Jump to content

அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர்


Recommended Posts

அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1

 
 

 அஜித்

சான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்’ என்று ஒரே பாராவில் சொல்லிவிடலாம்தான். ஆனால் இந்த ஒரு பாரா வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் குறிப்பாக சினிமா.

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித்.  அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

ajith

பெரும்பாலானவை கமர்ஷியல் மசாலாக்கள்தான். இவர் காலகட்ட விக்ரம் போன்றோ, இன்றைய விஜய் சேதுபதி போன்றோ ஆகச்சிறந்த நடிப்பு, பரிட்சார்த்த முயற்சிகள் எதுவும் இல்லைதான். விஜய் அளவுக்கு மிகச்சிறந்த டான்சர் கிடையாதுதான். கேரளா, ஆந்திரா போன்ற மற்றமொழிகளில் சக தமிழ் நடிகர்களுக்கு உள்ள மார்க்கெட் போல இவருக்குக் கிடையாதுதான். இவ்வளவு ‘கிடையாது’களுக்குப்பிறகும் எப்படி இவருக்கு இத்தனை ரசிகர்கள்? ரசிகர் மன்றங்களை கலைத்தபிறகும் எப்படி இவருக்கு இவ்வளவு பெரிய மாஸ் ஓப்பனிங்? ஆம்... துரோகங்கள் நிறைந்த இந்த சினிமாவை தன்னம்பிக்கையான தன் தனிப்பட்ட வாழ்க்கையால் வென்று இருக்கிறார் என்பதுதான் அஜித் ஸ்பெஷல். 

இனி தினம் சில படங்கள் என, அஜித்தின் 57 படங்களை பற்றிய சுவாரஸ்ய செய்திகளை பார்ப்போம். 

இன்றைய அஜித் 5: 

1. ‘என் வீடு... என் கணவர்’

அஜித், அப்போது விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே சினிமா வாய்ப்பு தேடலில் இருந்தார். ‘ஹவாய் செப்பல்’ உள்பட சில விளம்பரங்களில் அவரைப் பார்த்திருக்கலாம். ‘அப்போது சுரேஷ்-நதியா நடித்த இந்தப் படத்தின் ஒரு பாடலில், யூனிஃபாம் அணிந்த பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவியுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பேசியபடி வருவார். அவர்களிடம் சுரேஷ், ‘இந்த வயசுலேயே உங்களுக்கு லவ்வா?’ என்ற தொனியில் அதட்டி அனுப்புவதாக வரும் அந்த காட்சியில், அந்தப் பள்ளி மாணவனாக வந்தவர் வேறுயாரும் அல்ல, ‘தல’ அஜித்தேதான். சில விநாடிக் காட்சியே என்றாலும், அது ஒரு வாய்ப்பு என்பதால் ‘என் வீடு... என் கணவர்’க்கும் கவுன்ட்டில் இடம் உண்டு.

அஜித்

2. ‘பிரேம புஸ்தகம்’

இந்தத் தெலுங்கு படம்தான் அஜித் ஹீரோவாக நடித்த முதல் படம். இதன் படப்பிடிப்பு 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாளிலிருந்து கணக்கிட்டுதான், இவர் சினிமாவுக்கு வந்த 25-வது ஆண்டாக இந்த 2017-ம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாசராவ். விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது கப்பலிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். பிறகு, இந்தப் படத்தை அவரின் அப்பாவும் இயக்குநருமான கொல்லப்புடி  மாருதிராவ்தான் இயக்கினார். இறந்த தன் மகனின் நினைவாக ‘கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு விருது’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவருகிறார் மாருதிராவ் என்பது கூடுதல் தகவல்.

அஜித்

3. ‘அமராவதி’

இந்தப் படம் தொடங்கும்போது வேறொரு நடிகர்தான் ஹீரோ. அவரை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். ஆனால், தயாரிப்புத் தரப்பு தேடியதோ வேறொரு ஹீரோவை. இந்தச் சமயத்தில் ஹேமா என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ட்ரூப்பில் மேடைப் பாடகி. அவர் அப்போது ‘கோஆர்டினேட்டர்’ என்ற ஒரு விளம்பர கம்பெனியிலும் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கம்பெனி ‘ப்ரீமியர் வேட்டி’க்காக ஒரு விளம்பரம் எடுத்தது. அதில் அஜித் நடித்தார். 

கையில் ஹெல்மெட், நீளமான தலைமுடியுமாக அந்த ஹேமாவைப் பார்க்க அஜித் வந்திருந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் அவரின் இன்றைய மேனேஜர் சுரேஷ்சந்திரா. அப்போது பட வாய்ப்புக்காக, சுரேஷ்சந்திராவிடம் நீள கலர் டிஷர்ட்டில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களைக் கொடுத்தார் அஜித். அதை இயக்குநர் செல்வாவிடம் சுரேஷ் காட்டியிருக்கிறார். ‘இந்தப் பையனைத்தாங்க நாங்களும் ஒரு விளம்பரத்துல பார்த்துட்டு தேடிட்டிருந்தோம்’ என்று செல்வா சொல்ல, அப்படித்தான் அஜித் ‘அமராவதி’க்குள் வந்தார். 

‘அமராவதி’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்தது. அங்கு உள்ள நட்ராஜ் ஹோட்டலில் அஜித்துக்கு ரூம் நம்பர் 403. அங்கு மொத்தமே 20 அறைகள்தான். ஆனால், அத்தனை அறைகள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த நம்பர் ப்ளான். அங்கு இருந்த 42 நாள்களும் ஹோட்டலில் இருந்து ஷூட்டிங்குக்கு இவர் சுரேஷ்சந்திராவுடன் டிசிஎன் 5259 என்ற எண் கொண்ட பைக்கில்தான் போய் வந்தார்.

யாருக்கும் தெரியாத புதுத் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தின் ரிலீஸின் போதுதான் அஜித்தும் விஜய்யும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். விஜய் அப்போது ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் இமயவரம்பன். பிரபாகர் என்கிற பொது நண்பர் மூலமாக அந்த இமயவரம்பன் அஜித்துக்கும் அவர் சர்க்கிளுக்கும் பழக்கம். ‘அமராவதி’ ரிலீஸ் அன்று அஜித், இமயவரம்பன், பிரபாகர் உள்பட பலர் வடபழநி கமலா தியேட்டர் வெளியே பைக்கில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் இருக்கும். அப்போது வேகமாக வந்த இளைஞர் கூட்டம் ஒன்று விறுவிறுவென தியேட்டருக்குள் போனது. அந்தக் கூட்டத்திலிருந்து விலகி இவர்களை நோக்கி வந்த இளைஞர் ஒருவர், இமயவரம்பனைப் பார்த்து ‘ஹாய்’ சொல்கிறார். அவர்தான் விஜய். 

பிறகு இமயவரம்பன், ‘இவர் அஜித்... இவர் விஜய்’ என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திவைக்கிறார். ‘ஹாய் பாஸ். ஆல் தி பெஸ்ட்’ என்று ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு கடந்தனர். இருவரும் பின்னாளில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் சேர்ந்து நடிப்போம் என்றோ, பெரிய ஹீரோக்களாக வளர்ந்து ரசிகர்களால் எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படுவோம் என்றோ அப்போது அவர்களுக்குத் தெரியாது. 

அஜித்

4. ‘பாச மலர்கள்’

சுரேஷ்மேனன், அப்போது நிறைய விளம்பரப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அப்படித்தான் அஜித்துக்கு அவர் பழக்கம். அந்தப் பழக்கத்தில், `அர்விந்த் சுவாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?’ என்று சுரேஷ்மேனன் கேட்டபோது பண்ணின படம்தான் ‘பாச மலர்கள்’. அந்தச் சமயப் பணத்தேவைகளுக்காக மட்டுமே பண்ணின படம்; நிறைய மனக்கசப்புகளுக்கு இடையில் நடித்த படம். இந்தப் படத்துக்கும் ‘அமராவதி’க்கும் அஜித்துக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம்.

அஜித்

5. ‘பவித்ரா’

கதைப்படி, இதில் அஜித்துக்கு ஆபரேஷன் முடிந்து மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் கேரக்டர். அப்போது பைக் ரேஸ் விபத்தில் உண்மையிலேயே சிக்கி, முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தார். ஆனாலும் சக்கர நாற்காலியில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கதையும் ஒரிஜினலும் ஒன்றாகவே இருந்ததால், படுத்துக்கொண்டே நடித்தார். அப்போது அஜித்துக்கு இதைத் தவிர பெரிதாக படங்கள் இல்லை. அதனால் டிவி தொடர்களில் நடிக்க நண்பர்கள் பலர் இவரை அழைத்தனர். சீனியர் சினிமா பிரபலம் ஏ.எல்.நாராயணனின் மகன் ஏ.எல்.என்.மோகன் அப்போது தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துக்கொண்டிருந்தார். ‘ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாசத்துக்கு 25 நாள்கள் ஷூட்டிங். 50 ஆயிரம் ரூபாய் கன்ஃபர்ம்’ என்று அஜித்திடம் கூறியிருக்கிறார். ஆனால் அஜித்தோ, ‘ஐ வில் மேக் இட் ஒன் டே. டோன்ட் வொர்ரி’ என்று நம்பிக்கையுடன் கூறினார். ‘தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது ஒன்றும் தீண்டத்தகாத விஷயம் அல்ல. ஆனால், சினிமாவுக்காக வந்துவிட்டு பணத்துக்காக மட்டுமே ஏன் டிவி-க்குப் போகவேண்டும்? சினிமாவிலேயே ஒருநாள் நிச்சயம் ஜெயிப்பேன்’ என்று அவ்வளவு சிரமங்களிலும் நம்பிக்கையோடு காத்திருந்தார்.

அஜித்

விஜய்யின் அம்மா கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட்ட அஜித், விநாயகர்-அஜித் காம்போ வென்றது எப்படி? விளம்பரங்களில் அஜித் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் எது? நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி எந்தப் படத்தில் முதன் முதலில் அஜித்துடன் இணைந்தார்? அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடன இயக்கம் அமைத்த டான்ஸ் மாஸ்டர்கள் யார்  யார்? அஜித் வாங்கிய முதல் கார், அதன் நம்பர் என்ன?

 நாளை பார்ப்போம். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/88924-facts-about-ajith-ajithai-arinthaal-series---1.html

Link to comment
Share on other sites

அஜித் முதல் கார் வாங்கிய கதை! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 2

 
 

 Ajith vikatan

பாகம் 1

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித்.  அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

நேற்றைய பாகத்தில் அவரது முதல் ஐந்து படங்கள் பற்றிப் பார்த்தோம்...

விஜய்யின் அம்மா கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட்ட அஜித், விநாயகர்-அஜித் காம்போ வென்றது எப்படி? விளம்பரங்களில் அஜித் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் எது? நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி எந்தப் படத்தில் முதன் முதலில் அஜிததுடன் இணைந்தார்? அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடன இயக்கம் அமைத்த டான்ஸ் மாஸ்டர்கள் யார்  யார்? அஜித் வாங்கிய முதல் கார், அதன் நம்பர் என்ன தெரியுமா? இவற்றை   

ajithsdsss2_09283.jpg

6. ‘ராஜாவின் பார்வையிலே’

அன்றிலிருந்து இன்று வரை நிறைய டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடித்துள்ளார் அஜித் என்பது, அவரின் பட வரிசையைப் பார்த்தாலே தெரியும். அவரின் கான்ஃபிடன்ஸ் லெவலே அதற்குக் காரணம். அப்படித்தான் விஜய்யுடன் சேர்ந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படமும். இந்தப் படத்தில் கமிட் ஆகும்போது அஜித்-விஜய் இருவருமே இன்று உள்ளதுபோல் மாஸ் ஹீரோக்கள் கிடையாது; ஆரம்பகட்டத்தில் இருந்தவர்கள். இந்தப்பட படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யின் அம்மா ஷோபா அவருக்கு மதிய உணவு கொடுத்தனுப்பும்போது, அதில் அஜித்துக்கும் சேர்த்தே லன்ச் இருக்கும். 

`அஜித், எந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் வருவதில்லை’ எனக் குறைபட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தகவல். அவர் தலைமைதாங்கி நடத்திய ஒரே ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ‘குஷி’ பட ஆடியோ வெளியீட்டு விழாதான். காரணம், எஸ்.ஜே.சூர்யா. அவர் அழைத்ததால் சென்றார். அந்த நிகழ்ச்சி ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. அதில், ‘நானும் விஜய்யும் ஷோபா அம்மா கொடுத்தனுப்பின சாப்பாட்டை சேர்ந்து சாப்பிட்டிருக்கோம். விஜய்யை எனக்குப் பிடிக்க அதுகூட ஒரு காரணமா இருக்கலாம். ஐ லவ் யூ ஆன்ட்டி, ஆல் த யுவர் லவ்லி ஃபுட்ஸ்’ என்று பேசினார்.

அஜித்

7. ‘ஆசை’

அஜித் தேர்வான முதல் படம் ‘மே மாதம்’தான். மணிரத்னம் தயாரிப்பு. அப்போது இவர் ரேஸில் அடிபட்டு ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருந்தார். அதனால் இவரை டிராப் பண்ணிவிட்டு வினித்தை கமிட் பண்ணி, அவசரம் அவசரமாக ‘மே மாதம்’ படத்தை முடித்தார்கள். இதில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ், கொடுத்த கால்ஷீட்டுக்காக அஜித் பண்ணின படம்தான் ‘ஆசை’. இந்தப் படம் தன் வாழ்க்கையில் முக்கியமான சினிமாவாக இருக்கப்போகிறது என்று அப்போது அஜித்துக்குத் தெரியாது. 1996-ம் ஆண்டு மே மாதத்தில் `ஆசை’ ரிலீஸானது. அதுவரை சென்னையை பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு, அதன் பிறகு அது சாத்தியமாகாமல் போய்விட்டது. எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கத் தொடங்கினார்கள். அதேபோல இவர் ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனால், இவரின் என்ட்ரி பாடலாக ஒலிக்கத் தொடங்கியது ‘கொஞ்ச நாள் பொறு தலைவா...’.

