Jump to content

என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா


Recommended Posts

என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா

தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு தமக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகள் சிலவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் கோரியதனைத் தொடர்ந்தே தமக்கு 40 பேரைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/26195

Link to comment
Share on other sites

மக்களைப் பாதுகாக்கவே அரசும், அரசபடைகளும் உருவாக்கப்பட்டதாக மனித வளர்ச்சியின் வரலாறு கூறுகின்றது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அம்மணி அதிகம் தமிழர்களைக்கொன்றது அவர். அதனாலை. நீங்கள் அவரைவிடக்குறைவாம் அதனாலை உங்களுக்கு அப்பபடி. அதனாலை நீங்களும் உங்கட டடி மம்மியை மாதிரி கொஞ்சம் அரசியல்ரீதியான இன அழிப்பை செய்தியளென்றால் உங்களுக்குப் பாதுகாப்பைக் கூட்டுவினம். அதைத்தானே முக்கூட்டுப்பின்னணியிலை நகர்த்தறியள். இதுதெரியாம இந்த சம்சும் .... என்கெதுக்கு இந்த வம்பைப் பிறகு விசுவாசிகள் வந்து....

Just now, Paanch said:

மக்களைப் பாதுகாக்கவே அரசும், அரசபடைகளும் உருவாக்கப்பட்டதாக மனித வளர்ச்சியின் வரலாறு கூறுகின்றது. :rolleyes:

அது மனிதர்களுக்கு. நாங்கயார் சிங்கத்தின்ரை பரம்பரை. எங்கட மகாவம்சத்தின் படி உந்த ஆய்வு ஒத்துப்போக வாய்ப்பில்லை. நிராகரிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா

தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு தமக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகள் சிலவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் கோரியதனைத் தொடர்ந்தே தமக்கு 40 பேரைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/26195

ஹாய் சந்திரிக்கா! 
பாதுகாப்புக்கு ஏன் நீங்கள் அஞ்சாறு கடுவன்நாய் வாங்கி வளர்க்கக்கூடாது??? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆயிரத்தை கொன்று போடடவனுக்கும் ...

ஒரு லடச்சத்து 50 ஆயிரம் கொன்று போட்டவனுக்கும் 

இவாவுக்கு வித்தியாசம் தெரியவில்லையா ?
அல்லது நாடகம் போடுறாவா ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.