள்!

ஒளியும் இருளும் இறைவனே!

நாமறிந்த ஒளியும் இருளும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை; ஒளி தோன்றினால் இருள் விலகும்; ஒளி மறைந்தால் இருள் சூழும். ஆனால்,

“சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே!” என, இறைவனே ஒளிமயமாகவும், செறிந்த இருளாகவும் இருக்கிறான் என்கின்றார் மணிவாசகர்.

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் சூரியன், சந்திரன் உள்ளிட்ட, சுடர்வீசி ஒளிரும் பொருளனைத்தும் இறைவன் எனும் திருவுருவின் விளக்கமே. அக இருளை (ஆணவம்) நீக்கும் அறிவொளியான இறைவனை ‘சோதியனே’என்றழைப்பது பொருத்தமே. ஆனால், ‘துன்னிருளே’என்றழைப்பது ஏன் என்று நாம் திகைக்கிறோம்; மணிவாசகர் நம்மைத் தேற்றுகிறார்.

உயிரைப் பிடித்த அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்கவே, மாயையை இயக்கி, உடல்பிறவிகள் தந்தான் இறைவன்; பல்வேறு பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளால் தொடர்ந்து பிறவிகள் வருகின்றன.

மறைத்து அருளும் இறைவன்

மனிதன் செய்த முன்வினைகளிலிருந்து ஒரு பகுதியை அனுபவித்துத் தீர்க்க ‘விதி’க்கப்பட்டு, பிறவிக்கு வருகிறான். இவ்விதியையும், இன்னும் பலப்பல பிறவிகளுக்காகக் காத்திருக்கும் மீதமுள்ள பழைய வினைகளையும், மனிதன் அறிந்தால், அவனால் கவலையின்றிச் சுதந்திரமாக இப்பிறவியில் வேலை செய்ய முடியாது. எனவே, இவற்றை மனிதனிடமிருந்து மறைத்து அருளுகிறான் இறைவன். இறைவனின் இச்சக்தி ‘மறைப்பாற்றல் (திரோதானம்)’ எனப்படும். ‘மறைத்தல்’ இறைவனின் ஐந்தொழிலில் ஒன்று.

எங்கெல்லாம் அறிவொளி இல்லையோ, அங்கெல்லாம், அறியாமை இருள் சூழ்கிறது. மனிதனின் அறிவை மறைக்கும், அக இருளாம் ஆணவத்தால், இறைவனை மறைக்க முடியாது; ஏனெனில், இறைவன் எங்குமிருப்பவன்; ஆணவத்துக்குள்ளும் இருப்பவன்.

மனிதனின் அறியாமை இருளைப் போக்க, ஒளிமயமான (சோதியனான) இறைவனே, துன்னிருளாகி (இருளுக்கும் இருளாகி), தன்னுடன் வாழ்வதை மனிதன் அறிவதில்லை; கருணையுடன் துன்பத்தில் பங்கெடுத்து, மனிதனுடன் வாழ்கிறான் இறைவன். எனவேதான் “சோதியனே! துன்னிருளே!” என்கிறார் பெருமான்.

இருளும் அறிய முடியாத நுட்பமான இருளாக மறைந்திருப்பதால், இறைவனை ‘துன்னிருளே’ என்றார் மணிவாசகர். வெளிப்பார்வைக்கு முரண்பாடாகத் தோன்றுவதே, உற்றுநோக்கினால் முழுமையாகத் தெரியும். சரிதானே?

முரண்பாடுகளில் முழுமை கண்ட ஞானக்குழந்தை

மதுரை சொக்கநாதப்பெருமானைப் பாடும், முரண்பாடுகளில் முழுமை தரிசித்த திருஞானசம்பந்தரின் பாடல் இது.

குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!

சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!

கற்றநூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை

முற்றும் நீ! புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே! (திருமறை:3:52:3)

‘அனைவரும் செய்கின்ற குற்றங்களாகவும், நல்ல குணமாகவும் இருப்பது நீயே! எம் அன்புத்தலைவனும், தொடர்ந்து ஒளிரும் ஜோதியும் நீயே! படித்த நூல்களும், நூல்தரும் கருத்துகள், பொருள், இன்பம் அனைத்தும் நீயே! முன்னிருந்து இப்படிப் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்படும் எங்கள் இறைவனே! சர்வமும் நீயே!’ என்றார் ஞானக்குழந்தை சம்பந்தர்.

முரண்பாடுகளில் முழுமை காணும் பாடலாசிரியர் வைரமுத்துவின் ஓர் அற்புதமான தாய்மைக் கவிதை இங்கு குறிப்பிடத்தகுந்தது (திரைப்படம்: ‘கன்னத்தில் முத்தமிட்டால்’). ‘சோதியனே! துன்னிருளே!’ என்னும் இவ்வான்கலந்த மாணிக்கவாசகம் கவிப்பேரரசின் சிந்தையிலும் கலந்து வைரவரிகளாக மாறியது. தாய்மை உணர்வின் நிபந்தனையற்ற எல்லை கடந்த அன்பு, முரண்பாடுகளை வென்று முழுமையடைந்து, மானுடமும் முழுமை இறைமையும் சங்கமிக்கும் காவியத்தை, கவிப்பேரரசின் சொல்லோவியத்தில் காணுங்கள்.

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

...

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் ஈன்ற ஜனனம் நீ! . . .

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!

இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!. . . என்கிறார் வைரமுத்து.

நமக்கெல்லாம் தாயாகிய இறைவன், நம் ஒவ்வொருவரின் பின்னும் புறம் புறம் திரிந்து, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, அன்பைப் பொழிகிறான். நாமோ, அவனுக்குப் பகையாகவும், முள்ளாகவும், இடியாகவும், எழுத்துப்பிழையாகவும் மாறித் துன்பம் தருகிறோம். தாயான இறைவன், நம் பிழைகளை மன்னித்து, நம் குற்றங்களைக் குணமாகக் கொண்டு, அருள்கிறான். முரண்பாடுகளில் முழுமையைக் காணும் இக்கவிதையில், இறைமையும் மானுடமும் சங்கமிக்கின்றன.

மெய்ம்மையும்! பொய்ம்மையும்!

பொற்சுண்ணம் இருபதாவது பாடலில், முரண்பாடுகளை இறைவனின் வடிவமாகப் போற்றிப் பாடுகிறார் மணிவாசகர். “வேதமும் வேள்வியும் ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் ஆனவரும், ஒளியும் இருளும் ஆனவரும், துன்பமும் இன்பமும் ஆனவரும், பாதியும் முழுதும் ஆனவரும், உயிர்களுக்குப் பந்தமுமாகவும் வீடுபேறாகவும் ஆனவரும், அனைத்துலகுக்கும் முதலும் முடிவும் ஆனவருமான இறைவனை நீராட்டுவதற்குப் பொன்போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்” என்கிறார் பெருமான்.

வேதமும்! வேள்வியும்! ஆயினார்க்கு! மெய்ம்மையும்! பொய்ம்மையும்! ஆயினார்க்குச்

சோதியுமாய்! இருள்! ஆயினார்க்குத் துன்பமுமாய்! இன்பம்! ஆயினார்க்குப்

பாதியுமாய்! முற்றும்! ஆயினார்க்குப் பந்தமுமாய்! வீடும்! ஆயினாருக்கு!

ஆதியும்! அந்தமும்! ஆயினாருக்கு! ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே! (திருவாசகம்: பொற்சுண்ணம்.20)

முரண்பாடுகளில் முழுமையான இறைவனைக் காட்டும் மேற்கண்ட திருவாசகத்தை இப்போது மீள் வாசிப்பு செய்யலாம். ‘வேதமும்’என்பதற்கு வேதமுடிவு உணர்த்தும் ஞானமும் என்றும், ‘வேள்வியும்’என்பதற்கு வினைகளைப் பெருக்கும் கருமகாண்ட வேள்விகள் என்றும் பொருள். கருமம் செய்வதால் உண்டாகும் வினைப்பயன்களைத் துய்த்த பிறகு, வேதமுடிவு உணர்த்தும் ஞானமாக இறைவனை உயிர்கள் உணர்கின்றன.

‘மெய்ம்மை’ என்னும் நிலைத்த பொருளான இறைவனே, ‘பொய்ம்மை’ என்னும் நிலையாத பொருளுக்கு உள்ளும் இருக்கிறான்; உடலில் உயிர்போல, நிலையாப்பொருள் உள்ளிட்ட எல்லாப் பொருட்களிலும் நீக்கமறக் கலந்து நிற்பதால், இறைவனே நிலையாப்பொருளும் ஆகிறான்.