 

அஜித்

8. `வான்மதி’

பிள்ளையாருக்கும் அஜித்துக்குமான கனெக்‌ஷனுக்கு, பிள்ளையார் சுழி போட்ட படம் இது. இந்தப் படப் பாடலான, ‘பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா, நீ கருணை வெச்சா நானும் ஹீரோப்பா...’வில் தொடங்கிய அந்த லிங்க் ‘அமர்க்களம்’ பட ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா... மகாகணபதி...’யில் தொடர்ந்து ‘வேதாளம்’ பட ‘வீர விநாயக வெற்றி விநாயக...’ பாடல் கடந்து இன்றும் தொடர்கிறது. அதற்குக் காரணம் ‘வான்மதி’ பட `பிள்ளையார்பட்டி ஹீரோ’தான். ‘சாஃட்டான ஏ சென்டர் ஹீரோ’ என்ற இமேஜை சற்றே மாற்றி பி, சி என கிராமம் வரை இவரை அழைத்துப்போனாள் ‘வான்மதி’.

அஜித்

9. ‘கல்லூரிவாசல்’

பவித்ரன் டைரக்‌ஷனில் பிரசாந்த் உடன் நடித்த படம். இந்தப் பட புரமோஷன் சமயத்தில் போஸ்டர் உள்ளிட்ட விளம்பரங்களில் இவர் இருட்டடிப்பு செய்யப்பட்டார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், விமர்சனத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதில் இந்தி பட இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் பூஜா பட்தான் ஹீரோயின். பூஜா இன்று வரை அஜித்தின் நல்ல தோழி. ‘ஐ லவ் யூ சார்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க அஜித்தை பூஜா அழைத்தபோது, அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் அஜித். `நிக் ஆடியோ’ என்ற பெயரில் `கல்லூரிவாசல்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அஜித்துக்கு அறிமுகமானவர்தான் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி. இந்தப் படத்தின் நடன இயக்குநர் கல்யாண் இன்று வரை அஜித்தின் நல்ல நண்பர். ‘தீனா’வில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா...’, ‘மங்காத்தா’வில் வரும் ‘ஆடாம ஜெயிச்சோமடா...’ உள்பட அஜித்தின் பல ஃபேவரிட் பாடல்களுக்கு கல்யாண்தான் நடன இயக்குநர். அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்களில் கல்யாண், தினேஷ் இருவரும் முக்கியமானவர்கள்.

10. ‘மைனர் மாப்பிள்ளை’

அஜித்தின் அப்பா, ‘6446’ என்ற எண்கொண்ட மாருதி எஸ்டீம் கார் ஒன்று வைத்திருந்தார். ஆனால், முன்னதாக அஜித் இத்தனை படங்கள் நடித்தும் அதுவரை பைக் பயணம்தான். அந்தச் சமயத்தில் வி.சி.குகநாதன் இயக்கிய இந்தப் படத்தின் சம்பளத்தில் வாங்கியதுதான் அவரின் முதல் காரான, டிஎஸ்பி 1626 என்ற மாருதி 800 கார். அஜித்துக்கு கார் புதிது அல்ல என்றாலும், சொந்த கார் என்ற பரவச நிலையில் இருந்தார். பொதுவாக தன் பட பூஜை, ஆடியோ ரிலீஸ்களில்கூடக் கலந்துகொள்ளாதவர், கார் வாங்கிய மறுநாளே இவர் சம்பந்தப்படாத ஒரு படத்தின் பூஜைக்கு காரில் போய் இறங்கி கெத்துகாட்டினாராம். தற்போது அந்தக் காரை இவரின் நண்பர் ஒருவர் வாங்கி வைத்துள்ளார். அவரிடம் கேட்டால், ‘அது அந்தப் பட சம்பளத்தில் வாங்கியதில்லை. அந்தப் படத்துக்கான சம்பளமே அந்த கார்தான்’ என்று சிரிக்கிறார்.

அஜித்

ஒரு  நடிகையின் அம்மா, அஜித்தை தன் மகனாகப் பார்த்தார். அவர் யார்? அஜித் முதன்முதலில் புகைப்படம் எடுக்கத்தொடங்கியது எந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்? அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்காக நடித்த முதல் படம் எது? விக்ரமை இருட்டடிப்பு செய்தாரா அஜித்? ‘அமர்க்களம்’ வாசு கேரக்டருக்கு எது ட்ரெயிலர் தெரியுமா? ‘பகைவன்’ ஏன் அஜித்துக்கு பகைவனானது...

நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/89012-facts-about-ajith-ajithai-arinthaal-series---2.html

Link to comment
Share on other sites

‘‘எவன் சொன்னான்?” - ஆவேச அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 3

 
 

ajithai arinthal

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

#Ajith25

அஜித்தை தன் மகனாகப் பார்த்த நடிகையின் அம்மா யார்? அஜித் முதன்முதலில் புகைப்படம் எடுக்கத்தொடங்கியது எந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்? அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்காக நடித்த முதல் படம் எது? விக்ரமை இருட்டடிப்பு செய்தாரா அஜித்? ‘அமர்க்களம்’ வாசு கேரக்டருக்கு எது ட்ரெயிலர் தெரியுமா? ‘பகைவன்’ ஏன் அஜித்துககு பகைவனானது? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

11. ‘காதல்கோட்டை’

Kadhal Kottai

‘வான்மதி’ நடித்துக்கொண்டிருக்கும்போதே `காதல்கோட்டை’ கதையிலும் அஜித்தை கமிட் பண்ணிவிட்டார் இயக்குநர் அகத்தியன். இது நல்ல கலெக்‌ஷன், தேசிய விருது... என மிகப்பெரிய வெற்றிப் படமானது நாம் அறிந்ததே. இதில் இவருக்குக் கிடைத்த மரியாதைக்குரிய உறவு, தேவயானியின் அம்மா. அவர் அஜித்தை இன்னொரு மகனாகவே பார்ப்பாராம். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்தியில் பேசிக்கொண்டிருப்பார்களாம். பின்நாளில் இவரை வைத்து ‘நீ வருவாய் என’ படம் இயக்கிய ராஜகுமாரன், ‘நான் தேவயானியைக் காதலிக்கிறேன். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்’ என்று சொன்ன ஒன்றிரண்டு நண்பர்களில் அஜித்தும் ஒருவர். ‘அஜித் நல்ல புகைப்படக் கலைஞர்’ என்று சொல்லப்படுவதற்கு ‘காதல்கோட்டை’ சமயத்திலேயே அவர் அடித்தளம் போட்டுவிட்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடக்கும்போது ஃபிலிம் ரோல்களை லோட் பண்ணி போட்டோ எடுத்துக்கொண்டே இருப்பாராம். பிறகு, அங்கேயே உள்ள கலர் சென்டர்களில் பிரின்ட் போட்டுப் பார்த்து தனக்குத்தானே கரெக்‌ஷன்ஸ் பண்ணிக்கொள்வாராம்.

12. ‘நேசம்’

Nesam

`பவித்ரா’வில் இவரை இயக்கிய கே.சுபாஷுக்காக நடித்த படம்தான் ‘நேசம்’. இதன் ஷூட்டிங் முடிந்து படத்தை வெளியிடும் வேலையில் இருந்தார் சுபாஷ். ஆனால், படத்தை வெளியிட முடியாத அளவுக்கு அவருக்கு பண நெருக்கடி. உடனே அஜித், பெரிய தொகையைக் கொடுத்து அந்தப் பட வெளியீட்டுக்கு உதவினார். விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையாகக் கிடந்த தன்னை ‘பவித்ரா’வில் நடிக்கவைத்த நன்றிக்கடனுக்காக சுபாஷுக்கு இப்படி ‘நேசம்’ காட்டினார் அஜித்.

13. ‘ராசி’

Rasi

‘கல்லூரிவாசல்’ பட ஆடியோவை வாங்கிய நட்பில், ‘உங்களை வெச்சு ஒரு படம் பண்ணணும்ஜி. கால்ஷீட் கொடுங்க’ என்று அஜித்தை அணுகினார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அவருக்காக நடித்த  படம்தான் `ராசி’. இந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. ஒரு படம் ஓடவில்லை என்றால், `தோல்விக்குக் காரணம் நீதான்’ என்று ஹீரோவும் தயாரிப்பாளரும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொள்வது வழக்கம். ஆனால், `ராசி’யின் தோல்வியே அஜித் - சக்கரவர்த்தி இருவருக்குமான நட்பின் தொடக்கப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

14. ‘உல்லாசம்’

Ullasam Ajith

அமிதாப் பச்சன் தயாரித்த படம். விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கினார்கள். விக்ரம் இன்னொரு ஹீரோ. மகேஸ்வரி ஹீரோயின். ‘நீங்க எப்படி ஜேடி-ஜெர்ரினு இணையா சேர்ந்து படம் பண்றீங்களோ, அந்த மாதிரி எனக்கும் விக்ரமுக்குமான கேரக்டர் இருக்கணும்’ என்று படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே சொல்லி நடித்த படம் இது. நுங்கம்பாக்கம் குட்லக் தியேட்டரில் நடந்த இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், ‘நீங்கள் விக்ரமை இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்கிறார்களே, உண்மையா?’ என்று கேள்வி கேட்டார். அடுத்த நொடியே, ‘எவன் சொன்னான்?’ என்று அஜித் கேட்டதும், அரங்கமே அமைதியானது. இந்தப் படம், அஜித் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று. இவருக்கு இப்போது உள்ள ‘ஆங்ரி யங்மேன்’ என்ற இமேஜை முதன்முதலில் கொண்டுவந்த படம். பிறகு, இவர் பண்ணிய ‘அமர்க்களம்’ வாசு கேரக்டருக்கான ட்ரெய்லர் என்றே ‘உல்லாசம்’ படத்தைச் சொல்லலாம்.

15. ‘பகைவன்’

அஜித்

ரமேஷ் கிருஷ்ணன், திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர். இவர் இயக்கிய ‘அதர்மம்’ என்ற படம் அஜித்துக்கு ரொம்பப் பிடித்த படம். `இருவரும் சேர்ந்து ஒரு காதல் கதை பண்ணலாம்’ என்றுதான் பேசினார்கள். ஆனால், வணிகரீதியிலான காரணங்களுக்காக ஸ்க்ரிப்டை மாற்றி பண்ணும்போது அது ‘பகைவ’னாக மாறியது. ஆனாலும் அஜித்தின் நெருங்கிய நட்பு இயக்குநர்களில் ஒருவர் ரமேஷ்.

பாக்யராஜின் நண்பருக்காக அஜித் கால்ஷீட் தந்த படம் எது தெரியுமா? இயக்குநர் சரணை அஜித்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார்? அஜித்துக்கும் சீனியர் நடிகருமான கார்த்திக்கும் உள்ள நட்பு... அஜித் இயக்கிய பாடல் பற்றி உங்களுக்குத் தெரியுமா... நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/89105-facts-about-ajith-ajithai-arinthaal-series--part-3.html

Link to comment
Share on other sites

அஜித் அழுதது ஏன்? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 4

 

அஜித்தை அறிந்தால்...

பாகம் 1 / பாகம் 2 / பாகம் 3 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992 ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

பாக்யராஜின் நண்பருக்காக அஜித் கால்ஷீட் தந்த படம் எது தெரியுமா? இயக்குநர் சரணை அஜித்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார்? அஜித்துக்கும் சீனியர் நடிகருமான கார்த்திக்கும் உள்ள நட்பு... அஜித் இயக்கிய பாடல் பற்றி உங்களுக்குத் தெரியுமா...

அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

16. ‘ரெட்டைஜடை வயசு’

‘இன்று போய் நாளை வா’ படத்தில் பாக்யராஜின் நண்பர்களாக வரும் மூன்று பேர்களில் ஒருவர் பழனிச்சாமி. இவர் பின்னாளில் பாக்யராஜின் மேனேஜராகவும் இருந்தார். இவரின் மகன் கார்த்திக், அஜித்துக்கு நெருங்கிய நண்பர். இந்த கார்த்திக்காக அவரின் அப்பா பழனிச்சாமி  தயாரிப்பில் நடித்த படம்தான் ‘ரெட்டைஜடை வயசு’. பிறகு ‘தீனா’, ‘அட்டகாசம்’ படங்களையும் இதே பேனருக்காக நடித்தார்.

அஜித்

17. ‘காதல் மன்னன்’

அஜித்தும் சரணும், ஹைதராபாத் பயணம் ஒன்றில் ஃப்ளைட்டின் பக்கத்துப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர். அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் கதை சொல்லி ஓ.கே வாங்கிய படம்தான் `காதல் மன்னன்’. இது, அஜித்தின் கேரக்டரை மனதில் வைத்து பண்ணப்பட்ட படங்களில் முக்கியமான படம். ‘சவால் விடுவது. அதில் வெற்றிபெறுவது...’ என இவருக்கு ரசிகர்களைக் கொண்டுவந்து சேர்த்ததில், `காதல் மன்ன’னுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் பட இயக்குநர் சரண், பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவரை அஜித்துக்கு அறிமுகப்படுத்திவைத்தது நடிகர் விவேக். சரணும் விவேக்கும் குடும்ப நண்பர்கள்.

