Jump to content

முப்பது வருடங்களுக்குப் பின் மீண்ட கடற்கரை!


Recommended Posts

முப்பது வருடங்களுக்குப் பின் மீண்ட கடற்கரை!

 

 

முப்பது வருடங்களுக்கு முன் கடலால் கபளீகரம் செய்யப்பட்ட கடற்கரையொன்று மீண்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது.

5_V_Achill1.jpg

அயர்லாந்தின் ‘அச்சில்’ தீவுகளுக்குச் சொந்தமான இந்தக் கடற்கரை 300 மீற்றர் நீளமுள்ளது. இங்கே நான்கு ஹோட்டல்களும் பல விருந்தினர் விடுதிகளும் இருந்தன. இக்கடற்கரையை நம்பி சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

5_V_Achill5.jpg

1984ஆம் ஆண்டு இத்தீவுப் பகுதியில் வீசிய கடும் புயலால், இந்தக் கடற்கரையில் இருந்த மண் முழுவதுமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. மண் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதால், அதன் கீழே இருந்த சிறியதும் பெரியதுமான கருங்கற்பாறைகள் மட்டுமே எஞ்சின.

5_V_Achill2.jpg

இந்நிலையில், கடந்த மாதத்தின் அனேக நாட்கள் இப்பகுதியில் பேரலைகள் வீசியதால், மண் மீண்டும் கரையில் சேர்ந்தது. இதனால், மீண்டும் இப்பகுதி கடற்கரையாகக் காட்சி தருகிறது.

5_V_Achill4.jpg

5_V_Achill3.jpg

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமது கடற்கரை கிடைத்தது குறித்து அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/19860

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.