சோதி (ஞானம்), இறைவனது இயற்கை தன்மை; இருள் என்னும் அஞ்ஞானத்திலும் (ஆணவம்), மறைப்பாற்றலாய் நிற்பதால், இறைவனே இருளும் ஆகிறான். இயல்பில் பேரின்ப வடிவானவன் இறைவன்; இறைவன் செய்யும் மறைத்தல் தொழிலால் பிறவித் துன்பம் வருவதால், இறைவன் துன்பமாகிறான்.

புறநானூறு காட்டும் இறைவனின் தொன்மைக்கோலம்!

ஒரு பாதியில் இறைவனும், மறுபாதியில் அம்மையுமாய், அம்மையப்பன்வடிவில் நிற்கும் நிலையையும், இரண்டும் ஒன்றுபட்டு, முழுமையான சிவப்பரம்பொருளாகும் நிலையையும் பாடுகிறார் மணிவாசகர். இதே கருத்தை, புறநானூறு இறைவாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார்

“பெண்உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறநானூறு: இறைவாழ்த்து)

என்று பதிவு செய்துள்ளார். ஒருபாதி எம்பிராட்டியும் மறு பாதி எம்பெருமானுமாக, ஒரே வேளையில், ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்கும் அம்மையப்பன் திருக்கோலம் மிகத் தொன்மையானது. சக்தியைத் தமக்குள்ளாக்கிச் சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கும் கோலத்தில், சிவம் மட்டுமே தோன்றும்.

சிவத்தில் தோன்றும்! அடங்கும் சிவத்துள்!

தோற்றுவிக்கும் முறையில், சிவத்திலிருந்து சக்தியும், சக்தியிடத்திலிருந்து மற்ற தத்துவங்களெல்லாம் தோன்றும். ஒடுங்கும் முறையில், தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்க, இறுதியில் யாவும் சக்தியுள் அடங்கி, அப்பால் அச்சக்தியும் சிவத்துள் அடங்கும், ‘ஒடுங்கும்முறை’யை இப்புறநானூறு இரண்டாவது வரி சொல்கிறது.

ஆணவ மலத்தின் கட்டிலிருந்து உயிரை விடுவிக்க, தனது மறைப்புச் சக்தியால் உடல்பிறவிப் பந்தத்துள் உயிர்களைச் செலுத்தி, உயிரின் அறிவைத் தொழிற்படுத்தும் இறைவனே, பேரின்பப் பிறவா நிலையான வீடுபேறும் ஆவான். அத்தகைய இறைவனிடம் நாம் எப்பொருட்களைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதைக் கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-34-தோன்றாப்-பெருமையன்-இறைவன்/article9732046.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 35: அன்பினில் விளைந்த ஆரமுதே

 

 
shutterstock629261048

‘உடலும் மனமும் நலம் பெற யோகா செய்யுங்கள்’ என்ற சர்வதேச யோகா தினச் செய்தியைக் கண்டதும், ‘நலவாழ்வின் பயன்தான் என்ன?’, என்று கேட்டது மனம். ‘நலமாக வாழ்வதே பயன்தானே’ என்று பதில் கிடைத்தது. ‘வாழ்வின் பயன்தான் என்ன?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டது மனம். வாழ்வு என்றால், கற்பது, கற்றதைப் போல் நின்று வாழப் பயிற்சி பெறுவது, அதன்வழி தொடர்பயணம் செய்வதுமாகும்; வாழ்வின் பயன், உயிர் நலம் பெற்றுத் திருவடிப்பேறு (முழு விடுதலை) அடைவதுமாகும்.

பெற்ற பிள்ளைகள் செய்த தவறுகளைப் பெற்றவர்கள் மன்னிப்பார்கள். நம் எல்லோருக்கும் தாய் தந்தையான அம்மையப்பனோ, தன்னை நினைத்துக்கூடப் பார்க்காத மனிதர்களின் தவறுகளையும் மன்னித்து, எதையும் எதிர்பாராமல், தேவைப்படும் அனைத்தையும் தருகிறான். கருணையே வடிவான இறைவனுக்கு ஒப்பு யாருமில்லை என்பதை “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என்கிறார் மணிவாசகர்.

அமுதினும் உயர்ந்த ஆரமுது

பாற்கடல் அமுதம் உண்டு பெற்ற நீண்ட ஆயுளும் ஒருநாள் முடிவுக்கு வந்து, தேவர்களும் மரணமடைவார்கள்; தேவர்களுக்குப் பாற்கடல் அமுதத்தைத் தந்துவிட்டு, கொடிய நஞ்சைத் தானுண்ட சிவபெருமானோ சாவா மூவா இறைவன்; என்றென்றும் இருந்து பேரின்பம் அருள்பவன் என்கிறது சிலப்பதிகாரம்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்.

(சிலப்பதிகாரம் : வேட்டுவவரி).

தன் திருவடிகளை வந்தடைந்த அடியவர்களுக்குப் பாற்கடல் அமுதினும் உயர்ந்த, அன்பினில் விளைந்த, அரிய அமுதாகிய மரணமில்லாப் பேரின்பப் பெருவாழ்வைத் தருகிறான் சிவபெருமான். ‘அன்பினில் விளைந்த ஆரமுதே!’ என்று இறைவனைப் பாடும் மணிவாசக வரி, இறைவனை அடைந்தால் மரணமில்லாப் பெருவாழ்வும் பேரானந்தமும் பெறலாம் என்ற தெளிவைத் தருகிறது.

முழுமைக் கல்வி

உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது. உலக வாழ்வுக்குக் கைப்பொருள் (பணம்) சம்பாதிக்க வேண்டும்; பிறவிப் பயன் அடைய மெய்ப்பொருள் சம்பாதிக்க வேண்டும். இவ்விரண்டையும் தருவதே முழுமைக் கல்வியாகும்.

பொய்மையே பெருக்கி . . .

கல்வி என்றாலே பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்றாகிவிட்டது; இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ, குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர் நலத்தைப் பேணுவதற்குப் பணம் அவசியம்தான். அந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும், சம்பாதித்ததைப் பொன்னாகவும், சொத்தாகவும், பணமாகவும் சேமித்துப் பாதுகாக்கவும், பொருட்களைப் பெருக்கவுமே வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்துவிடுகிறோம்; அதனால் மெய்ப் பொருளைச் சம்பாதிக்க வேண்டிய காலம் சுருங்கிக்கொண்டே வருகிறது. ‘பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்’ என்று தம் நிலைமையை இறைவனிடம் சொல்லி வருந்துகிறார் மணிவாசகர்.

உடைந்த ஊசியைக்கூட இவ்வுலகத்திலிருந்து யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தேவைக்கும் அதிகமாகப் பணம் சேர்த்து, தேவையுள்ள சகமனிதர்களுக்கு அவை கிடைக்கவிடாமல் பெரும்பாவம் செய்து, வாழ்நாளையும் வீணடித்துவிடுகிறோம். இறுதியில் பிறவிப் பயனை அடையாமலேயே இறக்கிறோம்.

பொய்ப் பொருட்களைப் பெருக்குவதிலேயே வாழ்நாளைக் கழித்துவிட்டு, இறைவனை அறியும் மெய்யறிவு பெறுவதற்கான பொழுதைச் சுருக்கிவிடும் செயலானது, தீவினைகள் பெருகி, பிறவிகளில் உழலும் கொடிய நரகத்தில் நம்மைத் தள்ளிவிடும்.

மெய்யறிவுக்குப் பயன்படாத ‘புழுத்தலை’

மனித உடலில் எப்போதும் இளமையாக இருப்பது மூளைதான். மனித மூளையின் படத்தைப் பார்த்தால், கொழுத்த புழுக்கள் பல, பின்னிக்கிடப்பதுபோல இருக்கும். இறைவனை அறியும் மெய்யறிவுக்குப் பயன்படுத்தப்படாத மூளை இருக்கும் தம் தலையை, பயனற்ற புழுக்களைக் கொண்ட ‘புழுத்தலை’ என்கிறார் மணிவாசகர். பொய்யறிவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அது புழுத்தலையாகிறது. ‘தலையில் என்ன களிமண்ணா இருக்கு?’ என்று தவறுசெய்த மாணவனைக் கடிந்துகொள்ளும் கணித ஆசிரியரைப் போல், வாழ்க்கைப் பாடத்தில் மெய்ப்பொருள் கணக்கை மொத்தமாகத் தொலைத்துவிட்ட நம் எல்லோருக்குமாகச் சேர்த்துத்தான் ‘புழுத்தலைப் புலையனேன் தனக்கு’ என்று தம்மையே நொந்துகொள்கிறார் மணிவாசகர்.

