Jump to content

வடக்கு மாகாண ஆளுநர் அதிர்ச்சி நாகவிகாரை விடுதிக் கழிவுகளால்


Recommended Posts

வடக்கு மாகாண ஆளுநர் அதிர்ச்சி

நாகவிகாரை விடுதிக் கழிவுகளால்

யாழ்ப்­பாண நகர் நாக­வி­காரை ஓய்வு விடு­தி­யின் கழி­வு­கள் அரு­கி­லுள்ள கழி­வு­நீர் வாய்க்­கா­லில் போடப்­ப­டு­வ­தைக் கண்ட வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே அதிர்ச்சி அடைந்­தார்.

அந்த விடு­தி­யின் நிர்­வா­ கத்­தின் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றிய யாழ்ப்­பாண மாந­கர சபை­யி­ன ரையும் அவர் கடிந்­து­கொண்­டார்.

யாழ்ப்­பா­ணம், ஆரி­ய­கு­ளம் மற்­றும் குளத்­தி­லி­ ருந்து கட­லுக்­குச் செல்­லும் வாய்க்­கால்­கள் என்­பன நேற்­றைய தினம் ஆளு­ந­ரின் ஏற்­பாட்­டில் பாட­சாலை மாண­வர்­கள் , படை­யி­னர் , மாந­கர சபை­யி­னர் ஆகி­யோ­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் சுத்­தம் செய்­யப்­பட்­டன.

இதன்­போது கழி­வு­நீர் வெளி­யே­றும் வாய்க்­கா­ல்­க­ளைப் பார்­வை­யிட்ட ஆளு­நர், அவற்­றுக்­குள் கழி­வு­கள் தேங்­கிக் கிடப்­ப­தோடு அவற்­றி­லி­ருந்து அதிக துர்­நாற்­றம் வீசு­வது தொடர்­பில் கேள்வி எழுப்­பி­னார்.

ஆரி­ய­கு­ளம் நாக­வி­காரை ஓய்வு விடு­தி­யி­லி­ருந்து அரு­கி­லுள்ள கழி­வு­நீர் வாய்க்­கா­லுக்­குள் கழி­வு­கள் கொட்­டப்­ப­டு­வதை ஆளு­ந­ரி­டம் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் காண்­பித்­த­னர். இதுவே அந்­தப் பகு­தி­யில் துர்­நாற்­றத்தை ஏற்­ப­டுத்து­வ­தா­க­வும் அவர்­கள் ஆளு­ந­ரி­டம் சுட்­டிக்­காட்­டி­னர்.

“இந்த விட­யம் தொடர்­பில் அதி­கா­ரி­க­ளி­டம் பல முறை சுட்­டிக்­காட்­டி­யும் அவர்­கள் நட­வ­டிக்கை எடுக்க அஞ்­சு­கின்­ற­னர். இதுவே சாதா­ரண பொது­ம­கன் ஒரு­வர் செய்­தி­ருப்­பின் மாந­கர சபை நிர்­வா­கம் குற்­றப்பணம் அற­விட்­டி­ருக்­கும். இந்த விட­யத்­தில் ஆளு­நர் தலை­யீடு செய்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்” என்று பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

“இந்த நாட்­டில் சட்­டம் அனை­வ­ருக்­கும் சம­மா­னது. ஆரி­ய­கு­ளம் நாக­வி­கா­ரை­யின் இந்­தச் செயற்­பாடு சுகா­தார விதி­மு­றை ­க­ளுக்கு முர­ணா­னது.

இதற்கு மாந­க­ர­சபை உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்­டும். அவ்­வாறு மேற்­கொள்­ளாதது அவர்­க­ளின் தவ­று­தான். எனவே குறித்த விட­யத்தை மாந­கர சபை கவ­னத்­தில் எடுத்து அவர்­கள் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்­டும்” என்று வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் விளக்­கம் கேட்­ப­தற்­காக யாழ்ப்­பாண மாந­க­ர­சபை ஆணை­ யா­ள­ரு­டன் தொடர்பை ஏற்­ப­டுத்­திய போதி­லும் அவ­ரு­டன் தொடர்பு கொள்­ள­மு­டி­ய­வில்லை.

unnamed-3-1.jpg

http://uthayandaily.com/story/1659.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரின் ஆரியகுளம் சுத்திகரிப்பு முயற்சிக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதும் மேற்படி செய்திக்கு பொருந்தாத தலைப்பையும் கண்டபோது நேற்றே சந்தேகம் கொண்டேன் ஆனால் அதுபற்றி எழுத நேரம் கிடைக்கவில்லை. என்ன நடக்கிறது என்பதை அவதானித்தபடியே இருக்க இன்று புதிய செய்தி வருகிறது. ஆரியகுளம் அழிந்துவிடப்போகிறது அதை ஆளுநர் காப்பாற்றத்தான் சுத்திகரிப்பு வேலை தொடங்கியதாக பந்தா தலைப்புடன் செய்தி வந்தபோது மிகவும் ஆச்சரியமாயிருந்தது. மழைக்காலங்களில் அருகிலுள்ள அகன்ற வாய்க்கால் வழியாக கடலை நோக்கி ஓடும் மேலதிக மழை நீரை தற்காலிகமாக தேக்கி வைப்பதால் குளத்தைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதில் இக்குளம் பெரும்பங்கு வகிக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.