Jump to content

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்


Recommended Posts

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

 
 

ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார்.

நாடாளுமன்றத்தில் பாலூட்டிய ஆஸ்திரேலிய செனேட்டர்படத்தின் காப்புரிமைREUTERS

இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார்.

கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை.

ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமைகள் தடைபடுவதாக தெரிவிக்கப்பட்டதற்கு பிறகு அது பின்னடைவை சந்தித்தது.

"நிறைய பெற்றோர்களும் பெண்களும் நாடாளுமன்றத்தில் தேவை" என முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார் வாட்டர்ஸ்.

"அதிகப்படியான குடும்பம் சார்ந்த பணியிடங்களும், குழந்தைகளை பராமரிக்கும் வசதிகளும் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தருணம் அங்கீரிக்கப்பட வேண்டும் என தொழிற்கட்சியைச் சேர்ந்த செனட்டர் கேடி கல்லகெர் தெரிவித்துள்ளார்.

"உலக முழுவதும் உள்ள நாடாளுமன்றத்தில் இது நடந்துள்ளது" என ஆஸ்திரேலியாவின் ஸ்கை நியூஸ் ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

"பெண்கள் தொடர்ந்து குழந்தை பெற்று கொள்ள போகிறார்கள், மேலும் அவர்கள் குழந்தைகளை பராமரித்துக் கொண்டே பணியில் ஈடுபட விரும்புகின்றனர். நாம் அதை ஏற்றுக் கொள்ள போகிறோம் என்பதே நிஜம்".என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் வரை நாடாளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளை நாடாளுமன்ற அலுவலகங்களுக்கும், பொது இடங்களுக்கும் அழைத்துச் செல்லலாம்

அரசியல்வாதிகள் செனட்டில் பாலூட்டுவதற்கு 2003 ஆம் ஆண்டு முதல் அ.னுமதி வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றங்களில் இது நுட்பமான விஷயமாக கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது குழந்தையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று பாலூட்டியதற்கு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன

கடந்த வருடம் பிரிட்டனில் நாடாளுமன்றத்தில் பாலூட்டப்படுவது அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

 

http://www.bbc.com/tamil/global-39873688

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார்.

நாடாளுமன்றத்தில் பாலூட்டிய ஆஸ்திரேலிய செனேட்டர்

எல்லாம் நல்லவிசயம்தான்.....

ஆனால் பிள்ளைக்கு பால்குடுத்துக்கொண்டிருக்கேக்கை இப்பிடி குண்டக்க மண்டக்க எண்டு கலகம் நடந்தால் என்ன செய்யிறது? :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சாதனையா. ஒரு தாய் தனது குழந்தைக்கு தான் விரும்பிய இடத்தில் பாலூட்ட யாரிடம் அனுமதி பெற வேண்டும். அது அவரின் சொந்த விடயம். அதில் தலையீடு செய்வது தான் தப்பு. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இதெல்லாம் சாதனையா. ஒரு தாய் தனது குழந்தைக்கு தான் விரும்பிய இடத்தில் பாலூட்ட யாரிடம் அனுமதி பெற வேண்டும். அது அவரின் சொந்த விடயம். அதில் தலையீடு செய்வது தான் தப்பு. tw_angry:

அப்பிடி சொல்லிட முடியாது பாருங்கள் இப்ப கன பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாலூட்டுவதில்லை இந்த பெண் பாராழுமன்றத்திலே வைத்து பாலூட்டு கிறாள் என்றாள் பாரட்ட வேண்டாமா  ( மார்பு அழகு போய்விடும் என்பதற்க்காக பாலூட்டுவதில்லையாம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

அப்பிடி சொல்லிட முடியாது பாருங்கள் இப்ப கன பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாலூட்டுவதில்லை இந்த பெண் பாராழுமன்றத்திலே வைத்து பாலூட்டு கிறாள் என்றாள் பாரட்ட வேண்டாமா  ( மார்பு அழகு போய்விடும் என்பதற்க்காக பாலூட்டுவதில்லையாம் )

மார்பு அழகு வயது போகப் போக.. எப்படியோ.. போகப் போகுது தானே. இதில..... மேலும்.. மார்பில் அழகு என்பதை எது தீர்மானிக்குது என்பதை பொறுத்துத்தான்.. ஒவ்வொரு வயதிலும் அதுக்கு ஒவ்வொரு அழகிருக்கு என்று நினைச்சிட்டால்.. உந்தச் சிக்கல் இல்லையே.. tw_blush:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

மார்பு அழகு வயது போகப் போக.. எப்படியோ.. போகப் போகுது தானே. இதில..... மேலும்.. மார்பில் அழகு என்பதை எது தீர்மானிக்குது என்பதை பொறுத்துத்தான்.. ஒவ்வொரு வயதிலும் அதுக்கு ஒவ்வொரு அழகிருக்கு என்று நினைச்சிட்டால்.. உந்தச் சிக்கல் இல்லையே.. tw_blush:tw_angry:

நீங்கள் சொல்லிட்டியள்  யார் உணர வேண்டும் இதை ..............:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.