சிவபதம் அளிக்கும் செல்வம்

அத்தகைய புழுத்தலைப் புலையனாகக் கீழ்நிலையில் இருந்தாலும், அன்பினால் இறைவனைத் தொழுதால், அவன் நமக்கு மாற்றுக் குறையாத அருட்செல்வமாகிய செம்மையான சிவபதம் அருள்வான்; ‘செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே’, என்று இறைவனே உண்மையான செல்வம் என்கிறார் மணிவாசகர், “இவ்வுலகிலேயே உன்னை உறுதியாகச் சிக்கெனப் பற்றிக்கொண்டேன். நீ என்னைவிட்டு இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?” என்றார் இறைவனிடம் உறுதியாக. (‘இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!‘)

மனிதப் பிறவி என்னும் வாய்ப்பு இருக்கும்போதே, அன்பால் இறைவனைச் சிக்கெனப் பிடித்து, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வழி இது என்று நமக்குச் சொல்லித் தருகிறார்.

இறைவனைச் சிக்கெனப் பிடிப்போம்

நாம் இறைவனையே நினைக்காமல் இதுவரை இருந்துவிட்டாலும், ‘அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!’ என்று தொடங்கும் இத்திருவாசகத்தைப் பாடினால் சிவபதம் கிடைப்பது உறுதி என்று முழங்குகிறது, ‘செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே’ என்னும் வரி. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; இப்பிறவியிலேயே அன்பினால் இறைவனைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டால், அவன் நம் இதயக்கோயிலிலேயே எழுந்தருளுவான். திருவாசகத்தின் ஆற்றல் அப்படி!

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!

(திருவாசகம்:பிடித்த பத்து:3)

ஆற்றல்மிக்க அன்பால் இறைவனை அழைக்கும் இத்திருவாசகத்தைப்பாடி வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்குவோம்.

தன்னை அறிந்தால் சிவனை அறியலாம்

மெய்ப்பொருளை ஈட்டுவது, தன்னை அறிதல், சிவனை அறிதல், சிவனை அடைதல் என்னும் மூன்றுபடிகளில் நிகழும்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே.

(திருமந்திரம் 2355).

தன்னை அறிதல் என்பது “உடல் அல்ல, மனம் அல்ல. தான் என்பது உயிர் !” என்று அறிவதும், எல்லையற்ற கருணைகொண்ட இறைவன் உயிர்களுக்குத் தந்த கருவிகளே இவ்வுலகமும், உடலும், மனமும் என்றும், சிவபதம் அடைவதே வாழ்வின் பயன் என்றும் அறிவதாகும். தன்னை அறியும் அறிவைப் பெற்றவன், தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான் என்கிறது திருமந்திரம். இனி, இறைவனிடம் நாம் வேண்டிப் பெற வேண்டிய பொருட்கள் எவை என்று கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-35-அன்பினில்-விளைந்த-ஆரமுதே/article9740062.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்

 

 
ps96E6

மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்கான மெய்யறிவைப் பெறுவதே நம் பிறவி நோக்கம் என்பதை மறந்துவிட்டு, நிலையில்லாத பொய்ப்பொருளான கைப்பொருளைச் சம்பாதிக்கவே வாழ்நாளை வீணாக்கிவிட்டோம். மீதமிருக்கும் குறைந்த நேரத்தை வீணாக்காமல், இறைவனிடம் நாம் வேண்டுவது எது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை இறைவனிடமே விட்டுவிடுவது புத்திசாலித்தனம் என அறிவுரை தருகிறார் மணிவாசகர்.

முட்டிய பின் பணிவதைவிட . . .

‘சாவதற்காக யாரும் மருந்து உண்ணமாட்டார்கள்’ என்பது பழமொழி. நன்மை தருவதை விட்டுவிட்டு, தீமை தருவதை இறைவனிடம் எவரும் கேட்க மாட்டார்கள்தாம். ஆனாலும், நமக்கு நன்மை தருபவை எவை, தீமை தருபவை எவை என்று சரியாகத் தீர்மானிக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை. அறியாமையால், நமக்குத் தீமை தருவதைக் கேட்டுப் பெற்று, தீமையை அனுபவித்து முட்டிய பிறகு, இறைவனிடமே மீண்டும் பணிந்து சென்று வேறு ஒன்றைக் கேட்பதை விட எளிதானது, நாம் கேட்டுப் பெறவேண்டியவை எவை என்று முடிவுசெய்வதை இறைவனிடமே விட்டுவிடுவதாகும்.

பாதாளம் ஏழுக்கும் கீழ் சென்று தேடிய திருமாலுக்கும், பல உலகங்களுக்கு மேலே பறந்து நோக்கிய பிரம்மனுக்கும் காட்சி தராத சிவபெருமான், நம் உடலில் இருந்து, விரும்பி நம்மை ஆட்கொள்கிறான்; இந்நிகழ்வு, இறைவனின் எளிமையாலும், கருணையாலுமே தவிர, நம் திறமையால் இல்லை. இறைவனாக விரும்பி நமக்கு எதைத் தருகிறானோ, அதுவே நமக்குரிய சிறந்த பொருளாக இருக்கும் என்பது உறுதி. எனவே, அவன் விரும்பித் தருவதையே, நாமும் மகிழ்வோடு வேண்டிப் பெற்றுக்கொள்வோம்.

உன்னிடம் நீங்காத அன்பைத் தருவாய்இறைவா

ஒருவேளை இறைவன் நம்மிடம், “உனக்கு வேண்டும் பரிசு ஒன்றை கட்டாயம் என்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டே தீரவேண்டும்”, என்று சொன்னால், நாம் மறக்காமல் அவனிடம் கேட்க வேண்டிய பரிசு, “உன்னையே விரும்பும் மனமும், எப்போதும் நினைக்கும் சிந்தனையும், உன்னிடம் நீங்காத அன்பும் தருவாய்”, என்று கேட்கச் சொல்கிறார் மணிவாசகர். இந்த அறிவுரையை நமக்கு வழங்கிய திருவாசகம் இதுதான்:

வேண்டத் தக்கது அறிவோய்நீ; வேண்ட முழுதும் தருவோய்நீ!

வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ; வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீயாது அருள்செய்தாய்; யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே!

(திருவாசகம்:33-6)

எவ்வளவு பொருத்தமான அறிவுரை என்று எண்ணிப் பாருங்கள்.

வேண்டத்தக்கது சிவமே

இத்திருவாசகத்தை நுட்பமாக கவனித்தால், "நான் வேண்டத்தக்கபொருள், மெய்ப்பொருளாகிய நீயே (அறிவோய்நீ); நான் வேண்டுவதால், உன்னையே முழுவதும் தருவாய் நீயே!" என்று மணிவாசகர் கேட்பது புரியும். வேறு எந்தப் பொருளும் மெய்ப்பொருளாகிய இறைவனுக்குச் சமமாகாது. ‘அவனையே’ தருமாறு நாம் வேண்டினால், எல்லையற்ற கருணையாளனான இறைவன் ‘ஞானப்பொருளான தன்னையே’ நமக்குத் தந்துவிடுவான். பிறகென்ன? அனைத்தும் நிகழ்ந்துவிடும் அல்லவா?

இப்படி, சிவத்தையே கேட்டுப்பெற்றுச் சிவமாகவே ஆனார் மணிவாசகர். இதை, தில்லையில் அருளிய கோயில் திருப்பதிகத்தில், அவர் திருவாக்காலேயே சொல்லிவிட்டு, இறைவனுக்கு ‘ஏமாளி’ என்று பட்டமும் சூட்டுகிறார் பெருமான்.

நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தன்

இறைவனைப் பார்த்து, “எந்த வியாபாரத்திலும், கொடுப்பதும் வாங்குவதும் முறையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும். இறைவா! நான் உன்னிடம் ஒரு பண்டமாற்று வியாபாரத்துக்காக வந்தேன். என்னிடம் இருந்ததோ, என்னுடைய உயிர் குடிகொண்டிருந்த, இருள் திணிக்கப்பட்ட, கொடுமையான வல்வினைகள் குடிகொண்டிருந்த ஒரு வீடு;

அதாவது, என் பொத்தை ஊன்உடம்பு. உன்னிடம் இருப்பதோ, ஒளி பொருந்திய, வினைகள் தீண்டமுடியாத, பேரின்ப நிலைத்த முத்தி வீடு; நீ ஒரு சரியான ஏமாளி! நான் தந்த வல்வினைகள் குடிகொண்டிருந்த இருண்ட வீட்டை வாங்கிக்கொண்டு, உன்னுடைய ஒளிமயமான பேரின்ப வீடாகிய திருவடிகளை எனக்குச் சூட்டிவிட்டாய்! நம் இருவரில் யார் சாமர்த்தியசாலி? இந்த வணிகத்தில் நான் பெற்றதோ, முடிவில்லாத ஆனந்தம்! நீ என்னிடமிருந்து பெற்றது என்று ஏதும் உண்டா?

என் சிந்தையே கோயிலாகக் கொண்ட திருப்பெருந்துறையில் வாழும் எம் சிவபெருமானே! என் உடலையே உன் இருப்பிடமாகக் கொண்டதால், பேரின்ப வீடாகி விட்டது என்னுடல்! என் தந்தையே! ஈசனே! உன்னுடைய எல்லையற்ற இக்கருணைக்கு கைமாறாக உனக்குத் திருப்பிச் செய்ய என்னிடம் உருப்படியான பொருள் எதுவும் இல்லாமலிருக்கிறேன்!” என்றார் மணிவாசகர்.

‘நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தனைப் போல் ஆகிவிட்டாய் நீ’ என்று இறைவனைப் பழிப்பதுபோலப் பாடி, இறைவனது பிரதிபலன் கருதாத, பெருங் கருணைப் பேரருளைப் போற்றிப் புகழ்கிறார் மணிவாசகப் பெருமான்.

இப்படி, லாபமே இல்லாத வணிகம் செய்யும் கருணை, இறைவனின் கருணை மட்டுமே ஆகும். இங்கு, மணிவாசகர் கேலி செய்வதுபோல் புகழ்ந்து பேசுவது, இறைவனுடைய எல்லையற்ற கருணையின் பெருமையைச் சொல்லித் துதித்து, நமக்கெல்லாம் வழிகாட்டவே என்பதை நினைவில் வைப்போம்.

நமக்கான திருவாசகம்

இப்படி, வேண்டத்தக்கது எது என்பதை இறைவனிடமே விட்டுவிடுவது நல்லது என்றாலும், மனசுதான் கேட்கமாட்டேன் என்கிறதே! நமக்கு மட்டுமல்ல, மணிவாசகருக்கும்தான். இப்படிப் பாடி, தாம் பெற்ற பெரும்பேற்றை நம்முடன் பகிர்ந்துகொண்ட பெருமான், நம் போன்றோர் இறைவனிடம் பேசும் வகையில், நமக்கான திருவாசகம் ஒன்றை, வடித்துத் தந்தார்; நம் எண்ணத்தை இறைவனிடம் பகிர்ந்துகொள்ளும் நமக்கான திருவாசகம் ஒன்றை இப்போது கேட்போம்.

“சிறப்பையே வடிவமாக உடைய எங்கள் சிவபிரானே! அழகான செந்தாமரை மலர் போன்ற அரிய உருவத்தையுடையனே! என்னருமை ஆரமுதே! இப்பூமியில் தோன்றுகிற பல்வேறு உடல் பிறவிகள் எனக்கு வாராமல் அறவே நீக்கி, நீ அருள வேண்டும். உன்னிடத்தில் நீங்காத பேரன்புப் பக்தியையும் நான் பெறவேண்டும். அப்படிப்பட்ட பேரன்புப் பக்திமைப் பண்பு, என்னிடம் நிலையாக இருக்க, உன்னடியவர்கள் கூட்டத்தின் நடுவில் இருக்கும் தகுதியை நான் பெறவேண்டும்; உன் அடியவர் கூட்டத்தில் இருக்கும் தகுதியைப் பெறுவதற்கு, ஈடு இணையற்ற, உன் திருவருளை நான் பெறவேண்டும். அத்தகைய ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் ஆட்கொண்டு அருள்வாயாக”, என்று அற்புதமாகப் பாடினார் பெருமான்.

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;

சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல

ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே,

ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே!

(திருவாசகம்:44.1)

இறைவன், அருளே வடிவமானவன் என்பதால், அதனை ‘ஓருருவாய நின் திருவருள்’ என்றார். பிறவி நீங்கப் பக்தியும், பக்தி உண்டாக அடியவர் கூட்டத்தில் இருப்பதுவும், அடியவர் கூட்டத்தில் இருப்பதற்கு இறைவன் அருளும் வேண்டும். இதனால், ‘அடியவர் கூட்டம்’ பிறவி நீங்குவதற்குரிய ‘கருவி’ என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார் மணிவாசகர்.

இறைவனுடன் பேசுவதற்கு எள்ளளவுத் தகுதிகூட தமக்கு இல்லை என்று வருந்தும் மனிதர்களும் இறைவனுடன் பேசுவதற்கு வழிகாட்டும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-36-ஓருருவாய-நின்-திருவருள்/article9750245.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 37: பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!

 

 
White%20Lingam

திருவாசகத்தின் சிறப்பே, சாமானிய மனிதர்களும், அவரவர் நிலையில், அவரவர் மொழியில், இறைவனிடம் நேரடியாகத் தங்கள் குறையைத் தெரிவிப்பதற்கும், தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் ஏற்ற வகையில் பல பாடல்களைக் கொண்டுள்ளதாகும். எண்ணப் பதிகத்தில், மணிவாசகர் இறையருள் கிட்டுவதற்குத் தாமதமாவது குறித்து மிகவும் வருந்தி, மனமுருகி, ஊனையும், உயிரையும் உருக்கும் ஆறு பாடல்கள் அருளியுள்ளார்.

சிவனோடு உரையாட, சிவனோடு உறவாட . . .

ஆயிரம் வார்த்தைகளில் விளக்கப்படவேண்டிய செய்தியை, ஒரு ஓவியம் எளிதில் விளக்கிவிடும். ஆயிரம் ஓவியங்கள் விளக்கும் கருத்தை, ஒரு இன்னிசைத் துணுக்கு ஆழ்மனதில் பதித்துவிடும். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மும்மூர்த்திகளின் பாடல்களுக்கான பண்ணிசையை அவர்களே அமைத்துக் கொடுத்துள்ளார்கள்; திருவாசகப் பாடல்களுக்கு யாப்பு உண்டே தவிர, எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற இசை வழிகாட்டுதல் இல்லை;

அதனால் பொருத்தமான இசையில் திருவாசகப் பாடல்களைப் பாடமுடியாத பெருங்குறை அன்பர்களுக்குண்டு. இதனால், “திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்னும் பழமொழி நடைமுறை அனுபவத்தில் வராமல் போனது.

எண்ணப் பதிகத்திலிருந்து ‘பாருருவாய’ மற்றும் ‘பத்திலனேனும்’ என்று தொடங்கும் சாமானியருக்கான இரு பாடல்களை, இசையமைப்பாளர் இளையராஜா அவர்களே தேர்ந்தெடுத்து, இசையமைத்து வெளியிட்டுள்ளது தமிழர்களுக்குக் கிடைத்த வரம்.

மணிவாசகரே இசையானார்

இவ்விரு பாடல்களும் இளையராஜாவின் இசையில் உயிர்பெற்றெழுந்து நம் ஊனையும் உயிரையும் உருக்குகின்றன; பண் அமைப்பதற்காக, மணிவாசகரே இளையராஜா ஆனாரோ என்றே எண்ணுகின்றன நம் மனங்கள். இப்பாடல்களின் ஆழ்ந்த பொருளில், பல காலங்கள் ஊறித் திளைத்திருந்தால் மட்டுமே, இத்தகைய தெய்வீக இசை சாத்தியம்.

இவ்விசை, வான்கலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து நம்மை இறைவனுடன் சங்கமித்தது. நாதத்துக்கே தலைவனான நாதாந்த நாயகன் சிவபெருமான், இசைஞானிக்குத் தன்னையே தந்திருப்பான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. திருவாசகப்பொருள் உணர்ந்த இசை ஞானியின் இசையில் அனைத்துத் திருவாசகங்களும் சாமானியர்களைச் சென்றடைய, சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து வேண்டுவோம்.

