Jump to content

"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive


Recommended Posts

"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive

 

சினிமா செலிப்பிரிட்டிகளின் இயல்பு மாறாமல் அப்படியே க்ளிக்குவதுதான் போட்டோகிராஃபர் தீரனின் ஸ்பெஷல். ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பல பிரபலங்களையும் க்ளிக்கித் தள்ளியிருக்கிறார்.

"நான் இப்படி வருவேன்னு கனவுகூடக் கண்டது இல்லைங்க. அரக்கோணம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு கேமரா இருந்துச்சு. அதை எங்க அண்ணன்தான் எப்பவும் வெச்சிருப்பான். அவன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கேமராவை எடுத்துப் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அப்பவே கேமரா மேல லவ் ஆகிடுச்சு. மரம், செடி கொடினு தொடங்கி வீட்டுல உட்கார்ந்து இருக்கும் பாட்டி வரை எல்லாத்தையும் க்ளிக் பண்ணித் தள்ளினேன்.

திரன்என் ஆசை இதுல இருந்தாலும், அப்பா- அம்மாவின் ஆசைக்காக சென்னையில் ஒரு தனியார் காலேஜ்ல காமர்ஸ் பாடம் எடுத்துப் படிச்சு முடிச்சேன். இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலை கிடைச்சது. கை நிறைய சம்பளம். ஆனாலும் லைஃப்ல ஏதோ மிஸ்ஸிங். பெரிய வெற்றிடம் விழுந்த மாதிரி தோணுச்சு. அப்ப எனக்கு இருந்த ஒரே ஆறுதல், போட்டோகிராஃபிதான். லீவு நாள்ல எல்லாம் எங்கேயாவது போட்டோ எடுக்கப் போயிடுவேன். ஆபீஸ் போகணும்னு நினைச்சாலே எரிச்சலா இருக்கும். ஒருநாள் திடீர்னு நிம்மதி இல்லாத இந்த வேலை எதுக்குனு ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன். மனசு போற போக்குல மூணு வருஷங்கள் சுத்திட்டு, பல வகையான மனிதர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துட்டிருந்தேன்.

அப்பதான் என் நண்பர் மூலமா சினிமாவுல பி.ஆர்.ஓ-வாக இருக்கும் நிகில் அண்ணாவின் பழக்கம் கிடைச்சது. சினிமா நிகழ்ச்சிகள், பிரபலங்களை வெச்சு போட்டோ எடுக்கும் வேலை. 2013-ம் ஆண்டுல சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, கமல் நிகழ்ச்சி. போட்டோ எடுக்கச் சொன்னாங்க. எடுத்துக் காமிச்சேன். 'நல்லா இருக்கு'னு பாராட்டினாங்க. அன்னிக்கு எடுக்க ஆரம்பிச்சதுதான், இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவுல எல்லாத்தையும் எடுத்துட்டேன். இப்ப வாழ்க்கையும் ரொம்ப கலர்ஃபுல்லா மாறிடுச்சு. அதுக்கெல்லாம் முக்கியமான காரணம் நிகில் அண்ணாதான்."  

இவரது ஸ்பெஷல், அந்தத் தருணத்தையோ, அந்தப் பிரபலங்களையோ எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் அந்த நொடியை உள்ளது உள்ளபடி உறையவைத்து க்ளிக்குவதுதான். அந்தத் தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

ரஜினி:

தீரன் ரஜினி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்

ரஜினி சாரை நான் பல நிகழ்ச்சிகள்ல போட்டோ எடுத்திருக்கேன். '2.0' நிகழ்ச்சி மும்பையில நடந்தது. அப்பகூட அங்கே போய் எடுத்தேன். ஆனா, மறக்க முடியாத க்ளிக் ரஜினி சார் வீட்டுல அவரை போட்டோ எடுத்ததுதான். 'தர்மதுரை' படம் 100-வது நாள் ஓடியதற்காக ரஜினி சாரிடம் வாழ்த்து வாங்க விஜய் சேதுபதி அண்ணாவும், டைரக்டர் சீனுராமசாமி சாரும் போனாங்க. நானும் போட்டோ எடுக்கப் போயிருந்தேன். அங்கே ரஜினி சார் நடிச்ச 'பாபா' பட ஸ்டில் ஒண்ணு ஃப்ரேம் போட்டு மாட்டி வெச்சிருந்தாங்க. ரஜினி சார், விஜய் சேதுபதி அண்ணாவுக்கு 'வணக்கம்' சொல்லும்போது இந்த ரெண்டையும் ஃப்ரேம்ல வர்ற மாதிரி எடுத்த க்ளிக் இது. அவரு எப்பயுமே க்ரேட்ங்க. அவர் வணக்கம் எப்போதுமே ஸ்பெஷல்தான்.  


