Jump to content

ஆனந்தத் தாண்டவம்


Recommended Posts

மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள்
தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின
மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் 
முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது.

மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது
கூடவே மாயையும் கரைந்துபோனது
நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம்
எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல்
தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன

எங்கும் பரந்த முடிவற்ற வெளி
ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி
அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி
கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை
இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒன்று, ஒரே ஒன்று, துளிகளிற்குள்ளும் விரியும் ஒரே வெளி
வெளியில் ஞானமில்லை, வெளியே ஞானம்
அனைத்தும் வெளியாதலால் ஞானமே அனைத்தும்
பள்ளியில் இல்லை கருத்தரிப்பில் இல்லை, இருப்பிற்கு முந்திய இல்லாமையில் இல்லை,
அது இல்லாது இருந்ததே இல்லை, தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை

பேருந்து நிலையத்தில் குள்ளன் ஒருவன், பிச்சைக்கார நோயாளி பிறிதொருவன்,
முதிய பெண்ணொருத்தி, அழகி இன்னொருத்தி
தன் இருப்பைப் பேண... மனம் தீர்ப்புக்கள் எழுதிக்கொண்டிருக்கையில்
மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டுதொலைந்தது
கூடவே தூக்கமும் கலைந்தது
குள்ளனும் கிழவனும் நொடிந்தோனும் அழகியும் என்னானார்கள் தெரியாது
இரண்டு கட்டையில் எரியும் ஒரே நெருப்பு
பூமிப்பந்தில்லை, பால்வெளிகளில்லை, சூரியசந்திர நட்சத்திரத் துகள்களில்லை
ஆதியும் அந்தமும் அற்ற, அடியும் முடியும் இல்லா, நேரம் மரித்த ஞானப்பெருவெளியில்...ஆனந்தத் தாண்டவம்
நேரமில்லை, ஆதலாற் தாண்டவம்... தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரியும் கட்டைகளும் எரிந்தபின் எரிக்கும் நெருப்பும் அங்கில்லை....!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ......! ஞ<னம், பொருள் நிறைந்த கவிதை ....!  tw_blush:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுக்கு மட்டுந்தானே அத்தனை சக்தி.....

இன்னுமொருவனின் இன்னொரு முகம். ரம்மியமாகத்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும்.


கனவு பற்றி எழுதவில்லை, கனவு போன்று அர்த்தமின்றிக் கரைந்து கொண்டிருக்கும் வாழ்வில் இருந்து விழித்துக்கொள்ளல் பற்றியது. தூக்கம் என்பதை விழிப்புணர்வுக்கு முந்தை நிலையாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். 


உலகின் அத்தனை சமயங்களும் (இந்து, கிறீஸ்த்தவம், இஸ்லாம் (சூபி குறிப்பாக), பௌத்தம், சென் அனைத்தும்) காலாதிகாலமாக குறிப்பிடும் அடிப்படை விடயங்கள், மூன்றாம் வகுப்புச் சமயப்புத்தகத்திலேயே நாம் படித்துவிட்டாலும் விழிப்புணர்வின்றி, துன்பத்தில் உழன்று, எத்தனை செழிப்பிருப்பினும் வெறுமை மட்டும் உணரப்பட்டதாயப் பல வாழ்வுகள் நகர்கின்றன. 


மனம் பற்றிய புரிதல் இன்றி, உலகை துண்டுதுண்டாக மட்டும் பார்த்துக் கிடக்கிறோம். அனைத்தையும் மனதின் ஆதிக்கத்தில் விடுத்து, தீர்ப்புக்கூறாது எதையும் பார்க்க முடியாதவர்களாக, இருக்கிறோம். எம்மை உலகினின்று பிரிந்தவர்களாக ஒரு தீவு போன்றே எம்மையறியாது உணர்ந்துகொண்டிருக்கிறோம். உலகின் முழமைக்குள் நாமும் என்பது ஞாபகத்தில் வருவதே இல்லை. கவிதை போன்றன கூட துண்டு துண்டா விடயங்களை மனத்தின் ஆழமைக்குள் மட்டும் நின்று பேசிக்கொண்டிருக்கின்றன. அழகை வெழியே தேடுகின்றன. மதிப்பீடு தீர்ப்பு என்பனவற்றைத் தாண்டிய, மனதிற்கும் சிந்தனைக்கும் அப்பாலான கட்டத்தில் பார்த்தல் என்றவகையில் இதைப் பதிந்துள்ளேன்.

கவிதை என்று பதிந்துவிட்டு அதற்கு பொழுpப்பும் எழுதுவது சரியாக அமையாது என்பதால் வாசகர் கையில் விட்டுகிறேன். சுவியின் பார்வை அண்மித்து வருவதாகத் தோன்றுகிறது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் என்பது வாழ்க்கையின் ஆரம்பம்.

பலரும்  ஒரு துளி அளவு  கூட இல்லாத அனுபவத்தையே பெரும் கடலாகப் பார்க்கின்றனர்.

அது உண்மையல்ல.

பெருங்கடல் போல எம்முன்னே விரிந்திருக்கும் அனுபவக்கடலில்

ஆழ்ந்து நீந்துபவர்கள் ஒரு சிலரே அவர்களே ஞானிகள் ஆகின்றனர்.
சிலர்  சிறுவயதிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர்.

இன்னும் சிலருக்கு அதிக கால  அவகாசம் தேவைப்படுகின்றது.

வாழ்வின் பேறு என்பது என்ன?
வாழ்வின் பேறு  என்பது உன்னை நீயே மனதார மற்றவர்களுக்கு அர்ப்பணித்து விடுதல்.

அனுபவம் என்ற பெருங்கடலில் நீ பெற்ற முத்துக்களைக் கோர்த்து

அழகான கவிதையாக்கி அடுத்து  வரும் தலைமுறைக்கு அர்ப்பணித்து விடுதல்.

அப்போது நீ பெற்ற வாழ்வின் பேறினைப் பெற்றவனாகி விடுகின்றாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

அனுபவம் என்பது வாழ்க்கையின் ஆரம்பம்.

பலரும்  ஒரு துளி அளவு  கூட இல்லாத அனுபவத்தையே பெரும் கடலாகப் பார்க்கின்றனர்.

அது உண்மையல்ல.

பெருங்கடல் போல எம்முன்னே விரிந்திருக்கும் அனுபவக்கடலில்

ஆழ்ந்து நீந்துபவர்கள் ஒரு சிலரே அவர்களே ஞானிகள் ஆகின்றனர்.
சிலர்  சிறுவயதிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர்.

இன்னும் சிலருக்கு அதிக கால  அவகாசம் தேவைப்படுகின்றது.

வாழ்வின் பேறு என்பது என்ன?
வாழ்வின் பேறு  என்பது உன்னை நீயே மனதார மற்றவர்களுக்கு அர்ப்பணித்து விடுதல்.

அனுபவம் என்ற பெருங்கடலில் நீ பெற்ற முத்துக்களைக் கோர்த்து

அழகான கவிதையாக்கி அடுத்து  வரும் தலைமுறைக்கு அர்ப்பணித்து விடுதல்.

அப்போது நீ பெற்ற வாழ்வின் பேறினைப் பெற்றவனாகி விடுகின்றாய்.

ஆகா... அருமையான கருத்து, வாத்தியார். :) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.