Jump to content

கண்ணகி கோவில்


Recommended Posts

banner1-e1488896823207-580x385.jpg

“பூம்புகார்” படத்தின் இறுதி காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, கண்ணகியின் கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறது மதுரை!

இராமர் சீதையை பெண் அடிமை மாதிரித்தானே நடத்திருக்காரு! திரும்பி வந்த சீதையை ” தீ ” குளிக்கவும் சொன்னாரு, ஆனால் கண்ணகி “அநீதி இழைத்த ஒரு மன்னனையும் ஒரு நகரத்தையுமே எரிக்கிறாள்” என்றால், அந்த வீரத்தமிழச்சிக்குத்தானே கோவில் கட்டியிருக்கணும்?. “வடநாட்டில் ” பிறந்தால் தான் சாமியா கூட ஏத்துப்பாங்க போல!. இது நான்

stock-photo-144826343-e1488896645894.jpg

கண்ணகி சிலை (drscdn.org)

நம்ம ஊரில் தான் ரோட்டு ஓரத்தில் வச்ச சிலையும் தூக்குனாங்களே!. இது என் நண்பன்

ஏன்டா! கேரளா குமுளியில் கண்ணகிக்கு கோவில் இருக்குனு கேள்விப் பட்டுருக்கேன். ஆனா உண்மையானு தெரியல!. இது எங்க உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த என்னோட அப்பா.

தமிழச்சிக்கு கேரளாவில் கோவில்! உடனே போக மனது துடித்தாலும், உறுதிப்படுத்த எங்க ஆசிரியர் பிரபு தமிழன் (எழுத்தாளரும் கூட) அவர்களை தொடர்பு கொண்டேன்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பளியங்குடி எனும் இடத்தில் இருந்தும் நாம் போகலாம் ஆனால், வாகனம் செல்லும் பாதை குமுளி வழியாக மட்டுமே உள்ளது. அதுவும் வருடத்திற்கு “ஒருநாள் ” மட்டுமே அனுமதி.

ஒருநாள் மட்டுமா ? ஆம், சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே அனைவருக்கும் அனுமதி உண்டு. சில மாத காத்திருப்புக்குப் பின்னால் அந்த நாளும் வந்தது!

முதல் நாள் இரவு தேனியில் தங்கி, குமுளி போவதற்கான திட்டமிடல் முடிவாகி அதிகாலை குமுளி அடைந்தோம். கோவில் போவதற்கு பஸ், கார், வேன் எதுவும் அனுமதி கிடையாது என்றும் வெறும் ஜீப் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சொன்னார்கள்!, அதுவும் அனுமதி பெற்ற ஜீப் மட்டும் என்று சொல்லி எங்கு போய் சீட்டு வாங்க முடியும் என்று ஒரு இடத்தை காட்டினார்கள்.

சரி என்று போய் பார்த்தால்! 1கி.மீ தூரத்திற்கு வரிசையில் நிற்கிறது கூட்டம். நிற்பவர்ளில் பெருவாரியானவர்கள் கேரள மக்கள், அவர்களின் துர்க்கை அம்மன் கோவில் அங்கு உள்ளதாம். இங்கயுமா போட்டி என்று நொந்து கொண்டே நின்றோம்.

 

IMG_6541-e1488893632586.jpg

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பளியங்குடி எனும் இடத்தில் இருந்தும் நாம் போகலாம் (bp.blogspot.com)

 

கடைசியாக ஒரு நண்பர் (“மலையாளி” தமிழன் என்றால் தனியாக போயிருப்பாரே!) ஒரு ஜீப் ஏற்பாடு செய்தார், நாங்களும் பணம் செலுத்தி அவருடன் கிளம்பினோம். காட்டுப்பாதையை அடைந்ததும் கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறை நம்மை சோதித்து அனுப்ப, அடுத்தக் கட்டமாக வனத்துறை நம்மிடம் இருக்கும் அனைத்து நெகிழிப் பைகளையும் அப்புறப்படுத்தியே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

ஜீப்பை தவிர எந்த வாகனமும் பயணிக்க முடியாத பாதை என்று புரிய ஆரம்பிக்கிறது. அமைச்சர்களுக்கு தனிப் பாதை அமைக்க இது தமிழ் நாடு இல்லையே என்று பகடி செய்து கொண்டே பயணம் செய்தோம்.

