Jump to content

காஷ்மீரின் முடிவில்லாத துயரம்


Recommended Posts

காஷ்மீரின் முடிவில்லாத துயரம்

 

 
 
kashmir_3162964f.jpg
 
 
 

இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. காஷ்மீரின் நகர் மக்களவை இடைத்தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறையும், மிகக் குறைந்த வாக்குகளே பதிவானதும் புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் பயனுள்ளதாக இருப்பதற்குப் பதில் வசைமாரிக்கே வழிவகுத்தன. உண்மையான பிரச்சினைகளைத் திரையிட்டு மூடவே வசைமாரிகள் வழிசெய்யும்.

காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு எதிரெதிர் குழுக்கள்தான் இருக்கின்றன. பிரதான இந்தியாவில் இருப்பவர்களில் பலரும் காஷ்மீரிகளை பாகிஸ்தான் ஆதரவு வஹாபியர்களாகவும், பயங்கரவாத ஆதரவாளர்களாகவும் பார்க்கின்றனர்; பள்ளத்தாக்கில் இருப்பவர்களோ இந்தியர்கள் வகுப்புவாத வெறியர்கள் என்றே கருதுகின்றனர். இருவருடைய கருத்துகளிலும் எள் முனையளவுக்கு – எள் முனையளவுதான் – உண்மை இருக்கிறது. பெரும்பாலான காஷ்மீரிகள் சுதந்திரமாக, அமைதியாக, கண்ணியமாக, பெரும்பாலான இந்தியர்கள் வாழ்வதைப் போலவே வாழ விரும்புகின்றனர். இதை மத்தியில் ஆளும் அரசும், மாநில அரசும் தங்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

தீவிரத்தை நோக்கி

இந்தியர்கள் மதவெறியர்கள், காஷ்மீரிகள் பாகிஸ்தான் ஆதரவு வஹாபியர்கள் என்ற பரஸ்பர வசைப் பிரச்சாரங்கள் மேலும் பலரைத் தீவிரவாதிகளாக்கவே உதவும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிலரிடம், ‘இஸ்லாமிய அரசு’ பாணி ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற தவறான ஆசை உருவாகியிருப்பதை மறுக்க முடியாது. கல் வீச்சுகளை யாரும் திட்டமிட்டுத் தூண்டுவதில்லை. இருபதாண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட இப்போது பள்ளத்தாக்கில் கோபம் அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமானது பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தபோது, சமாதானப் பேச்சுகளைத் தொடங்குவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதுதான். மாநிலத்தில் நேர்மையான - மக்களுக்குப் பொறுப்பான நிர்வாகம் ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணம்.

ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநிலப் போலீஸ் படை என்ற மூன்றை மட்டுமே இந்திய அரசின் வெளியில் தெரியும் முகமாக பள்ளத்தாக்கில் காட்டிக்கொண்டிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கண்ணில் தென்படுவதே இல்லை. மக்களுடைய ஆத்திரத்தை, பாதுகாப்புப் படையினர்தான் நேரில் எதிர்கொள்கின்றனர். பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கல்லடிபடும் அவர்கள் மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதில் வியப்பேதும் இல்லை. இப்படிச் சொல்வதால் மனித உரிமைகளை மீறுவது சரி என்றோ, நியாயம் என்றோ நாம் கூறவில்லை. அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால்தான் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவை குறையும். உள்நாட்டுப் பூசலைத் தீர்க்க ராணுவத்தைத் துணைக்கு அழைத்து அவர்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறோம்.

மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் ராணுவத்தை நாம் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். அதற்குப் பிறகு மாநில அரசு நிர்வாகமும் மக்களுடைய பிரதிநிதிகளும்தான் பொறுப்பை ஏற்க வேண்டும்.

சமரசமும் வன்முறையும்

சமரச நடவடிக்கைகள் தொடங்கப்பட்டால் கல் எறிதல் உள்ளிட்ட வன்செயல்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது நம்முடைய கடந்த கால அனுபவம்.

2010-ல் மக்களுடன் பேச்சு நடத்த அனுப்பப்பட்ட மூன்று மத்தியஸ்தர்களில் நானும் ஒருத்தி. காஷ்மீரிகளுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பது, அரசியல்ரீதியாகப் பேச்சு நடத்துவது, பாதுகாப்புப் படையினரின் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைச் செய்வது என்று பல்வேறு தளங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நிலைமை மேம்பட்டதல்லாமல் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் இதர இந்தியாவுக்கும் இடையே உறவு மேம்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எங்களைப் பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, காஷ்மீர் மாநில அரசு என்ற மூன்றுமே எங்களுடைய அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தவறின. அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக எங்களுடைய பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. எங்களுடைய முயற்சிக்கு மட்டுமல்ல, எங்களிடம் கருத்து தெரிவித்த சில ஆயிரம் மக்களுக்கும் அது பெருத்த பின்னடைவைத்தான் ஏற்படுத்தியது.