இறைவனிடம், பிறவி நீங்கப் பக்தியும், பக்தி உண்டாக அடியவர் கூட்டத்தில் இருப்பதுவும், அடியவர் கூட்டத்தில் இருப்பதற்கு இறைவன் அருளையும் நாம் வேண்ட, நமக்குத் திருவாசகம் தந்தவர் மணிவாசகர். இறைபக்தி இல்லாதவர்கள், இறைப்பற்று இல்லாதவர்கள், இறைவனை வணங்காதவர்கள், அவன் திருவடிகளைக் காண விருப்பம் இல்லாதவர்கள் என்று ஆன்மவிடுதலைக்கான எந்தத் தகுதியும் இல்லையே என்று வருந்துபவர்களுக்காக, 'பத்திலனேனும்" என்று தொடங்கும் திருவாசகத்தை அருளினார்;

மணிவாசகரின் கருணையைப் போற்றுவதா, மணிவாசகராகவே மாறி, இசை வடிவத்தில் நம் உள்ளமெல்லாம் நிறைந்த இசை வாசகம் இசைத்த இளையராஜாவைப் போற்றுவதா, இவ்விருவருள்ளும் நிற்கும் சிவபெருமானின் கருணையைப் போற்றுவதா என்று உருகும் மனதோடு இப்பாடலின் பொருளைக் காண்போம்.

பத்திலன் ஏனும், பணிந்திலன் ஏனும்

“எம்பெருமானே! உன் மேல் பக்தி இல்லாதவனாக இருந்தாலும், பற்று இல்லாதவனாக இருந்தாலும், இதுவரை உன்னைப் பணிந்து வணங்காதவனாக இருந்தாலும், ஞானியர் போற்றிப் பாடி, அடைய விரும்பும் உன் உயர்ந்த பைங்கழல் திருவடிகளைக் காணும் பித்து இல்லாத வெற்று மனிதனாக நான் இதுவரை இருந்துவிட்டாலும், உன்னையே நினைந்து பிதற்றும் எல்லையற்ற அன்பு உன்பால் இதுவரை எனக்கு இல்லை என்பது உண்மையே ஆனாலும், என்னுடைய பிறவிநோயை நீக்கி, உன் திருவடிகளில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முத்துப் போன்றவனே! மாணிக்க மணியைப் போன்றவனே! எப்போதும் உன்னையே நினைந்து, “என் முதல்வனே! முறையோ?” என்று உன்மேல் எல்லையற்ற அன்போடு முறையிட்டு, நான் உன்னைத்தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறேன்; இனிமேலும் உன்னைப் பிரிந்து இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது; எனவே என்னை அழைத்துக்கொள்”, என்று இறைவனிடம் முறையிடுகிறார் மணிவாசகர்.

பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப்

பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே!

முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ? என்று

எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.

(திருவாசகம், எண்ணப் பதிகம்: 4)

மணிவாசகரின் இறையன்பையும், பக்தியையும், இறைப்பற்றையும் உலகே அறியும். இருந்தும்கூட, இவை எதுவும் இல்லாத நம்போன்றோரின் தகுதிக் குறைவை, தமக்கே நேர்ந்ததுபோல் கசிந்துருகும் மணிவாசகரின் ஈடு இணையற்ற கருணைக்கு நெஞ்சார நன்றி செலுத்துவோம். இறைவனுடன் பேசுவதற்கு எள்ளளவுத் தகுதிகூட தமக்கு இல்லை என்று வருந்தும் மனிதர்களும் இறைவனுடன் பேசுவதற்கு வழிகாட்டும் திருவாசகம் இது.

காணவும் நாணுவனே

கடும் வறுமையில் வாடிய கண்ணபிரானின் ஆருயிர் நண்பர் குசேலர், தம் மனைவியின் ஆலோசனைப்படிக் கண்ணபிரானைக் காணச்சென்றார்; வெகுநாட்கள் நண்பனைக் காணச்செல்லாத குற்றவுணர்வில் கூனிக் குறுகினார்; மிகுந்த அன்போடு, தம்மை ஆரத்தழுவி வரவேற்ற கண்ணபிரானைக் காணவும் நாணினார் குசேலர்.

இக்காட்சியை நினைவுபடுத்துகிறது எண்ணப் பதிகத்தின் ஐந்தாவது பாடல். “எம் பெருமானே! நிலையானவனே! உன் திருவடிகளைக் காண்பதையும் இழந்ததால் வறுமையுற்றேன்; கண்கள் களிப்புறப் பார்த்துப் போற்றுவதையும் இழந்தேன்; வாயால் போற்றித் துதிப்பதையும் இழந்துவிட்டேன்; என்னுடைய அற்பத்தன்மையால் உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பையும் நான் இழந்துவிட்டேன்; இவற்றால், பிறகு முழுமையாகக் கெட்டுவிட்டேன். அதனால், இனிமேல் நீயே என் கண்முன்னே வந்தாலும், உன்னைப் பார்ப்பதற்கும் நாணுகின்றேன், கூசுகின்றேன்!”, என்று கதறினார் மணிவாசகர். (தாணு-நிலையானவன்)

காணும் அது ஒழிந்தேன் நின் திருப்பாதம்; கண்டு கண் களிகூர,

பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,

தாணுவே, அழிந்தேன்; நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்

காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

(திருவாசகம், எண்ணப் பதிகம்: 5)

அடியவர்கள் இடைவிடாது மனதாலும், கண்களாலும் திருவடிகளைக் காணவேண்டும், வாயால் போற்றிப் பாடித் துதிக்கவேண்டும்; அவ்வாறு செய்தால் இறைவனையே எண்ணி உருகும் இயல்பு நம்மிடம் தாமாக வந்துவிடும். பிறகென்ன? இறைவனின் திருக்காட்சியை கண்ணாரக் கண்டு, பதமுத்தியைப் பெற்றுப் பேரின்பமடையலாம் என்பது இத்திருவாசகத்தினைப் பாடுவதால் கிடைக்கும் பெரும்பேறாகும். “பத்திலனேனும்” பாட்டுக்கு இளையராஜா அமைத்த பண்ணிலேயே இப்பாடலையும் தேன்மழையாகப் பாடி சிவனருளைப் பெறலாம்.

இறைவனே இல்லை என்று மறுத்து, இறைநிந்தனை செய்து வாழ்ந்ததற்காக வருந்துவோரும் விடுதலையடைந்து, உய்வு பெறுவதற்காக, மணிவாசகப் பெருமான் மனமுருகி வேண்டும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-37-பிறப்பு-அறுப்பாய்-எம்பெருமானே/article9762236.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 38: விழுகின்ற என்னை விடுதி கண்டாய்

 

 
Vankanantha%20Manichavasagam

னிதகுலம் என்பது பல்வேறு குணங்களையும் பல்வேறு செயல்பாடுகளையும் பல்வேறு நிலைப்பாடுகளையும் கொண்ட மனிதர்களின் கூட்டம். குணம், செயல்பாடு, நிலைப்பாடு ஆகியன ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுவதைப் போல், ஆன்மிக வழிபாட்டுத் தேவைகளும் வேறுபடும். தேவாரம் உள்ளிட்ட மற்ற திருமுறைப் பாடல்கள் இறைவனின் பேராற்றலைப் போற்றித் துதிக்கவும், கருணையைப் பாடிப் பரவசமடையவும் மிகவும் துணைசெய்கின்றன.

ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் தன் சிறுமைகளையும், குற்றங்குறைகளையும் மனம்விட்டு இறைவனிடம் பேசி, தனக்கான விடுதலையையும் கருணையையும் இறைவனிடம் கேட்க உதவும் மொழியையும் வெளியையும் அவற்றிலிருந்து பெற இயலவில்லை.

 

மனிதனுக்கான இறைமொழி

இறைவனுடன் மனம்விட்டுப் பேச விரும்பும் மனிதனுக்கான மொழியாகவும், வெளியாகவும் திருவாசகம் திகழ்கிறது. திருவாசகத்தின் ஒவ்வொரு பாடலிலும், தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியந்து ஒருவரால் பாட முடியும் போது, இறைவனின் கருணையின் பெருமையை அவர் நெஞ்சார உணர்கின்றார்; ‘தான்’ என்னும் அகங்காரம் அடியோடு ஒழியுமாறு, ஒருவர் தன் சிறுமைகளை, தன் வாயாரக் கூறிப்பாடத் துணைசெய்யும் திருவாசகங்கள், மொத்த மனிதகுலத்துக்கே விடுதலைதரும் ஆற்றல்மிக்க இறைமொழிகளாகின்றன.