உடம்பில் இருக்கும் அத்தனை எலும்புகளையும் குலுக்கி எடுத்த பின், கோவிலின் குறிப்பிட்ட தூரத்திற்க்கு முன் நின்றது வாகனம். அங்கிருந்து பார்த்த பின்தான் தெரிந்தது, தமிழ்நாட்டின் பளியங்குடி காட்டு வழிப் பாதை வழியாக சுத்தி இருக்கும் தமிழக கிராம மக்கள் நடந்து வந்து கொண்டிந்தார்கள்.

 

71635279-e1488894369835.jpg

வாகனம் செல்லும் பாதை குமுளி வழியாக மட்டுமே உள்ளது. அதுவும் வருடத்திற்கு “ஒருநாள் ” மட்டுமே அனுமதி.

ஏன் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பாதை போடவில்லை? என்று அங்கிருந்த ஒரு தமிழக காவலரிடம் கேட்டேன். “ரொம்ப வருஷம் முன்னாடி தமிழ்நாடு அரசும் ரோடுபோட திட்டம் போட்டு பணம் ஒதுக்கிருக்காங்க, ஆனா ஆட்சி மாறியதும் திட்டம் கிடப்பில் விழுந்துருச்சு!”

“ஓ! இந்த புது தலைமைச் செயலகம் மருத்துவமனையா ஆனதே அப்டி.” என்று நான் சொல்ல அவரும் சேர்ந்து சிரிச்சாரு.

“அது பரவால தம்பி! இப்ப கேரளாவில் இருந்து மட்டும்தான் பாதை இருக்கு அதுனால கோவில் கேரளா அரசுக்கு சொந்தம்னு சொல்றாங்க!”

“கோவில் கேரளாவில் தானே இருக்கு சார்! அப்ப அவுங்களுக்கு தானே சொந்தம்?”

“இல்லப்பா! வெள்ளைக்காரன் எடுத்த சர்வே கோவில் நமக்கு சொந்தம்னு சொல்லுது, சுதந்திரத்திற்கு பின் எடுத்த சர்வேவும் கோவில் நமக்கு தான் சொந்தம்னு சொல்லுது. ஆன நம்ம அரசு இத கண்டுக்கவே மாட்டேனுது.” (சின்னம்மா பிரச்சினையே இங்க பெருசா இருக்கு)

77312670-e1488894498787.jpg

ஒரு இனத்தோட அடையாளமாய் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கோவிலை இப்படி சேதமடைய விட்டுடாங்களே

இவ்வளவு சொன்னவரிடம்  கோவில் வரலாறு கேட்க்காமல் விடுவமா! அதையும் சொன்னாரு.

மதுரையை எரித்த கண்ணகி, கோபம் தணியாமல் 14 நாட்கள் நடந்து இந்த மலையை அடைந்து இங்கிருந்து கோவலன் ஆன்மாவோடு கலந்ததை பார்த்து உள்ளனர் இந்த மலைக் கிராம மக்கள். இந்த இடத்தை புனிதமாக கருத ஆரம்பித்துள்ளனர். ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த சேரன் செங்குட்டுவன் இதைக் கேட்டு வியந்து இமயத்தில் இருந்து கல் எடுத்துவந்து கோவில் கட்டியிருக்கிறான்.

“ஆமாம் சார்! மதுரை கல்லந்திரி கிராமம் பக்கத்தில் கண்ணகியும், கோவலனும் தங்கி இருந்தாங்க!, சிலம்பம் எடுத்துட்டு போன கோவலனோட கெதி இப்புடி ஆகுமுனு அந்த பொண்ணு நெனச்சு தான் பார்த்துருக்குமா?”, என்று பொலம்பிக்கிட்டே ஒரு  வீடு போன்ற மண் மேட்டை காட்டுனாங்க அந்த ஊர் மக்கள்.

“தம்பி, இது உண்மையா?, பொய்யானு யோசிக்க வேண்டாம். ஆனால் ஒரு இனத்தோட அடையாளமாய் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கோவிலை இப்படி சேதமடைய விட்டுடாங்களே” என்று வருத்தப்பட்டார் அந்த காவலர். அவருக்கு நன்றி சொல்லி விட்டு, மிக ஆபத்தான சறுக்கும் பாதைகளை கடந்து கோவிலை அடைந்தோம்.