பொய்த்துப்போன நம்பிக்கை

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஒன்றையொன்று காரசாரமாகத் தாக்கிப் பிரச்சாரம் செய்தன. எந்தக் கட்சிக்கும் அல்லது அணிக்கும் பெரும்பான்மை கிட்டாதபோது இவ்விரு கட்சிகளும் பொதுச் செயல்திட்டம் குறித்துப் பேசி உடன்பாட்டுக்கு வந்து ஆட்சியமைத்தபோது இனி சமரச நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் என்ற எந்தப் பகுதியையும் புறக்கணித்துவிடாமல் எல்லாப் பகுதிகளின் முன்னேற்றத்துக்குமான திட்டங்களைக் கூட்டணி ஏற்றது. இப்போதும்கூட அவற்றை அமல்படுத்தினால் மக்களிடையே நம்பிக்கை ஏற்படும்.

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போரைத் தூண்டிவிட 1947 முதலே பாகிஸ்தான் முயற்சித்து வந்தது அதில் வெற்றி கிட்டவில்லை. 1980-களின் பிற்பகுதியிலிருந்து அவர்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவு தோன்ற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு (காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து) செல்லாக்காசாகிவிட்டது. 1988-ல் மாநில நிர்வாகத்தில் மத்திய அரசு அடிக்கடி குறுக்கிட்டதால் ஆயிரக்கணக்கான காஷ்மீரி இளைஞர்கள் ஆயுதம் எடுத்து கிளர்ச்சியில் இறங்கினர். அன்றிலிருந்து பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அப்படியும் தேர்தல்களை நடத்துவதில் வெற்றி அடைந்துவந்தோம். தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்தன. அரசியல் சமரசம் காண்பதில் கண்ட தோல்வியால் பாகிஸ்தானின் கை வலுவடைந்தது. அது இப்போதும் நீடிக்கிறது.

இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதித்த முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, விரைவிலேயே அரசியல் பேச்சுகள் தொடங்கும் ஆனால் அதற்கு முன் அமைதி ஏற்பட வேண்டும் என்றார். இப்படி நிபந்தனை விதித்து, அமைதி ஏற்படட்டும் என்று காத்திருக்கவே கூடாது.

அரசியல் தீர்வுக்கான பேச்சு என்றால் அதை யாருடன் நடத்தப் போகிறது என்று தெளிவுபடுத்தப்படவில்லை. பிரிவினை கேட்பவர்களுடனும் சுதந்திரம் கோருபவர்களுடனும் பேசமாட்டோம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி சில நாள்களுக்கு முன்னால் அறிவித்தார். ஹூரியத், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகியோரை மனதில் கொண்டுதான் பேசியிருக்கிறார். இப்படி அறிவித்தால் பேச்சே தொடங்காது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி இருவரும் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். பிறகு வந்த பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் அதையே பின்பற்றினர். பாகிஸ்தானுக்கும் நமக்கும் பாலமாக இருக்க ஹுரியத்தையே பயன்படுத்துவது என்ற புத்திசாலித்தனமான முடிவை வாஜ்பாய் எடுத்தார். ஹுரியத் வந்து பேசும்போது, மாட்டேன் என்று பாகிஸ்தானால் சொல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக கெரில்லாக்களுக்குப் பயிற்சி தருவது, ஆயுதங்களை வழங்குவது, பாதுகாப்பான புகலிடங்களை ஏற்படுத்துவது ஆகிய செயல்களைப் பாகிஸ்தானால் நிறுத்த முடியவில்லை. அதே சமயம், அவர்களை அடக்கி வாசிக்குமாறு கட்டுப்படுத்தியது. மக்களுடைய ஆதரவு இல்லாததால் தீவிரவாதிகளின் செயல்களும் கட்டுக்குள் வந்தன.

மனித உரிமைகள்

ஹுரியத் மற்றும் அதிருப்தியாளர் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுடன் சமரசம் காண முற்பட்டபோது படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மக்கள் மாநாட்டு அமைப்பின் தலைவர் அப்துல் கனி லோன், ‘ஆயுதமேந்தி போராடும் காலம் முடிந்துவிட்டது’ என்று அறிவித்தார் உடனே ஐ.எஸ்.ஐ.யால் படுகொலை செய்யப்பட்டார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி மஜீத் தர், சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பேசுகிறார் என்று அறிந்ததும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் பேசுகிறார் என்பதற்காக ஹுரியத் தலைவர் ஃபசல் ஹக் குரேஷியை உள்ளூர் தீவிரவாதிகள் சுட்டு படுகாயப்படுத்தினர். ஹுரியத் அமைப்பிலேயே பலர் இப்போதும் பேச்சுக்கு வரக்கூடும். மனித உரிமை மீறல்களை நிறுத்த வழி காண்பதுடன், அரசியல் ரீதியாக அவர்களை அணுகினால்தான் முயற்சிகள் பலன் தரும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை ஏற்படுத்த விரும்பினால் அதை படைபலத்தால் மட்டும் சாதிக்க முடியாது; அரசின் மீது அதிருப்தியாக இருப்பவர்களை அழைத்துப் பேசுவதுதான் ஒரே வழி!

