Jump to content

வன்னியின் போரை வென்றது கிளிநொச்சி


Recommended Posts

வன்னியின் போரை வென்றது கிளிநொச்சி

இன்னிங்ஸ் வெற்றியாகவும் பதிவானது

 

‘வன்னியின் போர்’ என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் மைதானத்தில் நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. கபிலன் 48 ஓட்டங்களையும், சுஜீபன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜசிக்குமார் 4 இலக்குகளையும், யதுர்சன் 3 இலக்குகளையும், நிதர்சன், துசாந்தன், சஞ்சீவன் ஆகியோர் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 9 இலக்குகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதிகபட்சமாக துவாரகன் 59, கீர்த்திகன் 53 ஓட்டங்களையும், யதுர்சன் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தேனுஜன் 4 இலக்குகளையும் கபிலன், சுஜீபன், விதுசன், சதுர்சனன் நால்வரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டுமாயின் 101 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற நெருக்கடியில் இன்று காலை களமிறங்கிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 41 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்ததை அடுத்து இன்னிங்ஸாலும் 60 ஓட்டங்களாலும் வென்றது கிளிநொச்சி மகா வித்தியாலய அணி.

Capture.png

 

DSCN7776.jpg

DSCN7787.jpg

 

DSCN7789.jpg

DSCN7761.jpg

image-0-02-06-f372f842edd52f72002d5f3e2c68e895520cc455e7a47ec3a6f90c765f9cd607-V.jpg

http://uthayandaily.com/story/1284.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நவீனன் said:

வன்னியின் போரை வென்றது கிளிநொச்சி

நல்ல தலையங்கம்.:grin:


ஒரு கேள்வி?

ஏன் எம்மவர்கள் தமிழருக்குரிய எமது பாரம்பரிய விளையாட்டுக்களை இதேபோன்று உற்சாகப்படுத்துவதில்லை.....அத்து ஆர்வம் காட்டுவதில்லை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.