77312565-e1488894277231.jpg

சேரன் செய்த கண்ணகியின் சிலை உக்கிரமான வடிவத்தில் இருந்ததாம். அதை திருடி விட்டார்களாம், இப்பொழுது இருப்பது சமகாலத்தில் வைத்தது அதுவும் சாந்தமான சிலை வடிவம்

கோவிலின் புதை படிமங்கள் என்று மட்டுமே சொல்லும் நிலையில் இருந்தது கண்ணகி கோயில். 95% சேதம் ஆகிவிட்டது, அங்கு இருக்கும் மீத அமைப்பை வைத்து மலையின் உச்சியில் இதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.

இதில் மிக்க கொடுமை என்னவென்றால், சேரன் செய்த  கண்ணகியின் சிலை உக்கிரமான வடிவத்தில் இருந்ததாம். அதை திருடி விட்டார்களாம், இப்பொழுது இருப்பது சமகாலத்தில் வைத்தது அதுவும் சாந்தமான சிலை வடிவம்.

அனைவருக்கும் உணவு கொடுத்தனர், இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உணவளித்த அந்த கிராம மக்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் பத்தாது.

கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது கோவில், அங்கிருந்து வன விலங்குகளை பார்த்தது புது உணர்வை கொடுத்தது.

“நம்ம தொல்பொருளியல் துறை நீ சொன்ன மதுரையில் இருக்கும் கண்ணகி இருந்த வீட்டை ஏன் ஆராய்ச்சி பண்ணவில்லை?” என்று நண்பர் கேட்டார்.

ஏற்கனவே மதுரையின் “கீழடி” கிராமத்தில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான தொன்மைவாய்ந்த பொருட்கள் கிடைத்தன. ஆனால் ஆராய்ச்சி தொடராமல் அதை மண்போட்டு மூடியும் விட்டனர். (ஆனால் வட இந்தியாவில் இராமர் கால பொருள் உள்ளதா என்று ஆராய பெரும் தொகை ஒதுக்கி உள்ளனர்). அதைக் கேட்கவே இங்கு நாதி இல்லை. இந்த நிலையில் கண்ணகி, தமிழ் வரலாறு என்று வாய் திறந்தால் பைத்தியம் என்று பட்டம் தான் கொடுப்பார்கள்.

“தமிழ்நாட்டில் வழிபடும் எல்லா பெண் தெய்வங்களும் கண்ணகி” என்று எண்ணி மனசை தேத்திக்க வேண்டியதுதான்! என்று நண்பர் பெருமூச்சு விட்டார்.

இருட்ட ஆரம்பித்ததால் அனைவரையும் வெளியேற்றினார்கள், இன்னும் எத்தனை வருடத்திற்கு தமிழர்கள் தன்னுடைய கோவில் என்று வழிபட முடியும்? ஒருவேளை இந்த “ஒரு நாள் ” வழிபாடும் நிறுத்தப்பட்டால்? மதுரை எரித்த கண்ணகி இந்த வஞ்சம் எரிக்க வர வேண்டும்!. என்ற வேண்டுதலோடு  “மீண்டும் அடுத்த சித்ரா பௌர்ணமிக்கான நாட்களை எண்ணிக் கொண்டே ஊர் திரும்பினோம் “.

https://roartamil.com/travel/mangaladevi-kannaki-temple/

Link to comment
Share on other sites

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....

 
என்னுடைய முதல் பதிவு மிக நீண்ட நாட்களாக தள்ளி தள்ளி போய்கொண்டிருந்தது எழுதப்படுவதற்கு , ஏனெனில் இந்த பயண கட்டுரையை தான் எழுத வேண்டும் என்று விரும்பியதே காரணம் .

 பாண்டிய மன்னன் உண்மையை அறியாமல் கோவலனை கொன்றுவிட்டபின் அவனுடன் வாதம் புரிந்து உண்மையை எடுத்துரைத்தாள் கண்ணகி . பின்பு மதுரையில் உள்ள சான்றோர், குழந்தைகள் , மிருகங்கள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்தையும் எரித்து சாம்பலாகும்படி சாபம் விட்டாள் .பின் மதுரையை விட்டு வெளியேறி வைகை ஆற்றின் தென்கரை வழியாக நடந்து சென்று பதினாலு நாட்கள் கடந்து சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.

 இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் என்று அழைக்கப்பட்ட பளியர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.

 இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. 

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில் ,இங்கு சென்று வந்ததை இந்த பதிவில் எழுதுகிறேன் .