ராதா குமார்-கட்டுரையாளர் எழுத்தாளர், அரசியல் விமர்சகர்

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

http://tamil.thehindu.com/opinion/columns/காஷ்மீரின்-முடிவில்லாத-துயரம்/article9689745.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

சிறந்த கால்பந்து வீராங்கனையான காஷ்மீரின் அஃப்ஷன் ஆஷிக் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட நேர்ந்த அவலம்

 

 
 
 
கால்பந்து வீராங்கனையும் பயிற்சியாளருமான அஃப்ஷன் ஆஷிக். | படம்.| நிசார் அகமது.
கால்பந்து வீராங்கனையும் பயிற்சியாளருமான அஃப்ஷன் ஆஷிக். | படம்.| நிசார் அகமது.
 
 

ஜம்மு காஷ்மீரின் சிறந்த கால்பந்து பயிற்சியாளரும், வருங்காலத்தில் சர்வதேச கால்பந்து போட்டியில் ஆடும் கனவும் கொண்டிருக்கும் 21 வயது அப்ஷன் ஆஷிக் ஜம்மு காஷ்மீரில் போலீஸாருக்கு எதிராக கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டார்.

கடந்த ஏப்ரலில் ஒருநாள் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கடும் கோபாவேசம் கொண்ட இளைஞர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பொதுவாகவே அமைதியாக இருக்கும் அப்ஷன் ஆஷிக் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் உள்ளது. பாதுகாப்பு படையினர் மீது ஆஷிக் கல்வீசித் தாக்குதல் நடத்தியது அங்கு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இவர் ஏன் கல்லெறி தாக்குதலில் ஈடுபட்டார் என்பது பற்றி ‘தி ஸ்க்ரால்’ பத்திரிகை அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டியாலாவின் பிரபல நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸில் பயிற்சி பெற்றவர் அப்ஷன் ஆஷிக், இவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கால்பந்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதாகவே அனைவராலும் பார்க்கப்பட்டார். இவர் பயிற்சியளித்த அணி கடந்த ஆண்டு சிலபல வெற்றிகளைக் குவித்ததையும் இவருடன் பணியாற்றியதையும் மாணவிகள் பலர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவரது கண்பார்வையில் ஸ்ரீநகரில் நிறைய வன்முறைகள், கல்லெறி சம்பவங்கள், பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களை நடந்தாலும் இவர் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்துள்ளார்.

அன்றைய தினம் நடந்தது என்ன?

ஏப்ரல் 24-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு வன்முறைச் சம்பவங்களால் தீப்பற்றி எரிந்தது. அன்றைய தினம் மதியம் அரசு பெண்கள் மேநிலைப் பள்ளியின் 10-16 பெண்களை ஆஷிக் பாதுகாப்பாக வழக்கமான ஒரு 15 நிமிட நடைப்பயிற்சிக்காக கோதி பாக் அருகே அழைத்துச் சென்றார். அப்போது போலீஸாருக்கு எதிராக கல்வீச்சு நடந்து கொண்டிருந்தது.

இதனைக் கண்ட ஆஷிக் தன் உடன் வந்த மாணவிகளை அழைத்துக் கொண்டு மாற்றுப்பாதையில் சென்றார். காஷ்மீர் போலீஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

ஆஷிக் உடன் வந்த மாணவிகளை போராட்டக்காரர்கள் என்று நினைத்தோ என்னவோ போலீஸார் இவர்களை நிறுத்தி விசாரிக்காமல் நேரடியாக வசையில் இறங்கியுள்ளார், இதில் கோபமடைந்த மாணவி போலீஸாரை எதிர்த்தார், இதற்காக அந்தப் போலீஸ் மாணவியை அடித்துள்ளார். இதற்கு மற்ற மாணவிகளும் ஆஷிக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் போலீஸார் மேலும் மேலும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் வசைபாடியபடியே இருந்துள்ளனர். இதனையடுத்து வீதிப் போராட்டத்தில் இந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆஷிக் முடிவெடுக்க முடியாமல் இரண்டக நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்க்ரால் செய்தியின் படி ஆஷிக் போலீசிடம், “நீங்கள் சீருடையில் இருப்பதால் உங்களை அடிக்க முடியவில்லை. ஆனால் உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று காட்டுகிறோம்” என்று கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்தே மேலும் வசைகள் அதிகரிக்க கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டார் வீராங்கனை ஆஷிக். விளையாட்டை அமைதிக்கான மார்க்கமாகக் காண்பதாகக் கூறும் ஆஷிக்கை கல்லெறி சம்பவத்துக்கு தூண்டியது போலீஸாரின் செயல்பாடுகளே என்கிறார் அவர்.

http://tamil.thehindu.com/sports/சிறந்த-கால்பந்து-வீராங்கனையான-காஷ்மீரின்-அப்ஷன்-ஆஷிக்-கல்வீச்சுத்-தாக்குதலில்-ஈடுபட-நேர்ந்த-அவலம்/article9690461.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.