Jump to content

நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்மை குறித்து சீனா மௌனம்


Recommended Posts

நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்மை குறித்து சீனா மௌனம்

 

Geng-Shuang-1.jpg
தமது நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து சீனா மௌனம் காத்து வருகின்றது. சீன நீர்மூழ்கிக் கப்பல்  இலங்கையில் தரித்து நிற்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறித்து சீன வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விடயம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சிடமே மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang  தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/archives/26666

Link to comment
Share on other sites

சீனாவுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை! இந்தியாவின் வியூகத்துக்கான வெற்றியா?

 
 
 

சீனா நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை நோ சொன்னது.

2014-ம் ஆண்டு நவம்பர் மாதம், சீன அதிபர் இலங்கை சென்றுவந்த சில வாரங்களில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது. சீனாவின் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பில் நிறுத்த அப்போதைய அதிபர் மஹிந்தா ராஜபக்‌ஷே அனுமதியளித்தார். இலங்கையில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் நங்கூரமிடப்படுவது அது முதல் முறையல்ல... சீனா தன்னிடமுள்ள அணுசக்தி மற்றும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவ்வப்போது இலங்கையில் நிறுத்துவது தொடர்கதையாக இருந்தது. இந்தியா பலமுறை எச்சரித்தும் இலங்கை அதைப் பொருட்படுத்தியதே இல்லை. 

"நீர்மூழ்கிக் கப்பலிலுள்ள வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை நிரப்பவும், கப்பலுக்கு எரிபொருள் நிரப்பவுமே நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புவுக்கு வந்தது எனவும், நல்லெண்ண அடிப்படையில் சீனாவின் கப்பல் பல உலக நாடுகளுக்குச் செல்வது வழக்கமானதுதான் எனவும் இதைக் கண்டு இந்தியா கவலைப்படத் தேவையில்லை" எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. நண்பன் என்று சொல்லிக்கொண்டு ஒருமுறை இந்தியா மீது போர்த்தொடுத்திருக்கிறது. அப்போது, கைப்பற்றிய நிலப்பரப்பையும் மீண்டும் ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான போக்கையே சீனா கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. இலங்கையில் ஆதிக்கத்தை அதிகரிப்பதன் மூலம், தென் பகுதியில் இருந்தும் இந்தியாவுக்குத் தொல்லைகொடுக்க சீனா நினைக்கிறது.

மேலும், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வணிகக் கப்பல்கள் அனைத்தும் இந்தியப் பெருங்கடலைக் கடந்தே சீனாவுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் தன்னுடைய வர்த்தகம் தங்குத்தடையின்றி நடக்கும், இந்தியாவும் அஞ்சும் என சீனா நினைக்கிறது. இதனால் இலங்கையில், விமானநிலையம், ரயில்பாதை, துறைமுகம் மற்றும் சாலைகள் அமைக்க சீனா அதிகம் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, இலங்கையின் தென் முனையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை முழுக்கமுழுக்க சீனா கட்டிக்கொடுத்திருக்கிறது. 

இதன் அடிப்படையில், வளைகுடா மற்றும் சோமாலியா கடற்படை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரோந்துசெல்லும் தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி மறைமுகமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுப்பது சீனாவின் வழக்கம். பல ஆண்டுகளாக இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியா தன்னுடைய கவலையைத் தெரிவித்தாலும் இலங்கை அதைப் பொருட்படுத்துவதில்லை. அதிலும், மஹிந்தா ராஜபக்‌ஷே ஆட்சிக் காலத்தில் பலமுறை சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. 

இந்நிலையில், 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கம்போல சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்த அனுமதி அளித்தது ராஜபக்‌ஷே அரசு. ஆனால், இந்த முறை இந்தியாவிடமிருந்து மிகக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. "இந்தியா - சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்னை உள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவுக்கு அருகே சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று இந்தியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது. "இலங்கையில், திரிகோணமலை அல்லது வேறு எந்த ஒரு பகுதியிலும் வேறு எந்த ஒரு நாட்டின் ராணுவச் செயல்பாட்டுக்கும் அனுமதியளிப்பது இந்தியாவின் நலனுக்கு எதிரானது" என்று இந்தியா - இலங்கை 1987 ஒப்பந்தம் கூறுகிறது. சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் இந்த ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக இந்தியா தன்னுடைய கண்டனத்தில் தெரிவித்திருந்தது. இதன்பிறகு, இலங்கையின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் உருவாயின.