சமீபத்தில் விவேக்கின் மகன் இறந்த செய்தி அறிந்தபோது, காலில் ஆபரேஷன் முடிந்து கட்டுப்போட்டு ஓய்வில் இருந்தார் அஜித். அந்தத் துக்கத்தில் அவரால் பங்கெடுக்க முடியாத சூழல். ஆனால், போயே தீரவேண்டும் என்று கிளம்பிவிட்டார். விவேக்கைப் பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதார். ‘தன் மகனுக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது. ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று அஜித்திடம் விவேக் ஒரு சமயம் சொல்லியிருக்கிறார். அப்போது, ‘டோன்ட் வொர்ரிஜி. எங்க அப்பாவுக்கும் இந்தப் பிரச்னை இருந்துச்சு. பிறகு, சரியாகிடுச்சு’ என்று சொல்லியிருக்கிறார் அஜித். ‘ஒருவேளை அப்ப நான் அவரை பயமுறுத்தியிருந்தால், அவர் இதை இன்னும் சீரியஸா எடுத்திருந்திருப்பாரோ. அதனால ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்’ என்று அங்கு இருந்தவர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். இந்த விஷயத்தை நடிகை சரண்யா பொன்வண்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

காதல் மன்னன்

18. ‘அவள் வருவாளா’

தெலுங்கில் பெரிய ஹிட் ஆன ‘பெல்லி’ படத்தின் தமிழ் ரீமேக். வெங்கட அப்பாராவ், சுப்பாராவ் என்கிற இரண்டு பெரிய தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ‘பெல்லி’யின் ரைட்ஸ் வாங்கி வந்து, ‘நீங்க பண்ணணும்’ என்று கேட்டபோது, உடனடியாக ஒப்புக்கொண்டு நடித்த படம். அந்தக் காலகட்டத்தில் அஜித்தின் படங்களில் அதிக வசூலான படம் இது. ஏற்கெனவே திருமணமாகி, சூழ்நிலை காரணமாகத் தனித்து வாழும் பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சிக்கும் சாஃப்ட்டான இளைஞன் கேரக்டர், இவரை பெண்களிடமும் கொண்டு சேர்த்தது.

அவள் வருவாளா

19. ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’

நடிகர் கார்த்திக் உடன் இவருக்கு நல்ல நட்பு உண்டு. தான் ஒரு சீனியர் நடிகராக இருந்தாலும் இறங்கி வந்து இளைஞர்களுடன் செம ஜாலியாக பேசும், அவர்களை ஊக்குவிக்கும் கார்த்திக்கை பெர்சனலாக இவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரும் சேர்ந்து நடித்த படம். ‘அமெரிக்க மாப்பிள்ளை என்றாலே டம்மியாக வந்து போவார்கள்’ என்ற இமேஜை, அஜித்தின் இந்தப் பட கேரக்டர் மாற்றியது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

20. ‘உயிரோடு உயிராக’

அம்மா சுஷ்மா இயக்குநர், மகள் ரிச்சா ஹீரோயின். இந்தப் படத்தில் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...’ என்ற பாடலை இயக்கியது அஜித். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் பாடலுக்கு ஹீரோயின் எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்று மூவ்மென்ட்ஸ் சொல்லிக்கொடுப்பது தொடங்கி, ஷாட் ப்ளான் பண்ணி இயக்குவது வரை ஒன்பது மணி நேரத்துக்குள் அந்தப் பாடலை ஷூட் பண்ணி முடித்தார் அஜித். அந்தப் பாடலை ஷூட் பண்ணின கேமராமேன் அரவிந்த் கமலநாதன், சீனியர் நடிகை வைஷ்ணவியின் கணவர். இவரும் அஜித்தும் இன்று வரை நெருங்கிய நண்பர்கள்.

உயிரோடு உயிராக

‘உன்னைத்தேடி’ பட டப்பிங்கில் அவர் ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசியது ஏன்? ‘வாலி’ கதை எடுக்கப்படாமல் காத்திருந்தது எத்தனை வருடங்கள் தெரியுமா? ஜோதிகா ‘சோனா’வானது எப்படி? நான்கைந்து நாள் தாடி தோற்றத்தை அறிமுகப்படுத்திய நடிகர் யார்? எந்த ஹீரோயினையும் நேரில் சென்று பார்க்காத அஜித் ‘அமர்க்கள’த்துக்காக ஷாலினியை மட்டும் நேரில் பார்த்தது ஏன்? நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/89271-facts-about-ajith-ajithai-arinthaal-series---part-4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு நேரில் பார்த்த ஷாலினியைத் தான் இண்டைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறாரா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 5

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

ajith_thodar_low_res_21447_19360.jpg

‘உன்னைத்தேடி’ பட டப்பிங்கில் அவர் ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசியது ஏன்? ‘வாலி’ கதை எடுக்கப்படாமல் காத்திருந்தது எத்தனை வருடங்கள் தெரியுமா? ஜோதிகா ‘சோனா’வானது எப்படி? நான்கைந்து நாள் தாடி தோற்றத்தை அறிமுகப்படுத்திய நடிகர் யார்? எந்த ஹீரோயினையும் நேரில் சென்று பார்க்காத அஜித் ‘அமர்க்கள’த்துக்காக ஷாலினியை மட்டும நேரில் பார்த்தது ஏன்? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

21. ‘தொடரும்’

இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா ஏகப்பட்ட படங்களுக்கு பூஜை போட்டு ஒன்றுகூட படப்பிடிப்புக்குப் போகாத நிலையில், அவருக்காக நடித்த படம். ஏகப்பட்ட இடைவெளிகளுடன் ஷூட்டிங் நடந்து வெளியானது.

தொடரும்

22. ‘உன்னைத்தேடி’

‘உல்லாசம்’ சமயத்தில் தொடங்கிய முதுகுவலிக்கு, ‘உன்னைத்தேடி’ முடிந்த பிறகு ஆபரேஷன் செய்துகொண்டார். ‘உன்னைத்தேடி’ படத்துக்கு உடனடியாக டப்பிங் பேசியாகவேண்டிய சூழல். தன்னால் அந்தப் படம் தாமதமாகக் கூடாது என்பதற்காக, ஆபரேஷன் புண் ஆறாத நிலையில்கூட மருத்துவமனையிலிருந்து நேராக ஸ்டூடியோவுக்கு வந்து புண்ணிலிருந்து ரத்தம் வழிய வழிய டப்பிங் பேசினார். இவரின் மனதுக்கு நெருக்கமான படங்களின் வரிசையில் ‘உன்னைத்தேடி’யும் ஒன்று.

உன்னைத்தேடி

23. ‘வாலி’

எஸ்.ஜே.சூர்யாவின் ஒரிஜினல் பெயர் ஜஸ்டின்; லயோலா கல்லூரி மாணவர். பிறகு, இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநர். ‘ஆசை’யில் நடிக்கும்போதே ‘வாலி’ படக் கதையை அஜித்திடம் சொல்லிவிட்டார். இந்தக் கதை, ஐடியாவாகவே இயக்குநரிடம் மூன்றரை வருடங்கள், ஹீரோவிடம் இரண்டு வருடங்கள் இருந்தது. காரணம், இதன் சிக்கலான கதை அமைப்பு. பிறகுதான் இந்தப் படம் வெளியானது. ‘வாலி’, 1999 ஏப்ரல் 14-ம் தேதி ‘படையப்பா’ உடன் ரிலீஸ் ஆனது. இதில் ‘சோனா என்ற பெண்ணைக் காதலிப்பதாக சிம்ரனிடம் அஜித் சொல்லும்போது, திரையில் சோனா கேரக்டரைக் காட்ட வேண்டுமா... வேண்டாமா?’ என்று பயங்கர விவாதம் நடந்தது. அப்படிக் காட்டினால், சோனாவாக நடிப்பவர் ஏற்கெனவே அறிமுகமான நடிகையாக இல்லாமல் புது நடிகையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜோதிகாவை நடிக்கவைத்தார்கள்.

வாலி

24. ‘ஆனந்த பூங்காற்றே’

இதற்கு முன்பு வரை தெளிவாக ஷேவ்செய்து பளிச் முகத்துடன் நடித்தவர், இந்தப் படத்தில் நான்கைந்து நாள் தாடி இருப்பதுபோன்ற தோற்றத்துடன் நடித்தார். அந்த ஃபேஷனை அறிமுகப்படுத்தியதே அஜித்தான். பிறகு, அந்த லுக்கைப் பரவலாக எல்லா நடிகர்களும் முயற்சித்தனர். அதை ஆரம்பித்துவைத்த படம் ‘ஆனந்த பூங்காற்றே’.

ஆனந்த பூங்காற்றே

25. ‘அமர்க்களம்’

குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த ஷாலினி, பிறகு மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்போது அவரின் போட்டோ ஒன்று வார இதழில் அட்டைப்படமாக வந்திருந்தது. அதைப் பார்த்ததும் ` ‘அமர்க்களம்’ பட ஹீரோயின் கேரக்டருக்கு ஷாலினி சரியாக இருப்பார்’ என நினைத்தார் இயக்குநர் சரண். ஆனால், ஷாலினி தரப்பிலிருந்து நெகட்டிவ் சிக்னல். அதற்கு முன்பு வரை எந்த ஹீரோயினையும் நேரில் சென்று பார்த்து ‘நீங்க நடிக்கணும்’ என்று கன்வின்ஸ் பண்ணினது இல்லை; ஆனால், தன் இயக்குநருக்காக ஷாலினியை கன்வின்ஸ் பண்ண நேரில் சென்றார் அஜித். இவர் நேரில் சென்று பேசியதும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஷாலினி. முதல் நாள் படப்பிடிப்பு. ஷாலினியை கத்தி காட்டி அஜித் மிரட்டுவது போன்ற காட்சியில் ஷாலினி மீது கத்தி பட்டு ரத்தம் கொட்டியது. ஷாலினின் கையில் ரத்தத்தைப் பார்த்ததும் அஜித் பதறிவிட்டார். அந்தத் தவிப்பும் பதற்றமும்தான் காதலுக்கான முன்னோட்டமாக அமைந்தது. ‘அமர்க்களம்’ வாசு கேரக்டர், 1990-களின் இறுதியிலிருந்த அஜித்தின் ஒரிஜினல் கேரக்டரை கண்முன் நிறுத்தியது. பிறகு வந்த ‘தீனா’வுக்கு ரூட் போட்டதும் இந்த வாசுதான்.

அமர்க்களம்

‘முகவரி’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நடிகர், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த அஜித்தின் கடைசிப்படம், அஜித்தை சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசிய தயாரிப்பாளர், ‘தீனா’ கதையை அஜித்திடம் முருகதாஸ் சொல்லி ஓ.கே வாங்கிய விதம், அஜித்தை ‘தல’னு முதன் முதலில் அழைத்தவர்... நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/89412-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-5.html

Link to comment
Share on other sites

 

அஜித்தைப் பார்த்து பொறாமைப்பட்ட கமல்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 6

 
 

அஜித்

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித் , ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘முகவரி’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நடிகர், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த அஜித்தின் கடைசிப்படம், அஜித்தை சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசிய தயாரிப்பாளர், ‘தீனா’ கதையை அஜித்திடம் முருகதாஸ் சொல்லி ஓ.கே வாங்கிய விதம், அஜித்தை ‘தல’னு முதன் முதலில் அழைத்தவர்... அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

26. ‘நீ வருவாய் என’

ராஜகுமாரனின் ஒரே ஹிட் படம். இதில் அஜித் இறந்துவிடுவதுபோல் நடித்திருந்தார். பட ரிலீஸுக்குப் பிறகு அஜித்தைச் சந்தித்த அவர் ரசிகர்கள், ‘இனி இறந்துவிடுவது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர்.

அஜித்

27. ‘முகவரி’

முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தவர் முரளி. `எல்லாம் அமையும்’ என்பார்களே, அப்படி `முகவரி’க்கு எல்லாம் அமைந்த படம். இதில் வரும் ‘ஸ்ரீதர்’ கேரக்டர் அஜித்துக்கு அவ்வளவு நெருக்கமானது. அந்த கேரக்டரை அவ்வளவு அழகாக உள்வாங்கி, இயல்பாக நடித்திருந்த படம் `முகவரி’.

முகவரி

28. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’

அஜித், மம்மூட்டி, அப்பாஸ் என மூன்று ஹீரோ சப்ஜெக்ட். தயாரிப்பாளர் தாணு, இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், தபு, இயக்கம்-ஒளிப்பதிவு ராஜீவ் மேனன்... என பெரிய ஸ்கேல் படம். ஷூட்டிங் முடிந்து வந்ததும் ‘சந்தன தென்றலை...’ பாடலைப் போட்டுப்பார்த்த தாணு, ‘யோவ், உச்சரிப்பில் சிவாஜி கணேசன் சாருக்கு அப்புறம் அந்த அளவுக்கு பெர்ஃபெக்‌ஷனை இந்தப் பாட்டுல அஜித் தம்பிட்ட பார்க்கிறேன்யா...’ என்று மனம்விட்டு பாராட்டினாராம். அஜித், எப்போதும் உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். காரணம், ‘தமிழ் சரியா பேசத் தெரியலை’ எனச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம். அதனால் மனப்பாடம் செய்து தெளிவாகப் பேசுவார். இதுதான், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த இவரின் கடைசிப் படம். தேவி தியேட்டரில் நடந்த அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கி பேசிய கமல், ‘அஜித், உன்னைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்’ என்றார். எதற்காக அஜித்தைப் பார்த்து கமல் பொறாமைப்பட்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

29. உன்னைக்கொடு என்னைத் தருவேன்’

ராணுவப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில், 21 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. அஜித் கடுமையான பயிற்சிகளைச் செய்து இதில் நடித்தார். இந்தப் படம் சுமாராக வந்ததில் அஜித்துக்கு மிகப்பெரிய வருத்தம்.

