Jump to content

இம்மானுவேல் மெக்ரோன்: தாராளர்களின் புதிய முகம்!


Recommended Posts

இம்மானுவேல் மெக்ரோன்: தாராளர்களின் புதிய முகம்!

 

 
பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவேல் மக்ரோன் | படம்: ஏஎஃப்பி
பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவேல் மக்ரோன் | படம்: ஏஎஃப்பி
 
 

மெக்ரோனின் வெற்றிகளும், தோல்விகளும் பிரெஞ்சு தாராளவாதிகளின் மொத்தத் தலைமுறையையும் நிர்ணயம் செய்யும்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் இம்மானுவேல் மெக்ரோனின் வெற்றி கிட்டத்தட்ட பட்டாபிஷேகக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருப்பது உத்வேகம் தரும் விஷயம். ஆம், அவர் 60% வாக்குகள் பெற்றிருக்கிறார். அதேசமயம், பிரான்ஸின் சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு சதவீதமும், செல்லாத வாக்குகளும் பதிவான தேர்தலில்தான் அவர் வென்றிருக்கிறார். மெக்ரோனுக்கு வாக்களித்தவர்களும் கூட, தீவிர வலதுசாரி வேட்பாளரான மரீன் லெ பென் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

மிக முக்கியமாக, வழக்கத்துக்கு மாறான இந்தத் தேர்தல் இரண்டு முக்கிய விளைவுகளைக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். முதலாவதாக, மெக்ரோனின் கருத்துகள் ஒருபோதும் ஆழமாக விவாதிக்கப்பட்டதில்லை. இரண்டாவதாக, புதிய அதிபருக்கென்று தனிப்பட்ட வாக்காளர்கள் இல்லை. மாறாக, அவரது ஆதரவாளர்கள் பொருத்தமில்லாத குழுக்களும் தனிநபர்களும் இணைந்த அசெளகரியமான ஒரு கூட்டணி என்றே பலரும் கருதுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு பொதுக் கருத்து இல்லை. அவர்கள் நிச்சயம் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகக்கூடியவர்களும் அல்ல. வரும் ஜூனில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது அவர்கள் கலைந்துவிடுவார்கள். மெக்ரோனே அறிவித்துக்கொண்ட அவரது இயக்கம் வீழ்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போகவே வாய்ப்பிருக்கிறது என்றும் பேசுகிறார்கள்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மையா? உண்மை நிலவரம் சொல்வது வேறு. முதலாவதாக, மெக்ரோன் இந்தத் தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். கருத்துக் கணிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமான வாக்குகளையே பெற்றிருக்கிறார். இதுபோன்ற சூழலில், அவர் 60%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால்தான் முறையான வெற்றியாக இருக்கும் என்று விமர்சகர்கள் கருதினார்கள். அதைவிட அதிகமான வாக்குகளையே எளிதாகப் பெற்றுவிட்டார். மேலும், வயது, பாலினம், சமூக - தொழில்சார் வகை என்று பலதரப்பட்ட வாக்காளர்களின் ஆதரவை மெக்ரோன் பெற்றிருக்கிறார், தொழில்துறை தொழிலாளர்கள் தவிர!

சுருக்கமாகச் சொன்னால், மெக்ரோனின் அரசியல் வியூகம் கைகொடுத்திருக்கிறது. ஸ்திரத்தன்மை, ஐரோப்பிய ஆதரவுநிலை, தொழில்நுட்ப அடிப்படையிலான அரசு நிர்வாகம் போன்ற வாக்குறுதிகள் மூலம் பெருமளவிலான வாக்காளர்களை ஈர்த்திருக்கிறார். ஃப்ராங்கோய்ஸ் ஹொல்லாந்தேயின் ஆட்சியின் தோல்விகளைத் தொடர்ந்து மத்திய இடதுசாரி அரசியல் என்பது ஆபத்தானது எனும் கருத்து பிரெஞ்சு மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் ஆதரவை மெக்ரோன் பெற்றிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும், அவரது வெற்றி ஏதோ தற்செயலானது என்று சொல்வது நியாயமற்றது. குறுகிய கால இடைவெளியில் ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றுக்கு அவர் அதிபராகவே ஆகிவிட்டார். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கும் அதிகமான இடங்களை வெல்லக்கூடிய அளவுக்கு ஒரு அரசியல் இயக்கத்தையும் அவர் உருவாக்கியிருக்கிறார் என்றும் சொல்லலாம். அவரது அரசியலை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவரது வெற்றியைச் சந்தேகிக்க முடியாது.

அவரது தேர்தல் பிரச்சாரக் குழுவிடம் அரசியல் அனுபவமில்லை என்பது உண்மை. பெரும்பாலானோர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், அதை வைத்து அவர்களிடம் கருத்துகள் இல்லை என்றும் ஒருமித்த பார்வை இல்லாதவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. உண்மையில், மெக்ரோனின் வெற்றி பிரெஞ்சு அரசியலில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்குக் காத்திரமானது.

பிரெஞ்சு தாராளவாதம்

பல ஆண்டுகளுக்கு முன்னர், சமகால பிரெஞ்சு அரசியல் கலாச்சாரத்தில் பிரெஞ்சு தாராளவாதம் மிக முக்கியமான அம்சம் என்று வாதிட்டிருக்கிறேன். 2007-ல் நிகோலஸ் சர்கோஸி, 2012-ல் ஹொல்லாந்தே ஆகியோர் அதிபர் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் பிரெஞ்சு தாராளவாதப் பாரம்பரியத்தின் குறிப்பிட்ட சில அம்சங்களை உணர்த்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து, மக்கள் தாராளவாதத்தைப் பின்பற்றுவார்கள் என்றும் பேசிவந்தேன். அந்தச் சமயத்தில் ஒருதலைப்பட்சமான கருத்தாக அது பார்க்கப்பட்டது. இன்றைக்கு அப்படி அல்ல.

