Jump to content

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளில் 82 பேர் விடுதலை


Recommended Posts

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளில் 82 பேர் விடுதலை

 

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளில் 82 பேர் விடுதலை

 

 
வட கிழக்கு நைஜீரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் 276 பாடசாலை சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 82 பேரை போகோ ஹராம் குழுவை சேர்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பள்ளி சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ஆய்வு குழு முடிவு நைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பை தோற்கடிப்பதில் இருக்கும் கடும் சவால் விடுவிக்கப்பட்ட சிறுமிகளை இன்று (07) அதிபர் முகமது புஹாரி அபுஜாவில் வரவேற்பார்.

சிபோக் சிறுமிகள் என்றழைக்கப்படும் பெண்களின் கடத்தல் விவகாரம் உலகளவில் கண்டனங்களை எழுப்பியது மட்டுமின்றி, பெரிய சமூக ஊடக பிரசாரத்தையும் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்த சமீபத்திய விடுவிப்பு சம்பவத்திற்குமுன், கடத்தப்பட்ட 276 பேரில் சுமார் 195 பேர் காணமால் போயிருந்தனர்.

சுமார் 50 பேரை போகோ ஹராம் கடத்தியிருப்பதாக சந்தேகம் போகோ ஹராம் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்ற எண்ணிக்கை அதிகாரிகளால் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட 82 சிறுமிகளும் நைஜீரிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும், சிறுமிகள் தொலைத்தூர பகுதியிலிருந்து கேமரூன் உடனான எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாங்கி அருகே இருக்கும் ராணுவ தளத்திற்கு சாலை வழியாக வாகன தொடரணி மூலம் கொண்டு வரப்பட்டனர் என்றும் லாகோஸில் உள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=91243

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.