உன்னைக்கொடு என்னைத் தருவேன்

30. ‘தீனா’

முதலில் அஜித்தின் இந்த கால்ஷீட்டில் படம் பண்ண ஃபிக்ஸ் ஆகியிருந்தவர் இயக்குநர் பிரவீன்காந்த். ‘தக்‌ஷத்’ என்ற இந்திப் படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணலாம் என அஜித்தும் பிரவீன்காந்தும் முடிவுசெய்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால், தயாரிப்பாளருக்கும் பிரவீன்காந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு. அதனால் அதே கம்பெனிக்கு வேறோர் இயக்குநர் தேடவேண்டிய சூழல். ஏற்கெனவே ஓர் அறிமுக இயக்குநர் பற்றி தன் மேனேஜர் சுரேஷ்சந்திரா சொன்னது அஜித்துக்கு நினைவுக்கு வந்தது. ‘அந்தப் பையன் என்ன பண்றார்? அவரைக் கூட்டிட்டு வாங்க’ என்று நள்ளிரவு 12 மணிக்குச் சொல்கிறார் அஜித். நம்பர் 9, அழகம்பெருமாள் கோயில் தெருவில் உள்ள அந்த இளைஞரின் வீட்டின் கதவைத் தட்டுகிறார் சுரேஷ்சந்திரா. ‘காலையில வரவா சார்?’ என்று தயங்கி நிற்காமல், ‘உடனே வர்றேன் சார்’ என்று அஜித்தைச் சந்திக்க கிளம்பினார் அந்த இளைஞர். ‘நீங்கதானா தம்பி. எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டன்ட்தானே நீங்க? நான் உங்களை அவர் ஸ்பாட்ல பார்த்திருக்கேன். இப்ப ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா?’ என்றார் அஜித். ‘தன் தங்கையோட காதலனைக் கொல்லணும்னு துடிக்கிறான் சொந்த அண்ணன். அந்தப் பெண்ணின் சத்தியத்துக்காக அந்தக் காதலனைக் காப்பாத்தணும்னு துடிக்கிறான் வளர்ப்பு அண்ணன். இதுதான் சார் லைன்’ என்கிறார் அந்த இளைஞர். ‘எனக்குப் பிடிச்சிருக்கு. எப்ப ஷூட்டிங் போகலாம்?’ என்றார் அஜித். ‘எனி டைம் ரெடி சார்’ என்றார் அந்த இளைஞர். அந்த இளைஞர் ஏ.ஆர்.முருகதாஸ், அந்தப் படம் ‘தீனா’.

இந்தப் படத்தில் அஜித்தின் இயல்பைச் சொல்லும் வகையில் முருகதாஸ் பாடலாசிரியரிடம் கேட்டு வாங்கி சேர்த்த பாடல்தான் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையிலே...’  இந்தப் படத்தில்தான் அஜித் முதன்முதலில் ‘தல’ என்று அழைக்கப்பட்டார். ‘நான்தான் அவருக்கு முதல்ல ‘தல’னு பட்டம் சூட்டினேன்’ என்று யார் யாரோ அதற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், அது அந்தப் படத்தில் லோக்கல் ஸ்லாங்கில் ‘தல’ என்று முதன்முதலில் பேசி நடித்த துலுக்கானத்துக்குப் போய் சேரவேண்டிய கிரெடிட்.

தீனா

‘தினமும் திறந்த ஜீப்பில் எங்களைப் பார்த்து கை அசைத்தபடி போகணும்’ என்று அஜித்தை அன்பு கட்டளையிட்ட மக்கள், நடிகர் திலகம் சிவாஜி இறந்தபோது அஜித் வெளியூரில் இருந்து வந்தது, விஷ்ணுவர்தனை கண்டெத்த திரைப்படம், ரசிகர்களின் ஆழம் பார்க்க அஜித் நடித்த படம்... நாளை பார்ப்போம்.

அஜித்தை அறிவோம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/89518-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-6.html

Link to comment
Share on other sites

 

‘நான் யாரு?’ ஆழம் பார்க்க அஜித் எடுத்த ரிஸ்க்... ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 7

 

ajith_thodar_low_res_upper_image_part_7_

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘தினமும் திறந்த ஜீப்பில் எங்களைப் பார்த்து கை அசைத்தபடி போகணும்’ என்று அஜித்தை அன்பு கட்டளையிட்ட மக்கள், நடிகர் திலகம் சிவாஜி இறந்தபோது அஜித் எங்கிருந்து வந்தார் தெரியுமா? விஷ்ணுவர்தனை கண்டெடுத்த திரைப்படம், ரசிகர்களின் ஆழம் பார்க்க அஜித் நடித்த படம்...  அஜித்தின் அடுத்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

 
Advertisement
 
 
 

அஜித்

31. ‘சிட்டிசன்’
‘நண்பர் ஒருவர் நல்ல ஸ்க்ரிப்ட் வெச்சிருக்கார். அவரை கூட்டிட்டு வரவா?’ என்று கேட்டிருக்கிறார் கேமராமேன் செல்வமணி பன்னீர்செல்வம். ‘இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போன கிராமம். அதன் ஒரு குரல், ஐ.நா சபையில் எதிரொலிக்கிறது.’ இதுதான் அந்த லைன். சொன்னவர் இயக்குநர் சரவண சுப்பையா. ‘நாம பண்ணலாம். யூ டூ த ஸ்க்ரிப்ட் ’ என்றார் அஜித். அந்த மீனவர் கதாபாத்திரத்தில் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் அஜித். ‘தீனா’வுக்கே மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது என்று சொல்வார்கள். ஆனால் அதை அஜித் நேரில் உணர்ந்தது ‘சிட்டிசன்’ படப்பிடிப்பில்தான். பழவேற்காடு அருகே படப்பிடிப்பு. ‘அஜித் தினமும் ஷூட்டிங் முடித்து போகும்போது திறந்த ஜீப்பில் ஃபோகஸ் லைட் போட்டுக்கொண்டு எங்களைப் பார்த்து கை அசைத்தபடிதான் போகணும்’ என்று அன்பு மிகுதியால் அந்தக் கிராம மக்கள் கலாட்டா செய்திருக்கிறார்கள். அங்கு படப்பிடிப்பு நடந்த பத்து நாள்களும் அஜித் அப்படித்தான் வீடு திரும்பினார். ஆனால், ‘சிட்டிசன்’ அவர் எதிர்பார்த்த அளவுக்கு அங்கீகாரத்தைப் பெறவில்லையே என்ற வருத்தம் அஜித்துக்கு இன்றும் உண்டு. 

சிட்டிசன்

32. ‘பூவெல்லாம் உன் வாசம்’
‘தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிக்கு ஒரு படம் பண்ணணும். ஃபீல் குட் மூவியா இருந்தா நல்லா இருக்கும்’ என்று முடிவுசெய்து நடித்த படம் இது. குலுமணாலியில் படப்பிடிப்பு. ‘நடிகர்திலகம் சிவாஜி இறந்துவிட்டார்’ என்ற செய்தி வருகிறது. குலுமணாலியிலிருந்து டெல்லிக்கு வந்து அங்கு ஃப்ளைட் பிடித்து சென்னைக்கு வரவேண்டும் என்பது அஜித்தின் திட்டம். ஆனால், குலுமணாலியில் பேய்மழை. ‘இந்த மழையில கார் ஓட்ட முடியாது சார்’ என்று டிரைவர் மறுத்திருக்கிறார். பிறகு, அங்கிருந்து டெல்லி வரை இவரே கார் ஓட்டி வந்து, டெல்லி டு சென்னை சாட்டர்ட் ஃப்ளைட் பிடித்து சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துவிட்டுச் சென்றார். 

பூவெல்லாம் உன் வாசம்

33. ‘அசோகா’
சின்ன கேரக்டர். கிட்டத்தட்ட வில்லன்ரோல். இயக்குநர் மணிரத்னத்தின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியம் என்பவர் ஒருங்கிணைத்த புராஜெக்ட். தவிர, ஷாரூக் கான் அஜித்துடன் பெர்சனலாகப் பேசியதால் நடித்துக்கொடுத்த படம். அஜித், தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் உதவி இயக்குநர்களைக் கூர்ந்து கவனிப்பார். பரபரப்பாக வேலைசெய்வது, ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் தன்மை... எனத் திறமையான உதவி இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுப்பார். அப்படி ‘அசோகா’வில் வேலைசெய்த உதவி இயக்குநரை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர்தான் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன் பிறகு ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கினார் விஷ்ணுவர்தன். 

அசோகா

34. ரெட்
எல்லா பெரிய நடிகர்களும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ‘நாம இன்னிக்கு எங்கே நிக்கிறோம்?’ என்று ஆழம் பார்க்க ஒரு படம் நடிப்பார்கள். அஜித் அப்படி நடித்த படம்தான் ‘ரெட்’. தயாரிப்பாளர் பூர்ணசந்திரராவுக்கு ‘ஏறுமுகம்’ என்ற படம் ஆரம்பித்து டிராப் ஆனது. அந்தப் படத்தில் இவருக்கு தாதா கேரக்டர். ‘ரெட்’ டைரக்டர் சிங்கம்புலி கொண்டுவந்ததோ, காதல் கதை. அந்த ‘ஏறுமுகம்’ தாதாவையும் சிங்கம்புலியின் காதலையும் ஒன்றாகப்போட்டு குலுக்கி எடுத்ததில் வந்த படம்தான் ‘ரெட்’. மதுரைக்கும் இவருக்கும் புவியியல், உயிரியில் என எந்தவிதமான கனெக்‌ஷனும் இல்லை. ஆனால் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில் இவருக்கு வெறிபிடித்த ரசிகர்கள் உண்டு. ‘ரெட்’டில் ஒவ்வொரு ஏரியாவைப் பற்றியும் வசனம் வரும். அப்போது அந்தந்த ஏரியா தியேட்டர்களில் விசில் பறந்தது. தன் ஹீரோவின் படப் பெயரை தங்களுடைய பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொள்வது ரசிகர்களின் பொதுவான வழக்கம். அப்படி அஜித்தின் ரசிகர்கள் ‘ரெட்’ படத் தலைப்பைத் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டுள்ளவர்களே அதிகம். 

ரெட்

35. ‘ராஜா’
‘பூவெல்லாம் உன் வாசம்’ ஹிட் கொடுத்த இயக்குநர் எழிலுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ண வேண்டும் என்று நடித்த படம். இது ஓர் இந்திப் படத்தின் ரீமேக். ஆனால் ‘ராஜா’ சரியாகப் போகவில்லை. 

ராஜா

‘வில்லன்’ கதையை எழுதிய பிரபலம், அஜித் நடித்த போர்ஷனை இன்னொரு நடிகரின் படத்தில் சேர்த்து ரிலீஸ் செய்த படம், அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம், அஜித் சினேகாவுடன் நடித்த ஒரே படம், அஜித் தூத்துக்குடி ஸ்லாங் பேசி நடித்த படம்... நாளை பார்ப்போம்.

- அஜித் அறிவோம்..!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/89615-facts-about-ajithai-arinthaal-series-part-7.html

Link to comment
Share on other sites

அஜித் நடித்த ‘வெண்ணிலா’ படம் என்ன ஆனது தெரியுமா? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 8

Ajith

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘வில்லன்’ கதையை எழுதிய அந்த பிரபலம், அஜித் நடித்த போர்ஷனை இன்னொரு நடிகரின் படத்தில் சேர்த்து ரிலீஸ் செய்த படம், அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம், அஜித் சினேகாவுடன் நடித்த ஒரே படம், அஜித் தூத்துக்குடி ஸ்லாங் பேசி நடித்த படம்... அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

36. வில்லன்

இயக்குநரும் நடிகருமான யூகிசேது, அஜித்தைப் பற்றிப் பேசும்போது ‘அஜித்திடம், ஒரு ரஜினியும் இருக்கிறார்; ஒரு கமலும் இருக்கிறார். அதேபோல ஒரு எம்.ஜி.ஆரும் இருக்கிறார்; ஒரு சிவாஜியும் இருக்கிறார்’ என்று சொல்வார். தான் சொன்னதை அடிப்படையாகவைத்து அவர் எழுதிய  கதைதான் ‘வில்லன்’. அதாவது ‘ரஜினியும் கமலும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ அதுதான் ‘வில்லன்’. 

அஜித்

37. ‘என்னை தாலாட்ட வருவாளா’

இது, அஜித்தின் ஆரம்பநாளில் உருவான படம். இதன் தலைப்பு ‘வெண்ணிலா’. இந்தச் சமயத்தில்தான் அஜித்துக்கு பெரிய விபத்து நிகழ்ந்தது. சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். அதனால் படத்தை முடிக்க முடியாத சூழல். பிறகு, ஏழெட்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்தனர். அதாவது, அஜித் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையே கதையாக்கி, பிறகு அவருடைய தம்பியாக விக்னேஷ் வருகிறார் என்று ஆரம்பத்தில் அஜித் நடித்த போர்ஷனையும் விக்னேஷ் போர்ஷனையும் சேர்த்து ஒரே படமாக்கிவிட்டார்கள். 

என்னை தாலாட்ட வருவாளா

38. ‘ஆஞ்சநேயா’

இயக்குநர் மகராசன், விஜயகாந்தை வைத்து ‘வல்லரசு’ என்ற ஹிட் படம் கொடுத்தவர். அவர் டைரக்‌ஷனில் வந்த படம்தான் ‘ஆஞ்சநேயா’. அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம். ‘நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தப் படத்தில் நடித்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வந்தாலும் ‘ஆஞ்சநேயா’ பெரிதாக ரீச் ஆகவில்லை. ஆனால், இதன் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் பெரிதாகப் பேசப்பட்டது. 

ஆஞ்சநேயா

39. ‘ஜனா’

ஷாஜி கைலாஷும் விஜயகாந்தை வைத்து ‘வாஞ்சிநாதன்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர்தான். அதைத் தொடர்ந்து அவர் தமிழில் ‘ஜனா’வில் அஜித்தை இயக்கினார். இது, அஜித் சினேகாவுடன் நடித்த ஒரே படம். இந்தப் படம் சரியா போகவில்லை. ‘பாட்ஷா’ மாதிரியே கதை இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

ஜனா

40. ‘அட்டகாசம்’

தென் தமிழக மக்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக, தூத்துக்குடி வட்டார வழக்குமொழி பேசி நடித்த படம். இதில் வரும் ‘தல போல வருமா...’ பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வரும் ‘பொள்ளாச்சி இளநீரே...’ என்ற பாடல் காட்சியைப் படம்பிடிக்க படக்குழு ஆஸ்திரேலியா சென்றிருக்கிறது. ஆனால், தயாரிப்பாளருக்கு பணச் சிக்கல். அப்போது படக்குழுவினர் அனைவரையும் அஜித் தன் சொந்த செலவிலேயே சென்னைக்கு அழைத்து வந்தார். 

அட்டகாசம்

ரஜினி தொடங்கிவைத்த அஜித் படம், ‘மங்காத்தா’வுக்கும் ‘ஜி’க்கும் உள்ள தொடர்பு, அஜித் நடிக்க மறுத்த கேரக்டர், அஜித்-நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காம்பினேஷன் பிரிந்த படம், அஜித் உடன்பாடே இல்லாமல் நடித்த படம்... நாளை பார்ப்போம்.