பிரெஞ்சு தாராளவாதப் பாரம்பரியம் குறித்து பிரான்ஸ் வரலாற்றாசிரியர்கள் சொல்வதற்கு நிறைய இருந்தது. பெஞ்சமின் கான்ஸ்டன்ட், அலெக்ஸிஸ் டி டாக்யுவில்லெ, ரேமண்ட் ஆரோன், வலேரி கிஸ்கார்டு டி’ஈஸ்டாய்ங் போன்ற சிறந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய பாரம்பரியம் அது. அதேசமயம், தாராளவாதம் 19-ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் வெற்றிகரமாக இருந்ததைப் போல் பிரான்ஸில் இருந்ததில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். முன்பெல்லாம் பிரான்ஸில் தாராளவாதக் கட்சி என்று ஒன்று இருந்ததில்லை. தங்களைத் தாராளர்கள் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்ட பிரெஞ்சுத் தலைவர்களும் மிகச் சிலரே.

ஆனால், 1970-களிலிருந்து இது மாறிவருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் பிரான்ஸ் மக்களில் பலர் பிரெஞ்சு பாணி தாராளவாதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் சீர்திருத்தம், பிரெஞ்சு அல்லாத வெளி-கருத்தாக்கங்களைப் பெரிய அளவில் ஏற்றுக்கொள்வது, பிரெஞ்சு சமூகத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, சந்தை அடிப்படையிலான பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தும் தாராளவாதம் அது. இந்தத் தாராளவாதக் கருத்தாக்கங்களின் சில அம்சங்களை சர்கோஸியும் ஹொல்லாந்தேயும் எடுத்துக்கொண்டார்கள். மெக்ரோனிடமோ இந்தக் கருத்தாக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன.

தகர்ந்த கணிப்பு

1977-ல் பிறந்தவரான மெக்ரோனை, சமகால பிரெஞ்சு தாராளவாதத்தின் நேர்த்தியான வடிவம் என்று சொல்லலாம். அவரது ஆதரவாளர்களும் அப்படித்தான்: இளைஞர்கள், நடுத்தர வயதினர், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள், நகர்ப்புறவாசிகள், ஐரோப்பியர்கள். அவரது வாக்காளர்கள் சந்தர்ப்பக் கூட்டணியினர் என்று கருதுபவர்கள், 1990-களில் இருந்ததைவிட சக்திவாய்ந்த, தாராளவாத வாக்காளர்கள் பிரான்ஸில் உருவாகியிருப்பதைக் கவனிக்கத் தவறுபவர்கள் என்றே சொல்ல வேண்டும்.லெ பென்னின் ஆதரவாளர்கள் போலல்லாது, மெக்ரோனின் ஆதரவாளர்கள் உலக விஷயங்கள் குறித்து அக்கறை செலுத்துபவர்கள். பிரான்ஸுக்கு வெளியே நடக்கும் விஷயங்களை ஆர்வத்துடன் கவனித்துவருபவர்கள்.

சவால்கள் இல்லாமல் இல்லை. 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பிரெஞ்சு தாராளர்கள் பெரும்பாலும் உயர்குடியினர். பொதுமக்கள் குறித்து எப்போதும் அவர்களுக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. 1830-களில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவோ, அல்லது 1950-களின் கம்யூனிஸ அரசியலின் மீதான அச்சத்தின் காரணமாகவோ, நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தத்தில் தங்கள் லட்சியத் திட்டங்களை நிறைவுசெய்வதற்குப் பதிலாக, பழமைவாதிகளுடன் அவர்கள் சமரசம் செய்துகொண்டார்கள்.

இதே நிலை மெக்ரோனுக்கும் நேரலாம். தீவிர வலதுசாரிகளின் தொடர்ந்த அச்சுறுத்தல்கள் வரலாம், இடதுசாரி சமூக இயக்கங்களிடமிருந்து அவரது பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். இவற்றின் காரணமாக, சிறந்த அறிவு, அற்புதமான கருத்தாக்கங்கள், ஆனால் கும்பல்களிடம் அச்சம் கொண்ட முந்தைய தாராளவாதத் தலைவர்களின் கதியே இவருக்கும் ஏற்படலாம். அல்லது அந்தப் போக்கையே மாற்றியமைத்து, பிரான்ஸின் ஒபாமாவாக அவர் ஆகலாம். எப்படிப் பார்த்தாலும் அவரது தோல்விகளும், வெற்றிகளும் பிரெஞ்சு தாராளவாதிகளின் மொத்தத் தலைமுறையையும் நிர்ணயம் செய்யும் என்பது மட்டும் நிச்சயம்.

- எமிலி சபால், ‘எ டிவைடட் ரிபப்ளிக்: நேஷன், ஸ்டேட் அண்ட் சிட்டிசன்ஷிப் இன் காண்டெம்பரரி பிரான்ஸ்’ எனும் நூலின் ஆசிரியர்.

‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: வெ.சந்திரமோகன்

http://tamil.thehindu.com/opinion/columns/இம்மானுவேல்-மெக்ரோன்-தாராளர்களின்-புதிய-முகம்/article9693945.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
    • அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.