சீனா போர்க் கப்பல்

தற்போது வரும் வாரத்தில் தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பலை கொழும்புவில் நிறுத்த சீனா அனுமதி கேட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை நிரப்பவும், வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச்செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பாகவே சீனா கோரிக்கை விடுத்திருக்கிறது. மோடி இலங்கைக்குச் சென்றுள்ள நிலையில், இந்த முறை சீனாவுக்கு அனுமதி அளிக்க இலங்கை மறுத்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

தெற்காசிய பிராந்தியத்தில், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து தன்னுடைய நட்பு நாடாக வைத்திருக்க மோடி தலைமையிலான அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, போட்டிபோட்டுக்கொண்டு நலத்திட்ட உதவிகள், மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி உள்ளிட்டவற்றை அண்டை நாடுகளுக்கு அளித்துவருகிறது. இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாகவே தற்போது சீனாவுக்கு இலங்கை 'நோ' சொல்லியுள்ளதாக ராணுவ வியூக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/india/89139-india-makes-a-smart-move-in-sri-lanka.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

சீனாவுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை! இந்தியாவின் வியூகத்துக்கான வெற்றியா?

இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாகவே தற்போது சீனாவுக்கு இலங்கை 'நோ' சொல்லியுள்ளதாக ராணுவ வியூக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விகடன் சீனாவையும் சிறிலங்காவையும் முடிஞ்சுவிட வியூகம் வகுக்கிறது.   சிறிலங்கா மிகவும் கைதேர்ந்த அரசறிவியல் செயற்றிறன் மிக்க நாடென்பதை கிந்திய அரசுக்கு ஊதும் ஊடகங்கள் நினைவிற்கொள்வதில்லை. தமது காலச்சூழலுக்கு ஏற்றவாறு  சீனாவையும் கிந்தியாவையும்வெற்றிகரமாகக்  கையாண்டு வருகிறது. தற்போதைய சூழலில் ஐநாமுதல் அனைத்துவிடயங்களிலும் மிக இரகசியமாக சிறிலங்காவுக்கான பாதுகாப்புக்கவசமாக விளங்கும் கிந்தியாவைப் பகைப்பதனூடாகச் சிலவேளை(மிகஅரிதாகச் சிலவேளை) ஈழத்தமிழருக்கு ஆதரவான நிலையை எடுத்துச் சமஸ்டி அது இது என்று கூறிவிட்டால் என்ற பயமயன்றி வேறில்லை. ஒருவேளை (?)புதியஅரசியல் சீர்திருத்தம் வரும்வரை  மென்போக்கு நிலையைக் கடைப்பிடித்து தமிழருக்கு எதுவுமேயற்ற  ஒன்றை நிறைவேற்றிச் சட்டமாக்கிவிட்ட பின் சிறிலங்கா தனது வேடத்தைக் கலைத்துக்கொள்ளும். அதனை அறியாமல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின்ரை விலாங்குமீன் விளையாட்டு எத்தினை நாளைக்கெண்டு பாப்பம்?

அதுக்கிடையிலை தமிழர்பிரதேசத்தை ஒரு வழிபண்ணிப்போட்டுத்தான் விடுவாங்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

சிங்களத்தின்ரை விலாங்குமீன் விளையாட்டு எத்தினை நாளைக்கெண்டு பாப்பம்?

அதுக்கிடையிலை தமிழர்பிரதேசத்தை ஒரு வழிபண்ணிப்போட்டுத்தான் விடுவாங்கள்.:cool:

தமிழர்கள் வேற சிங்களவனை மோட்டு  சிங்கள்வன் என்று கூறுவது வேடிக்கை அவன் அவனது குறிக்கோளீல் நிதானமாக செயயற்பட்டு வெற்றி கொள்கிறான் ஆனால் தமிழர்கள் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, முனிவர் ஜீ said:

தமிழர்கள் வேற சிங்களவனை மோட்டு  சிங்கள்வன் என்று கூறுவது வேடிக்கை அவன் அவனது குறிக்கோளீல் நிதானமாக செயயற்பட்டு வெற்றி கொள்கிறான் ஆனால் தமிழர்கள் ??

சிறிலங்கன் மோடன் என்றுதான் இந்தியா கையாள்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

சிறிலங்கன் மோடன் என்றுதான் இந்தியா கையாள்கின்றது...

ஆனால் சீனக்காரன் உள்ள வரக்குள்ள தெரியுது இந்தியாவுக்கு வகுத்தால போறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

ஆனால் சீனக்காரன் உள்ள வரக்குள்ள தெரியுது இந்தியாவுக்கு வகுத்தால போறது 

சீனாக்காரன் நினைக்கிறான் இந்தியாக்காரனும் சிறிலங்கனும் மொடன் என்று...ஒரு போர் நடந்தால் தான் தெரியும் யார் மோடங்கள் என்று.