அஜித்தை அறிவோம்...
 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/89731-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-8.html

Link to comment
Share on other sites

 

அஜித் நடிக்க மறுத்த கேரக்டர் எது? - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 9

 

அஜித்

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

ரஜினி தொடங்கிவைத்த அஜித் படம், ‘மங்காத்தா’வுக்கும் ‘ஜி’க்கும் உள்ள தொடர்பு, அஜித் நடிக்க மறுத்த கேரக்டர், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரிந்த படம், உடன்பாடே இல்லாமல் நடித்த படம்... அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பார்ப்போம்.

41. ‘ஜி’

லிங்குசாமியும் அஜித்தும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று வெகுநாள்களாகப் பேசி கமிட் ஆன படம் இது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இவர் ஏகப்பட்ட பிரச்னைகளில் இருந்ததால், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் படத்தை முடிக்க முடியவில்லை. தவிர, அஜித்தும் அப்போது கார் ரேஸில் பிஸியாக இருந்தார். குறித்த காலத்துக்குள் படத்தை முடித்திருந்தால், படம் ஓரளவுக்கு வெற்றிபெற்றிருக்கும். பின்னாளில் வந்த ‘மங்காத்தா’வுக்கும் ‘ஜி’க்கும் சின்ன தொடர்பு இருக்கிறது. ‘ஜி’யில் இவரின் நண்பராக நடித்தது வெங்கட் பிரபு. அவர் முழு நேர இயக்குநராக மாறியதற்கும் பிறகு ‘மங்காத்தா’வை இயக்கியதற்கும் ‘ஜி’யில் அஜித்துடன் ஏற்பட்ட நட்பே காரணம். 

அஜித்

42. ‘பரமசிவன்’

பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் அஜித் கமிட் ஆகி, உடல் இளைத்து, முடி வளர்த்துக்கொண்டிருந்த காலகட்டம். சிலபல கருத்துவேறுபாடுகளால் அந்தப் படத்தில் அஜித் நடிக்கவில்லை. அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸு-க்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்ற கமிட்மென்டால் பி.வாசு இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் ‘பரமசிவன்’. அக்ரிமென்ட்டின்படி பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’தான் தயாரிப்பு நிறுவனம் என்றாலும், இந்தப் படத்தை உண்மையிலேயே தயாரித்தவர், ‘போக்கிரி’ படத்தைத் தயாரித்த ரமேஷ்பாபு. `சந்திரமுகி’யைத் தொடர்ந்து பி.வாசு இயக்கிய இந்தப் படத்தின் பூஜையை ரஜினி தொடங்கிவைத்தார். 

பரமசிவன்

43. ‘திருப்பதி’

ஏ.வி.எம் நிறுவனத்துக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்பது அஜித்தின் நெடுநாள் விருப்பம். இந்தச் சமயத்தில் அவர்களும் அழைக்க, அந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். பேரரசு இயக்கத்தில் வழக்கத்தைவிட அதிக கமர்ஷியல் காரத்தோடு வந்த படம். சுமாராகப் போனது. 

திருப்பதி

44. ‘வரலாறு’

இந்தப் படத்தின் கதையை ரவிச்சக்கரவர்த்தி சொல்லும்போது அஜித் உள்பட பலருக்கும் ‘இது கரெக்டா வருமா’ என்ற சந்தேகம் இருந்தது. மேலும், ‘டெலிவர் பண்ண முடியாத அளவுக்கு ஹெவியா இருக்கே’ என்ற யோசனை வேறு. ஆனால், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மட்டும், ‘உங்களால் பண்ண முடியும் அஜித். பண்ணுங்க’ என்று நம்பிக்கையோடு இருந்தார். இருப்பினும், பல காரணங்களால் இழுத்துக்கொண்டே போய், தாமதமாகத்தான் இந்த புராஜெக்ட் நடந்தது. ஆனால், பெரிய வெற்றி. இந்த ‘வரலாறு’ வேறொரு விஷயத்திலும் வரலாறு படைத்தது. ‘பிரியவே பிரியாத நட்பு’ என சினிமா உலகமே நினைத்துக்கொண்டிருந்த அஜித்துக்கும் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்குமான நட்பு ‘வரலாறு’ படத்தில் பிரிந்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை படம் பண்ணவே இல்லை. 

வரலாறு

45. ‘ஆழ்வார்’


‘அரசியலுக்கு வருவார்’, `அ.தி.மு.க-வில் சேருவார்’, `பா.ஜ.க அழைக்கிறது’ என இவரைப் பற்றி இன்றும் சொல்லப்படுவதற்கு ஆரம்பம் இந்தப் படம்தான். அப்போது இவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதுபோல் வந்த ஒரு போஸ்டர்தான், இதுபோன்ற அரசியல் செய்திகளைப் பரப்பியது. இந்தப் படத்தைப் பண்ண அஜித்துக்கு உடன்பாடே இல்லை. சில வணிகக் காரணங்களுக்காகப் பண்ணினார். இந்தப் படத்தின் இயக்குநர் ஷெல்லா, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்தவர். இந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதுவரை புது இளம் இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துக்கொண்டிருந்த அஜித், இந்தப் படத்துக்குப் பிறகு சீனியர்களையே அடுத்தடுத்த படங்களுக்கு கமிட் செய்கிறார். 

ஆழ்வார்

அஜித் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட ப்ராஜெக்ட், ‘கபாலி’யில் ரஜினி பேசியதை ‘பில்லா’விலேயே பேசிய அஜித், கவுதம் மேனன் முதன்முதலில் அஜித்துடன் சேர்ந்திருக்க வேண்டிய படம், ‘கதை, திரைக்கதை, வசன உதவி - அஜித்குமார்’ எந்தப்படத்தில்? அஜித் தன் 50வது படத்தை எப்போது முடிவு செய்தார் தெரியுமா?... நாளை பார்ப்போம்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
89866_thumb.jpg

அஜித்தை அறிவோம்..

http://www.vikatan.com/cinema/tamil-cinema/89968-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-9.html

Link to comment
Share on other sites

 

‘என் 50வது படத்துல இதெல்லாம் இருக்கக்கூடாது’ - கறார் காட்டிய அஜித்! ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 10

 
 

அஜித்தை அறிந்தால்

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்!

 

அஜித் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட ப்ராஜெக்ட், ‘கபாலி’யில் ரஜினி பேசியதை ‘பில்லா’விலேயே பேசிய அஜித், கவுதம் மேனன் முதன்முதலில் அஜித்துடன் சேர்ந்திருக்க வேண்டிய படம், ‘கதை, திரைக்கதை, வசன உதவி - அஜித்குமார்’ எந்தப்படத்தில்? அஜித் தன் 50வது படத்தை எப்போது முடிவு செய்தார் தெரியுமா? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பார்ப்போம்...

46. ‘கிரீடம்’

 
 

அடுத்த படம் பாலாஜி ஃபிலிம்ஸுக்கு என முடிவானது. ‘ரீமேக் பண்ணலாம். எந்தப் படத்தைப் பண்ணலாம், யார் டைரக்டர்?’ எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ்சந்திராவினுடைய அலுவலகத்துக்கு வந்த ஒருவர், ‘சார், இது அட்வர்டைஸிங் ஏஜன்சியா? சிடி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க’ என்று ஒரு சிடியைக் கொடுத்துச் சென்றார். அதைத் தன் பையில் வாங்கி வைத்த சுரேஷ், அதை மறந்தேவிட்டார். வழக்கம்போல் அஜித் வீட்டுக்குப் போகும்போது அங்கு அஜித் ஹோம் தியேட்டரை சரிசெய்துகொண்டிருந்தார். அது சரியாக வேலை செய்கிறதா என்பதைப் பார்க்க, ‘ஒரு சிடி கொண்டுவாங்க’ என்று தன் உதவியாளரிடம் அஜித் கேட்க, ‘என்கிட்டகூட ஒரு சிடி இருந்துச்சு’ என்று தன் பையில் இருந்த அந்த விளம்பர சிடி-யை எடுத்துக் கொடுத்திருக்கிறார் சுரேஷ்.

அது ஒரு நகைக்கடை விளம்பரப் படம். அதில் அட்டிகை, வளையல்கள்... என நகைகளை வாங்கிய ஒரு பெண், பணத்தைக் கொடுப்பார். பிறகு கூலிங் கிளாஸ், வாக்கிங் ஸ்டிக் சகிதமாக கண் தெரியாத அந்தப் பெண் நடப்பார். பின்னணியில், ‘நம்பிக்கை நாணயம்!’ என்று வாய்ஸ் ஓவர் வரும். அந்த விளம்பரப் படம் அஜித்துக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ‘சுரேஷ்பாலாஜிடம் சொல்லி அடுத்த படத்துக்கு இந்தப் பையனை ஃபிக்ஸ் பண்ணச் சொல்லுங்க’ என்றார் அஜித். பிறகு, ‘நாங்களும் அந்தப் பையனை மைண்ட்ல வெச்சிருக்கோம் சார்’ என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ்பாலாஜி. அந்தப் பையன்தான் இயக்குநர் A.L. விஜய். பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இயக்கிய இந்த ‘கிரீடம்’, அஜித்தின் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று. தவிர, இது அவர் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட புராஜெக்ட். 

அஜித்

47. ‘பில்லா

மீண்டும் ரீமேக். ‘ஏதோ ஒரு படத்தை ரீமேக் பண்றதுக்குப் பதிலா, எங்ககிட்டதான் ‘பில்லா’ இருக்கு. அதையே ரீமேக் பண்ணலாமே சார்’ என்றார் சுரேஷ்பாலாஜி. ரஜினியிடம் அனுமதி கேட்டபோது ‘உடனே பண்ணுங்க அஜித். உங்களுக்கு ‘பில்லா’ பொருத்தமா இருக்கும். வாழ்த்துகள்’ என்றார். தவிர, ‘பரமசிவன்’ படப் பூஜைக்கு வரும்போதே இதைப் பற்றி அஜித்திடம் ரஜினி பேசியிருக்கிறார். ஆனால், ‘ரஜினி சாரின் மிகப்பெரிய வெற்றிப் படம். அதை நாம கெடுத்துடக் கூடாது’ என்று அஜித்துக்கு நிறைய யோசனை. அவற்றையெல்லாம் மீறி ‘பில்லா’ பெரிய வெற்றி. இது விஷ்ணுவர்தனுடன் அஜித்துக்கு முதல் படம். நயன்தாரா காம்பினேஷன். மலேசியாவில் ஷூட்டிங். அதில் அஜித் அங்கேயே வாழ்ந்துவரும் தமிழர் என்பதைக் குறிக்கும் வகையில் அவரின் ஒரு க்ளோசப் காட்சியில், ‘ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்! மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!’ என்று அங்குள்ள தேயிலைத் தொழிலாளர்கள் பற்றி கனெக்ட் கொடுத்துப் பாடுவதுபோல் இருக்கும். ஆனால், அந்தப் படத்தின் ஃபேன்டசி, கிளாமரில் அது சரியாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

பில்லா

48. ‘ஏகன்’

விஜய் நடித்த ‘போக்கிரி’யை பிரபுதேவா இயக்கிக்கொண்டிருந்தபோது, ராஜுசுந்தரம் டைரக்‌ஷனில் வந்த படம் இது. ‘சீரியஸ் சப்ஜெக்டா பண்ணிட்டிருக்கோம். கொஞ்சம் லைட் சப்ஜெக்டா பண்ணலாம்’ என்று பேசி முடிவுசெய்து ஷாரூக் கான் நடித்த இந்திப் படம் ஒன்றை ரீமேக்கினார்கள். அது பெரிதாகப் போகவில்லை. 

ஏகன்

49. ‘அசல்’

சிவாஜி புரொடக்‌ஷன்ஸுக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். முதலில் இந்தப் படத்துக்கு இயக்குநராக கமிட் ஆனவர் கவுதம் வாசுதேவ் மேனன். ஆமாம், அஜித்தும் கவுதம் வாசுதேவ் மேனனும் இணைந்து பணியாற்றவேண்டிய முதல் படம் இதுதான். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. தயாரிப்புத் தரப்பில் ஹரிஸ் ஜெயராஜ் வேண்டாம் என்றது. ‘அவரை விட்டுக்கொடுக்க முடியாது’ என்று கவுதம் உறுதியாக இருந்தார். அதனால் இந்தப் படத்தை அவர் பண்ணாமல் விலகிவிட்டார். ஆனால், அவர் ஃபிக்ஸ் செய்திருந்த சமீரா ரெட்டிதான் இந்தப் பட ஹீரோயின். பிறகு, கவுதமும் ஹாரிஸும் கருத்துவேறுபாட்டில் விலகியது வேறு கதை. அதன் பிறகு இந்தப் படத்துக்கு இயக்குநராக சரணும், இசையமைப்பாளராக பரத்வாஜும் ஃபிக்ஸ் ஆனார்கள். முதன்முதலாக இந்தப் பட பூஜையில்தான் அஜித் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கலந்துகொள்ளவைத்தார். இந்தப் பட டைட்டில் கார்டில் ‘கதை, திரைக்கதை, வசன உதவி - அஜித்குமார்’ என்று வருவதை இவரின் தீவிர ரசிகர்கள் கவனித்திருப்பார்கள். இந்தப் படம் சரியாகப் போகாததால் அது ரீச் ஆகவில்லை. ஆனால், இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப் பெரிதாகப் பேசப்பட்டது. அதேபோல ‘சிங்கம் என்றால் என் தந்தைதான்...’ என்ற பாடல் சிவாஜி ஃபேமிலிக்கு மிகப்பெரிய கனெக்ட்டிவிட்டியைக் கொடுத்த வகையில் அஜித்துக்கு ‘அசல்’ சந்தோஷமே! 