கமல்:

தீரன் கமல் கமல்ஹாசன்


கமல் சார் செம ஷார்ப். அவரை இதுவரைக்கும் பல நிகழ்ச்சிகள்ல போட்டோ எடுத்திருக்கேன். அவர் நிகழ்ச்சியில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்துட்டேதான் இருப்பார். நீங்க அவரை ரசிச்சு போட்டோ எடுக்குறீங்கனு நோட் பண்ணிட்டார்னா, மேடையில் இருந்தபடியே விதவிதமான போஸ் கொடுப்பார். மேடையில் இருந்தாலும் போட்டோகிராஃபர்கூட கண்லயே பேசுவார். அவர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வரும்போது நல்லா முறுக்கு மீசை வைச்சு இருந்தார். அவருக்குப் பின்னாடி பேனர்ல முறுக்கு மீசை பாரதி படம். இவர் மீசையை முறுக்கினால் நல்லா இருக்குமேனு நான் நினைக்கும்போதே கமல் சார் மீசையை நிதானமா நான் எடுத்து முடிக்கிற வரைக்கும் முறுக்கி ஒரு சின்ன போஸ் கொடுத்துட்டே இருந்தார். அப்ப எடுத்ததுதான் இது! கமல் சார், ரசனைக்காரருங்க!

விஜய்:

தீரன் விஜய்

விஜய் சார் சிம்பிளா இருந்தாலும் செம ஸ்டைலா இருப்பார். டான்ஸ் மாஸ்டர் லலிதா - ஷோபியோட வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிம்பிளான கோட் போட்டு வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது இதழ் ஓரமா சின்னச் சிரிப்புடனே வந்தார். அதை அப்படியே உறையவைத்த போட்டோதான் இது. விஜய் சாரின் பல ரசிகர்கள் `இந்த போட்டோவை ஃப்ரேம் பண்ணி மாட்டிக்கிறோம்'னு கேட்டாங்க. ஒரிஜினல் போட்டோவையே அனுப்பிவைச்சேன்.

தனுஷ்:

தீரன் தனுஷ்


தனுஷ் சார், நம்ம பக்கத்து வீட்டுல இருக்கிற அண்ணா மாதிரி. ஒரு மஞ்சள் வெயில் மாலையில் பிளாக் அண்ட் வொயிட் க்ளிக்கிய போட்டோ இது. அவர் பிறந்த நாள் அன்னிக்கு, அவர் பிறந்த நாள்னு தெரியாமலேயே நான் இந்த போட்டோவை சும்மா சோஷியல்  மீடியாவுல போட்டேன். செம வைரல்!

விஜய் சேதுபதி:

தீரன் விஜய் சேதுபதி


எல்லார்கூடவும் ரொம்ப இயல்பா பழகுவார். பந்தா எல்லாம் பண்ண மாட்டார். இவரை தனியாவே ரெண்டு மூணு முறை போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன். அவர் கண்ணே பல கதைகள் சொல்லும். அவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல டி.பி-யாக நான் எடுத்த சில போட்டோக்களை வெச்சிருக்கிறார். ஒரு தடவை, நான் எடுத்த போட்டோவை `பட போஸ்டருக்குப் பயன்படுத்திக்கிறேன்'னு சொன்னார். செம ஹேப்பி!

மடோனா செபாஸ்டின்:

தீரன் மடோனா செபாஸ்டின்

 


இவங்க 'பிரேமம்' படத்துக்கு அப்புறம் தமிழ்ல 'கா க போ' படத்துல நடிக்க வந்தாங்க. இவங்க, படத்துக்காகனு எல்லாம் தனியா போட்டோ ஷூட் எடுத்ததே கிடையாது. முதல்முதல்ல நான்தான் இவங்களை போட்டோ எடுத்தேன். ரொம்ப கூலானவங்க. நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படியே போஸ் தருவாங்க.


ரித்திகா சிங்:

தீரன் ரித்திகா


மடோனா மாதிரிதான் ரித்திகாவும். இவங்க சென்னை வந்து `மீடியாவுக்கு போட்டோஸ் கொடுக்க போட்டோ ஷூட் பண்ணணும்'னு சொன்னதும், அவங்க போட்டிருந்த டிஷர்ட்டோடு லைட்டா மேக்கப் பண்ணி போட்டோ எடுத்தேன். இந்த போட்டோஸ்தான் இப்ப எல்லாருமே பயன்படுத்திட்டிருக்காங்க.

 

 

நயன்

இன்னமும் பல பிரபலங்களை போட்டோ எடுத்திருக்கேன். வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி இப்பதான் மகிழ்ச்சியா இருக்கு." 

 

 

 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/88644-celebrities-photographer-deran-interview.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.