Jump to content

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!


Recommended Posts

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!

ளையே காலி செய்துவிடும் அக்னி நட்சத்திர வெயில்பொழுது ஒன்றில், அலுவலகத்துக்கு விடுமுறையான ஒருநாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்துகொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. அமரர்களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்திகளையும் படித்துவிட்டு வெளியே வந்தார். 'இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்' என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

இன்றைய நிலைமையில் அ.தி.மு.க.!

'' 'வாழ்க்கையில் ஏழு அதிசயங்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவை, இரண்டுதான்' என்று ஒருமுறை சொன்னார் 'தீபம்' பார்த்தசாரதி. பின், அதற்கான விளக்கத்தையும் இப்படிச் சொல்வார். 'வாழ்க்கையில் யாரை, எப்போது சந்திக்கிறோம் என்பது ஓர் அதிசயம்; யாரை, எப்போது பிரிகிறோம் என்பது இரண்டாவது அதிசயம். சிலரைச் சந்தித்தபிறகு மேம்படுகிறோம்; சிலரைச் சந்தித்தபிறகு நாசமாகிப் போய்விடுகிறோம். சிலரின் பிரிந்த துயரத்தை வாழ்நாளின் இறுதிவரை சுமக்க வேண்டியிருக்கிறது. சிலரைப் பிரிந்த பிறகுதான் உருப்படுகிறது.' 

'தீபம்' பார்த்தசாரதி சொல்வதைப்போல், சசிகலாவின் கதையும் ஓர் அதிசயம்தான்... ஆம், ஜெ-வைச் சந்தித்தபிறகு அவர் மேம்பட்டார்; ஆனால், இப்போது என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், இன்றைய அ.தி.மு.க-வின் ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு இடையே அந்தக் கட்சி பயணித்துக்கொண்டிருந்தாலும், எந்தநேரத்திலும் அது பள்ளத்தில் விழுந்துவிடும் சூழ்நிலையிலேயே இருக்கிறது'' என்றார், அந்த நிர்வாகி. 

சசிகலா

உண்மையிலேயே, அவர் அ.தி.மு.க-வின் விசுவாசிதான். ஆனால், தற்போதைய ஆட்சி பிடிக்காமல் அவர் நம்மிடம் சொன்ன அத்தனை விஷயங்களும் அருமை. அப்போதுதான் தெரிந்துகொண்டேன், அ.தி.மு.க-காரரான அவருக்கே இந்த ஆட்சி பிடிக்கவில்லை என்பதை. பிளவுபட்ட அ.தி.மு.க-வை; பிரயோஜனமில்லாத ஆளும் கட்சியை; பணம், பதவி பித்துப்பிடித்து அலையும் அந்தக் கட்சியின் ஆட்களை எல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்த்தார். 

இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தவராய் ஜெயலலிதா சொன்ன ஒரு குட்டிக்கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ''இப்போது அது எதற்கு'' என்றேன். ''இன்றைய நாட்டுநடப்பே அந்தக் கதையில்தான் இருக்கிறது'' என்றார். ''சரி... சொல்லுங்கள்'' என்றேன். அவரும் ஆரம்பித்தார்... 

ஜெ. சொன்ன குட்டிக்கதை!

''அரசர் ஒருவர் தன் அமைச்சரிடம், 'இங்கு உண்டு... அங்கு இல்லை; இங்கு இல்லை... அங்கு உண்டு; இங்கும் இல்லை... அங்கும் இல்லை; இங்கும் உண்டு... அங்கும் உண்டு - இதற்குச் சரியான விளக்கத்தை என் கண்முன்னே காட்டுங்கள்' என்று கட்டளையிட்டார். இதற்காகக் கொஞ்சம் காலஅவகாசம் கேட்ட அமைச்சர், வெளியே சென்றுவரவும் அனுமதி பெற்றார். பின்பு, தன்னுடன் நான்கு பேரை அழைத்துவந்த அமைச்சர், அரசரைச் சென்று அந்த நால்வரைப் பற்றியும் சொல்லி... 'நீங்கள் கேட்டதற்கான விடையும் இதுதான்' என்றார். 'நான் கேட்டதற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்' என்று அரசர் கேட்க... விளக்கம் கொடுத்தார் அமைச்சர்.

நிர்வாகி சொன்ன கதைக்கு (குட்டிக்கதை) உரியவர்கள்...

தான் அழைத்துவந்த நான்கு பேரில் முதலாமவனை அழைத்து, 'இவன் ஒரு கொள்ளைக்காரன்; இவன் ஊர்ப்பணத்தை எல்லாம் கொள்ளையடித்து நல்ல வசதியோடு வாழ்கிறான்; இங்கு, மகிழ்ச்சியோடு இருக்கிறான்; ஆனால், இவனுக்கு மேலுலகில் இடமில்லை. ஆக, நீங்கள் சொன்ன முதல் புதிருக்கு இவனே உதாரணம்' என்றவர்... இரண்டாமவனை அழைத்து, 'ஞானியான இவர், எப்போதும் ஆண்டவனையே நினைத்துக்கொண்டு இருக்கிறார்; ஆகையால், இந்த உலகத்தில் இவருக்கு எதுவும் தேவையில்லை. இதனால், இந்த ஞானிக்கு மேலுலகில் இடமுண்டு' என்றார். 

