Jump to content

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியன் மர்ம மரணம்!


Recommended Posts

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியன் மர்ம மரணம்!

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும்,  நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் இன்று அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Vijayabaskar

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அ.தி.மு.கவை சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் சுப்பிரமணியனின் உடல் அவரது தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது, ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/88736-minister-vijayabaskars-friend-subramani-died-in-a-mysterious-way.html

Link to comment
Share on other sites

gallerye_234348506_1766933.jpg

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் கட்டட ஒப்பந்ததாரருமான நாமக்கல் சுப்ரமணியம், மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். விஜயபாஸ்கர் நண்பர் என்பதால் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்த நிலையில் நாமக்கல் அருகே பண்ணை வீட்டில் அவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_1766933_318_219.jpg


நாமக்கல், ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்தவர் அரசு கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம், 58. இவர் புதுக்கோட்டையில் ஒப்பந்த அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டடப் பணியை மேற்கொண்டு வந்தார்.கடந்த ஏப்ரல் 7ல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
 

மகனிடம் சம்மன்


அப்போது, விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும், ஒப்பந்ததாரருமான, சுப்ரமணியம் வீட்டில் அன்றைய தினம் காலை 6:00 மணி முதல் மறுநாள் இரவு 3:00 மணி வரை தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்தபோது சுப்ரமணியம் சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். அதனால், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராவதற்கான சம்மனை, அவரது மகன் சபரீசனிடம் அதிகாரிகள் வழங்கினர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுப்ரமணியம், கடந்த 4ல், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று, விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் நேற்று காலை 8:15 மணியளவில் நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தன் பண்ணை வீட்டில் அசைவற்ற நிலையில் சுப்ரமணியம் கிடந்துள்ளார். அதை பார்த்த பண்ணை மேற்பார்வையாளர் வடிவேல் 24, அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
 

விசாரணை


சுப்ரமணியத்துக்கு சாந்தி 52, என்றமனைவி, அபிநயா, 28, என்ற மகள், சபரீசன், 25, என்ற மகன் உள்ளனர். மகன் சபரீசனும், மருமகன் அரவிந்தும், சுப்ரமணியம் மேற்கொண்ட ஒப்பந்த பணிகளை கவனித்து வருகின்றனர். சுப்ரமணியத்தின் மர்ம மரணம் குறித்து, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, ஜெ.,யின் முன்னாள் கார் டிரைவர் சேலம் கனகராஜ், ஆத்துாரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், கேரளாவைச் சேர்ந்த சயான், குடும்பத்தினருடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில், சயான் உயிர் தப்பினார். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் ஒப்பந்ததாரருமான நாமக்கல் சுப்ரமணியம், மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேகர் ரெட்டியிடம் சிக்கிய டைரி மூலம், வருமான வரித்துறையின் நடவடிக்கையால், ஆளுங்கட்சி தரப்பு பீதியடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த மர்ம மரணங்கள், பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகின்றன.
 

விஷம் குடித்தாரா?


நேற்று மாலை, 5:30 மணியளவில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, நகராட்சி மின் மயானத்தில்

 

சுப்ரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், சுப்ரமணியம் இறந்து கிடந்த பண்ணை வீட்டில் ஒரு குளிர்பான பாட்டில் சிக்கியுள்ளது. அதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பண்ணை வீட்டில் பணியாற்றும் பெருமாள் மனைவி ரத்தினம் கூறியதாவது: நேற்று காலை 8:00 மணிக்கு தனியாக காரில் வந்தார். வழக்கம் போல் தோட்டத்தை சுற்றிப் பார்த்தவர், தென்னை மட்டை விழுந்து கிடப்பதை எடுத்து அப்புறப்படுத்த வேலையாட்களிடம் கூறினார். தொடர்ந்து அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் மேற்பார்வையாளர் சென்று பார்த்தபோது, மெத்தை கட்டிலில் விழுந்து கிடந்தார். எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்தாலும் விசாரணை தொடரும்


வருமான வரித்துறையிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியதே நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணி தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு தலைமை அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துறை ஏப்., 7ல் சோதனையிட்டபோது நாமக்கல்லில் உள்ள ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் வீட்டிலும் 'ரெய்டு' நடந்தது.
அப்போது மிக முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரித்தோம். தற்போது அவர் உயிரிழந்து விட்டார். எனினும், சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை தொடரும். சிக்கியது எத்தகைய ஆவணம் என கூறினால், வழக்கின் போக்கு பாதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1766933

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.