Link to comment
Share on other sites

இலங்கையுடனான இராணுவ உறவுகளில் விரிசல் கிடையாது – சீனா

china-srilanka.jpg
இலங்கையுடனான இராணுவ உறவுகளில் விரிசல் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு சீனா கருத்து வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ உறவுகள் பிராந்திய வலயத்தின் சமாதானத்தை வலுவடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீன இலங்கை உறவுகளினால் ஏனைய நாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை சுட்டிக்காட்டியுள்ளது.

http://globaltamilnews.net/archives/26749

Link to comment
Share on other sites

14 hours ago, முனிவர் ஜீ said:

தமிழர்கள் வேற சிங்களவனை மோட்டு  சிங்கள்வன் என்று கூறுவது வேடிக்கை அவன் அவனது குறிக்கோளீல் நிதானமாக செயயற்பட்டு வெற்றி கொள்கிறான் ஆனால் தமிழர்கள் ??

கூர்ந்து கவனித்தால் சிங்களவர் வெற்றிகொள்ள காரணமும் தமிழர்களே என்பது புரியும்.! அன்று அருனாசலம் குடும்பம் தொடங்கி இன்று இராசவரோதயம் குடும்பம் வரையில்....:rolleyes: இடையில் கதிர்காமர், நீலன் என்றும் பலர்...:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

சீனாக்காரன் நினைக்கிறான் இந்தியாக்காரனும் சிறிலங்கனும் மொடன் என்று...ஒரு போர் நடந்தால் தான் தெரியும் யார் மோடங்கள் என்று.

ம் அது நடக்காது  நடந்தால் வி ஆ கப்பி 

 

1 hour ago, Paanch said:

கூர்ந்து கவனித்தால் சிங்களவர் வெற்றிகொள்ள காரணமும் தமிழர்களே என்பது புரியும்.! அன்று அருனாசலம் குடும்பம் தொடங்கி இன்று இராசவரோதயம் குடும்பம் வரையில்....:rolleyes: இடையில் கதிர்காமர், நீலன் என்றும் பலர்...:unsure:

இன்னும் இருக்கிறது இவர்கள் கண்களுக்கு தெரிந்தவர்கள் கண்ணூக்கு தெரியாத எத்தனையோ  கேடிகள் இருக்கின்றனர் 

Link to comment
Share on other sites

இராஜதந்திர நெருக்குதல் : சீன நீர்மூழ்கிக்கு இலங்கை மறுப்பு

Published by RasmilaD on 2017-05-14 10:24:30

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

ship.jpg

சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தரித்துச் செல்வதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் அதனை நிராகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் தரிப்பதற்கான அனுமதியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன. 

சற்றும் எதிர்பாராத வகையில் இலங்கை அனுமதி மறுத்துள்ள நிலையில் சீனா குழப்பம் அடைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான நெருக்கடிகளால் தென்னிலங்கை கடற்பரப்பில் சீன திட்டங்களுக்கு சவால்கள் ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேக பார்வையை பிரதிப்பளிக்க தொடங்கியுள்ளது. 

இலங்கை கடற்பரப்புக்குள் சீனாவின் எந்தவொரு நீர்மூழ்கிக் கப்பல் அனுமதிக்கப்பட்டாலும் அதனை இந்தியா ஏற்றக் கொள்ளாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சீன ஆதரவு நகர்வுகள் மற்றும் சீன நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்குள் அனுமதித்தமை தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அப்போதைய  பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் இலங்கை - இந்திய உறவுகளில் நெருக்கடியான நிலைமைகளும் உருவாகின.

1987ல் இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் சீன நீர்மூழ்கிக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டமை ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே இந்தியா கூறுகின்றது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட இலங்கையின் ஏனைய துறைமுகங்களை உலக நாடுகள் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்பதே 1987 மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் முக்கிய கருப்பொருளாகும். 

தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் இரு நாடுகளும் ஈடுபடக்கூடாது எனவும் அந்த ஒப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தெற்காசிய கடல் பரப்பு மீதான இந்தியாவின் அதீத நம்பிக்கைக்கு சவால் விடும் வகையிலேயே மஹிந்த ராஜபக்ஷ அன்று சீன நீர்மூழ்கி கப்பலை அனுமதித்திருந்தார். 

வலய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்று  சீனா புதிய பட்டுப்பாதை திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் 10 நட்பு நாடுகளில் சீன கடற்படை தளங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதனை ஆரோக்கியமான நகர்வாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கருத வில்லை. அதே போன்று சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்குள் அனுமதித்து விட கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாகவே உள்ளது. 