வாழ்க்கையில் தவறே செய்யாதவர் என்று யாருமில்லை. செய்யக்கூடாத தவறைச் செய்துவிட்டேன்; எனக்கு மன்னிப்பே இல்லை என்ற குற்றவுணர்வில் அல்லல்படுபவரும், தவறுக்கு வருந்தி இறைவனிடம் அடைக்கலம் புகுந்தால், கடைத்தேற்றிக் காப்பான் கருணைவள்ளல் இறைவன் என்ற உறுதிப்பாட்டையும் ஆறுதலையும் தருவது திருவாசகம். திருவாசகத்தின் இவ்வாற்றலை உணர்த்தும் உரைகல், திருவாசகம் படிக்கும்போது ஆறாக ஊற்றெடுக்கும் கண்ணீர்; பக்குவப்படும் மனம் சொல்லும், இது எனக்கான திருவாசகம் என்று.

 

இடைச்செருகல் இல்லாத திருவாசகம்

ஒவ்வொரு தனிமனிதனும் இறைவனிடம் பேசும் மொழி ஆற்றலை, திருவாசகப் பாடல்கள் எவ்வாறு தருகின்றன என்று நோக்குவோம். தன் சிறுமைகளையும் குற்றங்குறைகளையும் விரிவாகக் கூறி, இவ்வளவு கீழ்மையான நிலையில் இருக்கும் தனக்கு, அருள்புரிந்ததை வியக்கும் வகையில், வருந்தி அதிலிருந்து மீட்குமாறு விண்ணப்பிக்கும் வகையில் திருவாசகப் பாடல்கள் அமைந்துள்ளதால், இறைவனிடம் பேசும் மொழியாற்றல் தனிமனிதர்களுக்குச் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. இத்தகைய உணர்வுதரும் திருவாசகப் பாடல்களை, வேறு யாராலும் எழுத முடியாததால், இடைச்செருகலாகப் போலிப் பாடல்கள் திருவாசகத்தில் இல்லை.

 

மனிதகுலத்துக்கான விடுதலை

மணிவாசகர் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் சிறுமைகள் மனிதகுலம் முழுவதற்கும் பொருத்தமாக இருக்கிறபோது, தனக்குப் பொருத்தமான திருவாசகத்தை அடையாளம் காணும் ஒருவன், எளிதில் தனது சிறுமைகளையும் இறைவனின் பெருமைகளையும் மனப்பூர்வமாக உணர்கிறான்; ஆணவமும், ‘தான்’ ‘தனது’ என்னும் பார்வைகளும் தவறு என்றுணர்ந்து மாற்றம் அடைகிறான்; சக மனிதர்களின் தேவைகளின் நியாயத்தை உணர்கிறான்; தன்னைத் தொண்டுக்கு ஆட்படுத்தும் மனநிலை பெறுகிறான். ஆன்ம விடுதலைக்கான எளிய பாதையை மனித குலத்துக்குக் கட்டமைத்துத் தந்தது திருவாசகம் மட்டுமே.

கைப்பொருள் ஈட்டவும், புறவுலகைத் தொழில்நுட்பத்தால் மாற்றவும் அறிந்துகொண்ட மனிதனின் புற அறிவு, அனைத்தையும் இயக்கவும், மாற்றவும் தன்னால் முடியும் என்ற கர்வம்கொண்டு, இறைவனின் இருப்பையும் கருணையையும் மறுக்கும்; அத்தகைய மனநிலையில், இறைவனே முன்னால் நின்று, அருள்அமுதை ஊட்டினாலும், ‘நீ இறைவனல்லன்’ என்று மறுக்கவும் செய்யும்; இறைமறுப்புக் கொள்கை மிகப் பழமையானது.

 

இறைமறுப்பு என்னும் ஏழ்மை

இறைமறுப்புக் கொள்கையில் பலகாலம் வாழ்ந்து, இறைவனை இகழ்ந்ததை, ‘ஏழைத் திருத்தாண்டகம்’ பதிகத்தில் பதினோரு பாடல்களில் பாடி வருந்துகிறார் அப்பர் பெருமான் . மெய்ப்பொருளாம் இறைவனை இழந்ததையே ஏழ்மை என்கிறார் மணிவாசகர்; “எண்ணிலேன் திருநாமம் ஐந்தெழுத்தும், என் ஏழைமை அதனாலே” என்பது திருவாசகம். அருளமுதம் தரவந்த இறைவனைப் ‘பித்தன்’ என மறுத்து இகழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், பின்பு, செந்தமிழால் ‘பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!’ என்று பாடித் துதித்தார். சமயக் குரவர்கள் நால்வரில், மாணிக்கவாசகரும் அப்பரும் சுந்தரரும் இறைவன் அருளமுதத்தை முதலில் மறுத்தவர்கள்தாம்.

 

தீயில் விழும் விட்டில்பூச்சி

இறைமறுப்புச் செயலைத் தாம் செய்ததாகக் கூறும் மணிவாசகரின் வாக்குமூலத்தைக் கேட்போம்: “தேனினை உண்ட வாயோடு, வண்டுகள் கிண்டிக்கொண்டிருக்கின்ற கொன்றைமலர் மாலையை முடியில் அணிந்த உத்தரகோசமங்கைக்கு அரசே!, வளர்கின்ற தீயினைச் சுற்றி வட்டமிட்டு, இறுதியில், அதிலேயே விழுந்து தன்னை அழித்துக்கொள்ளும் விட்டில்பூச்சி; அதுபோல, இந்த உலக வாழ்வே இன்பம் என்று நினைத்து, அதிலேயே விழுந்து என்னை நானே அழித்துக்கொண்டிருக்கிறேன். என் வழியில் நின்று, நீ உன் அருள் அமுதை, என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேனே!” என்று வருந்தும் திருவாசகம், நம் ஊனையும் உயிரையும் உருக்குகிறது. (வெறி - தேன்; அறுகால் - ஆறுகால் உடைய வண்டு)

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்

விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்

உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே!

வழி நின்று, நின் அருள் ஆர்அமுது ஊட்ட மறுத்தனனே!

(திருவாசகம்: நீத்தல்விண்ணப்பம்:5)

தானே வந்து, வழிமறைத்த இறைவன், ‘அமுதை வாங்கிக்கொள்’ என்று கையில் தந்திருந்தால். ஒருவேளை, அதை உண்ணாமல் வீணாக்கிவிடலாம் என்று ஊட்டிவிட அல்லவா முயன்றிருக்கிறான்! அப்படி முயன்றும், அருளமுதை வேண்டாம் என்று மறுத்துவிட்டதற்காக மிகவும் வருந்துகிறார் மணிவாசகர். இறைவன் நமக்குத் திருமுறைகள் மூலம் அருள்தருவதைச் சுலபமாக அலட்சியம் செய்துவிடுகிறோம். அல்லது, மறுத்துவிடுகிறோம்.

இறைமறுப்பைச் செய்யும் மனிதர்கள், தங்கள் தேடலின் முதிர்ச்சி நிலையில், இறைவனின் இருப்பை அறிந்து, இறைவனைப் பழித்ததற்காகவும், ‘இறைவனே இல்லை’ என்று மறுத்ததற்காகவும் வருந்துவர். காரணம் கூறி, பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுவர். அத்தகைய மனிதர்களுக்காகப் பிறந்த திருவாசகத்தைக் காண்போம்.

 

அருள் அறியாமையால் மறுத்தனன்

“என் கண்மணியினும் சிறந்த மாணிக்கமணியே! என்னுடைய அறியாமையால், நீ ஊட்டிய அருளமுதத்தை உண்ண மறுத்துவிட்டேன். அதற்காக, நீ என்னை வெறுத்து, கைவிட்டு விடாதே! உத்தரகோசமங்கைக்கு அரசே! என்னுடைய மொத்த வினையையும் நீக்கி, அடியேனை ஆண்டுகொள் இறைவா! சிறுநாய்களின் பொய்களைப் பொறுக்கும் பெரியவர்களைப் போல், நீயும், உன்னை மறுத்த என்னை மன்னித்து ஆட்கொண்டு அருள வேண்டும்” என்கிறது இத்திருவாசகம்.