என்னுடைய பயணம் சித்திரை முழுநிலவு நாளுக்கு முன்தினம் தொடங்கியது . சித்திரை முழுநிலவுக்கு முதல் நாள் மதியம் 2மணியளவில் கம்பம் நகருக்கு வந்தடைந்தேன் . அங்கு ஜாபர் இன்டர்நேஷனல் ஹோடேலில் அறை பதிவு செய்திருந்தேன் . கம்பம் நகரில் உள்ளபடியே சிறந்த தங்கும் விடுதி. விடுதி வந்தடைந்தவுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு சுருளி அருவிக்கு சென்றோம் நானும் என் நண்பரும் . சுருளி அருவி கம்பம் நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . ஒரு மணிக்கு ஒரு முறை மினி பஸ் கம்பம் பேருந்து நிலையத்திற்கு சிறிது தூரத்தில் இருந்து புறப்படுகிறது . பேருந்து நிலையம் சென்று ஏமாற வேண்டாம் . யாரிடமாவது விசாரித்து பஸ் புறப்படும் இடத்தை அடையலாம். 

அங்கிருந்து சுருளி அருவி க்கு சென்றால் அருவிக்கு அரை கிலோமீட்டர் முன்பே நமது வாகனங்களை நிறுத்திவிடவேண்டும் . பின்பு வனத்துறை சாலை வழியாக அருவிக்கு செல்ல வேண்டும்.வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் சிறிய கடைகள் இருக்கின்றன தேவையான சோப்பு ,ஷாம்பூ ஆகியவற்றை இங்கு வாங்கிகொள்ளலாம். இங்கு இளநீர் , கொய்யாபழம் போன்றவைகளும் கிடைகின்றன. சுருளி அருவியில் நாங்கள் சென்றிருந்த நேரத்தில் மிக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது .இருந்தாலும் குளிப்பதற்கு போதுமானதாகவே இருந்தது .
001a.JPG

 
002a.JPG
 
003a.JPG
 
004a.JPG

சுருளி அருவியில் கவனிக்கப்பட வேண்டியவை .
 # ஆண்களுக்கு தனி இடம் மற்றும் பெண்களுக்கு தனி இடம் குளிப்பதற்கு இட வசதி உள்ளது .உடை மாற்றும் அறை பெண்களுக்கு தனியாக உள்ளது.அறைக்கு போகும் பாதை முழுவதும் ஈரமாக இருக்கும் என்பதால் கவனமாக நடக்க வேண்டும்.

 # இந்த மாதிரி ஏகாந்தமாக இருக்கும் அருவியை கண்டவுடன் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுவது என்பது இயல்பு என்றாலும் , இயற்கைக்கு முன்பு மனிதசக்தி ஈடு கொடுக்க ஒன்றுமே இல்லை என்பதை அறிந்து அருவிக்கு செல்வது ,முறையான இடத்தில குளித்து வருவது மட்டுமே உன்னதமான அனுபவத்தை கொடுக்கும்.

 # அருவிக்கு மேலே செல்லுவது போன்ற அபாயகரமான செயல்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் . காலம் காலமாக நீர் ஓடி ஓடி வழுக்கும் பாறையாக அனைத்தும் மாறி இருக்கிறது . எனவே முறையற்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.குழுவாக செல்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது இது. பொது மக்கள் செல்லும் இடங்களுக்கு மட்டுமே செல்லுங்கள்.குழுவின் உறுப்பினர்கள் எவராவது வீர தீர செயல்களில் இறங்கும் நடவடிகையை கண்டால் கண்டிப்புடன் அதை தவிர்க்கசொல்லுங்கள் , இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த காரணம் இது போன்ற அருவிகளில் நடக்கும் மரணங்கள் மட்டுமே. அப்படி ஒரு மரணத்தை கண்டதால் தான் இந்த அறிவுரை.

தயவு செய்து இன்ப சுற்றுலா செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் சென்று தங்களது ஆர்வத்தை காட்டுவதுஎன்பது சிறிது கவனம் பிசகினாலும் உங்களுடன் வந்திருக்கும் அனைவருக்கும் தீராத மனக்கவலையை தரும் .எனவே எச்சரிக்கை .

#வனத்துறை சோதனைசாவடியில் இருந்து அருவிக்கு போகும் பாதையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன . உணவு பொட்டலங்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும். 