சீனாவில்  "ஒரே பிராந்தியம் ஒரே பாதை" என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு சென்றுள்ளார். 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ள இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் சீன பட்டுப்பாதை திட்டம் குறித்து பேசப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/19971

Link to comment
Share on other sites

சீன நீர்மூழ்கி இன்னொரு சோதனை

Page-01-image-004918e3395482333bb0c7defc6ff2e935ee7fb9.jpg

 

சீன நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு துறை­மு­கத்­துக்கு வருகை தரு­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு சீனா விடுத்த வேண்­டு­கோளை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இரண்டு நாள் பய­ண­மாக கடந்த வியா­ழக்­கி­ழமை மாலையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கிய சற்று நேரத்தில், இந்தச் செய்­தியை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறு­வனம் வெளி­யிட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, சர்­வ­தேச ஊட­கங்­களில் இதுவே பிர­தான செய்­தி­யாக மாறி­யி­ருந்­தது. இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் நடந்து வரு­கின்ற பூகோள அர­சியல் போட்­டியே இந்தப் பர­ப­ரப்­புக்கு முக்­கிய காரணம்.

மே 14ஆம் திக­தியும், மே 15ஆம் திக­தியும் சீன நீர்­மூழ்கி கொழும்பு துறை­மு­கத்தில் தரித்து நிற்­ப­தற்கு அனு­மதி கோரப்­பட்­ட­தா­கவும், ஆனால் அதனை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

பாது­காப்பு அமைச்சின் உயர் அதி ­காரி ஒரு­வரும் அரச அதி­காரி ஒரு­வரும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்­தி­யாவின் கரி­ச­னை­களை மீறும் வகையில், சீன நீர்­மூழ்­கிகள் கொழும்பில் தரித்துச் செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட வாய்ப்­பில்லை என்று அரச அதி­காரி ஒருவர் கூறி­யி­ருந்தார்.

ஏற்­க­னவே, 2014ஆம் ஆண்டு ஒக்­டோபர் மற்றும் நவம்பர் மாதங்­களில் கொழும்பு துறை­மு­கத்­துக்கு சீன நீர்­மூழ்­கிகள் மேற்­கொண்­டி­ருந்த பய­ணமே, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு கடு­மை­யான நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது. அதன் தொடர்ச்­சி­யா­கவே ஆட்­சி­மாற்­றத்தில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பும் இருந்­தது.

அந்தச் சம்­ப­வத்­துக்குப் பின்னர், சீன நீர்­மூழ்­கிகள் கொழும்பு துறை­மு­கத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. ஆனால் திடீ­ரென இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் கொழும்புப் பய­ணத்தை அண்­டி­ய­தாக, சீன நீர்­மூழ்கி கொழும்­புக்கு வரு­வ­தற்கு அனு­மதி கோரப்­பட்­டி­ருக்­கி­றது.

2014ஆம் ஆண்டு, சீனா­வுடன் எப்­போதும் முரண்­பட்டு வரும் ஜப்பானிய பிர­தமர் ஷின்சோ அபே கொழும்பு வந்­தி­ருந்த போது தான், சீன நீர்­மூழ்கி கொழும்பு வந்­தி­ருந்­தது. அந்த விவ­காரம் அப்­போது தீவி­ர­ம­டைந்­த­மைக்கு அதுவும் ஒரு காரணம்.

அது­போ­லவே, இந்­தியப் பிர­த­மரின் வரு­கையை ஒட்­டி­ய­தாக இப்­போது சீன நீர்­மூழ்­கியின் பயணத் திட்டம் வகுக்­கப்­பட்­டதும் கூட கூடுதல் சர்ச்­சை­க­ளுக்குக் காரணம் எனலாம்.

ஏனென்றால், இந்­தியப் பிர­தமர் இலங்­கையில் மேற்­கொண்­டது ஒன்றும் திடீர் பய­ண­மல்ல. கடந்த ஆண்­டி­லேயே திட்­ட­மி­டப்­பட்­டது. அவ­ரது பயண நாட்கள் பற்­றிய திக­திகள் கூட முன்­னரே தெரிந்த ஒன்று தான்.

இதனை அண்­டி­ய­தாக சீனா தனது நீர்­மூழ்­கியை கொழும்­புக்கு அனுப்பத் திட்­ட­மிட்­டது சந்­தே­கங்­க­ளையே ஏற்­ப­டுத்தும். விநி­யோக உதவித் தேவை­க­ளுக்­காக நீர்­மூழ்­கியை கொழும்­புக்கு அனுப்ப சீனா திட்­ட­மிட்­டி­ருக்­கலாம் என்­பது பொய்­யான வாதம்.