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே!

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி

ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,

பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

(திருவாசகம்:நீத்தல் விண்ணப்பம்:6)

கிடைப்பதற்கரிய தங்கக் கிண்ணம் ஒன்று கையில் கிடைக்கப்பெற்ற குழந்தை, அதைப் பாதுகாக்காமல், கண்ட இடத்திலும் போட்டுத் தொலைத்துவிடுவதற்குக் காரணம், தங்கக் கிண்ணம் மதிப்புமிக்கது என்பதைக் குழந்தை அறியாததே ஆகும். உலகப் பொருள் தொலைந்ததால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை; இங்கு தொலைக்கப்பட்டதோ, அறிவே வடிவான அருளமுதம். ‘அருள் அறியாமை’க்குக் காரணமான வினைகளை நீக்கி, ஆண்டுகொள்ள வேண்டுகிறார். “என்னைப் போன்ற சிறுநாய்களின் பொய்யினை இவ்வுலகின் பெரியவர்கள் பொறுத்தருள்வார்கள்; நீயோ, எல்லாப் பெரியவர்களையும்விட, மிகப் பெரியவன். ஆகவே, நான் அறியாமையால் மறுத்த உன் அருளமுதத்தை, சிந்தாமல், சிதறாமல் எனக்குத் திருப்பித்தருவது உன்னுடைய கடமை” என்று இறைவனிடம் உரிமை வழக்காடும் இப்பாடல் நமக்காகப் பிறந்த திருவாசகம்.

சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவராகிய மணிவாசகர், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரா என்ற கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை அடுத்த வாரம் காண்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19363551.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 39: அறுபத்து மூவரில் மணிவாசகர் உண்டா?

shutterstock479061967

தி

ருவாசகத்தேன் தந்த வள்ளலும் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவருமாகிய மாணிக்கவாசகர், சைவத் திருத்தொண்டர்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கொள்ளப்படவில்லை என்பது பெரும்பான்மையான சைவசமய அன்பர்களுக்கே பெருவியப்பைத் தரும். நாயன்மார்களின் எண்ணிக்கையைப் பாடும் சுந்தரரின் திருத்தொண்டர்தொகையை அடியொற்றி, திருத்தொண்டர் திருவந்தாதியை நம்பியாண்டார் நம்பிகள் அருளினார். இவ்விருவர் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார் சேக்கிழார் பெருமான்.

திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. இக்கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை வரலாற்றுப் பார்வையுடன் தேடுவோம்.

 

கணக்கீடு தோன்றிய முறை

இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்’ என்று (தொகையடியாரைக் குறித்து) சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுக்க, பதினொரு பாடல்களில், அறுபத்தொரு தனியடியார் திருத்தொண்டர்களையும் எட்டுத் தொகையடியார்களையும் பாடி, திருத்தொண்டர் தொகையை நிறைவுசெய்தார் சுந்தரமூர்த்தி நாயனார். இறைவனே எடுத்துக்கொடுத்த முதலடியில், தொகையடியார்களான தில்லையில் வாழும் அந்தணர்களையும் மற்ற தொகையடியார்கள் எழுவரையும் பத்தாவது பாடலிலும் பாடியுள்ளார்; மற்ற பாடல்கள் அனைத்திலும் தனியடியார்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளனர்.

 

திருத்தொண்டர் திருவந்தாதி

திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள், இத் ‘திருத்தொண்டர் தொகை’யிலிருந்து ‘திருத்தொண்டர் திருவந்தாத’என்னும் சார்புநூல் ஒன்றைச் செய்தார்.

சுந்தரர் பாடிய ஏழாம் பாடலில் வரும் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்னும் அடியைத் தொகையடியாராகக் கருதிய நம்பியாண்டார் நம்பி, அதற்கு, தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், ‘கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்து ஒன்பது கடைச் சங்கப்புலவர்கள்’ என்று குறிப்பிட்ட தொகையடியார்களுக்கு ஏற்றிப் பாடிவிட்டார். மற்ற அறுபது தனியடியார்களுடன், சுந்தரரையும், அவர்தம் பெற்றோர் சடையனார் – இசைஞானியம்மையார் இருவரையும் சேர்த்து, திருத்தொண்டர்கள் அறுபத்து மூவர் என்று கொண்டு பாடிவிட்டார்.

சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர்தொகையையும் திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக்கொண்டு, பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். பெரிய புராணத்தில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு விரிவாகச் சொல்லப்படுகிறது.

‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற வரிக்கு நம்பியாண்டார் நம்பிகள் கூறும் ‘பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர்’ என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளார் சேக்கிழார் பெருமான்.

‘திருத்தொண்டர் தொகை’யை உற்றுநோக்கினால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் பல சிறப்புப் பெயர்களைக் காணலாம். இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று பல தனியடியார்களையும் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்துள்ளது தெளிவு.

 

சேக்கிழாரின் அறிவுநுட்பம்

‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று அறியப்படுபவர் ஒரு ‘தனியடியாரே’ என்பதால்தான், ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டு வாழும், அவரல்லாத ஏனைய தொகையடியார்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி அடிகள் மீண்டும் குறிப்பிட்ட நுட்பத்தைத் தெளிந்துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்?

இத்துணை தெளிவாக விளக்கினாலும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பு ஏதும் கூறாது, சரியான விளக்கத்தைச் சேக்கிழார் பெருமான் பாடிச் சென்றது, நம்பியடிகள் பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாம் கொண்ட கருத்தில் சேக்கிழாருக்கு இருந்த உறுதியையும் விளக்குகிறது.

 

மணிவாசகரின் காலம்

‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பட்ட அத்தனியடியார் மாணிக்கவாசகர்தாம் என்பதை நிறுவுமுன், மாணிக்கவாசகரின் காலம் சுந்தரருக்கு முற்பட்டது என்று நிறுவ வேண்டும்.

மணிவாசகர் காலத்தை ஒன்பதாவது நூற்றாண்டு என்பது பெரும்பான்மைத் தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. அவர்களது ஆய்வு முடிவுகள் புறச்சான்றுகள் கொண்டே முடிவு செய்யப்பட்டுள்ளன.

 

தில்லை மரங்களே சாட்சி

சிதம்பரம் நடராசர் திருக்கோயில், ஒருகாலத்தில் கடல் சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும் பகுதி காடாக இருந்ததால் ‘தில்லைவனம்’ என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத்தலத்தின் தலவிருட்சம் தில்லை மரமேயாகும்.

காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகி உப்பங்கழி சூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கி, தில்லையை அடுத்து பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவு சென்று பிச்சாவரத்தில் நிற்கிறது; பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லை மரங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம்.

தில்லையை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கி உப்பங்கழி சூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கி ‘பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாக’க் காட்சியளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப் போகிறது என்று சலிப்படைய வேண்டாம். அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது மாணிக்கவாசகரின் கால வரலாறு.

ஞானசம்பந்தர் பார்த்த உப்பங்கழி சூழ்ந்த தில்லை

திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலில்

மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் (திருமறை: 1.866.1-2)

‘மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்து ஓச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள்’ என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது. எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒருபக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவாகிறது.

மணிவாசகரின் பாடல்களில் தில்லைக் கோயிலை எப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று அடுத்த வாரம் காண்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19409007.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 40 - பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்

 

 
Manik

திருவாசகத்தில் நான்கு பாடல்களில் தில்லையைக் குறித்து மணிவாசகர் கூறிய சான்றுகள் கிடைக்கின்றன. திருவாசகத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்தின் 20-ம் பாடலில் வரும் “அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற” என்ற வரிக்கு ‘கடல் நீரலைகள் ஒசை எழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்ற’ எனப் பொருள்கொண்டால், தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்திருந்ததாகக் கொள்ள இடம் உண்டு; ஆனால், பல உரையாசிரியர்கள் வயலில் தேங்கியுள்ள நீர் அலம்புகின்றது என்றே பொருள் கொள்கின்றனர்.

திருவாசகத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் ஒன்றாம் பாடலில் “அணையார் புனல்தில்லை” என்ற பதிவின் மூலம் தில்லையின் வயல்வளத்தையும் 14-ம் பாடலில் “தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா” என்று பதிவின் மூலம் தில்லைக் கோயில், பெரிய மதில்களைக் கொண்டிருந்ததையும் கண்டபத்துப் பதிகத்தின் ஆறாம் பாடலில் “செறிபொழில்சூழ் தில்லைநகர்” என்று வருவதால் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் அறிகிறோம்.

