Jump to content

மடிசாய வரம் தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மடிசாய வரம் தா...


ஆண்டைந்து சென்றாலும்
அகலாத நினைவோடு
கண்ணுக்குள் கலையாத
கனவானாய் நிலையாக
எம் அன்புத் தாய் நீயே
எமக்கெல்லாம் வரம் நீயே
உயிரோடு உறவாடும்
உலகெல்லாம் நீதானே
மனசெல்லாம் நிறைந்திட்ட
பிரியாத வரம் நீயே


உடலாலே பிரிந்தாலும்
உணர்வோடு இணைந்தாயே
இணைகின்ற உறவெல்லாம்
இருந்தாலும் தாயே உன்
இதயத்திற் கிணையான
உணர்வாக முடியாதே
நிழலாக நீ நின்றாய்
சிறகின்றித் தவிக்கின்றோம்
பரிவோடு வருடும் உன்
பாசத்தை நினைக்கின்றோம்
இல்லாமை இருந்தாலும்
இயல்பாக எமைத்தாங்கி
சுகமாக அணைக்கின்ற
சுமைதாங்கி நீ அம்மா


எமதன்புத் தாய் இன்றி
இதயத்துள் அழுகின்றோம்
விழிநீரைத் துடைக்கின்ற
விரலின்றித் தவிக்கின்றோம்
அழுதாலும் தொழுதாலும்
ஆறாது எம் காயம்
நாளெல்லாம் உனை எண்ணி
நனைகின்றோம் அன்பாலே
மடிசாய இடமின்றி
மனசெல்லாம் வெளியாகி
துளிகூட பிரிவின்றி உன்
துணையோடு நடக்கின்றோம்
எமக்காக நீ பட்ட
இன்னல்கள் இனி வேண்டாம்
அம்மா எம் மடி சாய்ந்து
அமைதியாய் நீ தூங்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுதான் ....சொத்து சுகங்கள் ஆயிரமிருந்தாலும் தாயின் அன்புக்கும் ஆதரவுக்கும் அரவணைப்புக்கும் ஈடிணையாக எதுவுமேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை அன்னையின் அன்பு ஒன்றே போதும் என்ற கவிஞரின் வரிகள் எத்தனை உண்மை. கவிதையைப் படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் குமாரசாமி மற்றும் பச்சைப்புள்ளியிட்ட அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2017 at 9:11 AM, Kavallur Kanmani said:

மடிசாய வரம் தா...



மடிசாய இடமின்றி
மனசெல்லாம் வெளியாகி
துளிகூட பிரிவின்றி உன்
துணையோடு நடக்கின்றோம்
எமக்காக நீ பட்ட
இன்னல்கள் இனி வேண்டாம்
அம்மா எம் மடி சாய்ந்து
அமைதியாய் நீ தூங்கு!

ஏக்கங்களோடு கேட்டுவிட்டு தாயை தூங்க தாலாட்டும் பாடிவிட்டீர்கள். 10 ஆண்டுகள் எவ்வளவு வேகமாக மறைந்துவிட்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை சகோதரி .... அம்மா என்றதும் அடிவயிற்றிலிருந்து வார்த்தைகள் வருகுது போல .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா ஆண்டைந்து போனது  நீங்கள் ஆண்டுபத்தாக்கி  விட்டீர்கள். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்

மணிவயிற்றில் எமைச் சுமந்த அன்னைக்கு அடிவயிற்றிலிருந்து கவிதை வருவது இயற்கைதானே? உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.5.2017 at 3:11 PM, Kavallur Kanmani said:

மடிசாய வரம் தா...



 


உடலாலே பிரிந்தாலும்
 

உணர்வோடு இணைந்தாயே
 

இணைகின்ற உறவெல்லாம்
 

இருந்தாலும் தாயே உன்
 

இதயத்திற் கிணையான
 

உணர்வாக முடியாதே
 


 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.