# சுருளிப்பட்டியில் இருபுறமும் திராட்சை தோட்டங்கள் உள்ளன .சில தோட்டங்களில் அங்கேயே திராட்சை விற்பனை நடைபெறுகிறது. தோட்டங்களில் வாங்குவதால் விலை கொஞ்சம் குறைவு.
  
 சுருளி அருவியில் இருந்து அறைக்கு திரும்பி சிறிது ஓய்விற்கு பின் அருகில் இருந்த கம்பராயர் பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.கம்பம் செல்பவர்கள் தவறவிடகூடாத கோவில் இது . இந்த கோவிலால்தான் கம்பம் என்ற பெயரே வந்ததாக வரலாறு. கோவிலுக்கு சென்று வந்தபின் இரவு உணவுக்கு அருகில் இருந்த உணவு விடுதிக்கு சென்றோம். ஹோட்டலில் உணவு வசதிகள் உண்டு , அறைக்கே வந்து தருகிறார்கள் . இருந்தாலும் கம்பம் நகரின் உணவின் சுவையை அறிய வெளியில் சென்றோம், நிறைய உணவு விடுதிகள் அருகிலயே இருக்கின்றன. நாங்கள் சென்ற உணவு விடுதி மிக சிறியது விறகு அடுப்பில் இட்லி சூடாக கிடைத்தது , அயிரை மீன் குழம்பு தனியாக விற்கிறார்கள். மிக அருமையான சுவையில் இருந்தது.

பின் அறைக்கு திரும்பினோம். சித்திரை முழுநிலவு நாளில் மட்டுமே தரிசிக்க அனுமதி உள்ள கண்ணகி தெய்வத்தை பார்க்கும் ஆவல் எழுந்தது ,அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு விடுதியின் முன் நெடுஞ்சாலையில் நின்றிருந்தோம் .கம்பம் நகரில் இருந்து நிறைய ஜீப்புகள் செல்கின்றது. சிறந்த ஏற்பாடுகளை கம்பம் நகரின் கண்ணகி கோயில் வழிபட்டு குழுவினர் செய்திருந்தனர் . புதிதாக செல்பவர்கள் கம்பம் நகரிலேயே ஜீப் மூலமாக செல்வது மிக வசதியானது . குமுளி சென்றால் வாகன ஏற்பாட்டுக்கு மிகுந்த நேரம் ஆகும் . கம்பம் நகரிலேயே ஜீப்பில் செல்வது புத்திசாலித்தனம் . 

 சில குறிப்புகள் :-
 # கண்ணகி கோவில் ஒரு ஆண்டில் சித்திரை முழுநிலவு நாளுக்கு மட்டுமே பொதுமக்கள் வழிபட அனுமதி.ஏன் என்றால் பாதுகாக்கபட்ட வனத்தில் அமைந்துள்ளது. 

#தமிழகத்திற்கு சொந்தமான கோவில் இது, ஆனால் சாலை வசதி குமுளி ,கேரளா வழியாக மட்டுமே வாகனம் செல்லும் சாலை உள்ளது. 

#தமிழகத்திற்கு சொந்தமான கோவிலை அதன் உரிமையை கேரளா சமீப காலமாக மறுத்து வருகிறது .கோவிலின் பட்டா இந்த கோவில் தமிழகத்தில் உள்ளதை காட்டுகிறது. 

#கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை துணி கொண்டு கேரளா வனத்துறை மூடி மூடி வைத்துள்ளதை கவனித்தோம், இதை வருடம் வருடம் வந்து கொண்டிருக்கும் கம்பத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு அந்த கல்வெட்டுகளை காட்டினார்கள்.

 #தமிழகத்தின் கற்பு தெய்வமான கண்ணகியை கேரள அரசு மங்கல தேவி என்று மட்டுமே பெயர் மாற்றம் செய்து அழைகிறார்கள் . தமிழகத்தின் வரலாற்றை சிறிது சிறிதாக மாற்றும் முயற்சி .இதை கம்பம் கண்ணகி வழிபாட்டு குழுவினர் முறியடிக்க முயற்சி எடுத்து வழிபாட்டிற்கு நிறைய தமிழர்களை திரட்ட பெரு முயற்சி எடுத்துக்கொண்டு இருகின்றனர் . அவர்களின் முயற்சி கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய ஒன்றாகும் .

பகுதி இரண்டில் சித்திரை முழுநிலவின் பகல் பொழுதில் சென்ற பயணத்தை தொடர்கிறேன் ....உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...

http://kaalapettagam.blogspot.ch/2013/06/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.