ஏனென்றால், இந்­தியப் பெருங்­கடல் வழி­யாக சீனா தனது நீர்­மூழ்­கி­களை மாதம் தோறும் ஏடன் வளை­கு­டா­வுக்கு அனுப்பி வரு­கி­றது. இலங்­கையைக் கடந்தே இந்த நீர்­மூழ்­கிகள் சென்று வந்­தி­ருக்­கின்­றன. ஆனாலும், ஆட்சி மாற் றம் ஏற்­பட்ட பிறகு, சீனா தனது நீர்­மூழ்­கி­க­ளையோ, கப்­பல்­க­ளையோ கொழும்­புக்கு அனுப்­ப­வில்லை.

இந்­த­நி­லையில் திடீ­ரென இந்­தியப் பிர­த­மரின் பய­ணத்தை ஒட்­டி­ய­தாக சீனா தனது நீர்­மூழ்­கியை அனுப்பும் முயற்­சி­களை எடுத்­துள்­ளது என்றால், அதில் விச­மத்­த­னங்­களும் நிறைந்­தி­ருக்­கி­றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலங்­கைக்கு சீனா தனது நீர்­மூழ்­கியை 2014ஆம் ஆண்டு எந்த உள்­நோக்கமும் இன்றி அனுப்­பி­ய­தென்றால், ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் ஏன் அத்­த­கைய முயற்­சி­களை மீண்டும் எடுக்­க­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது.

அதே­வேளை, சீன நீர்­மூழ்­கிக்கு கொழும்பில் தரித்துச் செல்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டாம் என்று இலங்கை அர­சாங்­கத்­துக்கு இந்­தியா அழுத்­தங்­களைக் கொடுத்­தி­ருக்­கலாம். அதற்­கான சந்­தர்ப்­பங்­களும், வாய்ப்­பு­களும் அதிகம்.

சீன நீர்­மூழ்­கிகள் இலங்­கையின் துறை­மு­கங்­களை பயன்­ப­டுத்­து­வதை இந்­தியா விரும்­ப­ வில்லை. ஆனால் அதனை வெளிப்

­ப­டை­யாகக் கூற முடி­யாத நிலையில் இருக்­கி­றது. சந்­தர்ப்­பங்கள் கிடைக் கும் போது, இது­போன்ற விட­யங்­களை இந்­தியா இரா­ஜ­தந்­திர ரீதி­யாக கையாண்டு வந்­தி­ருக்­கி­றது.

மோடியின் கொழும்பு பய­ணத்தை ஒட்­டி­ய­தாக இல்­லாமல் சீன நீர்­மூழ்­கியின் வரு­கைக்கு அனு­மதி கோரப்­பட்­டி­ருந்தால் இந்­தியா சில வேளை­களில் மௌன­மாக இருந்­தி­ருக்­கலாம்.

2014ஆம் ஆண்டு சீன நீர்­மூழ்­கி­களின் வருகை தொடர்­பாக இந்­தி­யா­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது என்றே சீனாவும், மஹிந்த அர­சாங்­கமும் திட­ மாக வாதிட்­டன. ஆனால் இந்­தி­யாவோ அதனை மறுத்­த­துடன், தன் மீதான அத்­து­மீ­ற­லாக, தனக்கு இழைக்­கப்­பட்ட துரோ­க­மா­கவே பார்த்­தது. மஹிந்த அர­சாங்­கத்­துடன் இருந்த இடை­வெ­ளியால் இந்­தியா அதனை பார­தூ­ர­மா­ன­தாக எடுத்துக் கொண்­டது.

இந்த முறை சீன நீர்­மூழ்­கிக்கு அனு­ மதி மறுக்­கப்­பட்­ட­தாகச் சொல்­லப்­படும் விட­யத்தில், இந்­தி­யாவை விட இலங்­கையே கடு­மை­யான சூழ்­நி­லையை எதிர்­கொண்­டி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

ஏனென்றால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்கு ஐந்து நாள் பய­ணத்தை ஆரம்­பிக்கும் காலத்­தி­லேயே சீன நீர்­மூழ்­கிக்கு கொழும்பில் தரிக்க அனு­ம­திக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனாவில் தங்­கி­யி­ருக்கும் போது, சீன நீர்­மூழ்கி கொழும்பில் தரித்­தி­ருந்தால், இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் நெருங்­கிய கூட்டு ஏற்­பட்டு விட்­ட­தான தோற்­றப்­பாடு உரு­வாக்­கப்­படும்.

மோடியின் பய­ணத்­திட்­டத்தைக் குழப்­பு­வது அல்­லது அதற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வது கூட சீனாவின் திட்­ட­மாக இருந்­தி­ருக்­கலாம்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்குப் பயணம் மேற்­கொள்ளப் போகும் நிலையில் தனது கோரிக்­கையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரிக்­காது என்ற எதிர்­பார்ப்பும் கூட சீனா­வுக்கு இருந்­தி­ருக்­கலாம்.