ஞானசம்பந்தர் பாடல் ‘கழிசூழ்ந்த தில்லை’ என்று சுட்டிக்காட்டியதைப் போல, மேற்கண்ட திருவாசகப் பாடல்கள், மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை நிறுவவில்லை. எனவே, நானூறு பாடல்கள் கொண்ட மாணிக்கவாசகரின் திருக்கோவையாரை ஆராய்வோம்.

திருக்கோவையாரில் (பாடல் எண்கள்: 20, 49, 85, 122, 182, 183, 222) ஏழு பாடல்கள் தில்லைப் பெருங்கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

 

தவறாகத் தீர்மானிக்கப்பட்ட மணிவாசகரின் காலம்

இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வாளர்கள் மாணிக்கவாசகர் காலத்திலிருந்த மன்னனின் பெயர் வரகுணப்பாண்டியன் என்பதைத் திருக்கோவையாரிலிருந்துதான் எடுத்துக்காட்டினார்கள்; அம்மன்னன், முதலாவது வரகுணனா இரண்டாவது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, புறச்சான்றுகளைக் கொண்டு, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை ஒன்பதாவது அல்லது பத்தாவது நூற்றாண்டு என்று முடிவுசெய்தனர். அதே திருக்கோவையாரில்தான், தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெளிவாகச் சுட்டும் அகச் சான்றுகளான ஏழு பாடல்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

 

விநாயகர் வழிபாட்டுக்கு முன்

தோன்றியது திருவாசகம்

முருகப்பெருமானைக் குறித்துத் திருவாசகம் திருவுந்தியார் 17-ம் பாடலில் “குமரன்தன் தாதைக்கே உந்தீபற!” என்றும், திருப்பொற்சுண்ணம் 3-ம் பாடலில் “நல்வேலன் தாதை” என்றும் இரண்டு பதிவுகள் கிடைக்கின்றன.

இளையவரான குமரக் கடவுளைக் குறித்து மணிவாசகர், மூத்தவரான விநாயகப் பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தில் தமிழகத்தில் விநாயக வழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத் தெளிவு.

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றியது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு, மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ திருக்கோவையாரிலோ முற்றிலும் இல்லாதது, மாணிக்கவாசகரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதற்கும், தேவார மூவருக்கும் முந்தையது என்பதற்கும் ஒரு வலுவான புறச் சான்று.

மூவருக்கும் மூத்த திருமூலரை சம்பந்தரும், அப்பரும் பாடவில்லை.

“ஒன்று அவன்தானே” என்று தொடங்கும் பாடலே திருமந்திரத்தின் முதல் பாடல் என்று சேக்கிழார் பெருமான் சொல்வதிலிருந்து திருமூலரின் திருமந்திரத்திலும் விநாயகர் வழிபாடு இல்லை என்பதும், திருமூலரும் தேவார மூவருக்கும் மூத்தவர் என்பதும் தெளிவு.

திருமூலரைத் திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் பாடவில்லை; ஆனால், சுந்தரர் பெருமான் திருத்தொண்டர் தொகையில் ‘நம்பிரான் திருமூலன்’ என்று தனியடியாராகப் பாடியதுபோல், ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று மணிவாசகரையும் தனியடியாராகப் பாடியிருப்பதற்கான வாய்ப்பை மறுக்க இயலாது. சுந்தரர் பெருமான் ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்றது மணிவாசகரைத்தான் என்று நிறுவினால், அறுபத்துமூவரில் மணிவாசகர் உண்டு என்பது தெளிந்துவிடும்.

 

வலுவான அகச் சான்றும் , வலுவற்ற புறச் சான்றும்

வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில், மாணிக்கவாசகரின் காலத்தில் கடற்கரைக் கோயிலாக விளங்கியது என்பதை விளக்கும் திருக்கோவையாரின் ‘கடல்சூழ்ந்த தில்லை’ பதிவுகளும், விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் என்பதைக் காட்டும் வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர் கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிக மிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். (ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க் குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள்.) எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி.

 

உண்மையுமாய் இன்மையுமாய்

எக்காலத்தும் மாறாது நிலைபெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும் உண்மை ஆகும்; இடையே தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் என்னும் மாற்றம் ஆகும். இறைவனும் உயிர்களும் மெய்ப்பொருட்கள்; உலகமும் உலகியல் சார்ந்த மனித உடல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் மாற்றம் என்பதற்கு உட்பட்டு, மாறிக்கொண்டே இருப்பதால் அவை யாவும் பொய் ஆகும்.

முற்றறிவு பெற்ற இறைவன், ஆணவம் என்னும் அறியாமையில் அகப்பட்டுக் கிடக்கும் சிற்றறிவு கொண்ட உயிர்களுக்கு அறிவு புகட்டி, ஆணவ மலம் நீக்கவே, எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் உலகையும் உடல்களையும் படைத்து, உயிர்களை அவ்வுலக உடல்களில் வாழச்செய்து, உயிர்கள் தன்னிச்சையாக வினைகள் செய்ய அனுமதிக்கிறான்; அவ்வினைப்பயன்களை உயிர்களுக்கு நுகர்வித்து, உயிர்களுடன் தானும் உடன் வாழ்ந்து, வழிகாட்டுகிறான். இவ்வாறு, மெய்ப் பொருளான இறைவனே, உயிர்களிடம் கொண்ட கருணையால் பொய்ப் பொருளாகவும் ஆகி நிற்கும் மாண்பை, மணிவாசகர் “உண்மையுமாய், இன்மையுமாய்” என்று போற்றுவார்.

 

பொய்யடிமையில்லாப் புலவராக . . .

இறைவன் இன்மையாய் (பொய்ப் பொருட்களாகவும்) நிற்பது, உயிர்கள் உண்மையை (மெய்ப் பொருளை) உணரும் பொருட்டே என்னும் திருவுளக் குறிப்பை அறிந்து, மெய்ப் பொருளான சிவத்திடம், மெய்ம்மையாம் சிவத்தையே வேண்டினார் மணிவாசகர். சுந்தரர் காலத்துக்கு முன்பும், பின்பும் திருவாசகத்துக்கு இணையான நூல் இல்லை.

மணிவாசகரையே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்பித்தார் சுந்தரர் பெருமான்.

உயிர்கள் உலகில் வாழ, மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைவாய்ந்த இப்பொய்ப் பொருட்களும் அவசியம். மூவர் தேவாரமும் இத்தேவை கருதி, பொய்ப் பொருளாம் பொன்னையும் மெய்ப் பொருளாம் இறைவனையும் ஒருங்கே வேண்டுபவை என்பதால் அவை ‘திரோதானம்’ என்னும் உலகியல் வழியாக இறைவனை அடையப் பாடப்பட்டவை; திருவாசகப் பாடல்களில் ‘திருவருள்’ என்னும் மெய்ப் பொருளாம் சிவத்தை மட்டுமே பாடி, இப்பொய்ப் பொருட்களைச் சிந்தையிலும் வைக்காத மணிவாசகரின் பொய்யடிமை இல்லாச் சிறப்பே திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர் பெருமானின் மனதில் மேலோங்கி நின்றதால், ‘பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்’ என்று மணிவாசகரைப் பாடிவிட்டார்.

 

அறுபத்து மூவரில் மணிவாசகர்

இறுதியாக, மணிவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முந்தையது என்பதும் சுந்தரர் பெருமான் தம் திருத்தொண்டர் தொகையில் தாம் பாடிய தனியடியார்கள் அறுபத்தியொருவரில் ஒருவராக மணிவாசகப் பெருமானையே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார் என்பதும் அவரையே பெரிய புராணத்தில் சேக்கிழாரும் பாடியுள்ளார் என்பதும் தெளிவு. சிவாலயங்களில் அறுபத்து மூவர் வரிசையில் மணிவாசகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டுச் சிவனடியார்களின் மனங்களில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த குறை நீங்கும். ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த வரலாற்றுப் புதிரை விடுவித்து நற்செய்தியுடன் வான்கலந்த மாணிக்கவாசகம் உங்களுடன் கலந்து நிறைவடைகிறது.

(வாசகம் நிறைந்தது)

http://tamil.thehindu.com/society/spirituality/article19456520.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.