Jump to content

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு


Recommended Posts

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

 
 

17 வயது பெண் ஒருவர் மன அழுத்ததால் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவரித்து முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பலரால் பகிரப்பட்டுள்ளது.

katie lesho/ Facebookபடத்தின் காப்புரிமைKATIE LESSHO/FACEBOOK Image captionமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து முப்பத்து ஐந்து முறை பகிரப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் முதல்முறையாக தனது தலைமுடியை சீவுவதாகவும், பல் துலக்குவதாகவும், அது மிகுந்த வலியை தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மன அழுத்தம் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

"மன அழுத்தம் கெட்ட பழக்கங்களை உருவாக்கும், கண்ணில் கண்ணீர் வற்றும் வரை அது அழ வைக்கும், கண் இமைகள் இமைக்க மறந்து கண்களில் எரிச்சல் வரும் வரை கூரையை உற்று நோக்க வைக்கும்."

"உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் உங்கள் குடும்பத்தையும் அழ வைக்கும்; தனித்தும், கவனம் சிதறியவாறும் இருப்பதால் நீங்கள் உங்கள் குடும்பத்தை விரும்பவில்லை என்று அவர்களை உணர வைக்கும்".

"மன அழுத்தம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு வெறுமையை நீங்கள் உணருவீர்கள்".

ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மன அழுத்தத்தின் உண்மை நிலையை காட்டாமல் அதனை கற்பனை கலந்து காட்டுவதால் தான் இந்த பதிவை வெளியிட்டதாக ஜார்ஜியாவில் தனது ஆண் நண்பர் மற்றும் தாத்தா பாட்டியுடன் வாழும் கேட்டி, பிபிசியின் நியூஸ் பீட்டிடம் இதனை தெரிவித்தார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை உருக்கும் பதிவுபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

கடந்த சில வருடங்களாக மன அழுத்தம் குறித்து பேசுவதற்கு சமூகத்தில் யாரும் தயங்குவதில்லை, பலர் அதனை பற்றி பரவலாக பேசி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

"ஆனால் மன அழுத்தம் உங்களை உடல் ரீதியாக எவ்வாறு பலவீனமாக்கும் என்பதை பற்றி யாரும் பேசுவதில்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் குளிக்க தோன்றாது ஆகையால் உடலின் மேல் துர்நாற்றம் வீசுவது, அடிப்படை விஷயங்களை கூட மறப்பது சுய ஆரோக்கிய பழக்கங்களை செய்யாமல் இருப்பது ஆகிய சூழல் ஏற்படும்."

"தொலைக்காட்சிகளில் மன அழுத்தத்தினால் ஏற்படும் சோகத்தை காட்டுகின்றனர் மேலும் காதல் அதை எளிதானதாக மாற்றி விடுகிறது."

இந்த செய்திகளும் ஆர்வம் அளிக்கலாம்

 

நீங்கள் தாழ்வாக உணர்ந்தால் உங்கள் துணையிடம் நீங்கள் உதவி கோரலாம். நீங்கள் தனியாக இல்லை. உங்களை புரிந்து கொள்ளும் ஒருவர் நிச்சயமாக இருப்பார். நீங்கள் அவர்களை அணுகினால் உங்களுக்கு உதவ நிச்சயமாக அவர்கள் முன்வருவார்கள்.

சில சமயங்கள் நீங்கள் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்ய இயலும் ஆனால் சில சமயங்களில் அது முடியாது ஆனால் எது எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் விரும்ப வேண்டும் என கூறுகிறார் கேட்டி.

மன அழுத்தம் - அறிகுறிஎன்ன?

அனைவராலும் அனைத்து நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் நீங்கள் வாரக் கணக்காக சோகமாக உணர்கீறிர்கள் அது, வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

மன அழுத்தம் என்பது அறிகுறிகளை கொண்ட உடல் நல குறைவு. அதை நாம் ஒதுக்கிவிட முடியாது.

 

மன அழுத்தம் உள்ளவர்கள் எதிர்மறையான சிந்தனைகளை எதிர்கொள்வர்.

அது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும் என்றாலும் பொதுவான அறிகுறிகள் சில உள்ளன:

•பல நாட்களாக நீடிக்கும் சோகம், நம்பிக்கையில்லா தன்மை, உற்சாகமற்ற நிலை

•ஒரு நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணங்களில் தற்போது அவ்வாறு உணராமல் இருப்பது.

•அன்றாடம் செய்யக்கூடிய சிறு வேலைகளுக்கும் கூட உந்துதல் இல்லாமல் இருப்பது

•தன்னம்பிக்கையில்லாமல் இருப்பது, தன்னை தானே தாழ்வாக நினைத்து கொள்வது

•பதட்டமான நிலை

•குறைந்த ஞாபக சக்தி, கவனக் குறைபாடு, தூக்கமின்மை

•பசி எடுப்பதில் மாற்றம், எடை குறைவு அல்லது அதிகரிப்பு

•நண்பர்கள், குடும்பம், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பணியில் ஆர்வம் குறைவது.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிகப்படியான மன சோர்வு அல்லது விரும்பதகாத அனுபவங்களின் விளைவாக மன அழுத்தம் ஏற்படலாம்.

மன அழுத்தம் பாரம்பரியமாக வரலாம் அல்லது இயல்பாக அதனால் பாதிக்கப்படலாம்.

 

எதுவாக இருந்தாலும் நான்கில் ஒருவர், மன நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவே நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம் யாருக்கும் ஏற்படலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி என்ன வயதினராக இருந்தாலும் சரி.

இதற்கான சிகிச்சை என்ன?

ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால் அவர்கள் அதிலிருந்து விடுப்பட சிகிச்சைகள் அளிக்கப்படும்; அதன்மூலம் அவர்கள் விரைவாக அதிலிருந்து வெளிவரக்கூடும்.

உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள், மருத்துவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை தினம் பார்க்கின்றனர் எனவே நீங்கள் உங்கள் பிரச்சனையை அடையாளம் கொண்டு அதிலிருந்து வெளிவர உதவி கோருவதால் நீங்கள் அறிவாளியாக பார்க்கப்படுவீர்கள்.

நீங்கள் உதவி பெற பல வழிகள் உள்ளன;

•நீங்கள் அதிகம் நம்பும் ஒருவரிடம் மனம்விட்டு பேசுங்கள், முடிந்தால் உங்கள் குடும்பத்தினருடன் பேசுங்கள்.

•ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், முக்கியமாக கீரை மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்,.

•உடற்பயிற்சி செய்யுங்கள்.

•குடி, மது, சிகரெட், போதை பொருள் போன்ற பழக்கத்தை விட்டொழியுங்கள்.

•நண்பர்களிடம் பேசுங்கள், அவர்கள் உங்களை அலோசகர்கள் அல்லது வல்லுநர்களை அணுகுமாறு அறிவுறுத்துவார்கள்.

•துறை சார்ந்த வல்லுநர்கள் உங்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை அறிவுறுத்துவார்கள்.

உங்கள் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ அல்லது மருத்துவர்களிடமோ இதை பற்றி பேச தயங்காதீர்கள் இதில் அவமானமாக உணர ஒன்றுமில்லை. மன அழுத்தம் ஏற்படுவது உங்கள் குற்றம் அல்ல. எனவே பிறரிடம் உதவி கோருவதால் நீங்கள் பலவீனமாக கருதப்படமாட்டீர்கள். அது உங்கள் வாழ்க்கை மீது நீங்கள் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது.

http://www.bbc.com/tamil/global-39889968

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.