ஆனாலும், இந்­தியப் பிர­த­மரின் பய­ணத்தைக் காரணம் காட்டி, இலங்கை அர­சாங்கம் சீனாவின் வேண்­டு­கோளை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, மே 14, 15ஆம் திக­தி­களில் சீன நீர்­மூழ்கி இலங்கை வரு­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் அனு­மதி மறுக்­கப்­பட்ட போதிலும், அது நிரந்­த­ர­மான முடிவா என்­பதில் கேள்­விகள் உள்­ளன. ரொய்ட்டஸ் செய்தி நிறு­வ­னத்­துக்கு தகவல் வெளி­யிட்ட பாது­காப்பு அமைச்சின் உயர் அதி­காரி ஒரு­வரே, இந்தப் பயணம் பின்னர் ஒரு­வேளை இடம்­பெ­றலாம் என்று கூறி­யி­ருக்­கிறார்.

அது­போல சீன தூத­ரக வட்­டா­ரங்­களும், தமது கோரிக்­கைக்கு இன்­னமும் அர­சாங்­கத்­திடம் இருந்து பதில் வர­வில்லை என்றே கூறி­யுள்­ளன. எனவே, மாற்று திக­தி­களில் சீன நீர்­மூழ்­கியின் கொழும்புப் பயணம் இடம்­பெறக் கூடும்.

இப்­போது இந்­தியப் பிர­த­மரின் வரு­கையைக் காரணம் காட்டி நிரா­க­ரித்­தது போன்று இலங்கை அர­சாங்­கத்­தினால் சீன நீர்­மூழ்­கி­க­ளுக்கு தொடர்ச்­சி­யான அனு­மதி மறுக்க முடி­யாது. அவ்­வாறு செய்­வது சீனா­வுடன் பெரி­ய­ள­வி­லான பொரு­ளா­தார மற்றும் பிற ஒத்­து­ழைப்­புகள், உற­வு­களை வைத்­துள்ள இலங்­கைக்கு பாத­க­மா­கவே அமையும்.

2014ஆம் ஆண்டு சீன நீர்­மூழ்­கி­களின் கொழும்பு வருகை ஆட்சி மாற்­றத்தில் குறிப்­பி­டத்­தக்க கார­ணி­யாக இருந்த நிலையில், தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் சிங்­கப்பூர் சென்­றி­ருந்த போது, Straits Times நாளிதழ் ஒரு நேர்­கா­ணலை நடத்­தி­யி­ருந்­தது.

அதில் இந்­தி­யாவை சினம்­கொள்ள செய்த சீன நீர்­மூழ்கி கப்­பல்­களின் பயணம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு அவர், “இலங்­கைக்கு வெளி­நாட்டு கடற்­படைக் கப்­பல்கள் வரு­வ­தற்­கான அள­வுகோல் ஒன்றை நாங்கள் வகுத்­துள்ளோம். அத­ன­டிப்­ப­டையில் எந்த நாட்­டி­னதும், நீர்­மூழ்­கிகள் உட்­பட அனைத்து கடற்­படைக் கப்­பல்­களும் இலங்­கைக்கு வரலாம்.

நட்­பு­றவுப் பய­ண­மாக இருந்தால், நாங்கள் அயல்­நாட்­டிற்கு அது குறித்து அறி­விப்போம். குறிப்­பிட்ட கப்­பல்கள் இலங்­கைக்கு தொடர்ச்­சி­யாக, அடிக்­கடி வராத வகையில் அட்­ட­வ­ணை­களை வகுப்போம்.

சீன நீர்­மூழ்­கிகள் இறு­தி­யாக இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்ட வேளை அது குறித்து தனக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என இந்­தியா தெரி­விக்­கி­றது, இதுவே பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம். இது குறித்து ஆராய்ந்து பார்த்­ததில் இது உண்மை என்றே தெரி­ய­வந்­துள்­ளது.

சீனா தனது நீர்­மூழ்­கி­களின் பய­ணத்தை முன்­கூட்­டியே இலங்­கைக்கு தெரி­வித்­துள்­ளது. அவர்­க­ளது நீர்­மூழ்­கிகள் கொழும்புத் துறை­மு­கத்­திற்கு வந்து தரித்து விட்டு சென்று விட்­டன.

ஜப்­பா­னியப் பிர­தமர் பயணம் மேற்­கொண்ட வேளை இந்த சம்­பவம் இடம்­பெற்­றது. எனவே அது பிரச்­சி­னை­யாக மாறி­யது.