அசல்

50. ‘மங்காத்தா’

அஜித், தன் 42-வது படமான ‘பரமசிவன்’ நடித்துக்கொண்டிருக்கும்போதே தன் 50-வது படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்துவிட்டார். ‘வழக்கமா, 50-வது படம்னா ஹீரோ பூவுக்குள்ள இருந்து எழுந்து சிரிப்பார்; ஓப்பனிங் சீன்ல ஆட்டிக்குட்டியைக் காப்பாத்துவார். ஆனா, என் 50-வது படத்துல இந்த மாதிரி எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பா நான் நார்மலா, வழக்கமான ஹீரோவா இருக்க மாட்டேன்’ எனச் சொல்லிக்கொண்டிருப்பாராம். அதாவது, வழக்கமான ஹீரோவுக்கு நேரெதிர் ஹீரோவாக இருக்க வேண்டும் என முடிவுசெய்து, அதற்கு தகுந்த மாதிரியான ஸ்க்ரிப்டையும் தேடிக்கொண்டிருந்தார். 

அந்தச் சமயத்தில் வெங்கட் பிரபு இவரிடம் தன் அடுத்த பட ஸ்க்ரிப்ட்டைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ‘இது உங்க ரேஞ்ச் படம் இல்லைன்னா, நான் பசங்களை வெச்சு பண்றேன். சத்யராஜ் சார், விவேக் ஓபராய் இருவருக்கும் முக்கியமான கேரக்டர்கள்’னு சொல்லியிருக்கிறார். இது அப்படியே தான் தேடிக்கொண்டிருந்த 50-வது படத்துக்கான ஸ்க்ரிப்டாக இருப்பதைப் புரிந்துகொண்ட அஜித், ‘நீ எனக்கு ஸ்க்ரிப்ட்ல தனியா எதுவும் பண்ண தேவையில்லை. உன் கதையில் நான் இருப்பேன். அந்த கேரக்டராவே நான் இருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படித்தான் அஜித் `மங்காத்தா’வுக்குள் வந்தார். அதாவது சத்யராஜ், விவேக் ஓபராய்க்குப் பதிவலாக அஜித், அர்ஜுன்.

ராவாகக் குடித்துவிட்டு நடக்கும் மாஸ் ஹீரோ கேரக்டர்களுக்கு மத்தியில், இதில் மறுநாள் காலையில் ‘ஐயோ தலைவலிக்குதே!’ என்பார். ராய் லட்சுமிடன் படுக்கையில் இருப்பார். த்ரிஷாவின் அப்பாவை காரிலிருந்து தள்ளிவிடுவார். ‘மணி... மணி... மணி!’ எனப் பணத்துக்காக அலைவார். அவர் சொன்னதுபோலவே வழக்கமான ஹீரோவுக்கான நேர்ரெதிர் கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஸ்க்ரிப்டில் இவர் இருந்தாலும் அது தியேட்டரில் மிகப்பெரிதாகத் தெரிந்ததற்கு ஒரே காரணம் அஜித். 

அதேபோல அர்ஜுனுக்கு படத்தில் அவ்வளவு ஸ்பேஸ் இருந்த ஸ்க்ரிப்டில் எந்தச் சிறிய மாற்றமும் சொல்லவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் அஜித்துக்கான காட்சிகள் எதுவும் இல்லை. அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படம்பிடித்தனர். ஆனால், அர்ஜுனை இலகுவாக்க முன்னதாகவே படப்பிடிப்புத் தளத்துக்குப் போய் அர்ஜுனை வரவேற்றது முதல் அன்று படப்பிடிப்பு முடியும் வரை அர்ஜுனுடன் இருந்துவிட்டு வந்தார். 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கான ரெஃபரன்ஸ் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனிதான். அவரின் முந்தைய படங்களில்கூட நரைமுடியுடன்தான் நடித்திருப்பார். அப்போதே அவரிடம் டை அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘நேற்று வரை வெள்ளை முடியா இருந்துட்டு, திடீர்னு கறுப்பு முடியுடன் போய் நிற்க ஒரு மாதிரியா இருக்குது’ எனத் தவிர்ப்பாராம். ‘மங்காத்தா’ அவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்த படம். 

மங்காத்தா

‘பில்லா’- ‘வேலு நாயக்கர்’ தொடர்பு, பணம் பெறாமல் அஜித் நடித்த படம், ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ என சொன்னவர், ஏ.எம்.ரத்னத்தின் மறு ஆரம்பம், ‘ஆரம்பம்’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க அஜித் என்ன செய்தார் தெரியுமா? ‘சிறுத்தை’ எப்படி ’வீரம்’ ஆனார்? ‘ஹூ ஈஸ் தல’ என்று கேட்டவர் யார்? நாளை பார்ப்போம்..

அஜித்தை அறிவோம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/90069-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-10.html

Link to comment
Share on other sites

 

‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11

 
 

அஜித்தை அறிந்தால்

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

அஜித்

‘பில்லா’- ‘வேலு நாயக்கர்’ தொடர்பு, அஜித் பணம் பெறாமல் நடித்த படம், ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ என சொன்னவர், ஏ.எம்.ரத்னத்தின் மறு ஆரம்பம், ‘ஆரம்ப’த்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதற்கு காரணம் என்ன? ‘சிறுத்தை’ எப்படி ’வீரம்’ ஆனார்? ‘ஹூ ஈஸ் தல’ என்று கேட்டவர் யார்? அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

51. ‘பில்லா-2’

அடுத்தடுத்த பாகமாக ‘பில்லா’வைத் தொடர்ந்து பண்ணலாம் என்று முடிவுசெய்து எடுத்த படம். முதல் பாகத்திலேயே ‘பில்லா’ இறந்துவிடுவதாகக் காட்டியிருப்பார்கள். இதில், ‘சாதாரண ஓர் இளைஞன் எப்படி பில்லா என்கிற டான் ஆகிறான்?’ என்பதைக் கதையாக எடுத்தார்கள். இன்னொரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். ரஜினியின் மிகச்சிறந்த கேரக்டர்களில் ஒன்று ‘பில்லா’. அதேபோல கமல்ஹாசனின் சிறந்த கேரக்டர்களில் ஒன்று ‘வேலு நாயக்கர்’. இதில் ‘பில்லா-2’ கேரக்டருக்கு அந்த வேலு நாயக்கர் ரெஃபரன்ஸ் என்றுகூடச் சொல்லலாம். அவர் எப்படி கடற்கரையோரக் குப்பத்தில் பிறந்து அநாதையாக மும்பை வந்து எப்படி டானாக வளர்ந்தார் என்று சொல்வார்களோ, அப்படித்தான் ‘பில்லா-2’வை எடுத்திருப்பார்கள். இதன் மிகப்பெரிய மைனஸ், இயக்குநர், முக்கியமான நடிகர்கள்... எனப் பெரும்பாலும் வெளிமுகங்கள். நல்ல ஓப்பனிங் இருந்தும் படத்துடன் ஒன்ற முடியாததற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அஜித் 

52. ‘இங்கிலீஷ் விங்கீலிஷ்.’

ஸ்ரீதேவி தனிப்பட்ட முறையில் போன் செய்து, ‘நான் இதில் நடிக்கிறேன். நீங்களும் இதில் நடிக்கணும்னு விரும்புறேன்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அஜித்துக்கு ஸ்ரீதேவி பெரிய பழக்கம் இல்லை. பொதுவான நண்பர்கள் மூலம் பேசி, ‘இது தன்னம்பிக்கை பற்றிய முக்கியமான கேரக்டர். உங்களால் மட்டுமே இந்த ரோலை பண்ண முடியும்’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இது ஸ்ரீதேவியின் முடிவா, இயக்குநர் கௌரியின் முடிவா எனத் தெரியவில்லை. இங்கிருந்து மும்பை போய் வந்தது, அங்கு தங்கியது உள்பட அனைத்துமே அஜித் செலவு. தயாரிப்புத் தரப்பிடமிருந்து ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளவில்லை. 

இங்கிலீஷ் விங்கீலிஷ்

53. ‘ஆரம்பம்’

‘படைப்பாளிகள் சங்கப் பிரச்னையின்போது இவரிடம் கொடுத்திருந்த அட்வான்ஸை ஏ.எம்.ரத்னம் திரும்ப வாங்கிக்கொண்டார். ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். இதற்கு முன்னதாக ஒரு ‘பில்லா’ சம்பவம். அஜித், சஞ்சய் வாத்வாவுக்குத் தேதி கொடுக்கிறார். அவர் அந்தத் தேதியை சுரேஷ்பாலாஜிக்குத் தருகிறார். பிறகு, இந்துஜா பிரதர்ஸுக்குக் கைமாறி, ஆஸ்கர் ரவிக்கு அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண கொடுக்கிறார்கள். ஆனால் அவரோ, படத்தை ரிலீஸ் பண்ணாமல் ‘எனக்கு ஆறு கோடி ரூபாய் நஷ்டம்’ என்கிறார். காரணம், அந்தக் கைமாற்றல்கள்தான். ஆழ்வார்பேட்டையில் அஜித்தின் அலுவலகத்துக்கும் ஆஸ்கர் ரவியின் வீட்டுக்கும் இடையில் ஐந்து கட்டடங்கள்தான் இடைவெளி. ‘ஏங்க நான்தான் நடிக்கிறேன். இவர்தான் ரிலீஸ் பண்ணப்போறார்னா இவர்கிட்டயே போய் படத்தைப் பண்ணியிருப்பேனே. நான் ஏன் மும்பை வழியா போய் வரணும். ஏன் இங்கே ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்ற தனி தயாரிப்பாளர்களே இல்லையா?’ என்று பயங்கரமாக வருத்தப்பட்டார். 

‘இருக்காங்க சார். ஆனால், நாம்தான் பண்ணுவதில்லை’ என்று உடன் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். `அப்படி யார் யார் இருக்கிறார்கள்?’ எனப் பேச்சு வரும்போது, ஏ.எம்.ரத்னத்தின் பெயர் அடிபட்டிருக்கிறது. ‘அவர் நம்முடன் நல்ல டேர்ம்ஸில் இல்லை. ஆனால், அவரை மாதிரியான ஆள்கள் போனதால்தான் இவங்களை மாதிரி ஆள்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க’ என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். 

மறுநாள் காலை. தி.நகரில் உள்ள அஜித்தின் நண்பரின் அலுவலகத்திற்கு ஏ.எம்.ரத்னம் அழைக்கப்படுகிறார். ட்விஸ்ட் என்னவென்றால், அந்த அலுவலகம்தான் ஏ.எம்.ரத்னத்தின் ஆரம்பகால அலுவலகம்.  ரத்னம் எந்த அறையில், எந்த நாற்காலியில் முன்பு உட்கார்ந்திருப்பாரோ அதே அறையில் அதே நாற்காலியில் அமரவைக்கப்படுகிறார்.   ‘இங்கே வந்து எத்தனை வருஷமாச்சு!’ என்று ரத்னம் பழைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக்குகிறார்.  ‘ஒரு நல்ல செய்தி. சார், உங்களுக்கு படம் பண்றார். இந்த இடத்தில் உங்களைக் கூப்பிட்டுச் சொல்லச் சொன்னார்’ என்கிறார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ்சந்திரா. ரத்னத்துக்கு அப்படி ஒரு சந்தோஷம். விஷ்ணுவர்தன், ஏ.எம்.ரத்னம், எழுத்தாளர்கள் சுபா... காம்பினேஷனில் தொடங்கியது ‘ஆரம்பம்’. 

ஆரம்பம்

இந்தப் படத்தில் ஹீரோயினாக யாரை ஃபிக்ஸ் பண்ணலாம் எனப் பேசிக்கொண்டிருந்தபோது நயன்தாரா நடித்த ‘ராமாயணம்’ படத்தை டிவி-யில் பார்த்திருக்கிறார் அஜித். ‘அவங்க சும்மாதானே இருக்காங்க. அவங்களைப் பேசிப்பாருங்களேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘ஆரம்ப’த்தில் கமிட்டான நேரமோ என்னவோ, நயன்தாரா பிறகு பரபரப்பாகிவிட்டார். இந்தப் பட சமயத்தில், ஆர்யா ‘இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்குக்குப் போய்விடுவார். நயன்தாரா மற்ற படங்களுக்குப் போய்விடுவார். ‘அவர்கள் வரட்டும்’ என அஜித் பொறுமையாகக் காத்திருந்து நடித்த படம். 

படம் முடிந்தது. ‘ஆரம்பம்’ ரிலீஸ். ஆரம்பத்துடன் வேறொரு படமும் ரிலீஸ். அந்தப் படத்தின் தயாரிப்பாளர், தன் படத்துக்கு அதிக தியேட்டர்கள் போடுகிறார். ‘ஆரம்பம்’ படத்துக்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்தன. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அஜித்துக்கு அதிர்ச்சி. ‘ரத்னம் இப்பதான் புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவர்கிட்ட `ஆரம்பம்’ மட்டுமே உள்ளது. ஆனா என்கிட்ட, நிறைய பெரிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கு. இந்தப் படத்துக்கு உங்க தியேட்டர்களைக் கொடுத்தீங்கன்னா, என் அடுத்தடுத்த படங்களையும் உங்க தியேட்டர்களுக்கே தருவேன்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அஜித் ‘ஆரம்பம்’ ரிலீஸுக்கு முன்பே, ‘அடுத்த படமும் ரத்னம் சாருக்கே பண்றேன்’ என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் ரத்னத்தை நோக்கி ஓடிவந்தனர். ‘ஆரம்பம்’ படத்துக்கும் அதிக தியேட்டர்கள் கிடைத்து படம் ரிலீஸ் ஆனது. 

ஆரம்பம் 2

இந்தப் படத்தில் அஜித்தைக் கைது செய்வதுபோல் ஒரு காட்சி. அப்போது அஜித்தின் மீது போலீஸ் அதிகாரி கை வைப்பார். அஜித் அந்த அதிகாரியை, திரும்பி ஒரு பார்வை பார்ப்பார்.  அப்போது தியேட்டரில் அப்படி க்ளாப்ஸ் அள்ளியது. அந்தக் காட்சிக்கு அத்தனை க்ளாப்ஸ் கிடைக்கும்  என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்தக் காட்சியை எடுத்து, ‘தல மாஸ்’ என்று போட்டு வைரலாக்கினார்கள் அவரது ரசிகர்கள்.

