Jump to content

'விவேகம்' டீஸர் வெளியானது: படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து


Recommended Posts

'விவேகம்' டீஸர் வெளியானது: படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து

 

 
 
 
 
'விவேகம்' டீஸரில் அஜித் | கோப்பு படம்
'விவேகம்' டீஸரில் அஜித் | கோப்பு படம்
 
 

அஜித் நடித்துள்ள 'விவேகம்' டீஸர் வெளியானது. அதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் மே 11ம் தேதி 'விவேகம்' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. முயற்சியைக் கைவிடாதே (NEVER EVER GIVEUP)" என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

'விவேகம்' டீஸருக்காக அஜித்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில:

தனுஷ்: வாவ், அஜித் சாரின் விவேகம் ட்ரெய்லர் அற்புதமாக இருக்கிறது. அஜித், பார்க்க அழகாக இருக்கிறார். குழுவுக்கு வாழ்துக்கள்.

ஜெயம் ரவி: அந்த மனிதருக்கு தலைவணங்குகிறேன். மாஸ்

அருள்நிதி: NEVER EVER GIVE UP தலை பார்க்க அட்டகாசமாக இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: தல சிறப்பாக இருக்கிறார். NEVER EVER GIVE UP . சிவா சார், அற்புதம்.

ஒளிப்பதிவாளர் திரு: தல அஜித் விவேகம் டீஸரில் எடுப்பாக, அட்டகாசமாக இருக்கிறார்

கலையரசன்: தல பயங்கரம். ஒவ்வொரு நொடியும் ரசித்தேன். மரண மாஸ். பல லட்சம் பேருக்கு உந்துசக்தி நீங்கள்.

ராதிகா சரத்குமார்: வாவ், அஜித். விவேகம் பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் பார்க்க அற்புதமாக, அழகாக இருக்கிறார்.

அருண்விஜய்: தனிச்சிறப்புடைய டீஸர், மிரட்டலான காட்சியமைப்புகள். உயர்தரம். தல தோற்றத்தில் கலக்கியிருக்கிறார்.

ஜெ.அன்பழகன்: விவேகம் டீஸர் ஸ்டைலாக இருக்கிறது, ஆச்சரியப்படுத்துகிறது. தல அஜித்தின் உடல், உடைகளில் சிறந்த மாற்றம்

தாமரை: திரு.அஜித் மற்றும் விவேகம் குழுவுக்கு என் வாழ்த்துகள். அவரது ஈடுபாட்டை சொல்ல அற்புதம் என்ற வார்த்தை போதும்.

விக்ரம் பிரபு: இயக்குநர் சிவாவுக்கு வாழ்த்துகள். ஸ்டைலாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. அஜித் சாருக்கும், விவேகம் குழுவுக்கும் வாழ்த்துகள்.

சாந்தனு : வெறித்தனத்தின் மறுவடிவம். அற்புதமான டீஸர் சிவா சார். தல பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். மிகவும் பிடித்திருந்தது.

ரம்யா நம்பீசன்: விவேகம் டீஸர் மின்னுகிறது. அஜித் சார் முன்பை விட அதிகமான ஈடுபாட்டோடும், ஸ்டைலாகவும் இருக்கிறார். இயக்குநர் சிவாவுக்கும், மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/விவேகம்-டீஸர்-வெளியானது-படக்குழுவினருக்கு-தமிழ்-திரையுலகினர்-வாழ்த்து/article9692499.ece?homepage=true

அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர்!

 
 

Viv_111_400_00345.jpg

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தல' அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

 

கடந்த சில மாதங்களாகவே, 'விவேகம்' ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் மற்றும் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வந்ததையடுத்து, டீசர் வெளியிடப்படும் தேதியில் குழப்பம் நிலவிவந்தது. இந்நிலையில், விவேகம் படத்தின் 57 நொடி டீசர், நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. அஜித்துக்கு இது 57-வது திரைப்படம் என்பதால், டீசரின் அளவும் 57 நொடிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் வெளியாகி அரை மணி நேரத்தில் 30,000 வியூஸ் வந்ததைவைத்து, விவேகத்தின் வைரல் ரேட் அளவிட முடிகிறது. ஆகஸ்ட் மாதம் வெள்ளித்திரைக்கு வரும் 'விவேகம்' படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், பாலிவுட்டின் விவேக் ஓபராய் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

http://www.vikatan.com/news/cinema/89007-vivegam-movie-teaser-released.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.