தற்­போது நாங்கள் எங்கள் அள­வு­கோல்­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டுவோம். நீங்கள் உங்கள் நீர்­மூழ்­கி­க­ளையும் போர்க்­கப்­பல்­க­ளையும் இலங்­கைக்கு அனுப்ப வேண்டும், சிங்­கப்­பூ­ரிடம் சிறந்த போர்க்­கப்­பல்கள் உள்­ளன.” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதா­வது சீன நீர்­மூழ்­கிகள் மீண்டும் இலங்கை வரு­வ­தற்கு எந்த தடை­களும் இல்லை. இந்­தி­யா­வுக்குத் தெரி­யப்­ப­டுத்தி விட்டு வரலாம், ஆனால் அடிக்­கடி வரக் கூடாது என்ற தொனியில் அவ­ரது அந்தக் கருத்து அமைந்­தி­ருந்­தது.

ஆனால், அந்தக் கருத்­துக்கு மாறான வகையில், சீன நீர்­மூழ்­கிக்­கான பய­ணத்­துக்கு இலங்கை அர­சாங்கம் அனுமதி மறுத்திருக்கிறது. கொள்கை அளவிலான நிரந்தர முடிவாக இது இருக்குமேயானால், அது இலங்கை- சீன உறவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

எனவே தான் வேறொரு நாளில் சீன நீர்மூழ்கிக்கு அனுமதி கொடுக்க அரசாங்கம் திட்டமிடலாம். ஆனால் அதனை இந்தியா எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பது முக்கியமான கேள்வி.

இலங்கையில் சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் எரிச்சலுடன் பார்க்கும் இந்தியாவுக்கு சீன நீர்மூழ்கிகள் மீண்டும் கொழும்பு வருவது ஒருபோதும் இனிப்பான செய்தியாக இருக்க முடியாது.

அதேவேளை, தனது பொருளாதார அபிவிருத்திக்காக சீனாவின் மீது தங்கியிருக்க வேண்டிய நிலையில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் எல்லாக் கோரிக்கைகளையும் உதாசீனம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அந்தக் கூட்டு பலவீனப்பட்டு விடும்.

இந்த நிலையில் மஹிந்த அரசாங்கத்துக்கு சீன நீர்மூழ்கிகள் எவ்வாறு தலைவலியான விடயமாக மாறியதோ, தற்போதைய அரசுக்கும் அதுவே பெருந்தொல்லையாக மாறியிருக்கிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-14#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2017 at 6:50 PM, தனி ஒருவன் said:

தமிழர்கள் வேற சிங்களவனை மோட்டு  சிங்கள்வன் என்று கூறுவது வேடிக்கை அவன் அவனது குறிக்கோளீல் நிதானமாக செயயற்பட்டு வெற்றி கொள்கிறான் ஆனால் தமிழர்கள் ??

1972இல் சிங்கப்பூர் அதிபர் ஏதும் அற்ற வெள்ளத்தால் சூழ்ந்து கிடந்த மண்ணில் நின்று 
அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி . இந்தநாடை இலங்கைபோல ஆக்குவேன் என்பதாகும்.
 
1070களில் 
கிழக்காசியாவில் 90வீத எழுத வாசிக்க தெரிந்த மக்கள் கூடத்தை கொண்ட நாடு.

உலகின் முதலாவது பெண் அதிபரை கொண்டிருந்த நாடு 
அப்போது சுவிஸ் நாட்டில் பெண்களுக்கு வாக்கு அளிக்கும் உரிமை கூட இல்லை. 


இன்று உலக வங்கியின் பிச்சையில் வாழ்கிறது என்றால் ....?
இது மோடு இல்லாமல் வேறு என்ன ? 

ஒரு விபச்சரிப்போல சீனாவோடும் .. இந்தியாவோடும் படுகிறதுதான் தந்திரமா ?
அவர்கள் என்ன பணம் கொடுத்தா படுக்கிறார்கள் ? உள்ளத்தையும் சுரண்டிபோகவே வருகிறார்கள்.
எல்லோரும் ஒரு கொன்ராக்ட் அடிப்படையிலேயே பணம் கொடுக்கிறார்கள்.

இன படுகொலை செய்யச்சொல்லி மேலைநாடுகள் தீண்டுவதே ஒரு செக் வைக்கத்தான்.
சாதம் உசைனுக்கு குர்திஸ் மக்களுக்கு காஸ் அடிக்க சொல்லி  கெமிக்கல் காஸ் கொடுத்தது யார் ?
இனி கைப்பொம்மை மாதிரி நூலை இழுக்க ஆட வேண்டியதுதான்.
சொந்த பொருளாதார கட்டுமானம் என்று என்ன இருக்கிறது ?
எல்லாம் அந்நிய  நாட்டு முதலீடுகள்தான் பழ பழக்கிறது. 