54. ‘வீரம்’

மறைந்த சீனியர் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் 100-வது பிறந்த நாள் மற்றும் அவரின் ‘விஜயா வாஹினி’ தயாரிப்பு நிறுவனத்துக்கு 100-வது படம். அஜித்தை வைத்து பண்ணணும் என்று விருப்பப்பட்டனர். ‘எனக்கும் வாஹினிக்குப் படம் பண்ணணும்னு விருப்பம். நான் நேர்ல வர்றேன்’ என்று சொல்லி அஜித்தே நேரில் போனார். இயக்குநர் யாரென்று முடிவாகவில்லை. அஜித்தின் மேனேஜருக்கு நடிகர் பாலா நல்ல பழக்கம். அவரின் மூலம் அவரின் சகோதரரும் ‘சிறுத்தை’ பட இயக்குநருமான சிவாவும் பழக்கம். அவர், ‘லைஃப்ல ஒரே ஒரு ஆம்பிஷன்தான் சார். அஜித் சாரை வெச்சு ஒரு படமாவது பண்ணிடணும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். சிவா, ஆஸ்கர் நிறுவனத்தில் ஏற்கெனவே கேமராமேனாக இருந்தவர். 

பிறகு அஜித்-சிவா சந்திப்பு நடக்கிறது. அவரிடம் பேசிய உடனேயே ‘இவர், கவுதம் வாசுதேவ் மேனன், ஹரி ஸ்டைல்களை மிக்ஸ் பண்ணி படம் பண்ணக்கூடியவர்’ என்பதைப் புரிந்துகொண்டார் அஜித். அப்படித்தான் இந்த காம்பினேஷன் அமைந்தது. நாலு அண்ணன்-தம்பிகள். படம் பட்டாசாக வந்தது. அந்தச் சமயம் அஜித், தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தார். ‘என்னைத் தாண்டிப் போய்... ’, ‘நம்கூட இருக்கிற நாலு பேரைப் பார்த்துக்கிட்டா, ஆண்டவன் நம்மளைப் பார்த்துப்பான்’ என்று தன் தம்பிகளைப் பற்றிப் பேசிய வசனங்களை எல்லாம் தங்களைப் பற்றி பேசியதாகவே ரசிகர்கள் எடுத்துக்கொண்டனர். ‘மன்றத்தைத்தான் கலைச்சுட்டேன். ஆனால், முன்பைவிட இன்னும் கனெக்ட்டிவிட்டியோடு இருப்பேன்’ என்று அஜித் சொல்வது போன்ற விஷயங்களை சிவா இதில் பண்ணினார். 

வீரம்

55. ‘என்னை அறிந்தால்’

கவுதம் வாசுதேவ் மேனன், அப்போது பல பிரச்னைகளில் இருந்தார். ‘ஆரம்பம்’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வெளியே வரும்போதுதான் அந்தப் பட ரிலீஸில் உள்ள பிரச்னைகளை ரத்னம் சொல்கிறார். பிறகு, அடுத்த படத்தையும் அவருக்கே என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், அடுத்த பட இயக்குநர் யார் எனப் பேசும்போது சிலர், ‘கவுதம் வாசுதேவ் மேனன் சரியாக இருப்பார்’ என்று சொல்லியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே சிவாஜி ஃபிலிம்ஸுக்காக அஜித்தை இவர் இயக்கவேண்டிய படம் டிராப் ஆனதும் ‘ஹூ இஸ் தல?’ என்று கவுதம் கேட்டது அஜித்துக்கும் தெரியும். 

அது எதையும் மனதில் வைத்துகொள்ளாமல், ‘ம்... பேசுங்க’ எனச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித்தை அறிந்துகொண்டார். அஜித்துக்கும் ‘என்னை அறிந்தால்’ தனிப்பட்ட முறையில் பிடித்த படம், பிடித்த கேரக்டர். இதில் வரும், ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’ பாடல் அவர் அதை பெர்சனலாக ரிஸீவ் செய்துகொண்ட பாடல். அந்தப் பாட்டுக்காக அவர் போன எல்லா ஊர்களிலும் போட்டோ எடுத்து தனி கலெக்‌ஷனாகவே வைத்திருக்கிறார். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், இதில் வரும் மேனரிஸங்களைப் பார்க்கையில் அவரை அப்படியே நேரில் பார்ப்பதுபோல் இருக்கும்.

என்னை அறிந்தால் 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்த்தவர்கள் `அருண்விஜய் போர்ஷனைக் குறைக்க வேண்டும்’ எனப் பேசினார்கள். ஆனால், `இந்தப் படத்தில் அந்தப் போட்டிதான் அழகு’ என்றவர், ‘படத்தை அருண்விஜய் பார்த்துட்டாரா?’ என்று கேட்டிருக்கிறார். ‘இன்னும் பார்க்கவில்லை’ என்பதைத் தெரிந்துகொண்டு, ‘அவர் ஃபேமிலிக்குத் தனியா ஒரு ஷோ புக் பண்ணுங்க. இந்தச் சந்தோஷத்தைத் திரும்பி அந்த ஃபேமிலிக்கு உங்களால கொடுக்கவே முடியாது. உடனே புக் பண்ணுங்க’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், அஜித்தை எந்த அளவுக்குக் கொண்டாடினார்களோ, அதற்குக் குறைவில்லாமல் ‘விக்டர்’ அருண்விஜய்யையும் கொண்டாடினார்கள். 

ஆலுமா டோலுமாவுக்கு ஆடும் அஜித் மகன், ஆப்ரேஷன் அன்றே டிஸ்சார்ஜ் ஆன அஜித், ‘விவேகம்’ ஸ்பெஷல் ஃபிட்னஸ், அஜித் பற்றி அக்ஷரா சொன்னவை... நாளை பார்ப்போம்.

 


அஜித்  அறிவோம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/90170-facts-about-ajith---ajithai-arinthaal-series-11.html

Link to comment
Share on other sites

 

அஜித்தும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவும்! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12

 
 

அஜித்

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

அஜித்

ஆலுமா டோலுமாவுக்கு ஆடும் அஜித் மகன், ஆப்ரேஷன் அன்றே டிஸ்சார்ஜ் ஆன அஜித், ‘விவேகம்’ ஸ்பெஷல் ஃபிட்னஸ், அஜித் பற்றி அக்ஷரா சொன்னவை... அஜித்தின் மீதி இரண்டு படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

56. ‘வேதாளம்’

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று பண்ணிய படம். மீண்டும் இயக்குநர் சிவா காம்பினேஷன். தவிர, முதல்முறையாக அனிருத் இணை. படத்தைக் கவனித்த ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும். இதில் அஜித்தை, ஸ்ருதிஹாசன்தான் காதலிப்பார். ஓர் இடத்தில்கூட, ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்’ என்று ஸ்ருதியிடம் அஜித் சொல்லியிருக்கவே மாட்டார். கடைசியில் திருமணமும் செய்துகொள்ள மாட்டார். பாடல் காட்சிகளில்கூட இவருக்கு முன்பாக ஸ்ருதி ஆடுவார். அஜித் அவர் பின்னால் நடந்து வருவாரே தவிர, இவர் ஆட மாட்டார். இப்படி இதில் அஜித் கையாண்டது எம்.ஜி.ஆர் ஃபார்முலா. 

அஜித்

‘வேதாளம்’ கேரக்டரின் கெட்டப் இவரைச் சுற்றியுள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. ‘ஐயய்யோ ரொம்ப மோசமா இருக்குங்க. ‘ரெட்’லயாவது சின்ன வயசு மொட்டையனா இருப்பீங்க. இதுல சால்ட் அண்ட் பெப்பர் மொட்டை. பயங்கரமா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இதில் கன்டென்ட்தான் ஹீரோ. கதை கன்வின்ஸிங்கா இருந்தா படம் நிச்சயம் ரீச் ஆகும். அப்ப ‘வேதாளம்’ கேரக்டரும் ரீச் ஆகும்’ என்றார். அப்படியேதான் நடந்தது. இப்படி, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார் அஜித். 

வேதாளம்

‘ஆலுமா... டோலுமா...’ பாடலுக்கு உலகளவில் பலர் ஆடுகிறார்கள். அஜித்தின் மகன் ஆத்விக்குக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்தப் பாடலுடன் அஜித்தின் மனதுக்கு நெருக்கமான உணர்வுபூர்வமான ஒரு சம்பவம் உண்டு. ‘வேதாளம்’ படம் 2015-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ரிலீஸ். இவர் சங்கம் தியேட்டருக்குப் பின்னால் உள்ள குமரன் மருத்துவமனையில் நவம்பர் 11-ம் தேதி ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ‘இன்னிக்கு நைட்டே ஆபரேஷன்’ எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே, சங்கம் தியேட்டரிலிருந்து வந்த ‘ஆலுமா... டோலுமா...’ பாடலுக்கு ரசிகர்களின் ஆரவாரத்தைக் கேட்கும்போது இவருக்கு ஒரு மாதிரி ஆகியிருக்கிறது. இரண்டு முட்டி, கழுத்தில் ஆபரேஷன். ஆனால், ஆபரேஷன் ஆன அன்றே டிஸ்சார்ஜ் ஆகணும் என்று பிடிவாதமாக இருந்து, அதேபோல டிஸ்சார்ஜும் ஆகிவிட்டார். 

57. ‘விவேகம்’

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அதே ‘வி’ சென்ட்டிமென்ட். ‘வீரம்’ கிராமத்துக் கதை என்றால், ‘வேதாளம்’ நகரத்துக் கதை. ஆனால் ‘விவேகம்’, இன்டர்நேஷனல். இந்தப் படத்தின் ஸ்பெஷலே அஜித்தின் ஃபிட்னஸ்தான். ‘என்னைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு என்னால் திரும்பச் செய்ய முடிஞ்சது இதுமட்டும்தான்’ என்பது அவரின் எண்ணம். ஆனால், ‘போன வாரம் வாங்கித் தந்த பேன்ட் ரெண்டு இன்ச் குறைஞ்சிடுச்சு சார்’ என்று ‘விவேகம்’ பட காஸ்ட்யூம் டிசைனர்தான் புலம்புகிறாராம். முதல்முறையாக காஜல் காம்பினேஷன். ‘ஹீரோஸ்ல முதல் ஜென்டில்மேன் அஜித்தான்’ என்று ‘வேதாளம்’ சமயம் புகழ்ந்த ஸ்ருதியைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் நடிக்கும் அவரின் தங்கை அக்‌ஷராஹாசனும் அதையே சொல்கிறாராம். ‘தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஆக்‌ஷன் வந்ததில்லை’ என்று சொல்வது மாதிரியான சண்டைக் காட்சிகளை ‘விவேகம்’ படத்தில் அஜித் பண்ணியிருக்கிறாராம்.

விவேகம்

 57 படங்கள் பற்றி பார்த்தோம்.. AK58?

ஒரு படம் தயாராகி முதல் காப்பி பார்க்கும் வரையில் அடுத்த பட இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பதை  முடிவு பண்ண மாட்டார். வேறொரு இயக்குநரிடம் அடுத்த படத்துக்கு கமிட் ஆகிவிட்டால் தற்போது படம் பண்ணும் இயக்குநர் இன்செக்யூர்டாக ஃபீல் பண்ணுவார் என்பதால் அப்படி கமிட் பண்ண மாட்டார். கேட்டால், ‘என் பட இயக்குநர் அடுத்து வேறொரு நடிகருக்கு கதை சொல்லி ஒகே பண்ணிவிட்டால், நான் நடிப்பதை ‘இந்த காட்சியில் அந்த நடிகர் நடிச்சா எப்படி இருக்கும்’ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அதேபோல்தான் நானும். அதனால் ஒரு படம் முடியாமல் அடுத்த படம் அறிவிக்க மாட்டேன்’ என்பார்.

அதேபோல போன படத்து தயாரிப்பாளரோ, அடுத்தப்பட தயரிப்பாளரோ தற்போது ஷூட்டிங் நடக்கும் ஸ்பாட்டுக்கு வரக்கூடாது என்பதிலும் அஜித் உறுதியாக இருப்பார். ‘உங்கள்ட்ட அட்வான்ஸ் வாங்கிட்டா, ’பார்க்கணும்’னு நீங்க கேட்டால் ‘வரக்கூடாது’னு என்னால சொல்ல முடியாது. ‘வாங்க’னு சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அது எனக்கு பிடிக்காது. ஏன்னா இந்தப்பட தயாரிப்பாளர்தான் என் இப்போதைய முதலாளி. அந்த ஸ்பாட்டுக்கு நீங்க வர்றது, அவருக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். தேவையில்லாத அந்த டென்ஷன் வேண்டாமே’ என்று சிரிப்பார். அதனால்தான் ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். இதிலும் அஜித் தனி பாணிதான்! 

இந்தத்  தொடரை 12 நாட்களாக படித்து வந்த உங்களுக்காக, சில போனஸ் செய்திகளோடு நாளை.. இறுதிப்பகுதியில் சந்திப்போம்! 

 

-அஜித் அறிவோம்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/90279-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-12.html

Link to comment
Share on other sites

“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்!” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு

 

அஜித்

 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘விவேகம்’ படம் பற்றிய சில சிறப்புச் செய்திகள்:

* சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித்தை வைத்து படம் பண்ணுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவரிடம் கால்ஷீட் கேட்டிருந்தது. ‘நிச்சயம் பண்ணுவோம்’ என்று அப்போது கொடுத்த வாக்கை, இப்போது நிறைவேற்றியிருக்கிறார் அஜித்.

அஜித்

• ‘விவேகம்’ படத்தின் வில்லன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய். அஜித்துக்கு சரிசமமாக டஃப் கொடுத்து மிரட்டியிருக்கிறாராம். அஜித்தின் காதலியாக காஜல் அகர்வால். தவிர, தமிழில் அறிமுகமாகும் அக்‌ஷரா ஹாசனுக்கும் முக்கியமான கேரக்டர். மேலும் தம்பி ராமய்யா, கருணாகரன், அப்புக்குட்டி, ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் உள்ளனர். ஃபாரின் ஆர்ட்டிஸ்ட்டுகள் பலரும் ‘விவேக’த்தில் உண்டு. அஜித்துக்கும் இயக்குநர் சிவாவுக்கும் அப்படி ஓர் ஒற்றுமை. இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்வார்களாம்.

* கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, இந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. 147 நாள்கள் நடந்த படப்பிடிப்பில் 70 சதவிகிதம், ஐரோப்பாவின் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோவேஷியா ஆகிய நான்கு நாடுகளில் நடந்துள்ளது. மீதி 30 சதவிகிதப் படப்பிடிப்புதான் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்.

அஜித்

* ஒரு குற்றச் சம்பவத்தை விசாரிக்கையில் அந்தக் குற்றத்துக்கான காரணங்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் கிளை பரப்பி உள்ளது தெரியவரும். அதை விசாரித்து உண்மையைக் கண்டறியும் இன்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். இதனால் `விவேகம்' படத்தில் பரபர ஆக்‌ஷன், சேஸிங்குக்குப் பஞ்சமிருக்காது. இதற்கு கட்டுக்கோப்பான உடல் அவசியம் என்பதை உணர்ந்த அஜித், உடல் எடையில் கிட்டத்தட்ட 20 கிலோவுக்கு மேல் குறைத்திருக்கிறார். அதற்கு டயட், ஜிம் பயிற்சியே காரணம். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலுக்குச் செல்பவர், சீக்கிரமே தூங்கப் போய்விடுவாராம். பிறகு, அதிகாலை 3 மணிக்கு எழுந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஜிம்மில் வொர்க்கவுட் செய்வாராம். குறிப்பிட்ட ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸில் உடற்கட்டு தெரிய வேண்டும் என்பதற்காக டயட், வொர்க்கவுட் ஆகியவை இன்னும் கடுமையாக இருந்ததாம்.

* ‘விவேகம்’ படத்தின் இன்னொரு ஸ்பெஷல் அனிருத்தின் இசை. ஐந்து பாடல்கள், ஒரு தீம் பாடல் என, படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதில் அஜித்துக்கான ஓப்பனிங் பாடலை பாடியிருப்பவர் பிரபல ராப் பாடகர் யோகி பி. ஆடியோவை ஒவ்வொரு பாடலாக ரிலீஸ் செய்யலாம் என்பது திட்டம். ஜூன் மாதக் கடைசியில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் ஆடியோ ரிலீஸ் இருக்கலாம். முதல் சிங்கிள் ரிலீஸ் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடைபெறலாம்.

அஜித்

* வெளியிலிருந்து வரும் உணவில் எண்ணெய் அளவு அதிகமிருக்க வாய்ப்பிருப்பதால், செர்பியா ஷெட்யூல் முழுவதும் அஜித் தனக்கான உணவை தானே சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு ட்ரே, ஸ்டவ் உள்ளிட்ட மினிமம் கிச்சன் பொருள்களை வாங்கித் தந்திருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் சாப்பிடும் அளவுக்கான உணவைச் சமைத்து தானும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுப்பாராம். அதேபோல, தன் படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட்டதா என்பதை விசாரித்த பிறகே, தான் சாப்பிடத் தொடங்குவார்.

* எந்தக் காரணம்கொண்டும் தன்னால் படப்பிடிப்பு தடைபடுவதோ, தாமதமாவதோ அஜித்துக்குப் பிடிக்கவே பிடிக்காது. வந்தவுடன் அனைவரையும் பார்த்துவிட்டு கேரவனில் ஏறினால், அந்தக் காட்சிக்கான உடைகளை மாற்றிக்கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்.

அஜித்

* படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில், முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களிடம் பேசி நலம் விசாரிப்பவர், அடுத்தடுத்த நாளில் டைரக்‌ஷன் டீமில் இருப்பவர்கள், கேமரா அசிஸ்டென்ட்டுகள், லைட்மேன்கள், துணை நடிகர்கள்...என  அனைவரையும் தன் நட்பு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடுவார். ஒருகட்டத்தில் ‘நாம் அஜித் படப்பிடிப்பில்தான் இருக்கிறோம்’ என்ற உணர்வே இல்லாத அளவுக்கு எல்லோரையும் இலகுவாக்கிவிடுவார்.

* ‘கதைக்குத் தேவை என்பதால், உடல் இளைக்க முடிவெடுததுவிட்டார். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு இந்த டயட், உடற்பயிற்சியைத் தொடங்கியவருக்கு அவை மிகப்பெரிய சவாலாக இருந்தன. ஆனால், எந்தக் காரணத்தாலும் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. உடலைக் குறைத்து ஃபிட்டாகத்தான் வந்தார். படப்பிடிப்பிடிப்புக்காகத் தைக்கப்பட்ட உடைகள்தான், இவர் இளைக்க இளைக்க மாற்றப்பட்டுகொண்டே இருந்தன.

அஜித்

* படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து மேற்கண்ட நான்கு நாடுகளுக்கு யார் புறப்பட்டாலும், ‘சார்... தல ஷூட்டிங்கா? அவர் அடுத்த முறை ஏர்போர்ட் வரும்போது முன்னாடியே சொல்லிடுங்க. போட்டோ எடுக்கணும்’ என்று சென்னை விமானநிலையப் பணியாளர்கள் பெரும்பாலானோர் அஜித் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வந்தால், தங்களின் வேலைகளை மறந்து அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாகிவிடுகிறார்கள். இவரும் வி.ஐ.பி-களுக்கான வரிசையில் நிற்காமல் பொதுவழிதான் எனப் பிடிவாதம்பிடிப்பதால் நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடுமாம்.

* அனுமதியே கிடைக்காத செர்பியா அரசின் ராணுவத் தளங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரே யார் யார் வருகிறார்கள் என்ற விவரங்களைத் தெளிவாகச் சொல்லி சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் பல்கேரியா தெருக்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிபெறுவது என்பது மிகவும் சிரமமான வேலையாம். அதையும் பெற்று பைக் ஃபைட் எடுத்திருக்கிறார்கள். இப்படி ஐரோப்பாவின் நான்கு நாடுகளில் மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

அஜித்

* வெளிநாட்டு லொகேஷனில் மால் ஒன்றின் வாசலில் ‘ஸ்ஸ்... அப்பாடா!’ எனக் கைகளைத் தரையில் ஊன்றி வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அஜித். உடன் வந்தவர்கள், ‘சார், நீங்க சென்னையில் இப்படி உட்கார முடியுமா?’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘அங்கே முடியாதுங்கிறதால்தான் இங்கே இப்படி உட்கார்ந்திருக்கேன்’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்.

அஜித்தைப் பற்றிய பொதுவான தகவல்கள் சில:

* அஜித்துக்கும் சூர்யாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ‘நேருக்குநேர்’, அஜித்தும் விஜய்யும் பண்ணவேண்டிய படம். அதில் அஜித் இல்லை என்ற பிறகு சூர்யா உள்ளே வருகிறார். இதேபோல ‘நந்தா’ அஜித் பண்ணவேண்டிய படம். இவரின் படத்துடன் ‘நந்தா’ எனத் தலைப்பிட்டு ஆட்டோ பின்னால் போஸ்டர்கள்கூட ஒட்டிவிட்டார்கள். அதன் பிறகு சூர்யா ‘நந்தா’வாகிறார்.

இயக்குநர் ஹரி, இயக்குநர் சரணின் அசிஸ்டென்ட். அந்த ரூட்டில் ஹரியும் அஜித்தும் கமிட்டான படம்தான் ‘ஆறு’. தயாரிப்பாளர் பிரச்னையால் அஜித்திடமிருந்து சூர்யாவுக்குக் கை மாறியது ‘ஆறு’. ‘கஜினி’யின் ஒரிஜினல் பெயர் ‘மிரட்டல்’. கிண்டி லீமெரிடியன் ஹோட்டலை சஞ்சய் ராமசாமியின் வீடாக்கி, அஜித்தை வைத்து  ஆறு நாள்கள் ஷூட்டிங்கூட எடுத்துவிட்டார்கள். பிறகு, சூழ்நிலை காரணமாக ‘மிரட்டல்’, ‘கஜினி’யாக சூர்யாவுக்குக் கைமாறியது.

சூர்யா

* ‘காதல் மன்னன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான சரண், பிறகு அஜித்துடன் ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல் போன்ற படங்களில் பணியாற்றினார். அவரின் அசிஸ்டென்டான எஸ்.ஜே.சூர்யாவுக்கு ‘வாலி’ மூலம் வாய்ப்பு தந்தார். இதேபோல்தான் இயக்குநர் வி.இசட்.துரைக்கு ‘முகவரி’, ராஜகுமாரனுக்கு ‘நீ வருவாய்' என, ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘தீனா’, சரவண சுப்பையாவுக்கு ‘சிட்டிசன்’, இயக்குநர் விஜய்க்கு ‘கிரீடம்’ என,இன்றைய பிஸி இயக்குநர்களுக்கு அன்று முதல் படம் தந்ததே அஜித்தான். தவிர, ‘அசோகா’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷ்ணுவர்தனுக்கு ‘பில்லா’ தந்தார். ‘வீரம்’ தொடங்கி இயக்குநர் சிவாவுடன் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இப்படி திறமையான இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஊக்குவிப்பதுதான் அஜித் ஸ்பெஷல்.

அஜித்

* ‘அமராவதி’ தொடங்கி சில படங்களுக்கு அஜித்துக்கு டப்பிங் பேசியது விக்ரம்தான். பிறகு ‘உல்லாசம்’ படத்தில் சேர்ந்து நடித்தார்கள். இப்படி இருவரும் வெவ்வேறு நடிப்புத் தளங்களில் இணைந்தே வளர்ந்தனர். அந்தச் சமயத்தில் அஜித்-இயக்குநர் சரண்-தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் காம்பினேஷனில் தொடங்கப்பட்ட படம் ‘ஏறுமுகம்’. ஒரு ரெளடி, கல்லூரியில் சேர்ந்து படிப்பது போன்ற கதை. ஸ்ரீபெரும்புதூரில் பாடலுக்கான செட் போட்டு ஷூட்டிங் தொடங்கினர். அப்போது ஷூட்டிங் செட்டில் இன் ஹவுஸ் விளம்பரங்கள் சிலவற்றை தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். தன் படங்களுக்குள் விளம்பரங்கள் கூடாது என்பது அஜித் பாலிசி. அதனால் அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் அஜித் ‘ஏறுமுக’த்திலிருந்து வெளியேறினார். பிறகு, அதே படம் ஏவி.எம். - விக்ரம் - சரண் காம்பினேஷனல் ‘ஜெமினி’ ஆனது.

அஜித்-விக்ரம்

* அஜித் ஆந்திரா மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு பிரைவேட்டாக டுடோரியலில் படித்தவர். அந்த டுடோரியலை நடத்தியவர் சுப்பையா. பல வருடங்களுக்குப் பிறகு ஏர்போர்ட் ஃப்ளையிங் லைசென்ஸ் வாங்க அவர் படித்த அந்த மெட்ரிக் சர்ட்டிஃபிகேட் தேவைப்பட்டிருக்கிறது. சுப்பையாவைத் தேடிக் கண்டுபிடித்து சர்ட்டிஃபிகேட் வாங்கினார். அப்போது சுப்பையாவிடம், ‘சார், உங்ககூட ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். நான் ஸ்கூல் படிச்சதுக்கான ஒரே அடையாளம் நீங்க மட்டும்தான்’ என்றபடி சுப்பையாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அஜித். (அன்று அஜித் படித்த ஆந்திரா மெட்ரிக்கில் இவரின் வகுப்பு தோழன் பாடகர் எஸ்.பி.பி.சரண் என்பது கூடுதல் தகவல்)

அஜித்

* நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என, தெரிந்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தனக்குத் தெரிந்த, தன் குடும்பத்துக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களைப் பரிந்துரைப்பார். ‘போய்ப் பார்த்தீங்களா... என்ன சொன்னார்?’ என்று ஃபாலோ பண்ணி விசாரிக்கவும் செய்வார்.

* லிஃப்ட், எஸ்கலேட்டர் என எங்கு இருந்தாலும் பெண்கள் வந்துவிட்டால், அவர்களுக்குதான் முன்னுரிமை. அவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் முதலில் போகட்டும் எனக் காத்திருப்பார்.

* ‘அவங்க படம் நல்லா ஓடுதே, அந்தப் படத்தோட கதை இதுவாமே...’ என எதைப் பற்றியும் அஜித் கவலைப்படுவதில்லையாம். ‘எல்லார் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்.’ இதுதான் அஜித் பாலிசி.

அஜித்

* நடிகர் சங்கத்தில் ஓர் உண்ணாவிரதப் போராட்டம். அதில் கலந்துகொண்டிருந்த அஜித்திடம் ஒருவர் எழுந்து எழுந்து அவ்வபோது வணக்கம் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘நாம எப்போதோ பார்த்துப் பேசினவர் போலிருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ளப்போகிறார்’ என நினைத்த அஜித் தன் உதவியாளரை அழைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். ‘என் மகளின் இதய அறுவைசிகிச்சைக்கு சார்தான் பணம் கொடுத்தார்’ என்று அவர் சொல்ல, அப்போதும் அஜித்துக்கு அவரின் பெயர் ஞாபகம் வரவில்லை. இப்படி, தான் செய்த உதவிகளை அவர் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ‘இதுபோன்ற விஷயங்களை மறந்துகொண்டே இருப்பது நல்லது’ என்று நினைப்பாராம். அந்தக் கடைசிப் பயனாளர் யார் என அஜித்துக்குத் தெரியாது. அந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிடும். இப்படி வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் கல்விக் கட்டணமாகவே சென்றுகொண்டிருக்கிறதாம். தன் டிரைவருக்கு சொந்தமாக கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 

‘அஜித்தை அறிந்தால்’ மினி தொடரைப் படித்த உங்களுக்கு எங்களின் நன்றிகள். வணக்கம்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/90453-facts-about-ajith-ajithai-arinthaal-series-conclusion.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.