Jump to content

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


Recommended Posts

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
 
கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
 
புதுடெல்லி:

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந்தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
201705091225303521_Supreme-court._L_styv

மேலும், தண்டனைக்குள்ளான நீதிபதிகள் ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து கர்ணன் தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/09122526/1084345/SC-sends-Justice-C-S-Karnan-to-6-month-imprisonment.vpf

Link to comment
Share on other sites

gallerye_002008602_1767630.jpg

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ண னுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித் துள்ளது. ஐகோர்ட் நீதிபதிக்கு, கோர்ட் அவ மதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை.

 

Tamil_News_large_1767630_318_219.jpg

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன், 61, சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார். இது குறித்து, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார்.

இதை கோர்ட் அவமதிப்பு செயலாக எடுத்துக் கொண்டு, சுப்ரீம் கோர்ட், சுயமாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு

விசாரித்து வந்தது.
மனநல பரிசோதனை:
இதனிடையில், கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட, நீதிபதி கர்ணன், நீதித்துறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மேலும், அவரது மனநலம் குறித்த மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ள, உத்தரவிட்டி ருந்தது.

நீதிபதி கர்ணன் மீதான கோர்ட் அவ மதிப்பு வழக்கு, சுப்ரீம் கோர்ட்அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக, அமர்வு கூறியது. 'அவருக்கு என்ன தண்டனை அளிக்கலாம்' என, மூத்த வழக்கறிஞர்களிடம், அமர்வு கேட்டது.

சென்னை ஐகோர்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், ''நீதிபதி கர்ணன், வரும், ஜூன், 11ல் ஓய்வு பெறுகிறார். அதன்பின்பே, தண்டனை அளிக்க வேண்டும். ஒரு நீதிபதிக்கு தண்டனை அளித்தால், அது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்திவிடும்,'' என, கூறினார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த, சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
நீதிபதியாக இருப்பதை காரணமாக வைத்து, கோர்ட் அவமதிப்பு வழக்கில், கர்ணன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்தான், நீதித்

 

துறைக்கு களங்கம் ஏற்படும். இந்த வழக்கில், அவரை நாங்கள் நீதிபதியாக பார்க்கவில்லை. நீதிக்கு முன்னாள் அனைவரும் சமமே.
 

சிக்கல் இல்லை


அதனால், கோர்ட்டை அவமதித்தது, நீதித் துறையை அவமதித்தது போன்ற குற்றங்களை செய்துள்ள நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படு கிறது. அவரை உடனே கைது செய்ய, மேற்குவங்க டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.தன்னிடம் மனநலப் பரிசோதனை நடத்த வந்த மருத்துவர் குழுவிடம், தான் நல்ல உடல்நலம் மற்றும் மன நலத்துடன் இருப்பதாக கர்ணன் கூறியுள்ளார்;

அதை மருத்துவர் குழுவும் மறுக்கவில்லை. அதனால், அவருக்கு தண்டனை விதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.மேலும், நீதிபதி கர்ணன் கூறும் எந்தக் கருத்துகளையோ, உத்தர வுகளையோ, இனி பத்திரிகை, 'டிவி' போன்ற ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தீர்ப்பில் கூறியுள்ளது.

இதற்கிடையே, கோல்கட்டாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பி உள்ளார் நீதிபதி கர்ணன். அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், முதல்முறை யாக, ஒரு ஐகோர்ட் நீதிபதிக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது, நீதித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1767630

Link to comment
Share on other sites

நீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்

 
 

உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனைக் கைதுசெய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 
 

கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், அவரை உடனடியாகக் கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று சென்னை வந்த கர்ணன், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். செய்தியாளர்களையும் சந்தித்து பேட்டி அளித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, அவர் கொடுத்த பேட்டிகள், அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமையன்று காலை கர்ணனைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த டிஜிபி சுரஜித் கர் புர்கயஸ்தா தலைமையில் காவல் துறையினர் சென்னைக்கு வந்தனர். பிறகு மாநகரக் காவல்துறை ஆணையரைச் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கர்ணன், காலையில் புறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோயிலுக்கு சென்றதாகச் சொல்லப்பட்டது.

இதையடுத்து, பிற்பகலில் கொல்கத்தாவைச் சேர்ந்த காவல்துறையினர், தமிழக காவல்துறையினர் சாலை மூலமாக காளகஸ்திக்குப் புறப்பட்டனர். ஆந்திர மாநில எல்லையில் ஆந்திர காவல்துறையினரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

இருந்தபோதும் கர்ணன் இருக்கும் இடம் தெரியாததால், கொல்கத்தா காவல்துறையினர் சென்னை திரும்பியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-39876813

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.