பணவீக்கம் கூடிக்கொண்டு போகிறது .......... 2020இல் 7.14 வீதமாக இருக்கும் என்றே கணக்கிடபட்டு உள்ளது. 

Sri Lanka Inflation Rate


இருந்தது எல்லாவற்றையும் அழிப்பது என்பது மோடு இல்லையா ?
எனக்கு பிரமதாசாமீது ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு அதற்கான காரணம் 
இலங்கை மீள வேண்டும் என்று எண்ணிய ஒருவர் .... உண்மையிலேயே சமாதானத்தை விரும்பியவர்.
போராட்டம் இருந்தால் வீணான இந்திய தலையீடு இருக்கும்  என்று நன்கு உணர்ந்தவர்.
சுற்றி இருந்த கோமாளிகளால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. 

வெளிநாட்டு வாசிகளான நாம் 
உள்ளூர் வாசிகளான உங்களை ஏழைகள் ஆக்கி 
மீண்டும் அடிமை ஆக்கும் நிகழ்வு மெதுவாக நடப்பது 
உற்று பார்த்தால் மட்டுமே புரியும். 

Image result for jaffna ds division map

Image result for jaffna ds division map

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பிரதேசவாரியான உட்கட்டுமான பார்வை என்பது மிக முக்கிய தேவை 
சொல்லப்போனால் யாரும் கேட்க மாட்ட்டார்கள் (தமிழனுக்கு தமிழன்தான் முக்கிய எதிரி) 
உதாரணத்துக்கு 
கோவில் கட்டுவது என்றால் அது பிரதேச வாரியான பார்வையாக இருந்தால் 
ஒரு சில கோவில்கள் பாரிய எமது மதம் இனத்தை பறை சாற்றும் பிரமாண்டமாக 
அமைத்த்துக்கொண்டு  சும்மா  தெருவுக்கு தெரு இருக்கும் கல்லுக்கு  எல்லாம் 
கோவில் கட்டுவதை நிறுத்தி கொண்டால் பாரிய பண விரயம் தடுப்பதோடு 
எமது பழமை மிக்க மதம் எழுந்து நிற்கவும் உதவும். 

உலக தர கல்விக்கு எல்லாம் நாம் இனி சிங்கள அரசையோ அடுத்தவரையோ 
கை  எந்த தேவை இல்லை. பிரதேச வாரியான முறைமையில் அதி நவீன கல்வி கூடாரங்களை 
அமைத்து எமது அடுத்த தலைமுறையை உலக கல்வி தரத்தில் உயர்த்த முடியும். 

யாழுக்கு நன்னீர் இல்லை என்ற நிலைமையும் .......
சுற்றி கடலால் சூழ பட்ட குடாவிட்க்கு 49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 
மருதங்கேணியில் இருந்து நீர் கொண்டுவாரம்  என்ற புரளியும்  எவ்ளவு முட்டாள் தனமானது ?
பிரதேச வாரியான பார்வை என்பது சிறிதளவும் இல்லை.

Travel Distance from jaffna To Maruthankerny is:

49.0 Kms / 30.447179000000002 Miles / 26.457893000000002 Nautical Miles

Image result for jaffna ds division map

இதில் வெளிர் நீலமாக இருப்பது மகா இந்து சமூத்திர நீரோடு தொடுத்து இருப்பது 
யாழுக்கு நீர் எடுத்து இந்து சமூத்திரமா வற்ற போகிறது ? 

 

இன்று வடமாராச்சசியின் சொத்தான மணல் மண் அந்த பிரதேசத்துக்கு ஒரு உப்புக்கு கூட 
ஈடாக இல்லை. யாரோ எவனோ அள்ளிக்கொண்டு போகிறான்.
அதற்கு ஒரு வாரியம் அமைத்தால் .... அதன் வருமானமே அந்த பிரதேசத்தை 
கட்டமைக்க போதுமாக இருக்கும். அத்தோடு எல்லா இடமும் அள்ளி பின்பு ஊரை கடல் ஆக்கும் 
வேலையை தடுக்கும். 

கிழக்கு மாகாணத்தின் விவசாயம் அழிந்துகொண்டே போகிறது.
ஒரு பிரதேச பார்வை இருந்தால் வடக்கில் இருக்கும் நாமே அங்கு முதலீடு செய்து 
தமிழர்களின் விவசாயத்தை அங்கு நிலை நிலைநிறுத்த முடியும்.
எல்லா பிரதேசங்களிலும் ஒரு மூலதனம் கிடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தோரை வாழ வைத்த தமிழன்

Distribution of Indo-Iranian languages.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.