பின்னர் மூன்றாமவனை அழைத்து, 'பிச்சைக்காரனான இவனுடைய வாழ்க்கை பரிதாபமானது; இவனுக்கு இந்த வாழ்க்கை ஒரு தண்டனையாகவே இருக்கிறது; மேலும், இவன் எந்தவொரு நல்ல செயலையும் செய்யவில்லை. எனவே, இவனுக்கு இங்கும் இடமில்லை... அங்கும் இடமில்லை' என்றார். பிறகு, நான்காமவனைப் பார்த்து, 'வள்ளலான இவன், தன்னிடம் இருப்பதைப் பிறருக்கும் கொடுத்து வாழ்கிறான். அதனால், இவனுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கிறது. மேலும், இவனை மக்கள் மதிக்கிறார்கள்... புகழ்கிறார்கள். ஆகவே, இவனுக்கு இரண்டு இடங்களிலும் இடம் உண்டு' என்றார். 

அருமையான விளக்கம் கொடுத்த அமைச்சருக்கு அரசர் பரிசை அள்ளி வழங்கினார்'' என்று ஜெ. சொன்ன அந்தக் கதையை நிறைவுசெய்தார் அ.தி.மு.க நிர்வாகி. 

ஓ.பன்னீர்செல்வம்

கொள்ளைக் கும்பல்!

''இந்தக் கதைக்கும், இப்போதைய நாட்டுநடப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே'' என்றேன். ''இருக்கிறதே'' என்றவர், பின் தொடர்ந்தார். ''தற்போது தமிழ்நாடு, கொள்ளையடிக்கும் நாடாக மாறியிருக்கிறது. அம்மாவின் (ஜெ-வின்) சொத்துக்களையும், ஆளும் கட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டையும் மொத்தமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் மன்னார்குடி கூட்டம்தான் இங்கே கொள்ளைக் கும்பல். இப்போது மமதையில் மிதக்கும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியே இருக்காது. இதைத்தான், 'இங்கு உண்டு... அங்கு இல்லை' என்ற புதிரை மாற்றி, 'இப்போது உண்டு... இனிவரும் காலங்களில் இருக்காது' என்று சொல்லலாம்...

மக்கள் ஆதரவு!

அதேபோல், இரண்டாவதாக நான் சொன்ன ஞானி என்று அ.தி.மு.க-வில் தற்போது யாரும் கிடையாது. ஆனால், அம்மாவின் உண்மையான விசுவாசியாக மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ் அறியப்படுகிறார். அவருக்கும், அவரது அணியினருக்கும் பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வை அம்மா வழியில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான். தற்போது அவர்களிடம் அதிகாரம் செய்வதற்கான பலம் இல்லை. ஆனால், விரைவிலேயே அதற்கான தகுதியை அடைந்துவிடுவர். இதைத்தான், 'இங்கு இல்லை... அங்கு உண்டு' என்ற புதிரை மாற்றி, 'இப்போது இல்லை... இனிவரும் காலங்களில் கிடைக்கும்' என்று சொல்லலாம்...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

மன்னார்குடி ஆதரவாளர்கள்!

அதேபோன்று, மூன்றாவதாக நான் சொல்வது மன்னார்குடி கும்பலிடம் காசு வாங்கிக்கொண்டு அடிமைகளாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும்தான். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பிச்சைக்காரர்களாக இருக்கும் இந்த மனிதர்களுக்குக் காலம் முழுவதும் இதுதான் தண்டனையாக இருக்கும். அத்துடன், இவர்கள் மக்களுக்கு எந்தவொரு நல்ல செயலையும் செய்யவில்லை. ஆகவே, இவர்களுக்கு இனிவரும் காலங்களில் எங்கும் (எந்த அணியிலும்) இடமிருக்காது. 'இங்கும் இல்லை... அங்கும் இல்லை' என்ற புதிருக்கு இவர்கள்தான் சரியான உதாரணம். 

வாழும் வள்ளல்கள்!

இறுதியாக வள்ளல் என்று நான் சொல்வது, வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், புரட்சித்தலைவி அம்மாவையும்தான். இவர்கள் இருவரும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்; அதனால்தான் இன்றும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறார்கள்; புகழுடன் போற்றப்படுகிறார்கள். இவர்களுடைய பெயர்களைச் சொன்னாலே மக்களின் ஆதரவு எங்கும், எப்போதும் உண்டு'' என்று இன்றைய நாட்டுநடப்பை ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை மூலம் மிகவும் அருமையாகவும், அழகாகவும், ஆழமாகவும் சொன்னார். 

 

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு... அவரிடமிருந்து விடைபெற்ற நான், அவருடைய இரண்டு கைகளையும் பிடித்து, ''சூப்பர்'' என்றேன். புரியாதவர்களுக்குக்கூடப் புரியும்வகையில் இருக்கும் இந்தக் கதையை முதலில், மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 

http://www.vikatan.com/news/tamilnadu/88611-a-short-tale-told-by-jayalalithaa-and-current-situation-of-admk.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.